Pages

Thursday, August 25, 2016

ஒலிம்பிக்--ஆசை மட்டும் போதாது...”திறனும்” ‘ஸ்கில்’லும் வேண்டும்


இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதுஇந்தியாவிற்கு ஒரு ஆறுதல்சிந்து பாட்மிட்டனில்வெள்ளிப் பதக்கம் வென்றார்மல்யுத்தத்தில்   பெண்கள்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் என்ற 23வயது பெண் வெண்கலப் பதக்கம் பெற்றார் என்பதைத்தவிர நம்பிக்கையை துளிர்க்க வைக்கும் வேறுசெய்திகள் இல்லை.

110 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் குழுஅதில் வரும்,இதில் வரும் என எதிர்பார்த்து முதல் 11 நாளில் எந்தபதக்கமும் வெல்லாமல் எதிர்பார்த்த பெருந்தலைகள்எல்லாம் ஒவ்வொன்றாக வீழ்ந்து போக இந்தியாவின்பதக்க நம்பிக்கைகள் சாய்ந்து போனது!

பத்துக்கும் 35க்கும் இடைப்பட்ட வயதில் இருக்கும் 40கோடி இளைஞர்களை கொண்ட இந்திய நாட்டுக்கும்ஒலிம்பிக்கில் ஏன் இப்படி ஒரு சோதனைபதக்கம்இல்லாமல் வேதனை!
கடந்த 2012-17ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்டத்தில்விளையாட்டுக்கென பல திட்டங்களைதீட்டியிருக்கிறார்கள். 2012ல் 6 பதக்கமும் 2016ல் 20பதக்கமும் 2020ல் 30 பதக்கமும் பெற வேண்டும் என்றஇலக்குடன் திட்டம் போடப்பட்டதுஏதோ பதக்கம்வெல்வது அரசு திட்டமிடுதலால் தான் முடியும்என்பதுபோல உள்ளதல்லவாஇதை ஆமோதிக்காமல் பிரதமர் மோடி அடுத்த ஒலிம்பிக்கிற்கு ஒவ்வொருமாவட்டத்திலிருந்தும் வீரர்கள் செல்வார்கள் என்றுதிட்டமிடுதலை உள்ளூர் வசம் ஒப்படைத்திருக்கிறார்!

எனக்கென்னவோ ஒரு அரசு மட்டும் திட்டமிட்டால்ஒலிம்பிக்கிற்கு ஏராளமானவரை அனுப்பி பதக்கம்பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லைஅரசுதிட்டமிடலாம்செயல்பாடுகளை ஒருக்கிணைக்கலாம்,வீரர்களுக்கு ஆதரவு தரலாம்அவ்வளவே!

ஒலிம்பிக் போட்டிகளில் 1900 தொடங்கி 2016 வரைநடந்துள்ள போட்டிகளில் 22 தடவைகள் இந்தியா பங்குகொண்டுள்ளது. 1928 முதல் 1964 வரையான காலம் இந்தியஹாக்கி விளையாட்டின் பொற்காலம்சுமார் 8 முறைதங்கமும் 1முறை வெள்ளி 1 முறை வெண்கலமும்இந்தியா வென்றுள்ளது

யோகாவை ஐக்கிய நாடுகள்சபை அங்கீகரித்ததுஜூன் 21 உலக யோகா நாளாகஅறிவிக்கப்பட்டதுஇப்படிப்பட்ட நாம் விளையாட்டில்பின்தங்கி இருப்பது ஏற்க முடியாதது.

பள்ளிப் பாடங்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுவிளையாட்டுக்குஉடற்பயிற்சிக்கு கொடுத்திடவேண்டும்அரசுடைய விளையாட்டு பயிற்சி மையங்கள்மட்டும் நம்பியிருந்தால் நமது கனவு நனவாக முடியாது.என்.ஜி.ஓக்கள்கார்ப்பரேட்  நிறுவனங்கள்காலனிகுடியிருப்புகள்ஊராட்சிநகராட்சிகள் என நாட்டின்ஒவ்வொரு பகுதியும் இதில் தனிக்கவனம் செலுத்ததுவங்க வேண்டும்.

வில் வித்தைவாள் வீச்சுமல்யுத்தம்கபடிஈட்டி எறிதல்,ஷாட்புட் போன்ற விளையாட்டுகளின் தாயகம் இந்தியாதான்ஹாக்கிகால்பந்து உள்ளிட்டவற்றை கூர் தீட்டி 2020ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 5 உலக நாடுகளில் இருக்கவேண்டும்.

 திட்டமிடுவோம்செயல்படுவோம்வெற்றிபெறுவோம்பதக்கமும்தான்!

Tuesday, August 2, 2016

மனிதனுக்குள் மிருகம்

மூசா என்கிறவன் மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவன்திருப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தான்இரண்டுகுழந்தைகளுக்கு தந்தை.எஸ்பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவன் என்கிற தகவலின் அடிப்படையில் மேற்கு வங்க போலீஸ் திருப்பூர் வந்து கைதுசெய்தது.

யாரிடமும் பேசமாட்டான்மிகவும் அமைதியானவர்தான் உண்டுதன் வேலைஉண்டுஎன்றுஇருப்பவன்
மாதத்திற்கு ஒரு முறை மேற்கு வங்காளம் சென்றுஏராளமான இளைஞர்களை அழைத்து வந்து திருப்பூரில் வேலைக்கு சேர்த்து விடுவான்.

இவனை கைது செய்ததும், அவனைச் சுற்றி இருந்த வீடுகளில் இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்இந்த ஆள் இவ்வளவு பெரிய பயங்கரவாதியா என நெஞ்சம் பதைத்தனர்.
இவனிடம் நவீன வகை ஆயுதங்கள்மிக அதி நவீன தொலைதொடர்பு சாதனங்கள்இதை விட முக்கியமாக ரேஷன் கார்டுடிரைவிங் லைசன்ஸ் முதலியவைகைப்பற்றப்பட்டன.


காஞ்சிபுரம் படப்பையில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் மில்லில் கடந்த 3 ஆண்டு காலமாக வேலை பார்த்து வந்த லீனா ஜோஸ் மேரி கைது செய்யப்பட்டார்இவர்ஒருஅபாயகரமானநக்சலைட்.2002ம் ஆண்டு நடந்த கொலைகளில் இவர் சம்பந்தப்பட்டவர்.


கரூரில் வெங்கமேடு பகுதியில்ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த கலாசந்திரா ஆகிய 50 வயது மதிக்கத்தக்க பெண்கள்நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள்கைது
போலீஸ் பிடித்த உடனேயே ஆயுதப் புரட்சி வெல்கநக்சல்பரி இயக்கம் வாழ்கஎன கோஷம் போட்டனர்.
சாதாரண குடிசைவாழ் கிராமத்துப் பெண்கள் உடையில் இருந்த இவர்களின் கைதுசுற்றியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த இரு கைதுகளிலும் ஒற்றுமைகள் இருக்கின்றனதிருப்பூரில் பிடிபட்ட .எஸ்பயங்கரவாதி மூசாவைப் பற்றிய தகவல்கள் அக்கம்பக்கத்தாருக்குதெரிந்திருக்கவில்லைமிகவும் அமைதியான ஒரு மளிகைக் கடைக்காரனாகஉள்ளூர் கம்பெனிகளுக்கு ஆள் சேர்ப்பவனாக தன்னை முன்னிலைபடுத்தியிருக்கிறான்.
அதுபோல நக்சல் இயக்க ஆதரவாளர்களும் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்உடைநடைபாவனைகளில் அவர்கள் உள்ளூர் மக்களோடுஒன்றியிருந்திருக்கிறார்கள்.


மேற்கு வங்கத்தில் வேறு ஒரு .எஸ் பயங்கரவாதியை கைது செய்யப்போய்அவனிடத்திலிருந்த ஆதாரங்களில் மூசாவும் ஒரு பயங்கரவாதி என்பது தெரிந்து,மேற்கு வங்க போலீஸ் வந்து கைது நடத்தியிருக்கிறது.
உள்ளூர்க்காரர்களால்பெறமுடியாத ரேஷன் அட்டையை மூசாவால் பெற முடிந்திருக்கிறதுதனது ரகசியம் வெளியே தெரியாதிருக்கதன் குழந்தைகளுக்குக்கூட தமிழ் பெயர் சூட்டியுள்ளான்.இவனை கைது செய்தபோது பலருக்கு திகிலாக இருந்திருக்கிறது

நக்சலிசமும்  எஸ் பயங்கரவாதமும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக இந்து முன்னணிதலைவர் ராமகோபாலனும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அரசை எச்சரிக்கும் போதெல்லாம் ஓட்டு வங்கி அரசியல் குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

சாதாரணமாககிராமங்களில் யாராவது புதிய நபர்கள் நுழைந்தால்ஊருக்கே தெரிந்துவிடும்மரத்தடி மாமன்ற பெரிசுகள் விசாரணையிலிருந்து, அவர்கள் தப்பமுடியாது.

நகர வாழ்வில்நாம் எதிர்வீட்டுபக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட நட்பு வைத்துக் கொள்வதில்லைஇதனால் என்றாவது ஒருநாள் குற்றம் நடந்து முடிந்துபோலீஸ் வரும்போது தான் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

உடுமலைப்பேட்டைகோகுல்ராஜ் கொலையிலும் ,நுங்கம்பாக்கம் சுவாதி கொலையிலும் அக்கம்பக்கத்தில் இருந்த மக்களின் செயல்பாடற்றபொறுப்பற்றதன்மை ...மந்தமாகிப் போன மனித மனத்திற்கு உதாரணம்.

அதிலும் உடுமலைப்பேட்டை வீடியோகொலை நடக்கும்போது சுற்றி நின்ற மக்களின் செயலற்ற மனநிலையை முழுதும் வெளிப்படுத்துகிறது.

ஒரு சம்பவம் நடந்து முடிந்தவுடன் முழுக்குற்றமும் போலீஸ் மீது சுமத்தப்படும்ஆனால் அச்சம்பவத்தின்,  அருகே இருந்த மக்களின் சமூகப் பொறுப்பு என்னஎன்பதை நாம்  உணரவோ, விவாதிக்கவோ தயாரில்லை.
நம் நாட்டில் இப்போது தான் ஆதார் அடையாள அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின்கைவிரல் ரேகைகண் மற்றும் புகைப்படம் ஆவணப்படுத்தப்பட்டுவருகிறது.குற்றவாளிகளை கண்டுபிடிக்க இனி இவை உபயோகமாக இருக்கும்.

ஏற்கனவே தகவல் தொழில் நுட்பம்குறிப்பாக  செல்போன் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் பெரிதும் உதவி வருகிறது.

தேசத்திற்கு எதிரான குற்றங்களில் தனி மனிதனால் மட்டும் ஈடுபட முடியாதுஒரு குழு அல்லது சமூகம் அவர்களுக்கு உதவாமல் இது சாத்தியப்படாது.

ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பு நடக்கும்போதுஅதை நடத்தும் குற்றவாளி வெளியூரை அல்லது வெளிநாட்டை இருக்கிறான்.

உள்ளூருக்கு அவனால் எப்படி வரமுடியும்உள்ளூர் மக்களின் ஆதரவில்லாமல் அவனால் எப்படி குற்றத்தை அரங்கேற்ற முடியும்எனவே உளவுப்பிரிவு,போலீஸ் கண்காணிப்பு வளையம் என்பதற்கெல்லாம் ஒரு எல்லை மட்டுமே உள்ளது.
ஆனால் ஜாதியும் மதமும் குற்றச்செயல்களை பாதுகாப்பதில் எல்லை கடந்து இருக்கிறதுஇப்போது இது மாதிரி குற்றவாளிகள் பிடிபட்டாலும் உடனே அந்தமார்க்கம் சார்பின் கண்டன அறிக்கை மட்டும் வரும்ஒருபோதும் இதை ஆதரிக்க மாட்டோம் என்பதும் எங்கள் மார்க்கம் வன்முறைக்கு எதிரானது என்றவகையில் அறிக்கை இருக்கும்.

அப்படியானால் திருப்பூர் .எஸ் பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது யார்திருப்பூரை அடையாளம் காட்டியது யார்?

அடிக்கடி மேற்கு வங்கம் சென்று ஆட்களை கொண்டு வேலையில் சேர்த்தாரேஅவர்களெல்லாம் யார்?

போலீஸ் சீர்திருத்தத்தில் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது ”கம்யூனிட்டி போலீஸ்”ஒரு தெருவுக்கு அல்லது ஒரு பகுதிக்கு ஒரு காவலர் பொறுப்பாகஇருப்பார்அவருக்கு இடமாறுதல் கிடையாதுஅந்தப் பகுதியில் யார் புதிதாக வந்தாலும் அவர் கண்டுபிடித்து விடுவார்இந்த முறை நடைமுறைக்கு வருமானால்,மூசாக்களும் ரோஸ் மேரிக்களும்கலாசந்திராக்களும் உடனடியாக பிடிபடுவார்கள்.

இது ஒரு புறமிருக்கமக்களுக்கும் சமூக பொறுப்புள்ளதுநம் பகுதியில்  நடக்கும் வித்தியாசமானமாறுபட்ட விஷயங்கள் நபர்களிலின் செயல்பாடுகளை நாமும்கண்காணிக்க வேண்டும்காவல்துறையிடம் சொல்ல வேண்டும்அப்போதுதான் அந்தமாதிரிபதுங்கியிருக்கும் மிருகங்களை மனிதர்களாகிய நாம்  அடையாளம்காணமுடியும்.