Pages

Friday, April 29, 2011

கனிமொழியும், கல்மாடியும்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?

Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?

சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?

தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். 

குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. 

அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.

இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? 

ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். 

மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? 

ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.

சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். 

அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.

அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. 


இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும்.
]
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். 

சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.

Thursday, April 14, 2011

இளமையில் எங்கிருந்தார் இராகுல் காந்தி





ராகுல் காந்தி சென்றவிடமெல்லாம் காங்கிரஸை தோற்கடித்து, ”அதை இல்லாமல் செய்துவரும் பெரும்பணியை” --செய்துவருவது நாம் அறிந்ததே..அந்தவகையில் தமிழ்நாட்டிற்கும் வந்து காங்கிரஸையும்--திமுகவையும் தோற்கடிக்கப் போகும் பெருமையை ( மே--13ந்தேதி புரியும்).செய்திருக்கிறார்.

கேரளாவிற்கு சென்று அங்கு 87 வயது “அச்சுவை” சாடியிருக்கிறார். மீண்டும் முதல்வரானால் 87 வயது “அச்சுவிற்கு “--பதவி முடியும் போது 92 வயதாகுமாம்.பெரியவர்களை மதிக்கும் தேசம் இது--கொஞ்சம் காலம் முன்பு வரை காங்கிரஸ் தலைவர்களின் சராசரி வயது 75.

திடீர் தலைவரான இவருக்கு இவை தெரிந்திருக்க நியாமில்லை.
அது போகட்டும் .இவர் ஆதரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை வயதாம்?--தமிழ்நாட்டில் 87 என்ற எண் நல்ல எண்--கேரளாவில் அதே 87 என்ற எண் கெட்ட எண்ணா?--








எவ்வளவோ வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக பலம் பெற்றனர்..

ராகுலின் 15 வயது முதல் 30 வயதுவரையிலான இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை ...இந்தியாஅவில் பிறந்த இந்த வெளிநாட்டவர் பெண்மீக பலம் நாடி ஏதோ ஒரு நாட்டில் இருந்திருக்கலாம்--நாடுதான் தெரியவில்லை---

--

Tuesday, February 22, 2011

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

சோனியா குடும்பத்திற்கு "கணக்கில் வராத கறுப்புப் பணம் பல கோடி இருக்கிறது "--என சுவிஸ் தேசத்து பத்திரிக்கைகளும்--வெளி நாட்டு ஊடகங்களும் சொன்ன செய்திகள்--மற்றும் பல ஆதாரங்களை வைத்து பாஜகவின் சிறப்புக்குழு ஒன்று  ஆய்ந்து அதை உறுதி செய்தது  ..

சோனியாவோ--அவர் குடும்பத்தினரோ இதை மறுக்க விலை--மறுத்து அறிக்கைஎதுவும்  வெளியிடவும் இல்லை.

போன வாரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சோனியா--திடீரென அத்வானி அவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினர். தன குடும்பத்தினருக்கு அப்படி ஏதும் சொத்து  வெளி நாட்டு வங்கிகளில் இல்லை ---என்று அதில்  மறுத்திருந்தார்... 

அத்வானி அவர்கள் அக்கடிதத்தை வெளியிட வில்லை--பத்திரிகைகளுக்கு தரவில்லை.

ஆனால் அத்வானி ஒரு பொறுப்பான --தலைவர் மற்றும் தகப்பன் உணர்வோடு --"நீங்கள் இம்மருப்பை --முன்னனமே தெரிவித்திருந்தால் --பாஜகவின் சிறப்புக்குழு ---அதையும் கருத்தில் கொண்டிருக்கும் "---இருந்தாலும் என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் "--என்று சோனியாவிற்கு எழுதியிருக்கிறார் (ஆங்கில கடிதம் பாக்ஸில்....பார்க்க..)
This is the text of Advani's letter to Sonia Gandhi, dated February 16:
Dear Smt Soniaji,On my return from Kolkata last night, I found your letter dated 15th  February awaiting me.
I am happy that you have denied the reports relating to you and your family alluded to in
the Task Force's Report on Black Money.If these had been denied earlier, the Task Force would have taken your  denial into account. Even so, I deeply regret the distress caused to you.With best regards,
Yours sincerely,
L K Advani
இதில் எங்கே மன்னிப்பு கேட்கப்பட்டிருக்கிறது? - ""எந்த இடத்திலயும் ---   சோனியா தவறு செய்யவில்ல--சோனியாவிற்கு சுவிஸ் வங்கியில் கணக்கில்லை ""--என்று சொன்னதாகவும்  இல்லையே

அத்வானியிடம் குறைகாண இதில் வேறு என்னதான் இருக்கிறது--ஒன்றுமே இல்லாத போது
--மனிதாபிமானமும்---மனிதபன்பும்--
பெண் என்பதால்  இருக்கும் இரக்கமும் மட்டுமே இருப்பதால்தான் அத்வானியை பற்றி "கண்ணா பின்னா  வென்று " பேசுகிறார்களோ --?-----

இவ்வளவு நாகரீகத்துடன் எழுதிய -- அத்வானியின் கடிதத்தை பத்திரிக்கைக்கு கொடுத்தது யார்? அதையும் தவறாக --உண்மைக்கு மாறாக --எழுத சொன்னது யார்?--
சோனியாவின்  கடிதத்தை அரசியில் நாகரீகம் கருதி வெளியிடாமல் பாதுகாத்த அத்வானி எங்கே?
அத்வானியின் கடிதத்தை நாகரீகமின்றி வெளியிட்ட சோனியா எங்கே? 
சிந்திக்க முடிந்தவர்கள் சிந்திக்கட்டும்

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி 

ஒரு நடுத்தட்டு வர்க்கம் --ஒரு ஆண்டு வரி கட்டாமலே இருந்தாலே --வரிந்து கட்டிக்கொண்டு நோட்டிஸ் அனுப்பும் வருமான வரித்துறை---பல ஆண்டுகளாக --அதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் --வரி கட்டவேண்டியவருக்கு --நம் மன்மோகன் சிங்ஜி அரசு --இப்போதுதான் நோட்டிஸ் அனிப்பியுள்ளது .

புனேவை சேர்ந்த ஒரு குதிரை வியாபாரி--சுவிஸ் வங்கியில் ஒரே நேரத்தில் 8 பில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்கிறார்.உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ""ஹவாலா''--மற்றும் "கறுப்புப் பண பரிவர்த்தனைகள்--பல்வேறு பத்திரிகைகள்--போட்டி போட்டுக்கொண்டு "ஹசன் அலி கான் " என்ற அந்த :நலல்வரின் "--முகத்திரையை கிழிக்கின்றது.

மன்மோகனும் சோனியாவும் கண்ண்டுகொள்ளவே இல்லை --காங்கிரசின் உறக்கம் கலையவே இல்லை--

திடிரென சுயநினைவு வந்த  சோனியா அரசு --ஹசன் அலியை ஏதாவது ஒரு வகையில் கைது செய்யாவிடில் மீடியாக்கள் வாயை மூடமுடியாது --எனவே ஒரு கேஸ் போடுவது மாதிரி போட்டு விட்டுடுவோம்-- என முடிவு செய்து ரூ .70 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட சொல்லியுள்ளது.. 

இதில் வேடிக்கை என்னவென்றால் --ஹசன் அலிக்கு ஒரு பைசா சொத்து கூட இந்தியாவில் கிடையாது--ஹசன் அலியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ""அத்தனையும் போலி"-- இவர் மீது போடப்படும் எந்த வழக்கும் நிற்காது--இவை எல்லாம் தெரிந்து தான் இந்த "நோட்டிஸ் " அனுப்பப்பட்டுள்ளது. ஹசன் அலி எவ்வளவு "ஜகஜால கில்லாடி " பாருங்கள்.

ஒரு வேளை ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவும் --கருணாவும் --கொஞ்சம் நாளைக்கு முன்பே ஹசன்  அலி யை "கன்சல்ட் "செய்திருந்தால் ---சி.பி.ஐ.இடம் சிக்காமல் தப்பித்திருக்கலாமோ?

Saturday, February 12, 2011

மருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்




 



அன்பிற்கினியவர்களே-

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து--தலையில் ஜீஸஸ் கீரீடம் வைத்து--- குழந்தை யேசுவை  கைய்யில் கொடுத்து--- மருவூர் அரசிக்கு  -- புது அவதாரம் கொடுத்து-- --தன் மத நல்லிணக்கத்தை பறைசாற்றியுள்ளார்-----

இந்த எழுத்தின்  நோக்கம்--மேல்மருவத்தூர் பங்காரு அடிகளை அவமதிப்பதல்ல--


$ பராசக்தி மாதாவை மேரி மாதாவாக மாற்ற இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?--
$ யார் அதிகாரம் கொடுத்தது?
$ ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில்--இப்படி செய்ய- ஆகம விதிகளில் இடமுண்டா?
$ இவரை நம்பும் லட்சக்கணக்கான் பக்தர்களுக்கு இவரின் இந்த செயலுக்கு  ஒப்புதல் உண்டா? 


பக்தன் பகவானை எட்டிநின்றுதான் பார்க்கவேண்டும்-- தொட்டுப் பார்க்க முடியாது எனபதை மாற்றி--- யார் வேண்டுமானாலும் பகவானை தொட்டு அபிஷேகம் செய்யலாம் என மாற்றியவர் அடிகளார்---பாராட்டுகிறோம்

பெண்கள் “”எப்போது வேண்டுமானாலும் “ பகவானிடம் போகலாம் --தொடலாம்--அர்ச்சனை--அபிஷேகம் செய்யலாம்” என கீழ்
த்தட்டு மக்களையும் பகவானிடம் நெருக்கமாக செய்தவர் அடிகளார் அவர்கள்--பாராட்டுகிறோம்.அதற்காக சமயத்தை சமாதி கட்டும் விஷங்களையும் செய்யலாமா?



 

 
நாம் நம்பும்--வணங்கும் கடவுளுக்கு வேற்று மதத்து சின்னங்களை அணிவித்து அட்டஹாசம் செய்வதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?--கேட்காமல் இருக்க முடியும்




கோடிக்கணக்கில் பக்தர்கள் குவியும் சபரிமலையில் கூட “வாவர் சமாதி” என்று ஒன்று உண்டு--லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் மதுரையில் “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் “ திருவிழாவில் கூட --அடுத்தநாள் அழகர் “துலுக்க நாச்சியார்” மண்டபதிற்கு செல்வார்---இவையெல்லாம் “வரலாற்று திரிபுகள்”--இடைக்காலத்தில் “”யாரையோ திருப்திப்படுத்த--யாரோ எழுதிய கட்டுக்கதைகள்--என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.

இல்லாதவற்றை சொல்லி இணைத்து வைப்பதல்ல இணக்கம்--மத நல்லிணக்கம்--அது இயல்பாகவே வரவேண்டும்--இது “இந்துக்களிடம் நிச்சயம் உண்டு--என்றும் உண்டு “ நல்லிணக்கத்தை இப்பொய்யுரை தான் “ ஏற்படுத்தும் என்றால்--இதுவரை அது ஏன் இன்னும் ஏற்படவில்லை?--இன்னும் அது ஏன் ஒருதலை காதலாகவே உள்ளது?--இது ஒரு பெரிய விவாதம் --அதற்குள் போவது என் எண்ணம் இல்லை..


--அதிமுக காரன் உணர்ச்சிவசப்பட்டு  ஜெயலலிதாவை மேரிமாதாவாக சித்தரித்தான் --கிறிஸ்தவம் வெகுண்டு எழுந்தது----பாதிரியார்கள் மாநிலம் முழுக்க அவர்கள் பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக்குழந்தைகளை வைத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள்..
 
ஏற்கனவே இந்துமதம் எவ்வளவு பேரையோ ஏற்றுக்கொண்டுள்ளது--இங்கு ஏற்கனவே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள்--அதோடு சேர்ந்து நாம் ஏசுவையும் இன்னொரு தேவதையாக ஏற்பதில் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை--பிரச்சினை யேசுவல்ல---யேசுவை கோவில்லுக்குள் இழுத்ததுதான் --

நம் சாமிகளுக்கு நாம் மோகினி அலங்காரம் --ராமர் அலங்காரம் --கிருஷ்ணர் அலன்காரம் --என பல பல அலங்காரங்களை செய்துள்ளோம்--

முதல் முதல் இந்து சமய வரலாற்றில்  ஆதி பராசக்தி அம்மாவுக்கு “”யேசு அலங்காரம் “ செய்த பெருமை ---பங்காரு அடிகளாருக்கே உண்டு--இதை பெருமையோடு அவர்கள் நடத்தும் “” சக்தி ஒளி “ பத்திரிக்கையிலே வேறு வெளியிட்டுள்ளார்கள்.


சில இந்து சாமியார்கள் பிறை--சிலுவை--ஓம்--என மூன்றையும்--ஒன்றாக போட்டு நன்றாக “”ஆன்மீக வியாபாரம்””செய்து வருகிறார்கள்--- இன்று மதத்தை மாசு படுத்த-- மற்றோருவர்--      -கிளம்பியிருக்கிறார்--

வருத்தமாக இருக்கிறது--நெஞ்சம் வேதனைப் படுகிறது--

Thursday, February 10, 2011

ஜெ --யைக் --காத்த திமுக

ஜெ --யைக்  --காத்த திமுக

சட்ட மன்ற கூட்டத்தொடர்களில் ஜெ கலந்து கொள்வதே இல்லை--அத்தி பூத்த மாதிரி அது இரண்டுமுறை மட்டுமே நடந்தது.
தொடர்ந்து 60 நாள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடில்  எம்.எல்.ஏ . பதவி பறிபோகும் --இதை காப்பாற்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடிலும்-- அவ்வப்போது சட்டசபைக்கு வேலியே    உள்ள "ரிஜிஸ்டரில்     "கைய்யேழுத்துப்போட்டு --ஜெ பதவியை காப்பாற்றி வந்துள்ளார்.

அதுவும் அவருக்கு "போரடிச்சு போச்சு "--சரி இதுக்கு நிரந்தரமாக ஏதாவது வழி செய்யவேண்டுமே?--அவர்கள் கட்சி எம்.எல்.ஏ. எல்லாம் ஒன்று சேர்ந்து ""அம்மாவுக்கு உடம்புக்கு  நோவு ""--என டாக்டர் சர்டிபிகேட் வாங்கினார்கள்.

சட்டசபையில் தீர்மானம் போட்டு " லீவு"-- சொன்னால் --சட்டபூர்வமாக "டிமிக்கி " கொடுக்கலாம்--
  அதிமுக தீர்மானத்தை முன்மொழிந்தது..தீர்மான எதிர்ப்பின்றி நிறைவேறியது --எதிர்ப்பு காட்டவேண்டிய திமுக மவுனம் காத்தது..அம்மா இனி சட்டசபைக்கு வரவேண்டாம்--பதவியும் பறிபோகாது --

அம்மாவை திமுக காத்தது. அம்மாவுக்கு உஅடம்பு  நன்றாகவேதான் உள்ளது. எல்லா வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது திமுகவுக்கு தெரியாதா?" மெடிகல் சர்டிபிகேட் பொய் " என்பதும் திமுக அறியாததா?---அம்மா சட்டசபைக்கு வருவதால் திமுக வுக்கு பயமா?

இதில் எதுவுமே காரணமில்லை --திமுக ஆட்சியில் அதிமுக தலைவியும் --அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதியும் --சட்டசபைக்கு வருவதே இல்லை--வெளி ரிஜிஸ்டரில் கையெழுத்து போடுவதோடு சரி. இதுதான் இவர்களின்  " மக்கள் பிரதிநிதி லட்சணம் "--ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு ---

அடுத்த சட்டமன்றத்திலும் கருணாநிதிக்கு இதே நிலைதான் ஏற்ப்படும் என திமுக நினைப்பதால் --திமுகவே முந்திக்கொண்டு "அம்மாவைக் காப்பாற்றியுள்ளது"--அதனால் தான் தனக்காக ---தான் எதிர்க்கட்சி தலைவராக வந்துவிட்டால் ---என --:எதிர்க்கட்சி தலைவருக்கான  அறையை "பெரிய்ய "அறையாக கட்டியுள்ளார் கருணாநிதி..

காமராஜர் சொன்னது இன்றும் உண்மையாக உள்ளது--""கூட்டுக்களவாணிகள்---ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் "--திமுக --அதிமுக

""ஜேக்கு பூரண ஓய்வு--டாக்டர்கள் அறிவுரை "--இதுதான் பத்திரிக்கை தலைப்பு செய்தி---ஆம் ஜெயக்கு மட்டுமல்ல கலைஞருக்கும்--பூரண ஓய்வு --அரசியலிலிருந்தும் கொடுத்து விடலாம்--அதுதான் தமிழ்நாட்டிற்கும்--மக்களுக்கும்--தமிழ் இனத்திற்கும் நல்லது..