தன்னுடைய ஊருக்கு வந்த வேற்று மாநில முதல்வர் நரேந்திர மோடியை
வரவேற்றால் “ மதவாதம் தொற்றிக்கொள்ளும்” என நித்தீஷ் குமார் பயந்து
ஊரைவிட்டு ஓடியதை புரிந்து கொள்ள முடிகிறது..பிஹாரின் 20 சத முஸ்லீம் ஓட்டை
அவர் நம்பி இருப்பதால் வந்த பயம் இது..
ஆனால் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வளையத்தின் இசட்
பிளஸ்--பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நரேந்திர மோடிக்கும் அவரது பேச்சு
கேட்க வரும் மக்களுக்கும் பாதுகாப்பு மறுத்து ஊரைவிட்டு ஓடிய
நித்தீஷ்குமார் போன்ற கோழைகளை பார்க்கமுடியுமா?
10 லட்சம் பேர் கலந்துகொண்ட பாட்னாவின் காந்திமைதான கூட்டத்தின் 8
வாயிலகளிலும், ஒன்றில்கூட “மெட்டல் டிடக்டர்” சோதனை இல்லை..மேடையை
சுற்றிலும், மைதானத்தை சுற்றிலும், “பாம் ஸ்குவாட்” இல்லை..மோப்ப நாய்
இல்லை.. போதிய எண்ணிக்கையில் போலீஸ் காரகள்கூட இல்லை..வெடிக்காத குண்டுகளை
மக்களே கண்டுபிடித்தபின்பும், அதை “டிஃப்யூஸ்” செய்ய போலீஸ்காரகள்
வரவில்லை..ஆக மொத்தம் அரசும் போலீசும் கண்டுகொள்ளாத ஒரு மாபெரும்
பேரணி..பாதுகாப்பின்றி நடை பெற்றுள்ளது.
எப்படியாவது..யாராவது,,,ஒருவெடிகுண்டாவது வெடித்துச் சிதறி.. மோடிக்கு
ஆபத்து ஏற்படுத்திவிடாதா?அவரை அரசியல் ரீதியாக வீழ்த்தமுடியாததால்,
குண்டின் மூலமாகவாவது வீழ்த்திவிடலாம்..என்ற நப்பாசையில் நடந்த
சம்பவங்களாகவே இவைகள் தெரிகிறது..
இதைவிட கேவலம், காங்கிரஸ்காரர்களின் பேச்சும் நடந்துகொண்ட விதமும்தான்..
“இந்த
குண்டுவெடிப்பினால், பா.ஜ.க விற்கு மாபெரும் லாபம்” ...என கோமாளி திக்விஜை
சிங் “டுவீட்” செய்ததும்..”குண்டு வெடித்த.. இடமும், நேரமும், பாஜகவிற்கு
சாதகம்” என ஐக்கிய ஜனதா தளத்தில் பொதுச்செயலாளர் சபீர் அலி பேட்டி
கொடுத்ததும், “மோடியின் பேச்சால்தான், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என்
காங்கிரசின் பி.சி.சாக்கோ உளரியதும் கேவலத்திலும், கேவலமானது..இதைவிட
கேவலம், நம்மூர் பீட்டர் அல்பொன்ஸ் “ குண்டு வெடிக்கும் போது மோடி ஏன்
பேசிக்கொண்டிருந்தார்” என்பதும்தான்..
உயிர்ப்பலிகளில் அரசியல் லாபம் பார்க்கும் கேவலமான எண்ணம்
காங்கிரசுக்கு மட்டுமே உண்டு..அதனால்தான், தன் பாட்டி இந்திராகாந்தி, அப்பா
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் சிந்தி ராகுல் அதை ஓட்டாக மாற்ற
முயன்றதை நாடும் நாமும் சில நாட்களுக்கு முன் பார்த்தோம்..
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மொகல் சாராய் ரயில் நிலயத்தில்
கொல்லப்பட்டதையும், டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிரையில் ஷேக்
அப்துல்லாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டதையும், தமிழகத்தில் ஆடிட்டர்
ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, என நூற்றுக்கணக்கான பாஜக,
இந்து இயக்க சகோதரர்கள் கொல்லப்பட்டதையும், ராகுல் போல நீலிக்கண்ணீர்
வடித்து பாஜக என்றும் ஓட்டாக மாற்ற முயற்சித்தது கிடையாது..
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அன்று நானும் மறைந்த அகில இந்திய
தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி அவர்களும், தென்கனிகோட்டையில் பிரச்சாரம்
முடித்து மதுரை திரும்பிகொண்டிருந்தோம்...சேலம் வந்தபோது ராஜீவின் கொலை
செய்தி கிடைத்தது..பத்திரிக்கையாளர் ஒருவர் “ராஜீவின் மரணம் பாஜகவிற்கு
அரசியல் ரீதியாக லாபம்தானே?” எனறபோது கொதிதெழுந்த ஜானாஜி..”ஒருவரின்
உயிரிழப்பில் அரசியல் லாபம் தேடும் கேவலமான எண்ணம் பாஜகவிற்கு கிடையாது”
என்றார்..இதுதான் பிஜேபி..
சரி..சப்ஜெட்டுக்கு வருகிறேன்...பாட்னாவில் முதல் குண்டு
வெடித்தபோதே..மோடி பாட்னா விமான நிலையம் வந்து விட்டார்...அவரது பாதுகாப்பு அதிகாரிகள்(குஜராத்)
மீட்டிங்கை கேன்சல் செய்ய அறிவுறுத்தியும், மோடி அப்படி
செய்யவில்லை...மேடையில் பேசிய எந்த தலைவரும் குண்டு வெடிப்பை
வெளியடவில்லை..பேச்சை நிறுத்தவில்லை..கொஞ்சம்கூட பதட்டத்தை
காண்பிக்கவில்லை..
அவ்வாறு செய்திருந்தால், அடுத்தடுத்து வெடித்த குண்டுகளில்
சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டிருப்பர்...பயத்தினால் மக்கள் முண்டி அடித்து
ஓடி, ”ஜன நெரிசல் “ ஏற்பட்டு அதிலும் ஆயிரக்கணக்கன அப்பாவிகள்
மரணமடைந்திருப்பர்..”அதிமேதாவி பீட்டர் அல்போன்ஸ்சே “ புரிந்து
கொள்ளுங்கள்.
மோடியின் தைரியம்..சமயோஜிதத்தினால், அத்தனை பேரும்
காப்பாற்றப்பட்டனர்..”எல்லோரும் உடனடியாக நேராக பத்திரமாக வீடு போய்
சேருங்கள்” என்பதைதவிர மோடி வேறு ஏதும் சொல்ல வில்லை..
யார் ராஜதந்திரி...யார் மக்கள் விசுவாசி...யார் சிறந்த நிர்வாகி...யோசியுங்கள்...பயத்தீர்ப்பு தெரிந்ததுதானே..