Pages

Wednesday, October 9, 2013

”இந்து”-வித்யா சுப்ரமணியத்தின் 8.10.13.கோயபல்ஸ் பிரச்சார கட்டுரைக்கு பதில்

தி.இந்துவிற்கு பதிலளிப்பதே அவசியமற்றது..ஆனால் அதன் தொடர்ந்த பொய் கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.—பாஜக—மோடிமீது அமிலம் கொட்டும் வார்த்தைகள், முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

இதற்கு வழி என்ன..--இந்து திருந்தாது…--அது திருந்த வேண்டியது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை..ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரம் முழுக்க முழுக்க இந்துவால் “அப்யூஸ்” செய்யப்பட்டு வருகிறது.
 
வித்யா சுப்ரமணியத்தின் இன்றய கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை…இடை இடையே ஓரிரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்தசரக்கால் “மேனுபிலேட்” செய்யப்பட்டு எழுதப்பட்ட  கட்டுரை இது..

உண்மையிலேயே இதற்கு பதில் சொல்லவேண்டியதில்லை..ஏனெனில் இதில் ஒன்றுகூட உண்மையில்லை..இந்துவிற்கு பையித்தியம் பிடித்துவிட்டது…தொடர்ந்து “மோடி ஜுரம் “ உச்சத்தில் இருக்கிறது....மோடி ஜுரம் என்பதைவிட “மோடி பயம் “ என்பதே சரியாக இருக்கும்..

64 ஆண்டுக்கு முன்பான சரித்திரத்தை எடுத்து எழுதினால், யாருக்கு உண்மை தெரியப் போகிறது?..யார் ஆதாரங்களை “வெரிஃபை” செய்ய போகிறார்கள்?...என்ற அசட்டுத்தனதில் எழுதியிருக்கிறார்..வித்யா..

திருமதி வித்யா அவர்களுக்கு ஒரு வார்த்தை…..தொடர்ந்து எழுதுங்கள்….இப்படியே எழுதுங்கள்…அப்போதுதான்..நீங்கள் சரித்திரத்தின் பக்கங்களில், ஒரு “ மூன்றாம் தர எழுத்தாளர்—காழ்ப்புணர்ச்சி களஞ்சியம்”—என்று வர்ணிக்கப்பட்டு காணாமல் போவீர்கள்..உங்களின் நோக்கங்களிலும் சரி..எழுத்திலும் சரி…உண்மையும் நேர்மையும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது…

ஒருவேளை உங்கள் உள் உணர்வில் அது கொஞ்சமாவது இருக்குமானால், நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அது எந்த ஊரில் இருப்பதானாலும், அதற்கு செல்லுங்கள்…ஓரிரு நாள் தங்கிய பின் மீண்டும் எழுதுங்கள்..அப்போது உண்மையை உணர்வீர்கள்…

அன்பிற்கினிய இந்து ஆசிரியர் அமெரிக்க குடிமகன்…சித்தார்த் வரத ராசனுக்கு ஒரு வேண்டுகோள்…பாஜக..ஆர்.எஸ்.எஸ்..”வெறுப்பே” உங்கள் பிறவி லட்சியமானால், உங்கள் எழுத்தில் அது தொடருமானால், வாசகர்களுக்கு அது சலித்துப்போகும்..வெறுத்துப்போகும்…ஏனெனில் வாசகர்களுக்கு உண்மை தெரியும்,…
உங்களின் மூதாதையர்கள் கட்டிக்காத்த நடுவு நிலைமை..நாவடக்கம்..( எழுத்தடக்கம்)..இவைகளை நீங்கள்..காப்பற்ற முடியாவிட்டாலும், காற்றில் பறக்க விடாதீர்கள்..

மண்டபத்தில் உள்ளோரையும் ரோட்டில் போவோர் வருவோரையும் தேடிக்கண்டு பிடித்து, பி.ஜே.பி –ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எழுதவைத்து வரும், உங்களை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது..தயவு செய்து ஒரு “சைக்கியாடிரிஸ்டை” …கன்சல்ட் செய்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து அவதூராக எழுதிவரும் இந்து பத்திரிக்கைகளுக்கு..( தமிழ் பதிப்பையும் சேர்த்து)…எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக…தயவு செய்து அவதூறை நிறுத்தி விடாதீர்கள்…நீங்கள் எழுத எழுதவே…மக்கள்..”இவர்களை பார்க்க வேண்டும்” என எங்களை நோக்கி வருகிறார்கள்..நேரில்  பார்த்ததும்..நேர்மையானவர்கள்” என்பதை புரிந்து எங்களோடு இணைந்து கொள்கிறார்கள்…

செலவில்லாமல்..எங்களுக்கு மிகப்பெரிய  அளவில்..விளம்பரமும்..ஆதரவும்..தேடித்தரும் இந்து குழுமத்திற்கு எங்கள் “நன்றி” உரித்தாகுக…

இத்தனை நாள் உங்களின் அவதூறு பிரச்சாரமே…எங்கள் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவை தேடித்தந்தது..அதே போன்ற ஆதரவை ஆர்.எஸ்.எஸுக்கும் தேடித்தர ஒற்றைக்காலில் நிற்கும் உங்களுக்கு மீண்டும் நன்றி..

No comments: