Pages

Monday, May 9, 2011

கோபாலபுரம் கலைஞர் பவன் 2006-11 சிறப்பு அயிட்டங்கள்

சென்னையில், அடையாறு ஆனந்தபவன், உடுப்பி கிருஷ்ண பவன், சென்னை சரவண பவன், மதுரை முனியாண்டி விலாஸ் முதலியன, தங்கள் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றவை. அதேமாதிரி, கோபாலபுரம் கலைஞர் பவன், 2006-11ல் தயாரித்த சிறப்பு மெனுக்களில், சிலவற்றை, வாசகர்களுக்கு வழங்கவே இந்த தலைப்பு.

மெனு 1: கடந்த, 2008ல், தி.மு.க., சார்பில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, வசந்தி ஸ்டான்லி, 2007ல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், போலி ஆவணங்கள் கொடுத்து, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு உள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கே, போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி என்பதால், கைது செய்யப்படாமல் இருக்க, முன் ஜாமினுக்கு நிறுத்திய பிணைதாரர் போலி, அவர் ஆவணமும் போலி என்பதும் வேறு கதை.

மெனு 2: ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலர், ஜவுளித்துறை அமைச்சர், என்.கே.கே.பி.ராஜா மீது, ஆள் கடத்தல், சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்று, ஆகஸ்ட், 2008ல், சென்னை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது; வழக்கு மிகவும் வலுவாக இருந்தது. நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை அரசு மீது வீசும் என்ற நிலை உருவானது.வேறு வழியில்லாமல், ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து கருணாநிதி வெளியே அனுப்பினார். மந்திரிகுமாரி, அரசிளங்குமரி என்ற ராஜா கதைகளின் மூலம் பிரபலமான கருணாநிதிக்கு, அரசியல் வாழ்வில், "ராஜாக்கள்' தான் வில்லன்களாகி இருக்கின்றனர்.

மெனு 3: ஊழல் வழக்கில் சிக்கிய தன் சொந்தக்காரரை, விடுவிக்க வேண்டுமென, மாநில தலைமை ஊழல் தடுப்பு அதிகாரிக்கே, போன் செய்தார் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. ஒரு குறும்புக்கார அதிகாரி, இப்பேச்சை, "டேப்' செய்து, பத்திரிகையில் கசிய விட்டார்; புயல் வெடித்தது. பத்திரிகைகள் விரைவதற்கு முன், கருணாநிதி விரைந்து, பூங்கோதையின் பதவியை பறித்தார். அந்த, "சிடி'யில் சிக்கிய பூங்கோதை, இன்று மிகப்பெரிய ராடியா டேப்பில் தப்பித்து வருகிறார் என்பது வேறு கதை.

மெனு 4: சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன். கன்னியாகுமரியில், கலர், "டிவி' வினியோகத்தில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்க, சப்-கலெக்டரை நிர்பந்தித்தார். வாக்குவாதம் முற்றி, கைகலப்பு மற்றும் ஜாதிப் பெயர் தூற்றல் நடந்தது. அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்களும், மக்களும் திரண்டனர். அமைச்சர் மற்றும் ஆட்கள் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டது. ஆனால், அதற்கு ஆன காலம் இரண்டு மாதம். எஸ்.சி., - எஸ்.டி., சட்டப்பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகள் பின்னால் நீக்கப்பட்டன.

No comments: