Pages

Sunday, September 9, 2012

பொய்யை வாந்தி எடுக்கும் ..கபில் சிபலே ராஜினாமா செய்



நிலக்கரி ஒதிக்கீட்டு ஊழலுக்கு காரணம் மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டிதான் “ எனவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம்—சத்தீஷ்கர்—ஜார்க்கண்ட் முதல்வர்கள் ராஜினாமா செய்யவேண்டும்---

என்ற புதிய குண்டை இன்று மத்திய “பொய்த் தகவல்துறை “ மந்திரி கபில் சிபல் சொல்லியுள்ளர்..

இவர்தான் ஏற்கனவே 2-ஜி ஊழலில் “சைபர் லாஸ் “ என்றார்.

முதலில் மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

1..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டி “ சட்ட அந்தஸ்து இல்லாதது..இதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டியதில்லை..
இதற்கு ஆதாரம் மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசின் கல்வி மந்திரியின் தகப்பனாரும் எம் .பி யுமான விஜெய் தாதா விற்கு ஜார்கண்ட் அரசு நிலக்கரி சுரங்க ஒதிக்கீடு செய்ய மறுத்தது..விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது.

ஆனால் மத்திய மின்துறை அமைச்சகம் அவருக்கு லைசன்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் நிலக்கரி சுரங்கமும் ஒதிக்கீடு அதே ஜார்கண்ண்டில் செய்தது…மாநில அர்சுக்கு எவ்வளவு “பவர் “ என்பது இதிலிருந்தே தெரிகிறது..கபில் சிபலின் அறிக்கை எவ்வளவு பொய் என்பதற்கு இதுவே சான்று..

2..அன்றைய ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா..ராஜேவின் ஏப்ரல் 5—2005 ஆம் தேதியிட்ட கடிதத்தில் “ஸ்கீரினிங் கமிட்டி “ தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் என்பதும் கபில் சிபலின் வாதம்..
ஆனால் ஜூலை 25ந்தேதி..2005 ஆம் ஆண்டு (அதே ஆண்டு )..பிரதம மந்திரி அலுவலகத்தின் முதன்மை செயலாளர்..டி.கே.ஏ.நாயர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதிச் செயலாளர்..மின்துறை செயலாளர்—தொழில்துறை செயலளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…   ”சுரங்க சட்டத்தை திருத்தி ஏலமுறை அமுல் படுத்த காலதாமதம் ஆவதால்..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கம்மீட்டி “   தொடரும் என்று தீர்மானித்திருக்கிறது..இதன் “மினிட்ஸ்” நேற்று எல்லா ஆங்கில நாளேடுகளிலும் வந்துள்ளது..
இதற்கு பின்னரும் இவ்வளவு பெரிய பொய்யை கபில் சிபல் அவிழ்த்துட்டுள்ளார்..என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி

3..ஊழலின் ஊற்றுக்கண்..கருணாநிதியின் கைத்தடி..ஜகத்ரக்‌ஷகன்..மீதுள்ள நிலக்கரி ஊழலை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு..மத்திய சட்டதுறை மந்திரி..சல்மான் குர்ஷித்..”அவர்மீது புகார் இதுவரை வரவில்லை..அப்படியே வந்தாலும் “ஸ்கீரினிங் கமிட்டி “ முறையாக தீர்மானிக்க வில்லை “ என்ற குற்றச்சாட்டு வந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் “ என்று கூறியுள்ளார்..

ஆக “ஸ்கீரினிங் கமிட்டியின் “ சூத்திர தாரிகள் காங்கிரசும் மத்திய அரசும் என்பது இதிலிருந்தும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

நாம் ஏன் பிரதமரை ராஜினாமா செய்யச்சொல்கிறோம்..

கட்டடமே இல்லாத –ஆபீசே இல்லாத காங்கிரஸ் எம்.பி விஜய் தார்தா வின் கம்பனியின் 10 ரூபாய்..ஷேர் ரூபாய் 8880 க்கு விற்று கொள்ளை அடித்ததும்..

நிலக்கரி துறைக்கு சம்பந்தமே இல்லாத ஜகத்ரக்‌ஷகன்…கம்பனி ஆரம்பித்த 4 நாளில் பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசின் "பிப்டிக்" உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு “நிலக்கரி லைசன்ஸ்..மற்றும் சுரங்கம் ஒடிசாவில் பெற்றுக்கொண்டு..6 ஏ மாதத்தில் அதன் 51 சதவீத பங்குகளை பல்லாயிரம் கோடிகளுக்கு விற்றதும்…....
 ஊழலில்லை என்கிறார்..பிரதமர்—
சோனியா—காங்கிரஸ் காரர்கள்..
நியாயமா..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Wednesday, September 5, 2012

”காங்”-ணக்கியமும்---SC/ST—பதவி உயர்வு மசோதாவும்



என் நண்பரின் பேரனிடம் ”கை”.ய்யில் எந்த பொருளை கொடுத்தாலும்..கீழே போட்டு உடைத்து விடுவான்..பொருளின் “வலிமையை” சோதிக்க அவனிடம் கொடுத்தால் போதும்.அவன் “ கை” பட்டு பொருள் உடையவில்லை என்றால் அது ஐ.எஸ்.ஓ.—ஐ.எஸ்.ஐ..சான்றுக்கு மேலானது..

மெஜரிட்டியே இல்லாமல்..ஒரு மைனாரிட்டி சர்க்காரை உயிர்போகாமல் காப்பது எப்படி –(நரசிம்மராவ்..அரசு)…
மாநிலமே(தெலுங்கானா-ஆந்திரா) தீப்பற்றி எரிந்தாலும் ஆட்சி கவிழாமல் இருக்க வைப்பது எப்படி?---

ஆதர்ஷவில் இருந்து 2-ஜி- ஊழல்வரை—எவ்வளவு “ஸ்கேம்கள்” வெளிச்சம் போட்டாலும்” தைரியமாக முகத்தை காட்டிக்கொண்டு வெளியில் நடமாடுவது எப்படி”?

தற்போது வசமாக மாட்டிக்கொண்ட “நிலக்கரி ஒதிக்கீட்டு” ஊழலிலும்..அதனால் பார்லிமெண்ட் முடக்கத்திலிருந்தும் தப்பிப்பது எப்படி ?” என்கிற கலைகளிலும்…புதிய பாடம் எழுதி—புதிய சிலபஸ் உருவாக்கி…பி.ஹெச்.டி—பட்டம் பெருவது எப்படி?---
என உலகிற்கே ஊழலில் வழிகாட்டியாய் இருக்கும் காங்கிரசின் நெகட்டிவ் திறமையை பார்த்து மயிர்கூச்செரிகிறது..

10 நாட்களுக்கு மேலாக பார்லிமெண்ட் நடக்கவில்லை…பிஜெபியின் இந்த அரசியல் வெற்றியை எப்படி முறியடிக்க முடியும்?—என திட்டம் போட்டது காங்கிரஸ்..தனது ஒவ்வொரு பழைய--- பதுக்கி வைத்த பாடங்களை தூசி தட்டி எடுத்தது காங்கிரஸ்..

முதலில் தன் கட்டுபாட்டில் உள்ள சிபிஐ கோர்ட்டின் குஜராத் நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக வாசித்து..ஒரு களயபரம் உண்டு பண்ன முயற்சி செய்தது…ஆனால் எதிர்பார்த்த அளவு அதில் வெற்றி பெறவில்லை..

நிலக்கரி ஒதிக்கீடு ஊழலில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வலியுருத்தியதன் பேரில்தான் “ஸ்டீரிங் கமிட்டி” நடைமுறையை பின்பற்றினோம் என்றது,,

ஆனால் நிலக்கரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிரது..ஸ்டீயரிங் கமிட்டி சட்டபூர்வ அந்தஸ்து இல்லாதது..அதை மத்திய அரசு “பைபாஸ்” செய்ய முடியும்..என்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தவுடன் காங்கிரசின் ஆட்டம் அடங்கிப்போனது..

ஆனாலும் முழுமையாக அடங்கவில்லை..எந்த விஷயத்தை எடுத்தால் எல்லோரும் “வாய் மூடுவர்—பிஜேபி அடங்கும்”—என “ரூம்” போட்டு யோசித்து—இப்போது  SC/ST அதிகாரிகள் பதவி உயர்வு சட்டத்தை கைய்யில் எடுத்துள்ளது..

எல்லோரும் கேட்கும் கேள்விதான்..காங்கிரசுக்கு இந்த மசோதா மீது திடீரென ஏன் ஆவல்—பாசம்—இது பற்றி இத்தனை ஆண்டுகளாகளில் குறிப்பாக—இந்த ஆண்டில்-- அதிலும் குறிப்பாக  இந்த மழைக்கால கூட்டத்தொடரில்..எந்த பேச்சும் இல்லையே..இப்போது திடீரென ஏன்?..இப்படி?—

2—3—நாட்களாக இந்த “காங்”(சா)-ணக்கிய  கும்பல் ராப்-பகலாக ஒர்க் பண்ணி..இந்த ”ஐயிட்டத்தை”—தேடிப்பிடித்து…இன்று எல்லா கட்சிகளின் காங்—எதிர்ப்பை முடக்கி—அவர்களை திருப்பி முடக்கும் வித்தையை துவக்கி---புதிய விறு விறுப்பை உருவாக்கியுள்ளது..

மக்களுக்கு நல்லாட்சி தர சிந்திக்கும் பாஜக ஒரு பக்கம்—ஆட்சியை பிடிக்க ஆலாய் பறக்கும் மற்ற கட்சிகள்..மறு பக்கம்…

இதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே செய்யும் காங்கிரசின் மறு பக்கம் மீண்டும் வெளியே தெரிந்து விட்டது..
இதுவும் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்போமே….

Saturday, September 1, 2012

ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”

அஹமதாபாத் சிறப்புநீதிமன்ற நீதிபதி.திருமதி ஜோத்சனா யாக்னிக்..அளித்த “நரோடாஅ பாட்டியா வழக்கு” தீர்ப்பு---காங்கிரஸுக்கு லாபமா?—மோடிக்கு பின்னடைவா?

மோடியின் மந்திரிசபை முன்னாள் சகா டாக்டர்.மாலாபென்னுக்கு 28 ஆண்டும்—பஜ்ரங்தள் தலைவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது..இது சட்டத்தின் ஆட்சியின் வெற்றியா?—மோடியின் முஸ்லீம் விரோத முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதா?

முதலில் கோத்ரா ரயில் நிலயத்தில் 56 அப்பாவி கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்காவிட்டால்…”நரோடா பாட்டியாவில்”- 97- அப்பாவி முஸ்லீம்கள் பலியாகி இருக்கமாட்டார்கள்..
அப்படியானால் “தூண்டியவன் தூய்மையானவன்…---துடித்தெழுந்தவன் துஷ்டனா?”.---.”அடித்தவன் காந்தியவாதி….அழுதவன் கோட்சேயா?

இரண்டாவது…1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு..டெல்லியில் 3000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்ததே—பலிவாங்கியதே—பழிவாங்கியதே..காங்கிரஸ்..----28 ஆண்டுகள் உருண்டோடியும் வழக்கு இல்லை—தண்டனை இல்லை—கூக்குரல் இல்லை…கொலைகாரர்கள் சஜன் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் (இன்னொரு குற்றவாளி ஹெச்.கே.எல்.பகத்..காலமானார்)—ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்களே..
மார்வா கமிஷன்
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிஷன்
ஜெயின் பானர்ஜி கமிஷன்
போட்டி –ரோசா கமிஷன்
ஜெயின் –அகர்வால் கமிஷன்
அகுஜா கமிஷன்
தில்லான் கமிஷன்
நருலா கமிஷன்
நானாவதி கமிஷன்
என போட்ட எல்லா கமிஷனும் ஒன்றுவிடாமல் குற்றவாளி என அறிவித்த காங்கிரசின் எம்.பிக்கள் சஜன் குமாரும் –ஜகதீஷ் டைட்லரும் இன்னும் தண்டிக்கப்படவில்லையே…அவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலில் டிக்கட் வழங்கவேண்டும் என்பதற்காக.------- முடியும் தருவாயில் இருந்த வழக்குகளை--- சிபிஐ வாபஸ் வாங்கியதே..இது எந்த ஊர்—எந்த நாட்டு---எந்த மதத்து—நியாயம்?..ஓஹோ..இது காங்கிரஸ் கட்சி நியாயமோ?

மாறாக தனது மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும்..தனது மந்திரிசபை முன்னாள் சகா..மாலாபென்னை பதவி நீக்கியது மட்டுமின்றி…நீதிமன்றத்தில் நிறுத்தினாரே மோடி…இதுதான் இந்துக்களின் நியாயமோ..இந்திய நியாயமோ----..பிஜேபி நியாயம்..

மூன்றாவதாக--------நீதிபதி தனது தீர்ப்பில்…” போலீஸ் அசட்டையாக இருந்தது…கலவரக்காரர்களுக்கு துணை போனது…இந்த்..இந்த போலீஸ் அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்”--…என ஒரு வரி கூட கூற வில்லையே…இதற்காக தனி அஃபிடவிட் நீதிமன்றத்தில் ..போலீசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்ததை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறாறே…இது போதாதா..மோடியின் நல்லாட்சிக்கு..நடுவுநிலை தவறாமைக்கு..

மாறாக..டெல்லி சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் நிகழ்த்திய போது..”போலீஸ் அதிகாரிகள் கண்மூடி இருந்தனர்…போலீஸ் ஸ்டேஷன்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..கபூர்—மிட்டல் கமிஷன் குற்றம் சுமத்திய 72 போலீஸ் அதிகாரிகள் மீது இன்றுவரை வழக்கில்லை..
காங்கிரஸ் குண்டர்களால் சீக்கிய சகோதரர்கள் தாக்கப்பட்டபோது..வாக்களர்பட்டியலை வைத்துக்கொண்டு…சீக்கியர்களின் வீடுகளை அடையாளம் காட்டியதே-- டெல்லி போலீஸ்.
ஆக இந்தியாவில் உயிருக்கென்று “தனியாக “ மதிப்பில்லை…
யார் தாக்குகிறார்..யாரை தாக்குகிறார்..என்பதை பொருத்தே உயிரின் மதிப்பு கணிக்கப்படுகிறது…இதில் இரு விதி விலக்குகள்…நிரந்தரமாக..
1 இந்துவை யார்தாக்கினாலும் அந்த உயிர் கணக்கில் வராது
2..காங்கிரஸ்காரன் யாரை தாக்கினாலும் அதுவும் கணக்கில் வராது..

இறுதியாக …
இந்த சிறப்பு நீதி மன்றம் ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே…இதற்குமேல் உயர்நீதி மன்றம்—உச்சநீதிமன்றம்—உள்ளது…
மாவட்ட நீதிமன்றத்தின் அனேக தீர்ப்புக்கள் உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சரித்திரம் உண்டு.
இந்த தீர்ப்பு பத்திக்கைகளுக்கு “அவல்”---காங்கிரசின்  “ஆவலுக்கு”—கிடைத்த வைக்கோல்..அத்தனை “ஸ்கேம்”-களினால் மக்களின் “தூற்றல்களிலிருந்து” சிறிது நேரம் இளைப்பார காங்கிரசுக்கு கிடைத்த சிறு “தூரல்”..அவ்வளவுதான்.

“For every action there is an equivalent and opposite reaction “—
இதை ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”---
குஜராத் மக்கள் செய்தால் “சதியா”—

ஒருவேளை மோடி திட்டமிட்டு முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால்….2002 டிசம்பரில் (கலவரம் நடந்த 10 வது மாதத்தில்)நடந்த தேர்தலில் –உலகத்தின் அத்தனை மீடியாக்களும் வரிந்து கட்டி எதிர்த்த போதும் 3இல் 2 பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க முடியுமா?
மோடியின் மீது தூஷணைகள் 2007 இலும் தொடர்ந்தது..வெற்றியும் தொடர்ந்தது..   இப்போது இன்னும் 2012 தேர்தலுக்கு 100 நாளைக்கு முன் வந்த இந்த தீர்ப்பை..”மோடியின் பிரதமர் கனவு கலைகிறது” என தலையங்கம் தீட்டி ஆங்கில பத்திரிகைகள் தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்கின்றன.

யாருடைய ஆதரவில்லாமல்—எந்த ஆயுதமும்(..பணம்..மீடியா ஆதரவு) இல்லாமல்---உலகுக்கு தான் யார் என்பதே தெரியாமல்-- 2002இல் இருந்த  மோடியையே இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை..

இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..
கங்கிரசுக்கு போதாத காலம்..
குஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..
பாவம்..

Monday, August 27, 2012

மந்திரிகள் சோதனையும்-- ஒருநாள் கூத்தும்

நாமக்கல் அருகே போக்குவரத்து மந்திரியும்--- கணக்கு காட்ட துணைக்கு இன்னொரு மந்திரியும்.. சேர்ந்து வாகன சோதனை செய்திருக்கிறார்கள்..இதில் என்ன புதுமை?

ரேஷன் கடையில் சோதனை…பாலம் வேலை சோதனை…பால் பூத்தில் சோதனை…இப்படி அமைச்சர்கள் சோதனையும் அடுத்தநாள் பத்திரிக்கையில் “போஸோடு..செய்தியும்..” சகஜம் தானே?

இதில் புதுமை இல்லைதான்…ஆனால் இது தினசரி செய்யவேண்டிய விஷயம்—மந்திரிகளால் அல்ல..அதிகாரிகளால்..கணக்கு காட்டுவதற்காகவோ..காசு வாங்குவதற்காகவோ அல்ல…சட்டமும் –ஒழுங்கும்—விதிகளும் காப்பாற்றப்பட..காக்க..

ஆனால் நடந்தது என்ன?—அம்மாவுக்கு கணக்கு காட்ட…இதயத்தில் இடம்பெற…மந்திரி பதவியை தக்க வைக்க…வாக்களர்களுக்கு “படம் “ காண்பிக்க இப்படி ஒரு ”நாடகம்”…

இதில் வேடிக்கை என்னவென்றால்…1300 வண்டிகள் பிடிபட்டன…400 வாகனங்களில் (33 சதம் ) ஆவணங்கள் சரியில்லை…அப்படியானால் ஒரு சாம்பிள் சர்வேயாக இதை வைத்துக்கொண்டால்…தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில்…30 சதவீதத்துக்கும் அதிகமானவை---சட்டத்திற்கு புறம்பானவை—அல்லது ஆவணங்கள் சரியின்றி ஓடுகிறது என வைத்துக்கொள்ளலாமா?

நாடின் சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில்---விபத்துக்கு காரணம் இப்போது புரிகிறதா?...இந்த ஆவணங்களை சரிபார்க்கும் வேலையை மந்திரி வந்துதான் செய்யவேண்டுமென்றால்..நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது..?
காமராசர்—பக்தவக்சலம்---அண்ணாதுரை—காலத்தில் மந்திரியோ—எம்.எல்.ஏயோ—கலக்டரோ…இப்படி ”இறங்கி”—சோதனை செய்ததாக செய்தி இல்லையே (”தேவை ஏற்பட்டாலே தவிர”---என சில விதிவிலக்குகள் தவிர )…

நான் சென்னை துறைமுக பொறுப்புகழகத்தில் டிரஸ்டியாக இருந்தபோது..டிரஸ்டின்..ஆஸ்பத்திரி—கிச்சனை சோதையிட்டோம்…மறுநாள் பணியாளர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தது…ஆனால் நிர்வாகம் “இது டிரஸ்டிகளின் வேலையல்ல” என்றது..உண்மைதான்….நல்ல திறமையான நிர்வாகிக்கு..”கீழே இரங்கி”—சோதனை செய்யவேண்டிய அவசியம் எழாது..

அதிமுக ஆட்சியில் அம்மாவைத் தவிர..அனைவரும் “0” சைபர்…என அவர்களே ஒத்துக்கொள்ளும் போது..இப்படி ”இறங்கி வந்து “சோதனை செய்துதானே ஆகவேண்டும்..















Saturday, August 25, 2012

ஈமு ஒரு கூட்டிலே… கோழி ஒரு கூட்டிலே— ஏமாந்தவர் நடு ரோட்டிலே..



எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..பாத்தீங்களா?—ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ஈமூன்னு ஒரு நெருப்புக்கோழி…ஆஸ்திரேலியா நியுஜிலந்து பூர்வீகம்..நம் நாட்டுக்கு---தமிழ் நாட்டுக்கு---ஈரோட்டுக்கு---பெருந்துறைக்கு---அந்நியம்—ஆனாலும் ஒருத்தன் கொண்டுவந்தான்..

இரண்டு மூன்று வருடம்..ஒண்ணும் போனியாகல்ல..விவசாயம் படுத்துச்சு..விவசாயிகளுக்கு ஆசைகாட்டி “விளம்பரங்கள்” கொடுத்தான்.
“சுசி..ஈமு ஃபார்ம்” குருன்னு அவன் பேரு..ஏழோ..எட்டோ..லட்சம் கட்டணுமாம்..தெரியல்ல..

கொஞ்சம் ஈமு கோழி கொடுப்பானாம்..தீவனமும் கொடுப்பானாம்..( அதுக்கு காசு நாமதான் கொடுக்கணும்.).மாதாமாதம் கோழி வளர்க்க காசும் கொடுப்பானாம்..கோழி—முட்டை..அவனே வில கொடுத்து திரும்ப எடுத்துக்குவானாம் இதில் வெளிநாட்டு ஏற்றுமதி ஆசை வேறு..…6..7..வர்ஷத்துல கட்டின முழு பணத்தையும் திரும்ப கொடுத்துடுவானாம்..ஆசை பிச்சுக்கிட்டு போச்சு..ஈமு கோழிப்பண்னை குருவுடைய லாபமும் பிச்சு கிட்டு போச்சு..

சுசி ஈமு ஃபார்ம்ல கோழிக்கு சாணி அள்ளினவன் எல்லாம் புதுப் புது பண்ண ஆரம்பிச்சு.கோடிஸ்வரன் ஆனான்..இதில ஸ்பெஷல் என்ன என்றால் இந்த கோழியோ..கறியோ..முட்டையோ..இதுவரை வெளியில் வியாபாரத்துக்கு வந்ததே இல்லை..

இந்த குருதான்…முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேரை அனுமதியில்லாமல் விளம்பரத்துக்கு பயன் படுத்தி..ஒரு கேஸ் வாங்கிக்கொண்டான்..அதற்கு பிறகு பல வழக்குகள் அவன் மீது என்பது வேறு விஷயம்.
டெல்லியில் “கூடங்குளம் அணுகுண்டு மந்திரி”..நாரயணசாமியை வைத்து  ஈமு கோழிக் கறிக்கடை ஒன்று திறந்து..ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு ஒரே நாளில் அதை மூடிய பம்மாத்து பேர்வழி இந்த குரு.

உடனடி பணம் கிடைக்க…இதை பார்த்து ஆசையோ ஆசை பெருகி பலர் ஆரம்பிக்க –ஆரம்பித்த அனைவரும் கண்முன்னே கோடிகோடியாய் சம்பாதிக்க..யாருமே சாப்பிடாத கோழி…வாங்காத முட்டை---ஈமு கோழி தமிழ்நாடு முழுதும் தத்தித் தத்தி பறந்தது.

நமது தட்ப வெட்ப நிலை,..சுற்றுசூழலுக்கு…சிறுதும் ஈடு கொடுக்க முடியாத ஒரு பறவை இனத்தை வைத்து, --மக்களின் அறியாமை..பணத்தாசை..உடனடி காசு…இவைகளை மூலதனமாக்கிய..ஈமு கோழிப்பண்ணை காரர்கள்..இன்று போலீஸ்காரர்கள் பின்னாடி அலைகிறார்கள்..---முதலீடு செய்த பெருமக்கள்..போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி..கிடக்கிறார்கள்.

ஈமு கோழியின் வியாபார வெற்றித் தந்திரத்தை அறிந்து கொண்ட பல கிரிமினல்கள்,,நாட்டுக்கோழி பண்ணைக்கும் விளம்பரம் கொடுத்து வலை வீசினார்கள்..மீண்டும் நம்மக்கள் அவர்கள் வீசிய வலையில் தாங்களாகவே சென்று மாட்டிக்கொண்டார்கள்.
நூறு கோழிக்குஞ்சுகளை கொடுத்து விட்டு ஒரு லட்சம் ரூபாயை லபக்கி..ஒருமாதத்தில் பறந்து விட்டனர்..

கிரிமினல் வியாபாரிகளின் வலை எல்லை விரிந்தது..ஆயிரம் தேங்காயை கொடுத்து உரிக்கச்சொன்னார்கள்..கொப்பரை எம்.எல்.எம்..நடத்தினார்கள்.அந்த எண்ணெய்.கொப்பரையிலும் மக்கள் விழுந்தார்கள்..
ஏமாந்த நம் மக்கள் அவர்கள் கொடுத்த முதலீட்டு பத்திரத்தை “பத்திரிக்கைகள் முன் காட்டி தன் ஏமாந்த கதையை சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு ஊரில் ஏமாற்றி விட்டு அடுத்த ஊருக்கு இவர்கள் போனாலும் அங்கும் மக்கள் தெரிந்தே ஏமாறுகிறார்களே ஏன்?
தாசில்தாரும்..காவல்துறையும்..கலக்டரும் (தாமதமாக இருந்தாலும்) எச்சரித்தும் கூட..மீண்டும் புதிய கம்பெனிகளில் முதலீடு செய்து மீண்டும் ஏன் ஏமாறுகிறார்கள்?

இனியும் நாம் இப்படி ஏமந்து கொண்டிருந்தால்..இவர்கள்..சிட்டுக்குருவி வளர்ப்பு..எம்.எல்.எம்..—பன்னிக்குட்டி பெருக்கு எம்.எல்.எம்---சாணி.ராட்டி தட்டும் எம்.எல்.எம்..என்ற முகமூடியில் மீண்டும் வரலாம்..

ஆசையை புத்தர் அரவே ஒழிக்க சொன்னார்..
அரவே ஒழிக்காவிட்டாலும் கொஞ்சமாவது ஒழித்திருந்தாலாவது…
இந்த இழவு கம்பனிகளுக்கு நாம் இரையாகி இருக்கமாட்டோமே.

Friday, August 24, 2012

சிட்டுக்குருவி கொண்டைக்காரி…ஸ்ரீரங்கத்து அதிர்ஷ்டக்காரி

நேற்று புதன்கிழமை 22.8.12…காலை 6 மணி தொடங்கி வியாழன் காலை முடிந்த 24 மணிநேரத்தில் 131/2 மணிநேரம் “பவர்கட்”இது கோவையில்..நகரத்தில்..அதுவே ½ மணிநேர முன்ன-பின்ன வித்தியாசத்தில் இன்றும் தொடர்கிறது..
ஒரு சத்தம் இல்லை..ஒரு மூச் இல்லை..ஒரு லெட்டர் டூ எடிட்டர் இல்லை.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்தை விட்டு விடுவோம்.பாவம் அரசியலுக்கு புதிது..எழுதிக்கொடுத்தாலும்…பேசத்தெரியாது..
எடுத்ததெற்கெல்லாம் அறிக்கை விடும் “கேள்வி—பதில் அறிக்கை திலகம்”-தலைவர் கலைஞர் கூட அறிக்கை விடவில்லை..வாய் திறக்கவில்லை..”அம்மாவின் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா?

அம்மா ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் நிறைய பணபுழக்கம் இருக்குமாம்..(யாருக்கு என்பது கேள்வி)..கலைஞர் வந்துவிட்டால் அது குறைந்து விடுமாம்..இப்படி ஒரு பேச்சு இன்னும் “ஜெ” க்கு சாதகமாக உலவிக்கொண்டுதான் இருக்கிறது.

“மின்வெட்டை “ வைத்துத்தான் கருணாநிதி ஆட்சியையே “வெட்டி விட்டோம்” ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் மின் வெட்டை சரிசெய்வேன் என்றார் “ஜெ”.. 1..1/2 வருடம் முடியப்போகிறது.. என்ன நடந்திருக்கிறது..பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்..

“டாஸ்மாக்” கெடுத்தது போக மீதியுள்ள தொழிலை “மின்வெட்டு” கெடுத்து வருகிறது..ஏதோ ஒரு 30—40—நாள் “வாயுபகவான்” கருணையால்..காற்றாலை மின்சாரம் கைகொடுத்தது..இன்று அதுவும் படுத்துக்கொண்டது..

மீண்டும் “கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாத இந்த மின்வெட்டுக்கு” என்னென்ன காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீர்க்கோளாறு.—மின் உற்பத்தி தடை
2.மேட்டுர் அனல் மின்நிலையத்தில் பழுது..மின் உற்பத்தி பாதிப்பு..
3.நெய்வேலி மின்னுற்பத்தி சுரங்கம் எண் 1 இல் கோளாறு..சரிசெய்ய ஒருமாதம் ஆகும்..
4.எண்ணூர் அனல் மின்நிலயம் பராமரிப்புக்காக ஒருமாதம் விடுமுறை—நோ கரண்ட்
5.மத்திய தொகுப்பில் இருந்து கேட்ட மிசாரம் கிடைக்கவில்லை..காங்கிரஸ் அரசு கைவிரிப்பு..
6.அதோ வருது –இதோ வருது என்ற கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி தொடங்க இன்னும் ஒருமாதம் ஆகும்..

அதுசரி..இவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் போதும் நடந்த விஷயங்கள் தானே? அப்போது பக்கம் பக்கமாய் கருணாநிதியை திட்டி தீர்த்த பத்திரிக்கைகளும்..ஆயிரக்கணக்கில் ஆட்களை சேர்த்து ஊர்வலம் நடத்திய தொழில் அமைப்புக்களும்..கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்டுகளும்..இன்று எங்கே இருக்கிறரார்கள்..
இவ்வளவு பேரையும் வாய்மூடசெய்தது..அம்மாவின் அதிர்ஷ்டம் தானே?

ஈமு கோழி ஊழல்..தீவனமின்றி கோழிகள் சாகுது..முதலீட்டாளர்கள் முற்றுகை..கருணாநிதி தும்மினாலேயே..பக்கம் பக்க்மாக எழுதும் பத்திரிக்கைகள்.. அம்மாவை பற்றியும் ஆட்சியை பற்றியும் ஒருவர்கூட வாய் திறக்கவில்லையே..இதுவல்லவோ அம்மாவின் அதிர்ஷ்டம்..

மதுரை கிரானைட் ஊழல் 16,000/- கோடி..எல்லா கட்சிக்கும் பங்கு..பாஜக தவிர..அம்மா பதட்டபடவே இல்லையே..பத்திரிக்கைகள்..அம்மாவையோ ஆட்சியையோ..பற்றி வாய் திறக்கவில்லையே..மாறாக இதை கண்டு பிடித்தது அவர்தானாம்.. இதற்கு பெயர்தான் அம்மாவின் அதிர்ஷ்டமோ
..
தினசரி “மணல் கொள்ளை—மணல் கொள்ளைன்னு..பக்க பக்கமாக செய்தி..மணலை ஆளும் கட்சி காரன் தான் கொள்ளை அடிக்கி..றான்.இது அம்மாவுக்கு தெரியாமல் நடக்குமா?.அம்மாவை சம்பந்தப் படுத்தி ஒரு பேச்சில்லையே..இது அதிர்ஷ்டமா?—ஆச்சரியமா?

உலகத்திலேயே ஒரு “சேவையும் “ செய்யாமல் கட்டணத்தை உயர்த்திய கம்பெனி ஒன்று இருக்குமானால் அது தமிழ்நாடு மின்சார வாரியம்தான்..கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார்களே…இந்த லட்சணத்தில் டிரான்ஸ்பருக்கு ஏஈ..பிஈ..சிஈ..என 25 லட்சத்திலிருந்து 1 கோடிவரை லஞ்சம் தலை விரித்தடுகிறதே..இது அம்மாவின் ஆசியில்லாமலா? காசு போச்சே என வயிற்றிலடித்துக்கொள்ளும் கலைஞரைத்தவிர மற்ற கட்சியினர் வாய் திறக்கவில்லையே..இதற்கு பெயர் வேரென்ன..அதிர்ஷ்டம்தானே,,

பஸ் டிக்கட் விலை உயர்த்தினார்கள்....இன்னும் அதே ஓட்ட ஒடசல் பஸ்தான்..இன்னும் அதிக ஆக்சிடண்ட் தான்..ஒரு மூச் இல்ல பேச்சு இல்ல அம்மா அதிர்ஷ்ட்டக்காரிதானே..

நிலக்கரி ஒதுக்கீடு ஊழலில் நாடே கொந்தளித்து நிற்கிறது…2ஜி ஊழலில் நாடே நாறிப்போனது…மின்வெட்டுக்கும்…கிரானைட்டுக்கும்…மணல் கடத்தலுக்கும் தமிழ்நாட்டில் சத்தமே இல்லையே…இது அம்மா பவரா..அதிர்ஷ்டமா?

பிஜெபில கூட சென்னை வரும் போது எல்லா தலைவரும் அம்மாவை சந்திக்கிறார்கள்.ஆட்சி பற்றி எந்த பேட்டியும் கொடுப்பதில்லையே..புள்ளிவிபரங்களை அள்ளிவீசி பேசும் புத்திசாலிகளின் புகலிடம் பாஜக கூட அம்மாவை குத்திக்காட்டாதது..அம்மாவின் ராஜதந்திரத்தின் வெற்றி என்பதா?..அல்லது அதிர்ஷ்டக்கார அம்மா என்பதா?

Tuesday, August 7, 2012

அத்வானியின் கருத்தை மீடியா ஏன் மாற்றிச்சொன்னது?

வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்---
மூணாவது அணி கானல்நீர்----என்ற----
அத்வானியின் கருத்தை மீடியா ஏன் மாற்றிச்சொன்னது?


”நடிகை ஹேமமாலினி வீட்டில் வாஜ்பாய்”—என பிலிட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா 1970 களில் எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது…ஆனால்..நடந்தது என்ன?

ஹேமமாலினி பங்கேற்ற நாட்டிய நாடக நிகழ்ச்சியில் வாஜ்பாயும் பங்கேற்றார்..இது எப்படி திரித்து கூறப்பட்டது..அந்த எழுத்து எப்படி உள்நோக்கமானது..

அதுவே இப்போதும் நடந்தேறியுள்ளது..ஆனால்..வேறு வடிவில்..அத்வானிக்கு..

இதுவரை மோடியை துரத்திய “மீடியா” இப்போது பாஜகவை அத்வானிமூலம் துரத்த முயல்கிறது.
அவர் எழுதிய கருத்தை பாதி பாதியாக…. முன்னுக்குப் பின் முரணக..போட்டிருப்பதும்.. அதுவும் நாடு முழுதும் பாஜகவை தூற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் ஒரே தலைப்பிட்டு போட்டிருப்பதும் –தோல்வி ஜுரத்தில் உள்ள காங்கிரஸின் சகுனி வேலை..

பேசினால்.. இல்லை என்று சொல்லலாம்..மறுக்கலாம்..தவறாக எழுதிவிட்டார்கள்..எனலாம்..அத்வானி தனது “பிளாகில்” எழுதியது…ஆதாரம்..அதை திரித்து போடும் “மீடியாக்களின் “செயல்.. தடுக்கமுடியாத பாஜக வெற்றி வாய்ப்பினால் ஏற்பட்ட பயம்..

நேற்றைய மீடியாக்களின் செய்தியில் மாபெரும் சூது உள்ளது என்பதற்கு ஆதாரம்…
நாடுமுழுதும் ஒரே தலைப்பிட்ட செய்தி—அதற்கு..உடனே காங்கிரஸிடமிருந்து பதில்..

எதை தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த காங்கிரஸின் காட்டில் சிறிது தூரல்..அத்வானியின் “பிளாகிற்க்குள்” சென்று படித்து பார்த்தால்..அத்தனை உண்மையும் வெளிப்படும் ..காங்கிரஸ் மீண்டும் வரண்டு போகும்.

பிரதீபா பட்டீலின் பிரிவுபசார விழாவில் இரண்டு காங்கிரஸ் மூத்த மந்திரிகள் அத்வானியிடம் உளறிக்கொட்டியதை பேர் சொல்லாமல் எழுதுகிறார்.

**2014 தேர்தலில் காங்கிரசோ—பாஜகவோ “தனி மெஜரிட்டி பெரும் கூட்டணிகளை “ அமைக்க முடியாது.
** 2013—அல்லது 14 இல் எப்போது லோக்சபா தேர்தல் வந்தாலும்..அமையும் அரசு மூன்றாவது அணி அமைக்கும் அரசு மாதிரிதான் இருக்கும்..

இவை காங்கிரஸ் மந்திரிகள் உதிர்த்த பொன்மொழி..இதில் காங்கிரஸ் தோற்க்கும் என்பதைஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அத்வானியின் பதில்---
”உங்கள் கவலை எனக்கு புரிகிறது..ஆனால் உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை –( அதாவது பாஜகவும் தோற்கும் என்பதில் )

சரி தன் கருத்தாக அத்வானி என்ன சொன்னார்…அவரே எழுதுகிறர்.
“**கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் அமையும் அரசுகள் காங்கிரசோ—பாஜகவோ ஆதரவின்றி அமையவில்லை.
** எனவே மூன்றாவது அணி (மாதிரி) என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது காங்..மூத்த மந்திரிகளின் கருத்துக்கு பதிலாக அத்வானி எழுதியுள்ளார்..
மூனாவது அணி பெரும் தோல்வியே என அதன் பிரதமர்கள் பெயரை குறிப்பிட்டு பின்னால் இரண்டு பாராக்களில் விளக்கியுள்ளார்.

 ” **மத்தியில் பாஜகவோ—காங்கிரசோதான் நிலையான ஆட்சியை தரமுடியும்.
** ஆனால் ஐ.மு.கூ1..ஐ.மு.கூ2 அரசின் மிகக்கேவலமான நிர்வாகம் காரணமாக காங்கிரஸ்.. தோல்வி பயத்தில் பரிதவிப்பதை என்னால் உணர முடிகிறது..”
””**எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு 1977 தேர்தலில் காங்கிரஸ் மிகபெரிய தோல்வியை சந்த்தித்தது..வருகின்ற லோக்சபா தேர்தலிலும்-- 1952 க்கு பிறகு வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்..”—என எழுதியுள்ளார்..

இதில் பாஜக தோல்வி எங்கே வந்தது..3வது அணி ஆட்சி எங்கே வந்தது..?
திரித்துக்கூற எல்லை வேண்டாமா..மீடியா தம்பிகளா?

கேக்குறவன் கேனையனா இருந்தா நண்டுகூட “நானோ கார்” ஓட்டுமாம்..
அடப்போங்கப்பா..வேற வேலைய பாருங்க…