Pages

Sunday, April 27, 2014

சோனியாவின் “அந்திமக்காலம்”


(குறிப்பு...இது உயிர் பற்றிய தலைப்பல்ல..அவர் நீண்ட நாள் வாழ்ந்து அவரது மகனுக்கு 50 வயதிலேயாவது திருமணம் செய்து வைத்து இத்தாலிய மாஃபியாக்களின் பிடியில் படாமல் அத்தனை சொத்துக்களையும் அனுபவித்து வாழவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை)..........மேலே படியுங்கள்.

2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை கேட்கப்போன இவரை தடுத்து நிறுத்தியது இருவர்தான்..

ஒருவர் ஜனாதிபதி அப்துல் கலாம்...உங்களுக்கு இப்பதவியை அலங்கரிக்க உரிமை இல்லை என்று தைரியமாக சொன்னதுதான்..

மற்றவர்..சுஷ்மா சுவராஜ்..உங்கலுக்கு பிரதமர் பதவி தரப்பட்டால், நான் மொட்டையடித்து வெள்ளை சேலை உடுத்துவேன் என்றதுதான்..

அதிகாரம் முழுதும் தன் கைய்யில், பொறுப்புக்கள் முழுதும் பாவம் மன்மோகன் சிங்கிடம்,..என மஹாராணியாக வாழ்ந்த சோனியாவின், ‘அரச போகத்துக்கு” “இறுதிகாலம் “ வந்துவிட்டது..

ஆம்..கடவுள்தான் காப்பாற்ர வேண்டும் என்று சோனியா சொன்னது நாட்டையல்ல...தன்னையும் தன் குடும்பத்தையும்தான்..

எப்போது காங்கிரச் கூட்டணிக்காக “ஆலாய்” பரக்க ஆரம்பித்துவிட்டதோ..மூன்றாவது அணி..நாலாவது அணி என சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டதோ அப்போதே தெரிந்து விட்டது..சோனியாவின் இறுதிகாலம் நெருங்கிவிட்டது..என்று..

தோல்விக்கு பிறகு அந்த குடும்பம் இந்தியாவில் இருக்காது..நான் ஒன்றும் ஜோசியம் சொல்லவில்லை..அவர்களுக்கு சொத்து பல ஆயிரம் கோடி சேர்ந்துவிட்டது..அத்த்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலிக்கு கொண்டு சேர்த்தாகிவிட்டது..

மோடியிடம் ஆட்சி வந்து விட்டால் 25 வருடம் அவரை அசைக்க முடியாது..அவ்வளவுகாலம் போராட ராகுலுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது....

ஆட்சி மாற்றத்தில் அதிக ச்ந்தோஷத்தில் இருப்பது சோனியாவின் அம்மாதான்..44 வருஷமா பாக்கதா பொண்ண இப்ப ஒரே அடியாக தொடர்ந்து பார்க்கபோகிறோமே என்கிற சந்தோஷத்தில் அத்தனை குடும்ப உறுப்பினர்களும் “ஆரத்தி கைய்யில் வைத்துக்கொண்டு” இத்தாலியில் காத்திருக்கின்றனர்..

நாமும் வழியனுப்ப தயாராவோம்.

Saturday, April 26, 2014

அம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்

”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ,இன்றைக்கு மூன்றாவதுமுறை சி.எம்.

இடது சாரிகளை கழற்றிவிட்டு, தவ்ஹீத் ஜமாத்துக்கு அடிபணிந்து, மோடியை தாக்கி பேசி தனது ஆதரவு ஓட்டுக்களை இழந்து, இப்படி ஏற்பட்ட சரிவுகளை சரிசெய்ய..”தனலெட்சுமியையே” நம்பினார்..

“தோல்வி ஜன்னியின்” உளரல்களை சரிசெய்யும் “மருந்து ’ பணத்திடம் இருப்பதாக “ஜெ” நினைத்ததால், தொகுதிக்கு ரூ.20 கோடியென் 800 கோடியை “டிஸ்பெட்ச்” செய்தார்..

144 தடை உத்தரவு “சட்டம் ஒழுங்கை “ பாதுகாக்க போடப்பட்டது என்றாலும், “ஜெ” அதை மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டார்..

தேர்தல் கமிஷனின் தீவிர செயல்பாடுகளையும் மீறி, ஆம்புலன்ஸ்களிலும், “ஆம்வே” பெட்டிகளிலும், பணத்தை கடத்தி ஆளும் கட்சி தனது தேர்தல் தில்லு முல்லுகளை, தொடங்கியது.

கைய்யில் ஏராளமாக பணம் இருப்பதால், சிறந்த திட்டமிடுதலை செய்து, கமிஷன் கண்ணில் மண்ணைத்தூவி, பூத்துக்கு 25,000/= ரூபாய் என ஆரம்பத்திலேயே பட்டுவாடாவை அதிமுக நடத்திவிட்டது.

இந்த விஷயத்தில் திமுக கூட கொஞ்சம் பிந்தங்கித்தான் இருந்தது.பொள்ளாச்சி, நீலகிரி, தஞ்சாவூர், வடசென்னை, தவிர திமுகவால், பணத்தில் ஆளும் கட்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

24 ம் தேதி, தேர்தலுக்கு 4 நாள் முன்னதாகவே “திருமங்கலம் ஃபார்மூலா” பணபட்டுவாடாவை அதிமுக தொடங்கியது..பாஜக உள்ளிட்ட தே.ஜ.கூ. தொண்டர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், கைய்யும் களவுமக பிடித்துக்கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரியை  சந்தித்து முரையிட்டபோது, “மே மாதம் 16ம் தெதியோடு தேர்தல் கமிஷன் மூட்டை கட்டிக்கொண்டு போய் விடும்..அதற்கு பிறகு மாநில அரசோடுதான் நாங்கள் குப்பை கொட்டியாக வேண்டும்”..என நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை சூசகமாக சொன்னார்.

பாஜக மூத்த தலைவரும் தென் சென்னை பாரளுமன்ற் வேட்பாளருமான இல.கணேசன் அவர்கள், பணபட்டுவாடாவை கண்டித்து காரசாரமான, ஆதராங்களுடன் கூடிய அறிக்கைவெளியிட்டார்..எந்த நடவடிக்கையும் இல்லை.ஒரே ஆறுதல் நாடுமுழுதும் “ஜெ” யின் சூதாட்டம் அம்பலமானது..

எல்லா எதிர்கட்சி தலைவர்களும் புகார் கொடுத்தும் போலீசோ, கமிஷனோ, எந்த ந்டவடிக்கையும் எடுக்க வில்லை.ஊர்டங்கு உத்தரவை பயன்படுத்தி, திருடன் ஊரை கொள்ளை அடித்தமாதிரி, 144 தடை உத்தரவை பயன் படுத்தி ஆளும் கட்சி, வாக்காளர்களுக்கு, பனபட்டுவாடாவை நிம்மதியாக நடத்தி முடித்தது.

இதனால் தேர்தல் முடிவுகளில் “பணத்தின் தாக்கம் “ இருக்குமோ?...எல்லா வாக்காளர்களும், விலை போயிருப்பார்களோ?...

இக்கேள்விகளுக்கு  பதில் ..பெட்டியை உடைத்து பார்த்தால்தான் தெரியும்.

வாக்குச்சாவடிகளில், “போலிங்” சிறப்பாக நடைபெற்றது...எல்லா ஊர்களிலும் இருந்து தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவாக வாக்குக்கள் பதிவாகி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.மாலையில் இறுதி நிலவரமும் இதையே உறுதி செய்தது.

இருப்பினும் ஏன் சந்தேகம்? ஏன் கவலை? என நீங்கள் கேட்பது புரிகிறது..

மாநிலம் மூழுவதும் மோடி அலை வீசுவதை காணமுடிந்தது..குக் கிராமத்து பெண் வாக்காளரும், தாமரை சின்னத்தில் வாக்களித்தை கேட்க முடிந்தது..

அடுத்தநாள், வாக்கிங்கில், ஷாப்பிங்கில், டீ ஸ்டாலில், பஸ்ஸில், பேங்கில், பார்த்த மக்களெல்லாம், நமக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னது, வெற்றியை உறுதி செய்தது..

இருந்தாலும் , இக்கட்டுரையை படித்து முடித்தவுடன், வரும் 16ந்தேதி வாக்கு எண்னும் போது, தே,ஜ.கூ.வின் வெற்றியின் வாக்கு வித்தியாசம் குறைந்தால்,..அதற்கு “அம்மாவின் 800 கோடி பணபட்டுவாடவும், அதை செவ்வனெ செய்ய உதவிய 144 தடை உத்தரவுமே” காரணமாக இருக்க முடியும்..

மக்கள் புத்திசாலிகள்..”வாங்கிக்கொண்டு
”, கொடுத்தவர்களை ”வெளுத்து வாங்கி “ விடுவார்கள்..
சந்திப்போம்..மே 16 இல்...வெற்றி செய்தியுடன்...