Pages

Tuesday, April 14, 2015

ராமானுஜர் மீது கருணாநிதிக்கு காதல் ஏன்?

டி.வி.சீரியல் தயாரிப்பாளர் குட்டி பத்மினிக்கு, மாமியார் –மருமகள் சண்டை கதைகள் புளித்திப் போய்,விட்டது..மாற்று சீரியல் எடுக்க விரும்பினார்..ஆன்மீகம்..”ராமானுஜர்” சீரியல் என்றால், கலைஞர் டி.வி “சிலாட்” கொடுக்குமா?—என்ற சந்தேகம்—சிலாட் கிடைக்க கலைஞரையே வசனம் எழுத வைத்துவிட்டால்>>முதலாளியே வசனம் எழுதினால்…சிலாட் நிச்சயம் அல்லவா?—

கலைஞரை நாடினார்—ஆடி..ஓட முடியாவிட்டாலும்..”நாடி”’ தளரவில்லையல்லவா?—ஒத்துக்கொண்டார்..ஏன்?—எதற்காக?—எப்படி?—ஒத்துக்கொண்டார்?—..என்பதுதான்..”அறிவாலய ரகசியம்”—அதை உடைப்பதுதான்..இக்கட்டுரையின் “அவசியம்”—

பள்ளி நாட்களிலேயே ராமானுஜரை படித்திருக்கிறேன் என்றும், அப்போது அவரை பற்றி எழுத இயலவில்லை என்றும்..ராமானுஜருக்கு வசனம் எழுதினாலும்..நாத்திகத்திலிருந்து “பிரளப்போவதில்லை” என்றும்..கலைஞர் பேட்டியளித்திருக்கிறார்..

ராமானுஜர் தொடர் என்னும் வியாபார உத்திக்கு..கலைஞர் வசனம் எழுதினால்…ராமானுஜருக்கு மேலும் புகழ் சேரப்போகிறதா?---அல்லது நாத்திக கருத்துக்களை..ஒரு ஆத்தீகர் மூலம் “செரிவூட்டும்”..செய்ய கருணாநிதி விழயப்போகிறாரா?
ராமானுஜர் மீது கலைஞருக்கு என்ன காதல்?—மஞ்சள் துண்டு போடச்சொன்ன சோதிடன்-மஞ்சள் பை தூக்கும் ஏழை பிறாமண சாமியார் தொடருக்கு வசனம் எழுதினால்…மீண்டும் ஒருமுறை முதல்வராகலாம் என சொல்லி இருப்பாரோ?

திருக்குவளை குல தெய்வம் அங்காள பரமேஸ்வரிக்கு பிறகு..1000 ஆண்டுகாலத்திற்கு முன்பே..அரிஜன ஆலயபிரவேசம் செய்யவைத்த…தீண்டாமையை உண்மையிலேயே எதிர்த்த..ஒதிக்கிய..ஒழிக்க உழைத்த… ”ஓம் நமோ நாராயணா”—என்னும் பிரணவ மந்திரத்தை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் ஓதிய…”நிஜப் பகுத்தறிவாளன்”—வைணவ மகாப் பெரியவர் ராமானுஜரை துதித்தால்…(அப்படி ஒறிரு வசனம் வருமாறு கருணாநிதி பார்த்துக்கொள்வார்)”குடும்பச்சண்டை தீரும்—ஆட்சி வசப்படும்—எனவும் அச்சோதிடர் சொல்லியிருக்கலாமோ?
ஏனெனில், வைணவ சம்பிரதாய நம்பிக்கை படி, ராமானுஜர் திருமாலின்…ஆதி சேஷசன் அவதாரம்..அதாவது நாக தோஷம் –காலசர்ப்ப தோஷம்—இவைகளுக்கு பரிகாரம் செய்ய காளஹஸ்திக்கு போவதற்கு பதிலாக, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் போதும் என்னும் நம்பிக்கை உள்ளது..இது கலைஞருக்கு தெரியாமல் இருக்காது..ஏனெனில் கலைஞரின் “யோகா மாஸ்டர் “ முதல்..டாக்டர் வக்கீல்—ஆடிட்டர்—வரை அனைவரும்..அவர் அன்றாடல்..அறிக்கையில் “புழுதி வாறி” தூற்றும் பிராமணர்கள்தான்..

சேலத்தில் அவரும் அவரது அடிப்பொடிகளும்..செருப்புமாலை அணிவித்த வினாயகர்தான்…மனைவி தயாளு அம்மாள் மூலமாக கோபாலபுரம் வீட்டுமுன்பிருந்து..கலைஞருக்கு அருள் பாலித்து வருகிறார்....
இப்படி எதிர்ப்பவர்களை எதிரில் வைத்துக்கொண்டு..ஆலோசனை கேட்பதும்..
அரவணைத்து மகிழ்வதும்…கலைஞருக்கு கைவந்த கலை
..
சரி—சப்ஜெட்டுக்கு வருகிறேன்..திராவிட இயக்கத்தவர்கள் தமிழிலே புலமை பெற்றவர்கள் போலவும்..இலக்கியத்திலும்..சரித்திரத்திலும், பி.ஹெச்.டி பட்டம் பெற்றவ்ர்கள் போலவும் பேசுவார்கள்—எழுதுவார்கள்—ஆனால் உண்மை என்ன?
சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும்..இடையே நடந்த “வைதீக திருமணத்தை” சீர்திருத்த திருமணம் என்று ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும்.. எழுதினார்கள்…,
“கனக—விஜயர்”—தலையில் கல்சுமக்க வைத்தான் சேரன் செங்குட்டுவன்”—என்பதும் ஆதாரமற்ற கட்டுக்கதை..

இப்படி “எட்டுகட்டி எழுதும்” கட்டுக்கதை சரித்திரமும், இலக்கியமும், இன்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது..
“ஈ.வே.ரா” வியாபாரமும் படுத்துவிட்டது..பட்டுக்கோடையாரும், பாரதிதாசனாரும், அறிவாலய “லைப்ரரி” புத்தக ஸ்டாண்டுக்குள் அடங்கிப்போனார்கள்..

“நர்மதை நதிக்கு தெற்கே திராவிட நாடு” என மராட்டியத்தையும், குஜராத்தையும் பூகோளம் தெரியாமல் திராவிட நாட்டுக்குள் கொண்டுவந்த “பேரறிஞர்” அண்ணா…போல..ராமானுஜரை வசனமெழுதி என்ன பாடு படுத்த்ப்போகிறரோ தெரியவில்லை.
.
இனி இந்துத்வா—காட்டில்தான் நல்ல மழை என்பதால் ராமானுஜரை கையில் எடுத்திருக்கிறார் கலைஞர்..
கலைஞரின் “தமிழ் வியாபாரம்” கடுமையான பாஜக போட்டியால் படுத்துவிட்டது..திருக்குறளையும் –திருவள்ளுவரியும் வடமாநில பாஜக எம்.பி. தருண்விஜய்…கையில் எடுத்து “போடு..போடு “ என போட்டுக்கொண்டிருக்கிறார்..

தமிழ்நாடு முழுதும் உள்ள..திமுகவினருக்கு க்கூட தெரியாத தமிழ் அறிஞர்களையும், அவர்கள் வாழ்ந்த ஊர்களையும், தருண் விஜய் யாத்திரை செய்து தொடர்பு கொண்டுவிட்டார்.

.கலைஞரின் “கைத்தடி” கவிஞர் வைரமுத்துக்கூட எதற்கும் இருக்கட்டுமே –என முந்திக்கொண்டு—தருண்விஜய்க்கு பாராட்டுக்கூட்டம் நடத்திவிட்டார்..
சமஸ்கிருத –இந்திவெறி—சங்கபரிவாரோ—நாக்பூரில் கடந்தமாதம் நடந்த அகிலபாரத செயற்குழுவில், “தாய் மொழியிலும்---மாநில மொழியிலுமே” பள்ளிகளில் கல்வி கற்பிக்க வேண்டும் என தீர்மானம் போட்டு கலைஞர் பிழைப்பில்” மண்ணை “ அள்ளி போட்டிருக்கிறது..

இந்த நிலையில் “ராமனுக்கு பர்த் சர்டிஃபிகேட்” உள்ளதா?—இந்து என்றால் அராபிய மொழியில் திருடன் என்று உள்ளது…என்ற நக்கல் பேச்சையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு “உண்மையான பகுத்தறிவு வாதி” ராமானுஜர்தான் ”தனக்கு ஒரே துடுப்பு”—என்ற முடிவுக்கு கருணாநிதி வந்திருக்கலாம்…எனபது ஒருசாராரின் கருத்து…

வழிப்பரி கொள்ளைக்காரனாக இருந்த “வால்மீகியே” மனந்திருந்தி..இறையருள் பெற்று இராமாயண காவியம் இயற்றியது போல…91 வது வயதில் கருணாநிதி மனம் திருந்தியதன் விளைவுதான் “இராமானுஜர் தொடர் வசனம்”—என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே….”என் நாத்திகம் இதானால் பிரழ்ன்று போகாது” என கருணாநிதி சூளுரத்திருக்கிறார்.
.
“போலீஸ்காரன் மகளையும்”—வேலைக்காரியையும்” எழுதிய காமரச குழுவிலொருவர் –சரித்திரத்தையும், இலக்கியத்தையும், தன் இஷ்ட்டத்துக்கு, பிறழ்ன்று..சுழன்று..எழுதும் கூட்டத்தின் நாயகர், ராமானுஜர் சரித்திரத்தையாவது முழுதும் படித்துவிட்டு, முறையாக வசன் எழுதுவார் என்று நம்புவோ்மாக..

தவறான சரித்திரம்—தறிகெட்ட வசனங்கள்---ராமானுஜர் தொடரில் வராது என நாம் எதிர்பார்ப்போமாக..

அப்படி ஒருவேளை கலைஞர் எழுதிவிட்டால் என்ன செய்வது?—
கவலை வேண்டாம்..இந்து அமைப்பினரை பற்றி கலைஞர் நன்கறிவார்..

குடும்பச்சண்டையில் “மண்டை காய்ந்து கொண்டிருக்கும் “ கலைஞர் ராமானுஜர் தொடர் மூலம்..இன்னொரு சண்டையை விலை கொடுத்து..(வசனம் எழுதி_)..வாங்க மாட்டார்..என நம்புவோமாக..
ஜெய்..ராமானுஜம்.

Saturday, April 4, 2015

அம்பேதகார் என்னும் தேவதூதன்

சமூக நீதி! இன்று பெரிதாக பேசப்படும், எழுதப்படும் “டாபிக்”.... இது நமது நாட்டின் பாரம்பரியமா? இல்லை நமக்கு இது அந்நியப்பட்டதா?

வர்ணசிரம தர்மம், மனுஸ்மீருதி, ஆண்டான் - அடிமை-- மேலோர், கீழோர்,--என்ற பாகுபாடுகள்-- உயர்சாதி இந்துக்கள் தெருவில், தலித் நடந்தால், தானணிந்த செருப்பை அவனது இடுப்பில் சுமக்க வேண்டும், இன்னும் “இரட்டை டம்பளர் முறை” என இந்நாட்டில் தலித்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே!.... இதைக் களையவே “சமூகநீதி”... எனவே சமூகநீதி அற்ற நிலை இங்கு இருப்பதால்.. இவ்வாக்கியம் இந்நாட்டுக்கு எப்படி அந்நியப்படாமல் இருக்க முடியும்? இது இடதுசாரிகள் மற்றும் “முற்போக்கு” வாதிகளின் வாதம்!

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் “பிரணவ மந்திரத்தை” கோயில் கோபுரம் ஏறி கூவி, தாழ்த்தப்பட்டவனும் இறையருள் பெற செய்த சரித்திரங்களும், “எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவர், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார், வெள்ளை நிறத்துப் பூனையும், கருப்பு நிறத்துப் பூனையும் பாடி, சாதிகள் இல்லையடி என பாப்பாவுக்கு பாடிக்காட்டிய பாரதி வரை “ஜாதி ஒற்றுமை வேண்டும் எனவும்..சாதிக் கொடுமைகளை” சாடிய மதம் இந்து மதம்! 

ஆனாலும் அதையும் மீறிய “கொடுமைகள்” நடந்த வண்ணம் இருந்ததுதான்.. இக்காலகட்டத்தில்தான் சுதந்திர போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மரட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டம் அம்பேவாடா கிராமத்தில் மஹர் என்னும் ஏழை தலித் குடும்பத்தில் 14-வது குழந்தையாக பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் பிறந்தார்.

அப்பா ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்தால் பல்வேறு ஊர்களில் பல்வேறு அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு பீம்ராவுக்கு கிடைத்தது....

ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க பல்வேறு தலைவர்களும், சாதுக்களும் சேவை புரிந்திருந்தாலும் பாபாசாகிப் அம்பேத்கரை இதற்கு ஒரு “ரோல் மாடலாக” கருதுவதற்கு காரணமிருக்கிறது.

ராகுல்காந்தி குடிசைகளை நோக்கி பயணித்து வறுமையை காண புறப்பட்டாலும் அது எங்கோ இடித்தது! ஊழலை ஒழிக்க புறப்பட அன்னா ஹசாரேவை ஊழலின் ஊற்றுக் கண்ணான கருணாநிதி பாராட்டியது ”எங்கோ உரசியது” .......... 

ஊழல், தீண்டாமை, கல்லாமையே முதன்முதலாக இருந்த சமூகத்திலிருந்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில், அரசியல், சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று (உண்மையாகவே பெற்று) (விலைக்கு வாங்காமல் பெற்று) தன்னுடைய சாதியின் போர்வையால், தனக்கு இட ஒதுக்கீடு எனப் பெறாமல், “பொதுப் போட்டியில்” முதலிடம் பெற்று, இந்திய அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்ற தலைவர் பாபா சாகிப் அம்பேத்கர் என்பதால் அம்பேத்கரின் சமூக நீதி பார்வையில் உரசலில்லை, நெருடலில்லை நேர்மையிருந்தது.

தகுதி, ஞானம், கல்வி, அடிப்படையில், நாட்டில் நிலவும் சமூக சீர்கேட்டை, பாகுபாட்டை சரிசெய்ய, களைய, நீக்க சீர்திருத்தங்களை உருவாக்கிய தலைவர் என்னும் முறையில் அம்பேத்கார் மற்ற தலைவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்.

சமூகநீதி என்கிற வாக்கியத்தின் முக்கிய அம்சம் என்ன? முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் அது எப்படி இடதுசாரிகளால், “முறைதவறி” உச்சரிக்கப்படுகிறது என்பது புரியும்.

நீதியின் இரண்டு பரிமாணங்கள் சமூக நீதியும் இயற்கை நீதியுமாகும்! இயற்கைநீதி என்பது நாட்டின் நீதி மன்றங்கள் எல்லாவித தடங்கலும், இடையூறும், இன்றி அனைவருக்கும் சம நீதி தரவேண்டும் என்பதாகும்!

சமதர்ம சமூகமும், பொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றி அனைவருக்கும் சமவாய்ப்பு, தருவதே சமூகநீதியாகும்! பொருளாதார நீதியும், சமதர்ம சமூகமும் சேர்ந்த கலவை சமூகநீதி ஆகும்!

இது வாய்வார்த்தையால் மட்டும் நிறைவேற்றப்படக் கூடிய “அரசியல் கோஷம்” அல்ல தேர்தல் அறிக்கையின் ஷரத்து மட்டுமே இதை உயிர்பிக்க முடியாது! இது செயல் வடிவத்தின் முழு உருவம் என்று முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கருத்து சொல்லியுள்ளார்.

தான் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததால் அந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் அம்பேத்கார் தனியாக அமர்த்தப்பட்டார். குடிக்க தண்ணீர் கூட பள்ளிக்கூட “பியூன்” வந்தாலே உண்டு. 

ஏதாவது ஒருநாள் “பியூன்” லீவு எடுத்தால் அன்று இவருக்கு குடிக்க தண்ணீர் கிடையாது... இதை “நோ பியூன் நோ வாட்டர்” என்றும் புத்தகத்தில் அம்பேத்காரே எழுதியுள்ளார்.

கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் “சதி” என்னும் அவலம் இருந்தாலும். குடும்பத்தில் சொத்தில் பெண்ணுக்கு பங்கு ஏதுமில்லை என்ற காலம்... இதுவே அம்பெத்காருக்கு சிந்தனையை சீண்டிய காலம்..

ஜாதி, இனம், பாலினம், ஆட்சி அதிகாரம், செல்வம் இவற்றை தாண்டியது சமூகநீதி! எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றுதல் என்பது ஒருபுறமிருந்தாலும், இதனால் சமூகத்தின் உயர் வகுப்பாறின் நெஞ்சில் விரோதத்தை சம்பாதிக்க கூடாது என அம்பேத்கார் எண்ணினார். எனவெ சமூக ஒற்றுமையை திடமாக வலியுறுத்தினார்.

அரசியல் ஜனநாயகம் ஆட்சி மாற்றத்தை மட்டுமே உருவாக்கும், வலியவன், எளியவன் என்ற வார்த்தைகள் விளையாடும். ஆனால் உண்மையில் எளியவனுக்கு எந்த ஏற்றத்தையும் தராது. எனவே சமுதாய ஜனநாயகம் வேண்டும். இதுவே ஜாதி ரீதியான தாழ்வுகளை அகற்றி அனைவரையும் உயர்த்த வழிவகுக்கும் என்று அம்பேத்கார் நம்பினார்.

வலியவனுக்கு சட்டம் வளைந்து கொடுக்கிறது. வறியவனுக்கு சட்டம் தொந்தரவுதான் கொடுக்கிறது. அநீதி இப்படித்தான் ஆரம்பமாகிறது. பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாக இச்சமூகம் வைத்திருக்கிறது. இதிலே முஸ்லீம் பெண்களும் அடங்கும். அவர்களின் “பர்க்கா” அவர்களின் சுதந்திரத்தை நசுக்குகிறது.

“தலாக்” என்ற மூன்றுமுறை உச்சரிப்பு அதன் மூலம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி! பலதார மணமும் முஸ்லீம் பெண்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கும் செயலாகும்!

எனவே பெண்களின் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமைகளுக்காக பெண்கள் போராட வேண்டும் என்பது அம்பேத்காரின் கருத்தாக இருந்தது.

சமூகத்தின் எல்லா பொறுப்புகளுக்கும் பெண்கள் வர வேண்டும் என இப்போது கோரப்படும் 33 சதவீதத்தை 75 ஆண்டுகட்கு முன்பே கோரியவர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள். பெண்ணுரிமையை பேணாமல் சமூகநீதி சாத்தியமில்லை என்பது அம்பேத்காரின் கருத்தாக இருந்தது!

அரிஸ்டாட்டிலும். பிளாட்டோவும், காந்தியும் அம்பேத்காரை பெரிதும் கவரவில்லை “பெண்கள் மூடநம்பிக்கையை வளர்க்கும் கூடாரங்கள்” - பெண் கல்வியே சமூகநீதியின் மையக்கருத்தாக அம்பேத்கார் கருதினார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரெஞ்சு புரட்சியின் தாரக மந்திரம் அம்பேத்காரும் இதையே சமூகநீதியின் கருத்தாக கருதினார்.

1936-ல் தாமோதர் ஹால் கூட்டத்தில் தேவதாசிகள், முரல்யாக்கள் மற்றும் ஜோகத்தினிகள் இடையே பேசும் போது   தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமென அம்பேத்கார்  கூறினார்.

1942 ஜீலை 20 நாகபுரியில் ஒடுக்கப்பட்ட பெண்கள் மாநாட்டில் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்”. அடிமையாக நடத்தப்பட கூடாது என்றார்.

இதன் வெளிப்பாடாக அவர் உருவாக்கியதுதான் “ஹிந்து கோடு”. இதில்தான் பெண்களுக்கு சொத்துரிமை, திருமணம், விவாகரத்தில் பாதுகாப்பு முதலியவைகளை புகுத்தினார்.

இதோடு மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட, மலைஜாதி மக்களுக்கு உரிமை, பெண்ணுரிமை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையும் சேர்ந்த்தே சமூகநீதி என்பது அம்பேத்கரின் கோட்பாடு.

இதனால்தான் 1953-ல் வெளியான “காகா கோல்கர் கமிஷன்” பரிந்துரையில், பெண்கள் எந்த ஜாதியினரானாலும் “பிற்படுத்தப்பட்டவர்கள்” என்றும், அரசாங்க வேலை வாய்ப்பில் மற்ற பிறபடுத்தப்பட்டவர்களுக்கு--- 20% வகுப்பு 1, 33% வகுப்பு 2, 40% வகுப்பு 3&4 வேலை வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் மூலம் அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தலைவராக இல்லாமல், மொத்த தாழ்த்தப்பட்டோருக்கும் தலைவராக விளங்கினார்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கிய கமிட்டி மற்றும், மைனாரிட்டி மற்றும் மனித உரிமை கமிட்டிகளின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்தார் அம்பேத்கர்.

இவருடைய சீரிய சீர்திருத்த கருத்துக்களைத்தான் 1947--டிசம்பர் 13 முதல் 19-வரையும் ஜனவரி 20 முதல் 22 வரை  9 நாட்கள் நடைபெற்ற அரசமைப்பு சட்ட குழு ஏற்றது. ஜஸ்டிஸ் கஜேந்திகட்கர் முதலானோர் பாராட்டினர்.

அரசமைப்பு சட்டம் பாகம் 3-ல் ஜாதி, மதம், ஊர், பாலினம் மூலம் தீண்டாமை தொடரக்கூடாது என்றார்.அம்பேத்கார்

எல்லோருக்கும் சம உரிமை, அனைவரின் சட்டத்தின் மூலம் சமம் என்ற உரிமைகளை பெற்றுத்தந்தார்.

அரசமைப்பு சட்டம் பாகம் 4-ல் அரசிற்கு வழிகாட்டு குறிப்புகளை ஏற்படித்தித் தந்தார். இதில்தான் “பொது சிவில் சட்டமும்” “பசு வதை சட்டமும்” கொண்டுவரப்பட வேண்டுமென ஆலோசனை கூறினார்.

பிரிவு 38-ன் மூலம் வருமானத்தின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடிகள் களையப்பட வேண்டும். ஏழை என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதை தடை செய்தார்.

பிரிவு 39-ன் மூலம் வாழ்வதற்கு உரிமையும், வாழ்வை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் சமமாக பிரித்துத்தரப்பட வேண்டும் என சட்டமியற்றினார்.

சமூக நீதியே சமூக நல்லிணக்கத்தை காக்கும் சமூக ஸ்திரத்தன்மையே தேசபக்தியை உருவாக்கும் என்பதெ அம்பேத்காரின் பார்வையாக இருந்தது.

இதைத்தான் நரேந்திர மோடியும், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை மற்றவர்களுக்கு இணையாக உயர்த்த “ஸ்கில் டெவலப்மெண்ட்” என்கிற தனி அமைச்சகத்தை உருவாக்கி வேறுபாடுகளை களையும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அம்பேத்கார் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி! இந்து மதத்திலிருந்த “குறைபாடுகளை” மதம் மாறினால் தீர்ந்துவிடும் என அவர் நம்பவில்லை - மாறாக மதத்திற்குள் இருந்தே போராடினார். தனது இறுதி நாட்களில் 1956-ம் ஆண்டு, இந்திய மதங்களில் ஒன்றான, இந்து மதத்தின் ஒரு பகுதியான, புத்தமதத்திற்கே மாறினார்!

தீவிர தேச பக்தர், சமூக போராளி, சொல்லும் செயலும் ஒன்றே என்று வாழ்ந்து காட்டியவர்! பெண் முன்னேற்றத்திற்கு போராடியது மட்டுமல்ல, அதற்கான மாபெரும் சட்ட சீர்திருத்தம் செய்து பெண்களுக்கு பதுகாப்பு அளித்தவர்.

மொத்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் தேவ தூதன்....அம்பேத்கார்