Pages

Wednesday, August 25, 2010

கடுகைக்கொண்டு பேயை விரட்டும் திட்டம்

                                    

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டம் கலைஞரின் 100 நாள் வேலைத்திட்டமானது--ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் மளிகை சாமான் பாக்கட்டில் மளிகை சாமான்களை விட பெர்ர்ர்ரிய--- கலைஞர் படம் ---ஏதோ அவர் வீட்டு காசை எடுத்து இலவசமாய் மக்களுக்கு கொடுப்பது போன்ற தோரணை --””எல்லாப்புகழும் கலைஞருக்குத்தாந் “”என்கிறது-- திமுக கோஷம். தற்போது தொடங்கப்பட்ட சினிமாக்காரர்களுக்கான நகரம் கூட “”கலைஞர் சினிமா நகரமாம்--மருத்துவ காப்பீட்டு திட்டமும் கலைஞர்காப்பீட்டு திட்டமாம் “”---இப்படிப்பட்ட கூத்துக்கள்  தமிழ் நாடு தவிர வேறு எங்கு நடக்கும்?  . பெருமைகள் எல்லாம் இவர்களுக்காம்--சிறுமைகளை சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.---உடனே வயதை காரணம் காட்டி கலைஞர் கடிதம் எழுத ஆரம்பித்து விடுகிறார்.

இந்த 100 நாள் வேலைத்திட்டதில் ஊழலோ--- ஊழல் ....தினசரி பேப்பர்களில் பல செய்திகள்--சொன்னவை குறைவு--சொல்லாமல் விட்டதே அதிகம்--

100 நாள் வேலைத்திட்டதில் ஊழல்--திமுக  பஞ்சாயத்து தலைவர் கைது---100 ரூபாய்க்கு 50 தான் தருகிறார்கள்..மீதி எங்கே?--100 நாள்வேலைத்திட்டதில் போட்ட சாலைகள்--பாலங்கள்--ஒரே மழையில் அவுட்--தண்ணிரில் கரைந்து போனது----இப்படி செய்திகள்பேப்பர்களை நிறைத்து வந்துகொண்டிருக்கிறது
பரம்பரை விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை--அரைகுறை வேலையும்--அரைநாள் வேலையும் செய்தே பழக்கப் பட்டுவிட்டதால், விவசாய வேலை செய்வது கூலிகளுக்கு இஷ்டமில்லாமல் போய்விட்டது.

இத்திட்டதின் நதி மூலம்---
ஜீன் டிரிஸ்   என்கிற பெல்ஜியம் நாட்டுக்காரர்--டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் வேலை பார்த்த பொருளாதரா நிபுணர் இவர்---இவரிடமிருந்து மார்க்ஸிஸ்டுகள் இறக்குமதி செய்து .மூ.கூட்டணியில் இருக்கும்போது காங்கிரஸை பிரஷர் கொடுத்து கொண்டுவந்த திட்டம்.

எப்போதும் போல காங்கிரஸ் இதற்கு “”மஹாத்மா காந்தி கிராமப்புர வேலை உறுதித் திட்டம் “” என நாமகரணம் சூட்டி சுருட்டலை துவக்கியது.

2007--08 இல் 11,000/= கோடி ரூபாயுடன் 593 மாவட்டங்களில் அமுல் படுத்த துவங்கி--- 2009-10 இல்-- 39,100/---கோடியென இப்போது கஜானாவுக்கு பெரும் கலக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இத்திட்டதில் சொல்லப்பட்ட எந்தவொரு விதிமுறையும் கடைபிடிக்கப்படுவதில்லை.  --””பாப்பாத்தியம்மா--மாடு வந்துடிச்சு--கட்டுன்னா..கட்டு--””என்பதுபோல--””எரிகின்ற வீட்டில் பிடிங்கிய வரை ஆதாயம் “” என்பதுபோல-- சுருட்டல் மட்டுமே நடக்கும் திட்டமாக  இன்று இது இருக்கிறது.

திட்டம்---
இத்திட்டதிற்கான பயனாளிகளை தேர்ந்தெடுக்க பல் வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பயன் வேண்டுவோர் ஒவ்வொறு கிராமத்திலேயும் உள்ள கிராம பஞ்சாயத்தில் தங்களுடைய பெயர்--முகவரி--புகைப்படம்--இவற்றுடன் எழுத்துபூர்வமாக விண்ணப்பம் தரவேண்டும். அதை பஞ்சாயத்துக்கள் பரிசீலித்து--சரிபார்த்து--அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும். அட்டை கிடைத்த 15 நாளுக்குள் வேலை கிடைக்காவிட்டால், முழுச்சம்பளமும் இலவசமாக வழங்கப்படும்.

வேலைகள்-----

இப்போது--ஒருகல்லை இங்கிருந்து எடுத்து அங்கு போடுவதும் --ரோட்டோரம் புல் பிடுங்குவதும்---அரை நேரம் மம்மட்டியுடன் அலைந்த பிறகு மதியத்திற்குமேல் “”டாஸ்க்மாக் “”சென்று குவாட்டர் அடித்து காசில்லாமல் வீடு திரும்புவதும்--முதல்வர்--துணை முதல்வர் பொதுக்கூட்டதிற்கு கூட்டம்காட்ட செல்வதுமே -- இத்திட்டதின் வேலைகளாக இருக்கிறது. ..

ரி குளங்களை தூர் வார்வது---புதிய ஏரி--கண்மாய்--குளங்களை வெட்டுவது,--கிராமப்புர சாலைகள்--மற்றும் புதிய இணைப்புசாலைகள் அமைப்பது---புதிய செக்--டாம் அமைப்பது---காடுகளை வளர்ப்பது--பயிர் அறுவடை செய்வது---வெள்ளத்தடுப்பு மற்றும்பாதுகாப்பு-- போன்ற ஆக்கபூர்வ பணிகளை செய்வதே-- இத்திட்டதில் சொல்லப்பட்டவை  ..ஆனால் இவை எங்கே நடக்கிறது--நல்லவை  நடக்கவில்லை எனபதை நாடறியும்.

கிராமப் பஞ்சாயத்துகள் இத்திட்டதின் பயனாளிகளை கண்டறிந்து அதற்கான பட்ஜட்டை தயார் செய்து அனுப்பினால் அக்கிராமத்தில் வேலை இருந்தாலும் இல்லாவிட்டலும் முழுநிதி ஒதிக்கீடு செய்யப்படுகிறது என்பதால்---- திமுக காட்டில் அடை மழை பெய்கிறது. இதில் வேலை செய்வோறுக்கு நிர்ணயித்த 100 ரூபாய் கிடைப்பதில்லை எனபது மட்டுமல்ல 50 கிடைப்பதே அரிதாக உள்ளது. திட்டம் நிர்ணயித்த வேலைகளில் 40 சதவீதம் கூட செய்யப்படுவதில்லை என்பதை பொதுக் கணக்குக் தணிக்கை குழு பலமுறை சுட்டிக்காட்டியும் அரசும் அதிகாரிகளும் திருந்திய பாடில்லை.

2,லட்சம் அடயாள அட்டைகள் வழங்கப்பட்ட பகுதியில் 50 ஆயிரம் பேர்களுக்குக் கூட வேலை தரப்படுவதில்லை.
என ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முழு ஒதிக்கீடான 118 கோடி ரூபாயும் எப்படி செலவு செய்யப்பட்டது என்றுதான் தெரியவில்லை.அது ஆளூம் திமுக காரர்கள் பையை நிரப்பியது மட்டுமே உணமை.

திமுகவினர் யார் கண்ணிலும் மண்ணை தூவுவதில் கைகாரர்கள். ஆறு மாதத்திற்க்கொருமுறை 2 மாவட்டதிலுள்ள-- 2 கிராமதிலுள்ள 2 திட்டங்களை தேர்வு செய்துஅதில் 5 விவசாயிகளை நேரடியாக விசாரிக்க பார்வையாளர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும் நியமிக்கப்படுபவர்கள்—திமுக மற்றும் காங்கிரஸ் காரர்கள். அப்போ இத்திட்டம் எந்த லக்‌ஷணதில் செயல் படுகிறது என்பது  தெரிகிறதல்லவா?

இத்திட்டத்தினால் விவசாயி பெயரில் ஆளும் கட்சிக்காரகளுக்கு கைநிறய காசு.---

இந்த 5 ஆண்டுகளாக -- பாரம்பரிய விவசாயம் பாழ்பட்டுபோனது. விளைச்சல் சுருங்கிப்போனது.விளை நிலம் கருகிப் போனது..கிளை, வட்டச் செயலாளர்கள் வீடுகட்டிக் கொண்டார்கள்—பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெரும் பணமுதலைகள் ஆனார்கள்—எற்கனவே மழை பொய்த்து—காவிரி வற்றி—மூணு போகம் இரண்டாகி—ஒன்றானது—அதற்கும் விவசாய கூலிகள் கிடைக்காததால் அதுவும் இன்று உருகுலைகிறது..

இன்னும் ஐந்து ஆண்டுகளில் உணவு தானியங்கள்—ஏன் காய்கறிகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட இத்திட்டம் பெரும் பாடுபடுகிறது

ஒரு வீட்டில் ஒரு பேய் புகுந்துகொண்டது.பேயைவிரட்ட மந்திரவாதி வரவழைக்கப்பட்டான். அவன் சொன்னான்-நான் பேயை கண்டுபிடித்துவிட்டேன் -- பக்கதிலுள்ள கல்லறைக்கு நாளைகாலை சென்று ஒரு கடுகு பொட்டலத்தை புதைதுவிடு--.பேய் வராது-- என்றான். . அவர்களும் அவ்வாறே செய்தனர்..அன்றிரவு பேய் வரவில்லை. மந்திரவாதியிடம் காரணம் கேட்டனர். அவன் சொன்னான்-- -ராத்திரி வெளியே கிளம்பும் பேய் கடுகு பொட்டலத்திலுள்ள கடுகை ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பிக்கும்—எண்ணி முடியும்போது பொழுது விடிந்துவிடும்—அதனால் பேய் வரவில்லை.. தினசரி இதையே தான் செய்யும் –கவலைபடாதீர்—என்றான்.

அதுபோல வேலையில்லா திண்டாட்டம்-போக்க---விவசாயம் வளர்ச்சிபெற --எதுவும் செய்யாத கைய்யாலாகாத இந்த அரசு 100நாள் வேலைத்திட்டம் என்ற உதவாக்கரை திட்டத்தை கொண்டுவந்து அரைகுறை வேலைகொடுத்து பேயை திசைதிருப்ப முயல்கிறது—இந்த கடுகு என்று முளைக்கப்போகிறதோ—பேய் என்று வெளியே வரப்போகிறதோ? கையும் சூரியனும் மறையப்போகிறதோ?

No comments: