Pages

Monday, June 13, 2016

பா. ஜ க வார் ரூம் ரகசியம் -1



இது உள்விஷயம்
மூக வலைதளம் என்பதுஉடனடி தொடர்பு’ - ‘உடனடி பதில்’ ‘உடனடி மறுப்பு’. நமதுவளையம்எவ்வாறு பெரிதோ அதற்கேற்றவாறு நமது செய்திப் பரவல் இருக்கும்!

அரசியல், கலை, இலக்கியம், விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள்நொடிக்கு நொடிதங்களதுஇருப்பை(existintence) உலகுக்கு வெளிப்படுத்தும் மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியேசமூக வலைதளம்’.

2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் பங்கு அபரிமிதமானது! ஏறக்குறைய 184 நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை இது நிர்ணயிக்கும் என
தி இந்துபத்திரிகை எழுதியது!

உலகிலுள்ள அரசியல் தலைவர்களில்சோஷியல் மீடியாவைமிகப் பெரும் அளவு பயன்படுத்துபவர் என்ற பெருமை பெற்றவர் நமது பிரதமர் நரேந்திர மோடி!

குஜராத் கலவரத்திற்கு பிறகு இடது சாரி - காங்கிரஸ் ஆதரவு மீடியாக்கள் மோடியை வறுத்தெடுத்த போதும் மோடிக்கு எதிராகப் புதுப்புது அவதூறுகளை நாள் தோறும் அள்ளிவிட்டபோதும், பத்திரிகை தொலைக்காட்சிகள் ஆதரவே இல்லாத மோடி, ஆதரவு தேட புகுந்த இடம்தான் சமூக வலைதளம்!

இதை சரியாக பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை மோடி வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்! இந்த பணியில் மோடிக்கு பக்கபலமாக இருந்த குழுவிலிருந்து பிரிந்து வந்த ஒருவர்தான் பிராசாந்த் கிஷோர் என்பவர்.

இவர்தான் பிகார் தேர்தலில் நிதிஷுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவை திசை திருப்பியவர் என்று தேர்தல் வெற்றிக்கு பிறகு மீடியாக்கள் இவரை புகழ்ந்து தள்ளின!
இவ்வளவு கதைகளை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் பாஜகவின் சோஷியல் மீடியா பொறுப்பாளராக சட்டமன்ற தேர்தல் 2016ல் நான் பணியாற்றினேன்.

தமிழ்நாடு பாஜகவின் சோஷியல் மீடியா டீம் மிகவும் பலம் வாய்ந்தது. விவரமான, அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். டீம் தலைவர் பாலாஜி, வைதீஸ்வரன், வெங்கடேஷ் இவர்களின் அறிவுக்கு பஞ்சமில்லை. ஆனால்கீகொடுக்க ஆள் தேவைப்பட்டது!

பாஜக ஆதரவாளர் குழுமம் என்று கோவை தேசபக்தர் சிவகுமார் தலைமையில் இத்துறையில் ஏற்கனவே பணிகளை துவக்கியிருந்தது. டெல்லியில், பீகாரில் இத்துறையில் ஏற்கனவே களம் கண்ட கோவை சூரியாவும் சேர்ந்துகொள்ள டீம் களை கட்டியது.

ஆனால் வெறுமனே வெப்சைட்டை பராமரிப்பது, அவரவர் டைம்லைனில் சில பேனர்களை ஏற்றுவது, ஆயிரக்கணக்கில் லைக்குகள் பெறுவது என்று மட்டும் இருந்த தமிழ்நாடு பாஜக சோஷியல் மீடியாவிற்கு, ‘முழு முகம் கொடுத்துசரியானபடி வழிகாட்டியவர் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ்.

இதன் காரணமாகதமிழ்நாடு பிஜேபி பக்கம்எட்டு லட்சம் லைக்குகளை தாண்டியது. தினசரி 25 முதல் 50 புதுப்புது பேனர்கள் - ஒரு பங்கு மோடி அரசின் சாதனைகள், ஒரு பங்கு கழகங்களின் தகிடுதத்தங்கள், ஒரு பங்கு அதிரடி குற்றச்சாட்டுகள் என பொளந்து கட்டினோம்!

இது எந்த அளவிற்கு போனது என்றால் அதிமுக மீது நாம் வைக்கும் குற்றாச்சாட்டு பானர்கள், திமுக வலைதளங்களிலும் முரசொலியிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. திமுக மீது நாம் தொடுக்கும் கணைகளை அதிமுக தனது பக்கங்களில் வெளியிடத் துவங்கியது!

பாஜகவின் சமூக வலைதள பிரிவே முன்னணியில் இருக்கிறது எனஇந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியாஎழுதத் துவங்கின. ஒரு கட்டத்தில் அதிமுக வலைதள பிரிவு பின் தங்கியிருந்ததால், பாஜகவோடு போட்டிபோட வேண்டி, வலைதள பிரிவு தலைவரிலிருந்து அனைவரையும் அவர்கள் மாற்றினார்கள்!

தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்காத காரணத்தால் நாம் செய்த பிரயத்தனங்கள் வெளியே சொல்ல, தெரிய வாய்ப்பின்றி போனது!

நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானியின் காட்டமான பேச்சை தமிழில் வெளியிட்டது முதல் அதிரடி.

அஸ்ஸாம் - மே. வங்கம் - தமிழ்நாட்டில் மோடி பேசிய பேச்சுக்களை தமிழில் டப் செய்து வெளியிட்டது அடுத்த திருப்பம். இதற்கான ஷேர்கள் லட்சங்களை தாண்டியது! பாஜகவின் தேர்தல் அசைவுகள் எங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதை உடனுக்குடன் உலகுக்குச் சொல்ல நமது சோஷியல் மீடியா பெரிதும் பயன்பட்டது!

தலைவர்களது வருகை, சுற்றுப் பயணம், உரையின் சுருக்கம், இவைகள் மணித்துளி தோறும் அரங்கேறும் அப்லோடு செய்யப்படும். முக்கிய தலைவர்களின்லைவ்பொதுக் கூட்டங்களையுவா டிவிமூலம் பாஜக பக்கத்தில் வெளியிட்டோம்.

கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கான பாஜகவின் விமர்சனங்களை உடனுக்குடன் வெளியிட்டோம்!
மாநிலம் முழுவதும் இருக்கும் தொண்டர்களும் வேட்பாளர்களும் கட்சியின் பிரச்சார பாடல்கள், டிவி விளம்பரங்கள், தேர்தல் அறிக்கை, கணக்காளர் கையேடு, பேச்சாளர் கையேடு போன்றவற்றை டவுன்லோடு செய்து கொள்ளும் வண்ணம் நாம் அவைகளை நமது பக்கத்தில் அப்லோடு செய்து வைத்திருந்தோம்!

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்ய தானியங்கி பிரச்சார ஒலித்தகடுகள் தயாரித்தோம். அதில் சென்னை, மதுரை, திருநெல்வேலி பாஷையில், ஆண், பெண், சிறுவர்கள் குரலை பதிவு செய்திருந்த விளம்பரம் மிகவும் பேசப்பட்டது.

முரளிதர் ராவ் சமூக வலைதளத்தின் நாடி நரம்புகளை அறிந்தவர். டெல்லியிலிருந்து இதில்கரைகண்டதனது உதவியாளர்களை தமிழக தேர்தலுக்காக வரவழைத்தார். தேசபக்தர் சிவகுமாருடன் இருந்த உள்ளூர் டீம் உடன் இணைந்து அது பணி புரிந்தது. மாநிலம் முழுவதும் வலைதளத்தை பின்னி எடுத்த இக்குழு, வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு தனித்தனி சட்டமன்ற தொகுதிகளை குறிவைத்து பணியாற்றியது. இந்த யுக்தி எந்த கட்சியாலும் பின்பற்றப்படவில்லை.
 மாநில மீடியாவின் பணிகளை அப்படியேபிரதி எடுத்துகோவை தெற்கு தொகுதியில் செயல்படுத்தியதால், வானதி சீனிவாசன் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசப்பட்டது!

தன்னை முக்கிய ஊடகங்கள் புறக்கணித்து அல்லது எதிராக எழுதியபோது, நமக்கென்று ஒரு கட்சி ஊடகமும் இல்லாதபோது சமூக வலைதளமே சரியான ஆயுதம் என தேர்ந்தெடுத்தது மோடியின் ராஜதந்திரம்.
இன்று உலகெங்கும் மோடியின் புகழுக்கு இதன் பங்கு முக்கியமானது! பாஜக போன்ற ஊடக பலமில்லாத கட்சிக்கு சமூக வலைதளம் ஒரு சரியான சாதனம்!
பாஜகவும் பரிவார் இயக்கங்களும் இதன் மகிமையை புரிந்துகொண்டு, ‘சரியாக,  பயன்படுத்தினால், எதிரிகளின் கோட்டைகளை தூள்தூளாக்கலாம்! சென்னை வெள்ளத்தில் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்தபோதும், நம் பணிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது சமூக வலைதளம் தான் என்பது நமக்குத்தெரியும்.

இந்த தேர்தலில் ஏராளமான பரிவார் இயக்கத்தினர் பணிபுரிந்தனர். இவர்களை கண்டுபிடித்து ஒரு சிறந்த அமைப்பு ஏற்படுத்தினால், வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு அது உபயோகமாக இருக்கும்!

"வெற்றி"- நாணல் கீற்றை "வீரவாளாக" புகழ்ந்து தள்ளும்... தோல்வி, காண்டீபத்தையும் துணி உலர்த்தும் கொடியாக தூக்கிப் போடும்!

தமிழக சட்டமன்ற தேர்தலில்  நமக்கு கிடைத்தபிரசாந்த் கிஷோர்கள்இப்படித்தான் மறைக்கப்பட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை வெளிக் கொணர்வோம்.

Sunday, January 24, 2016

ஏன் ஏன் ஏன்


 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?
 ‘தூத்துக்குடி, சென்னை, திருச்செந்தூர் கடற்கரைகளில் 10-12 அடி நீளமும் 1-2 டன் எடையுமிருந்த 100 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின’ என்ற செய்தி பலருக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது.
 இரவு நேரத்தில் கரை ஒதுங்கியதை காலையில் கண்ட மீனவர்களும் பொதுமக்களும் சேர்ந்து அதை படகில் ஏற்றி நடுக்கடலுக்குள் கொண்டுவிட்டனர். உதவி சென்று அடைவதற்குள் பாதி குட்டித் திமிங்கிலங்கள் உயிரை விட்டன என்பது மனதை வருத்தியது.
 திடீரென திமிங்கிலங்கள் ஏன் கரை ஒதுங்கின?
 கடல்வாழ் உயிரினங்கள் பற்றி, குறிப்பாக திமிங்கிலங்கள் சிறப்பு நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். அவர்களது கருத்தை தெரிந்து கொள்வதற்கு முன் திமிங்கிலம் பற்றி...
  திமிங்கிலம் என்னும் கடல்வாழ் உயிரினம், குட்டி போட்டு பால் கொடுக்கும் வகையைச் சேர்ந்தது.
  ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுக்கொருமுறையே பெண் திமிங்கிலங்கள் இனப்பெருக்கம் செய்யும்! தனது குழந்தையை ஒருவயது வரை பாலூட்டி பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பாதுகாக்கும்!
 இவை தண்ணீருக்குள் இருந்தாலும் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கும்.
   ஒரு வகை திமிங்கிலம் ‘சத்தத்தை’ வைத்து தனது பயணத்தை நடத்துகிறது. மற்றொருவகை ‘வாசனை’ நுகர்ந்து நீந்தி செல்கிறது.
  திமிங்கிலங்கள் குழுகுழுவாக செல்லும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ‘தலைவன்’ இருப்பான். அவன் காட்டும் வழியிலேயே குழு செல்லும். அது தவறாக இருந்தாலும் ‘தலைவன் பின் செல்லும்’. எதிர்த்துக் கேள்வி கேட்டு தடம் மாறாது. கோஷ்டி மாறாது!
 சரி விஷயத்திற்கு வருகிறேன். ஒலியை, வாசனையை, வழி தொடர்ந்து செல்லும் திமிங்கிலங்கள், கப்பல்களில் இருந்து வரும் மின்காந்த சக்தியால், ஒலிகிரகிக்கும் சக்தி இழந்து (அதாவது செல்போன் பேசி நம் காது கேட்கும் திறன் குறைந்தது போல), திசைமாறி, கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கலாம் என்று ஒரு வாதமும் ‘குழுத்தலைவன்’ வழிகாட்டிவந்தபோது, அதற்கு ஏதாவது ஒன்றுஆகி, தலைவனில்லாமல், தடம் மாறி இருக்கலாம் என்று மற்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. எதுவாயினும், இயற்கைக்கு முரணாக ஏதோ நடக்கிறது!
 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இது போன்றே திமிங்கிலங்கள் தற்கொலை இந்தியக் கடலில் ஏற்பட்டது. அதுபோன்ற மற்றொரு நிகழ்வு ஏற்படுமோ என்ற அச்சம் பலரின் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

 இருதாரம் உள்ளவர்களை ஒதுக்கியது ஏன்?
 மாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உ.பியில் அதன் முதல்வர் அகிலேஷ் யாதவ் 3,500 உருது ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இந்த ஆசிரியர் அறிவிப்பில் புதுமை என்னவென்றால், இதற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், இருதாரம் மணம் செய்திருந்தால் விண்ணப்பிக்க வேண்டாமாம். பெண் விண்ணப்பதாரருக்கு ஒரு கண்டிஷன் - பலதார மனைவிகளில் ஒருவராக இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாமாம்.
 இதை முஸ்லிம் பர்சனல் லா போர்டு வன்மையாக கண்டித்திருக்கிறது. இது முஸ்லிம்களின் தனிப்பட்ட ஷரியத் சட்டத்தில் கை வைப்பதாகும் என அவர்கள் அகிலேஷ் யாதவ் அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு?
 இதற்கு மேலாக முகமது அன்வர் என்கிற விண்ணப்பதாரர், ‘எங்கள் மதம் 4 பெண்களை திருமணம் செய்ய எங்களை அனுமதிக்கிறது... எங்களை கேட்க இவர்கள் யார்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்!
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி முஸ்லிம் ஜனத்தொகையில் 47 சதவீதம் 20 வயதுக்குள்ளே இருக்கிறார்கள் என்பது குழந்தை குட்டிகளின் கூடாரமாக அச்சமூகம் ஆக்கப்பட்டிருக்கிறது! முலாயம் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு தாரத்திற்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்றோ, குழந்தைகளை பெற்றுக் தள்ளக்கூடாது என்றோ கவலை இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் முஸ்லிம் ஆண் அல்லது பெண், அவருக்கு பிறகு அவரின் ‘பென்ஷன்’ வாரிசாக யாரை நியமிக்க முடியும் என்கிற சட்டசிக்கல்தான்! இந்த அறிவிப்பின் காரணம்!
 ஒன்று மட்டும் தெரிகிறது! ஷரியத் சட்டம் என்ன சொன்னாலும், பொது சிவில் சட்டம் இதுவரை வராவிட்டாலும், இப்போதிருக்கும் சட்டத்தின்படியே, முஸ்லிம்களின் பலதார திருமணம், அவர்களுக்கு இடைஞ்சல் என்பது அவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதே கேள்வி!
 குடித்துச் சாவதை அரசு தடுக்காதது ஏன்?
 ‘த ஹிந்து’ நாளிதழ்கள் - ஆங்கிலம் - தமிழ் இரண்டு ஹிந்து விரோதிகள் - ஹிந்து கலாச்சாரம் - பண்பாட்டை தீவைத்து கொளுத்தும் தீய கட்டுரைகளின் சங்கமம் இவைகள்! ஆயினும் டி.எல். சஞ்சீவ் குமார் என்பவர் எழுதிய ‘மெல்லத் தமிழன் இனி....’ என்ற சிறப்பான ஒரு தொடர் கட்டுரை புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
 1975ல் இந்திரா காந்தியின் கொடுங்கோல் சட்டம் அவசரநிலை என்கிற ஜனநாயக படுகொலையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மட்டுமே களப்பணி ஆற்றியது. தி.மு.கவினர் கருப்பு-சிவப்பு கரைவேட்டியை ‘கட் பண்ணி’ வெள்ளை வேட்டியாக்கி ஊரைவிட்டு மறைந்தனர். கம்யூனிஸ்டுகளும் - அதிமுகவினரும் ஆர்.எஸ்.எஸ்.-ஜனசங்ககாரர்களை காட்டிக் கொடுத்து சர்வாதிகாரிக்கு உதவினார்கள்.
 ஆர்.எஸ்.எஸ்ஸில் ஏற்கனவே திட்டமிட்ட அவசரநிலை எதிர்த்த போராட்டம் வாராவாரம் சத்தியாகிரகம் செய்து கைதாவது வரை நடந்தது. அதில் மதுரையில் என் தலைமையில், ஹரிஹர கோபாலன், மோகன், மதுரைவீரன், ஸ்ரீதர் ஆகியோர் கைதாகி சிறை சென்றோம்.
 மாணவராக இருந்தபோதே தன் முதலாண்டு பி.ஈ. படிப்பை பற்றி கவலைப்படாத, பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சென்னை மாநகர பொறுப்பிலிருந்த இன்ஜினீயர் மோகன் என்னிடம் இந்த புத்தகத்தை கொடுத்தார். அதை முழுவதும் படித்தேன்!
 குடி எத்தனை பேரை, குடும்பங்களை, நாசமாக்கி வருகிறது என்கிற சஞ்சீவ் குமாரின் நேரடி ஆய்வில் வந்த உண்மைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.
 வக்கப்பட்டி போல எத்தனை எத்தனை கிராமங்கள் மதுவில் மூழ்கி எமனிடம் போய்க்கொண்டிருக்கிறது என்பது போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை சஞ்சீவ் குமார் எழுதியிருக்கிறார். ஒரு ஊரே 30 வயது இளம் விதவைகளின் கூடரமாக உள்ளதாம்.
 அரசு எப்படியும் போகட்டும். அது திருந்தப்போவதில்லை. மதுக்கடைகளை மூடப்போவதில்லை. ஆனால் சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக மது அரக்கனை விரட்டும் போராட்டத்தை நாம் செய்தாக வேண்டும்.
 புத்தகம் எழுதிய சஞ்சீவ் குமாருக்கும், அதை பயன்படுத்தி தொண்டாற்றும் மோகனுக்கும் நல்லதை பாராட்டும் சமூகம் நன்றி சொல்லட்டும்.  

Sunday, December 13, 2015

மீடியா --கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்


டிசம்பர் 1ந்தேதி இரவு கடும் மழை ..இரண்டாம்தேதி சென்னை மற்றும் கடலுரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகியது.


1ந்தேதி பிற்பகல் 2 மணிக்கே சென்னை குரோம்பேட்டை விவேகானதா பள்ளியில் சேவாபாரதி அடுப்பு பற்றவைத்துவிட்டது. சுமார் 1500 உணவு ,பொட்டலங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு குரோம் பேட்டை--தாம்பரம் ரயில் நிலையங்களில் "அல்லாடிக்கொண்டிருந்த" பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது..( கடும் மழையால் பலர் கடையை அடைத்துவிட்டு எஸ்கேப்)

இரண்டாம்தேதி மாலை செம்பரபாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு "ஏரி "களில் கட்டிய வீடுகள் --அப்பார்ட்மெண்ட்" முழ்கத்தொடங்கியது..ஆங்காங்கே இருந்த "ஸ்வயம் சேவகர்கள்" எந்த கட்டளையும் எதிர்பார்க்காமல் இரவோடு இரவாக மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினர்..

3ந்தேதி காலை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் "பரிவார் இயக்க " நிர்வாகிகள் கூடி புரசைவால்கம் சேவாபாரதி அலுவலகம்,-- பாஜக கமலாலயம், ----குரோம்பேட் பள்ளி என 3 பகுதிகள் உடனடியாக செயல் படத்துவன்கினர் ..

முதலில் காப்பாற்றுதல்--மற்றும் மீட்பு பனி
இரண்டாவது தங்கவைத்தால் மற்றும் உணவு
முன்றாவதாக நிவாரணம் மறுவாழ்வு

ஆ.ர.எஸ்.எஸில் சாதாரணமாக எந்த விஷயத்தையும் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.. கூட்டங்களில் "நடந்தவற்றை" சொல்லும் பொது அது புள்ளி விவரமாக இருக்கும்..அந்த புள்ளிவிவரம் பெரும்பாலும் 100 சதவீதம் சரியாக(உண்மையாக) இருக்கும்

இதுவரை அங்கிருந்து கிடைத்த விவரங்கள்

1.சென்னையை 17 பகுதிகளாக பிரித்து அதில் 112 மய்யங்களில் பணி

2..இதில் காஞசிபுரம்-- கடலூர் பகுதியில் பணியில் இடுபட்டுள்ள 29 மையங்களும் அடங்கும்

3.இதுவரை 18 லட்சம் உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ..இது தவிர 8 லட்சம் சப்பாத்திகளும் உண்டு

4.--35000 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப்பருட்களில் உடனடித்தேவையான
குடம்--மக்கு--தீப்பெட்டி --மெழுகுவர்த்தி--பாய்--தட்டு--டம்ளர்--பிளீச்சிங் பவுடர்--பினாயில்--அரிசி --பருப்பு--காய்கறிகள் --எண்ணெய் கொண்ட ஒரு பாக்கட் கொடுக்கப்பட்டுள்ளது --இதை இன்னும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கும் நீட்டிக்க முயற்ச்சி நடந்து வருகிறது..

5--இது தவிர இருசக்கரவாகன பழுது நீக்கும் முகாம் 22 இடங்களில் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து நடந்து வருகிறது..இதி ரூ 500 பெருமான உதிரிபாகங்களும்--சர்வீசும் இலவசம்

6..பதிமுன்று மாநகராட்சி பள்ளிகள் முழுவதுமாக கன்னாடி போல சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது..

7..--115 மருத்துவ முகாம் களில் , இதுவரை 35,000 பேருக்கு சிகிச்சை மற்றும் இலவச மருன்து வழங்க பட்டுள்ளது..இதில் 165 டாக்டர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்..

8..இந்த சேவை பணியில், 11,780, ஆ.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி பாஜக தொண்டர்கள் இடுபட்டுள்ளனர்.

9--.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் ஒரு கொசுவலை கொடுக்கும் திட்டமும் உள்ளது

10--இந்த மனிதநேயப்பணியில், சாதி, மத, மொழி, மாகான எல்லைகளை கடந்து, இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உதவி மற்றும் உணவு வழ்ங்கப்பட்டுள்ளது..

11..ஆங்காங்கே முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்த "தொண்டாளர்களுடன் " சேர்ந்து பணியாற்றியும், பொருட்கள் "கொடுத்து--வாங்கியும்" பணியாற்றிய நல்ல அனுபவங்கள் நடந்தேறியுள்ளது.

இவ்வளவு செய்த்தேன் என்கிறீர்களே --உங்களை தொலைகாட்சியில் காட்டவில்லையே என வெளியூர்களில் இருந்து பலர் எங்களை கேட்ட வண்ணம் இருந்தனர்

தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக செய்பவர்கள் அல்ல நாங்கள்..

ஆனாலும், ஒருசிலரை மட்டுமே குறிவைத்து தொலை காட்சிகள், காண்பித்தன --அல்லது இருட்டடிப்பு செய்தன --என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?--இது ஊடகங்களுக்கே வெளிச்சம்..

அவர்கள் ஆத்மா பரிசோதனை செய்துகொண்டால், எங்களுக்கு எவ்வளவு "ஸ்பேஸ் "--கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்
எனவே

இது
வேண்டுமென்றே செய்யப்பட்டதா?
தெரியாமல் நடந்ததா?
அரிநது செய்யப்பட இருட்டடிப்பா?
அல்லது இந்து இயக்கங்கள் மீது உள்ள "இன்டாலரன்ஸ்"ஆ

கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்

Tuesday, December 8, 2015

”லாவணி கச்சேரிகளை” நிறுத்துங்களேன்..


ராமதாசு--இளங்கோவந்-கலைஞருக்கு--சென்னை பொதுஜனம் வேண்டுகோள்..

மக்கள் சேற்றுக்குள் சிக்கி சித்ரவதை பட்டுக்கொண்டிருக்கின்றனர்..

ஐயா..ராமதாசும், இளங்கோவனாரும்--மூத்ததலைவர் கலைஞரும், நிவாரண ப்பணியில் பங்கேற்காமல், 10,000/- ரூபாய் கொடு---10,000/-கோடி கொடு என மத்திய மாநில அரசுகளுக்கு “வாய்ப்பந்தல்” அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்..

பாஜக..ஆர்.எஸ்.எஸ்--சேவாபாரதி--மட்டும்..நிவாரணப்பணியன்றி--வேறொன்றும் எண்ணாமல்..களத்தில் பணியாற்றி வருகிரது..

சென்னையில், 600 குழுக்கள்..7000 பேர் நேற்று களத்தில்..
இன்றுமுதல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பகுதியாக பொருப்பெடுக்கிறது..

மாவட்டத்திற்கு 100 தொண்டர்கள்

3 நாளைக்கு ஒரு ஷிஃப்ட்..

கொடுக்கும் எந்த பொருளுளின் மீதும் எந்த ஸ்டிக்கரோ--அடையாளமோ இல்லை..

அரசுக்கு எந்த கோரிக்கையும் இல்லை--எங்களை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தவிர..

ஐய்யா அரசியல் வாதிகளே..மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல--பேரிடரினால் துயருருகிறார்கள்..வீடுவாசலை இழந்திருக்கிறார்கள்

நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அவர்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார்கள்-

வாய் ஜாலங்களை நிறுத்திவிட்டு கைஜாலங்களை காண்பியுங்கள்
செயலில் இறங்குங்கள்..

நிலமையை சகஜ நிலைக்கு கொண்டுவந்துவிட்டு “நீங்கள்தான் எல்லாம் செய்தீர்கள்” என பட்டயம் வேண்டுமானால் போட்டுதந்து விடுகிறோம்..

அதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்

கேட்காமலே கொடுக்கும் மோடி

நான் இந்த தலைப்பு போட்டிருக்கக்கூடாது தான்..

ஆனால் “உணர்ச்சியைவிட” “உண்மை “ வலிமையாய் இருந்ததால் போடவேண்டிய கட்டாயம்

ஆம்..உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் தம் மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநிலமுதல்வர் படகூடாது என்று

தமிழகத்தில் மழைபொழியும் போதே மத்திய அரசு அணைத்து உதவிகளையும் செய்யதயார் என அறிவித்தது தமிழகம் 10நாட்கள் கழித்துதான் நிவாரணம்கேட்டு அறிக்கை சமர்பித்தது அடுத்த சில நிமிடங்களில் 940கோடி கொடுக்கப்பட்டது

சில நாட்களில் மீண்டும்மழை முன்பு மழைக்கு உதவ தயார் என்ற போதே 10நாட்கள் கழீத்து உதவிகேட்டவர்களின் வேகத்தை உணர்ந்த பிரதமர் தானே நேரடியாக தமிழகமுதல்வரிடம் பேசினார் அவர்கேட்டதை உடனே செய்வதாக அறிவித்தார்

அடுத்த சில நிமிடங்களில் முன்புமழைக்கு வந்து தங்கியிருந்த ராணுவத்தினர் களம் இறங்கினர்

மறுநாள் 800தேசிய பேரிடர்குழு வீரர்கள் படகு, 4ஹெலிகாப்டர்கள்
கடற்படை கப்பல் நிவாரண பொருட்களோடு களமிறங்கியது
மீட்புபணியில் சுணக்கத்தை உணர்ந்த பிரதமர் தானே மாநில அரசு அழைக்காமலே பாதிப்புகளை பார்வையிட்டார் அதன் பலன்
உடன் 1000கோடி தமிழகத்திற்கு

ஒரு வாரம் BSNLதொலைபேசி இலவச சேவை

நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் வரி இல்லை
50000சுரியசக்தி மின் விளக்குகள்

ரெயில்வே நிர்வாகம் மூலம் 100000 வாட்டர் பாட்டில்கள் இலவசம்
கப்பல் மூலம் 850 டன் குடிநீர் பாக்கட்
கப்பல் மூலம் 350 டன் அரிசி

விமானநிலையம் பாதிக்கப்பட்டபோது ராணுவதளத்தில் குறைவான கட்டனத்தில் விமான சேவை

வாளி,குவளை,துண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்படை ஊழியர்கள்மூலம் விநியோகம்

சனிகிழமை முதல் அனைத்து ATM லும் பணம் வைக்க கடும் உத்தரவு

முதல் முறையாக நடமாடும் ATM சேவை

இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்று கிழமை வங்கி செயல்பட உத்தரவு
ராணுவதளபதி ஆய்வு

4ஹெலிகாப்டர் 7ஆனது மேலும் 200கடற்படை வீரர்கள் சேர்கப்பட்டார்கள்

மேலும் 20தேசிய பேரிடர்மீட்புகுழு 800வீரர்களோடு வருகிறது

இரண்டு கடற்படைபோர்கப்பல்கள் நிவாரணபொருட்களோடு வருகிறது..
தமிழார்வலர்--பாஜக-- எம்.பி. தருண்விஜய் ரூ 50 லட்சம் நிவாரண உதவி..

வங்கிகள் கடன் தவணையை இம்மாதம் வசூலிக்காது...அதற்கான “ஃபைன்” தள்ளுபடி

இவை எல்லாம் இந்தியபிரதமராக யார் வரக்கூடாது என நினைத்து தமிழகம்
வாக்களித்ததோ அவர் தன் கடமையாக தமிழகத்திற்க்கு பறந்து வந்து செய்தது
இவ்வளவு செய்தபிறகும் ”அள்ளிக்கொடுதார் “ என எழுதுவது தவறா?