Pages

Monday, August 12, 2013

டெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம் ) மாறியது..?

 
விமான பயணங்களை விட விமான பயணிகள் நம்மை—”நாம் வெளிநாட்டில் இருக்கிறோமா”  ? என்ற நினைப்பை உண்டு பண்ணி விடுகிறார்கள்.

நேற்று டில்லி விமான நிலயத்தில் என் ஊருக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்காக அரைமணி நேரம் முன்னதாக வந்து காத்திருந்தேன்.

நேரத்தை பிரயோஜனமாக செலவிட “எழுதலாம்” என்று நினைத்த போது பேனாவைத் தேடினேன்..காணவில்லை…எனவே ‘பறவைகள்..வாட்சிங் “—போல..”மனிதர்கள் வாட்சிங்கில்” ஈடுபட்டேன்.

மனிதர்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ..( ஒவ்வொருவரும்..அல்ல.) ஒருவிதம்..என்பது உண்மையாகவே தெரிந்தது..பஞ்சாபி—மராட்டி—தெலுங்கு—அரேபி—அரியானி—என விதவிதமான..மொழிகள்..மனிதர்கள்—உருவங்கள்..ஆடைஅலங்காரங்கள்..

இவர்களில் சில மனிதர்களின்..மனுஷிகளின்.-ஆடைகளும்—உருவங்களும்,,சில வினோதமாகவும்—சில அருவருப்பாகவும் இருந்தது..

பெண்களுக்கு உரிமைகள் வேண்டும்..சுதந்திரம் கட்டாயம் வேண்டும்..அது வீடுகளிலும்,,அலுவலங்களும்—நடையிலும்..மட்டுமே.(.உடையில் அல்ல ) இருக்க வேண்டும்..

அங்கங்களை “அளந்து காட்டும் “உடைகளை அம்மாக்களும், அச்சன்களும், அகத்துக்காரர்களும்,..எப்படி அனுமதிக்கிறார்கள்..சகித்துக்கொள்கிறார்கள்..”இப்படி உடுத்தக்கூடாது” என்று ஆலோசனை சொல்லாமல் இருக்கிறார்கள்..என்பது புரியாத புதிராகவே இருந்தது..

இது நாகரீகம் என்று சொல்லமாட்டேன்…சுதந்திரம் என்ற பெயரில் இந்த அசிங்கங்கள் எப்படி அரங்கேறுகிறது..என்பது எனக்கு புரிய வில்லை..
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்..உடைகள் மனிதனின்.-மனுஷிகளின் முழுச்சுதந்திரம்..என்பது வாதத்திற்காக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்..ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அது வீட்டுக்குள்ளே மட்டுமே செயல் படுத்தமுடியும்..

நாட்டுக்கு நாடு உடைச்சுதந்திரம் வேறு படுகிறது..மேலை நாடுகளில் உடை வழக்கங்கள்..அவர்கள் நாட்டுக்கு ஒத்துவருவது..பழக்கமானது..அதனால் சமூக பாதிப்போ..உடையினால் பெண்கள் மீது பாலியல் வன்முறையோ நிகழ்த்தப்பட்டதில்லை..
தற்போதைய “நம்மூர்” “ஸ்கின் டைட் “ உடைகள்..இது எவ்வளவுஆபாசத்தை உண்டுசெய்கிறது…பெற்றோர்களோ..கணவன்மார்களோ..நினைத்துப்
பார்க்கிறார்களா?

இதை பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது..உங்கள் பார்வை சரியில்லை என்கிற ஒரு குரலும் என் காதில் விழுகிறது..

நம் தேசத்து உடை அலங்காரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது..உள்ளூர் உடைகள் நாம் எந்த ”சைசில்” இருந்தாலும், நம்மை அசிங்கமாக --அருவ்ருப்பாக-- காண்பிப்பதில்லை..ஜீன்ஸ்களும், டைட்ஸ்களும் இதற்கு நேர் எதிமாராக இருக்கிறது..

இந்த அரிச்சுவடியை ஏற்க ஏன் பெண்ணினம் தயாராக இல்லை…

ஆடைகள் நாகரீகத்தின் அடிப்படை..அது அநாகரீகத்தின் வெளிப்பாடானால், வணங்க வேண்டிய பெண்..சுணங்கிப் போவாள்...ரசிக்கவேண்டிய அழகு--விரசமாகிப்போகும்....இது அபாயமல்லவா?...

Sunday, August 11, 2013

தொண்டர் தலைவன் அத்வானி


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் ஆசை என்று ஒன்று இருக்கும்...அதுபோல ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் ஒரு ஆசை இருக்கும்..

நம்மைப்போல பாஜக தொண்டனுக்கும், வாழ்நாள் ஆசை அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

என்போன்ற சாதாரண தொண்டனுக்கும் அதே ஆசைதான்..வாஜ்பாய் அவர்களை 1995--96 களில் பெங்களூரு தேசிய கவுன்சில் கூட்டத்தில், அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று, பார்த்தேன்..பேசினேன்..உள்ளம் பூரிப்படைந்தேன்..

அத்வானிஜி அவர்களை 1977 மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில் திடலில் அவர் ஐ.& பி. மினிஸ்டராக இருந்தபோதுபேசிய கூட்டத்தில்,  நானும் திரு.எல்.ஜி. அவர்களும் கலந்து கொண்டோம்..பின்னர் மதுரை சர்க்யூஸ்ட் ஹவுசில் நேரில் சந்தித்து பேசினோம்.

அதற்கு பிறகு பல கூட்டங்கள் , பல யாத்திரைகள், பல மாநாடுகளில் அத்வானிஜி அவர்களை சந்தித்திருக்கிறேன்.

1998 கோவைகுண்டு வெடிப்பன்று, கோவை ஏர்போர்ட்டில் சந்தித்து, அவருடன் அரசு மருத்துவமனையில், குண்டடி பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னதுமுதல், மீண்டும் ஏர்போர்ட்டில் திரும்ப அனுப்பும் போது , “குண்டு வெடிக்கப்போவது அரசுக்கு முன்னமே தெரியும்”, என்பதுவரை அவரிடம் விவரித்திருக்கிறேன்.

எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், எவ்வளவு முறை சந்தித்திருந்தாலும்,1984, அவரை டெல்லியில் அவரது  வீட்டில் சந்தித்தற்கு பிறகு இம்முறை நேற்றுதான், ( பொருளாளர் கூட்டத்திற்க்காக டெல்லி வந்தேன்) அவரை வீட்டில் சந்திக்கும் மாபெரும் பாக்கியம் கிட்டியது..

ஆம்..பாஜகவின் ஒவ்வொரு சாதாரண தொண்டனின் ஆசை போல என்னுடைய ஆசையும் நேற்று நிறைவேறியது....

ஒரு தொண்டன் எளிதாக சந்திக்கும் தூரத்தில் ஒரு தலைவன் இருந்தாலே அவன் உண்மையான தலைவன்...நரேந்திர மோடியை போல அத்வானிஜி அவர்களையும் எளிதாக சந்திக்க முடியும்..ஒரு போனிலேயே எனக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்தது..அவரே எடுத்தார்..அவரே கொடுத்தார்.. 15 நிமிடத்தில் அவர் வீட்டில் இருந்தேன்....”இசட் பிளஸ்” பாதுகாப்பு பிரிவின் கீழ் அவருக்கு பாதுகாப்பு இருப்பதால்தான் அவரை வெளியூர்களில் சந்திப்பது கடினமாக இருப்பதை புரிந்து கொண்டேன்..

நான் போனபோது அவரின் வீட்டின் அலுவலக அறையில், பாரளுமன்ற குறிப்புக்களை படித்து அடிக்கோடு இட்டுக்கொண்டிருந்தார்..வணக்கம் தெரிவித்து அமர்ந்த பிறகு, கடந்தகால நிகழ்வுகள் பலவற்றை நினைவு கூர்ந்தார்..சாப்பிட என்னவேண்டுமென கேட்டு.. கொண்டு வரச்சொன்னார்..

அவரது அறையில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் அனைத்தும் அத்வானிஜி படித்தது..அத்வானிஜி ஒரு புத்தகப்பிரியர்..அவருக்கு எதிரே கம்பீரமான வீரசாவர்க்கர் படம் பிரமாதமாக ...பிரதானமாக ....மாட்டப்பட்டிருந்தது..கண்னைக் கவர்ந்தது..

பாராளுமன்றம் மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு பேச்சுக்கும் மத்தியில் அதற்கான அவரது கடுமையான தயாரிப்பும் இருக்கிறது என்பதை பார்த்தேன்..கோவை குண்டுவெடிப்பில் நான் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது முதல் கடைசியாக அப்துல் நாசர் மதானியின் “கொலை மிரட்டல் கடிதம் “ வரை விசாரித்தார்..அவரது ஞாபக சக்தியும், அன்றளவு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கும் ஆற்றலும் வியக்கவைத்தது...

டீ வந்தது..மிகச்சூடாக இருந்தது..ஆற நேரமாகும் என்பதால், டீ வேண்டாமென்றேன்..உணர்ந்து கொண்ட அத்வானிஜி, பரவாயில்லை..மெதுவாக குடியுங்கள்..நான் வெயிட் பண்ணுகிறேன். என்றார்.1984 இல் அவர் இல்லத்துக்கு சென்ற போது அவரே டீ போட்டு கொண்டுவந்து கொடுத்ததை நினைவு கூர்ந்தேன்..அவரும் அது பழைய வீடு தற்போது இருப்பது அல்ல என்பதை நினைவு படுத்தினார்..

உலகம் வியக்கும் ஒரு மிகப்பெரிய தலைவன், தன் கட்சி தொண்டனை தனக்கு சமமாக மதிப்பதும் நடத்துவதும், ஒரேஒரு அரசியல் கட்சியில்தான் நடக்கும் ..அது பாஜக மட்டுமே என்பதை நமது அத்தனை தலைவர்களும், குறிப்பாக அத்வானிஜியும், மோடியும், நிரூபித்து வருகிறார்கள்.என்பதை நான் 2012 தேர்தலுக்கு குஜராத் போனபோதும் சரி நேற்று டெல்லி போனபோதும் பார்த்தேன்.

பல்வேறு சம்பாஷணைக்கு பிறகு, வருகின்ற பொதுத்தேர்தலில், தமிழக பாஜக சார்பில் அதிக எம்.பி.க்களை பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்..இதற்காக தமிழக பாஜக எடுத்திருக்கும் முயற்சிகளையும், அமைப்பு ரீதியாக அதன் வெற்றிகரமான செயல்பாடுகளையும் நான் அவரிடம் விவரித்தேன்...

இந்தியாவின் துணைப் பிரதமர்.---உள்துறை அமைச்சர்---இரண்டாம் வல்லபாய் பட்டேல், என்ற பெருமைகளை பெற்ற ஒருதலைவனின் எளிமை--அன்பு---கனிவு--தொண்டனை நடத்திய விதம்...உண்மையில் நெஞ்சம் இனித்தது..இதுதான் பாஜகவின் அடிப்படை தன்மை என்பதை அவரும் நடந்து காட்டி நிரூபித்தார்..

பாஜகவின் ஒரு சாதாரண தொண்டனை மதித்து இவ்வளவு நேரம் பேசியமைக்கு நன்றி என்றேன்..நானும் ஒரு சாதாரண தொண்டந்தான் என அவர் கூறியதும் என் கண்கள் பனித்தது..எளிமைக்கு இதைவிட ஒரு உதாரணம் எந்த கட்சியில் சொல்லமுடியும்..இவ்வளவு தூரத்திலிருந்து ..தமிழ்நாட்டிலிருந்து... நீங்கள் வரும் போது.. என் நேரம் ஒன்றும் பெரிதில்லை, என்ற அவரின் வாக்கியங்கள் என் மனதை இன்னும் சுற்றி சுற்றி வருகிறது.

நம் தலைவர்கள், எளிமையனவர்கள், இனிமையனவர்கள், அறிவு ஜீவிகள், தொண்டர்களை மதித்து கௌரவிப்பவர்கள், என்பதை நான் அத்வானிஜி அவர்களிடம் பார்த்தேன்..அவரிடம் பேசிய அந்த பொன்னான 40 நிமிடங்கள், என் வாழ்வின் மறக்கமுடியாத நிமிடங்கள்..அம்  மாமனிதனின் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றேன்..