tag:blogger.com,1999:blog-2532383954016498927.post6727901337084591669..comments2023-10-18T20:33:05.628+05:30Comments on சந்தனச் சிதறல்: இந்தியாவை “கொச்சைப்படுத்தும்”--இந்தியாவின் மகள்” --டாக்குமெண்டரிஎஸ்.ஆர்.சேகர்http://www.blogger.com/profile/00068464259541181451noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2532383954016498927.post-13608468419151989802015-03-11T00:14:32.792+05:302015-03-11T00:14:32.792+05:30சூப்பர்சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2532383954016498927.post-42964450250244075322015-03-11T00:09:06.520+05:302015-03-11T00:09:06.520+05:30அதற்கு என்ன சார் ! மற்றவன் வீட்டில் மூன்று கொலை நட...அதற்கு என்ன சார் ! மற்றவன் வீட்டில் மூன்று கொலை நடந்துவிட்டது என்பதால் நம் வீட்டின் ஒரு கொலை தவறில்லை என்பதாகுமா? இறந்த ஜோதியின் பெற்றோரே இந்த ஆவணப் படத்தை அனைவரும் காண வேண்டும் எனக் கூறுகின்றார்கள். ஒருவேளை ஜோதி உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்திருந்தால், பெண்ணை விடவும் நாடு தான் முக்கியம் என பேசி இருக்க மாட்டீர்கள். <br /><br />எந்தவொரு கருத்தும் நல்லதோ கெட்டதோ மக்கள் பார்ப்பதற்கும் அலசி ஒரு முடிவுக்கு வருவதற்கும் முழு உரிமை இருக்கின்றது. இந்த ஆவணப் படம் பிழை என்றால் காலம் தன்னாலே நிராகரித்துவிடும். ஆனால் இந்த ஆவணப் படத்தை ஒன்றுக்கு பலமுறை பார்த்துவிட்டேன் அதில் இந்தியாவை இழிவு செய்யும் எந்தவொரு வசனமும் உள்நோக்கமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. பார்த்த பலரும் அதனைத் தான் செப்புகின்றனர். காணாத சிலரே பொங்கி எழுகின்றனர். <br /><br />இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அது மட்டுமே ஜோதி போன்றோரது இறப்பிற்கு ஒரு அர்த்தம் உடையதாக இருக்கும். <br /><br />குற்றவாளிகள் இத்தனை ஆண்டு சிறைக்குள் இருந்தும் தாம் செய்தது தவறு என கருதாமல் பேசுவதும், அவர்தம்முக்கு வக்கலாத்து வாங்கும் வழக்குரைஞர்கள் பேசுவதும் தான் இந்த ஆவணப் படத்தின் அடிநாதம். மாற்றம் என்பதை எவ்வாறு கொண்டு வரப் போகின்றோம். <br /><br />இந்த சம்பவத்தில் பெருங்குற்றம் ஆற்றிய அந்த 17 வயது பையன் வயது குறைந்தவன் என்பதால் மூன்றாண்டு சிறைவாசம் மட்டுமே பெற்று இந்த ஆண்டு திசம்பர் விடுதலை ஆகப் போகின்றான். 17 வயதில் கற்பழிப்பு செய்தால் குற்றமாகாதா? நம் சட்டங்களில் சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகளை யார் எடுத்துச் சொன்னாலும் நிகர் செய்வதே மானிட தருமம். அதை சொல்பவள் அந்நியப் பெண் என்பதால் நாட்டின் மானம் பறிபோய்விட்டது எனக் கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது. <br /><br />அன்புடன் நீலன்https://www.blogger.com/profile/03663269612422784260noreply@blogger.com