Pages

Thursday, August 9, 2018

மறைந்திருக்கும் கலைஞரின் இணக்கமான பக்கம் |

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் "அந்தப் பக்கம் " ஒவ்வொரு பாஜக வினரும் படித்து தெரிந்து பாலோ செய்தால் அது நமக்கு சாதகமானது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் 

ஊழல்,  சொந்தக்காரர்களுக்கு பதவி கொடுப்பது, குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி ,இலவசங்கள், சாராயக் கடைகளை திறந்தது,தேர்தல் வாக்குக்கு பணம் கொடுத்தது, என்பதை உலகில் முதல் முதல் தமிழகத்தில் துவக்கியது மறைந்த கருணாநிதி தான். அவர் தலைமை ஏற்ற திமுக தான் என்பது உலகறிந்த உண்மை..

இந்து மத துவேஷம் ,பார்ப்பன எதிர்ப்பு, மாநில சுயாட்சி ,என்பன எல்லாம் கலைஞரின் பொழுதுபோக்கு. வேலை இல்லாத நேரங்களில் அதாவது கட்சியை முன்னெடுக்க ஏதுவான பிரச்சனைகள் கண்டுபிடிக்கமுடியாத காலங்களில் மேற்சொன்னவை கலைஞருக்கு உடனடியாக உதவும் "பாஸ்ட் ஃபுட் " 

இவையெல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே. .அரசாங்கம் தன்னிடம் இருக்கும் போது இரண்டாவது பாராவில் எழுதியதை எல்லாம் செயல்படுத்துவார். 

போதும் போதும் ஒருவர் இறந்த பின்பு ஈவு இரக்கமின்றி அவரது கடந்த கால செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறீர்கள் இது நியாயமா? என்று கேட்பது என் காதில் விழுகிறது 

வேறு என்ன செய்வது. தேசம் தெய்வம் தர்மம் விரோதி என்பவரை நாம் தூக்கியா பிடிக்க  முடியும்? இருந்தாலும் கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. குறிப்பாக இயக்க ரீதியான வளர்ச்சி, "அவர்களுக்கு என்ற திராவிட கட்டுப்பாடு ", அதை கட்டிக் காத்தல், கடுமையான உழைப்பு |சிறந்த எழுத்தாற்றல் | நிறைய வாசிப்பு, என்பன நமக்கு நமது இயக்க வளர்ச்சிக்கு தூண்டுகோலாக எடுத்துக்கொள்ளலாம் . 

நமது இன்றைய கட்டுப்பாடு, திட்டமிடல், கொள்கை ரீதியான ஞானம் | சித்தாந்தத்தில் ஈடுபாடு, இவைகளெல்லாம் ஷாக்கா நமக்கு கற்று கொடுத்தது. நமது வழிகாட்டியாக ஆதர்ச புருசனாக யாராவது ஒரு பிரச்சாரகர் நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறார். இருக்கிறார். நம்முடைய மூல்யங்கள் | பண்புகள் | வளர பிராத்தமிக்சிக்ஷா வர்க மற்றும் சங்க சிக்ஷா வர்க நமக்கு பயிற்சிகள் அளிக்கிறது..... 

 இப்படி நாம் வளர்ந்தோம் .வளர்க்கப்பட்டோம். ஆனால் கருணாநிதிக்கு யார் பயிற்சி கொடுத்தார்.? கேட்டால் நாங்கள் அண்ணாவின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தோம். பெரியாரின் குருகுலத்தில் பாடம் பயின்றோம். என்றெல்லாம் வசனங்கள் பேசுவார்கள்... 

கருணாநிதியின் ஆளுமை ,குறிப்பாக தன் கட்சியை தன்னுடன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுவும் முதல்வர் ஆக (1969) இருந்தது முதல் இன்று 2018 வரை 49 வருடம் என்பது மிகப் பெரிய சாதனைதான். கருணாநிதியின் ஆளுமையில் நம்மை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள் 3 

சி என் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு அவரது கட்சியும் நாடும் எதிர்பார்த்த விஷயம் கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆவார் என்று . இருந்தது .....

 ஆனால் ஒரே இரவில் அத்தனை எம்எல்ஏக்களும் தன் பக்கம் இழுத்தது மட்டுமல்லாமல் இவருக்கு இணையாக இருந்த மதியழகன் அன்பழகன் ஆகியோரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டது தான் .இதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது இடத்தில் இருந்த நெடுஞ்செழியனையும் அதே இரண்டாம் இடத்தில் மீண்டும் வைத்துக் கொண்டதுதான் 

1972இல் எம்ஜிஆர்  ஐ கருணாநிதி திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்தார். எம்ஜிஆர்  அதிமுகவை ஆரம்பித்தபோது திமுகவின் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மந்திரி கூட எம்ஜிஆருடன் செல்லவில்லை. இரண்டே இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே எம்ஜிஆருடன் போனார்கள். போகுமிடமெல்லாம்மக்கள் வெள்ளத்தில்  எம்ஜிஆர் மிதந்தார். திமுக அழிந்து போகும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தன் சாதுர்யத்தால் திமுகவை கட்டுகோப்பாக வைத்து கருணாநிதி காப்பாற்றினார். 

இந்த ஆளுமையை கருணாநிதிக்கு எந்த இயக்கம் கற்றுக் கொடுத்தது?. எந்த கல்லூரியில் இந்த பாடம் பயின்றார் ? என்பது எல்லாம் தான் வியக்க வைக்கும் விஷயம். 

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் பல திமுக மாவட்ட செயலாளர்களுடன் நான் ரகசிய தொடர்பில் இருந்தேன் .திமுக கலகலத்துப் போனது. பல தலைவர்கள் கருப்பு சிவப்பு கரைவேட்டியை கிழித்துப்போட்டு விட்டு தலைமறைவானார்கள். கருணாநிதி ஜனதாக் கட்சியோடு கூட்டு வைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆரிடம் தோற்றுப்போனார். இதன் பிறகு 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் கட்சி கரைந்து போகாமல் கட்சியை காப்பாற்றியது கருணாநிதிதான்.

 காமராஜர் பக்தவத்சலம் ராஜாஜி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று எந்த தலைவரையும் நாக்கில் நரம்பில்லாமல் விமர்சிப்பது கருணாநிதியின் இயல்பு .அவர் உபயோகித்த வார்த்தைகள் அச்சில் ஏற்றினால் அச்சம் தரும் வார்த்தைகள் ஆகும்...... 

 தன் கட்சிக்காரன், தான் போட்ட கோட்டைத் தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ளும் தந்திரமாக இந்த தூசணை வார்த்தைகளை கருணாநிதி உபயோகித்தார். . "நீ எரிந்த கட்சி நான் எரியாத கட்சி " சண்டையில் தொண்டனை மகுடிப் பாம்பாக கட்டுப்படுத்த இப்படியான பேச்சுக்களை கருணாநிதி பேசினார் 

ஆனாலும் அரசியலில் ஆட்சியில் இல்லாமல், அதுவும் ஒரு வெகுஜன மக்கள் தலைவர் எம் ஜி ஆருக்கு எதிரான ஒரு கட்சியை கலையாமல் 13 ஆண்டுகாலம் நடத்திய பெருமை கருணாநிதியையே சாரும் 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பார்வையில் 2 காரணங்களை நான் பார்க்கிறேன் .ஆரம்பம் முதலே கருணாநிதியின் யூஎஸ்பி எனப்படும் unique செல்லிங் பாயிண்ட் "தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் "  கவர்ச்சிகரமான பேச்சாற்றல் எழுத்தாற்றல் இந்த இரண்டையும் செவ்வனே பயன்படுத்தினார்

 தன் தொண்டர்களுக்கு தன்னுடைய கட்சிப் பத்திரிகையான முரசொலியில் தினசரி ."உடன்பிறப்புக்கு கடிதம் "எழுதினார். கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் திமுக என்பதற்கு அவர்களிடம் இரண்டு அடையாளம் இருக்கும். ஒன்று கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி கட்டியிருப்பார்.இதை இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது திமுகதான் இரண்டாவது முரசொலி பத்திரிக்கை கையில் இருக்கும் ......

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சில் உள்ள அமைப்புச் செயலாளர் பணியை எந்த போதனையும் பயிற்சியும் இல்லாமல் கருணாநிதி முரசொலியில் தன் கடிதத்தின் மூலம் தொண்டர்களுக்கு பயிற்றுவித்தார்......... 

அந்த தினசரி குறிப்புகள் வழிகாட்டுதல்கள் தொண்டனை கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இன்றைய வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ட்விட்டரில் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும் விஷயங்களை கருணாநிதி 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாக தொண்டனுக்கு எழுதி வகுப்பு நடத்தினார் .இதன் impact மிகப்பெரும் சாதகமாக அவருக்கு அமைந்தது ...

பேச முடியாத எமர்ஜென்சி காலத்திலும் சரி, இப்போதும் சரி, திமுக, திருமணம் முதல் கருமாதி வரை , அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் தங்கள் கருத்து சொல்ல பயன்படுத்தும் களமாக பயன்படுத்தியது ஃ கருணாநிதி இதை சிறப்பாக செய்தார் ஃ  

கட்சித் தொண்டனோடு தான்  நேரடியாக தொடர்பில் இருக்கும் விஷயத்தை ஆர்எஸ்எஸ் அல்லாத வேறு நபர் செய்தது கருணாநிதி மட்டுமா கத்தான்  இருக்க முடியும் ...... 

மேடைகளில் பேசும்போது protocol படி அனைத்து தொண்டர்களின் பெயரையும் கருணாநிதி குறிப்பிடுவார் ஃ இது தொண்டனுக்கான அங்கீகாரமாக ஒருபுறம்  எடுத்துக் கொண்டாலும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய பெயரை, தலைவரே சொல்லி விட்டார் என்ற பெருமிதம் தொண்டனுக்கு உண்டானது. இதனால் களப்பணியில் அவனது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.  ...

ஆட்சியில் இருந்தபோது ஒரு பகுதியிலிருந்து ஒரு கோரிக்கை மனு வருகிறது என்றால் அது அந்தப் பகுதி திமுக வட்ட செயலாளர் பரிந்துரைத்தாலே அந்தப் பெட்டிஷன் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற "முறையை " உருவாக்கினார் கலைஞர் ஃ இப்படி ஒரு அந்தஸ்தை அந்த தொண்டனுக்கு தந்தால் அவன் கருணாநிதியின் கட்டுப்பாட்டை விட்டு எப்படி  வெளியே போவான்..? --. 


"தனக்கு சாதகம், தனக்கு மட்டுமே சாதகமாக, " என்பதே எப்போதுமே கருணாநிதியின் நிலைப்பாடு. அதற்காக "யூ டர்ன் " "அந்தர்பல்டி ""சோமர் சால்ட் || அடிக்க கவலைப்படாதது தான் கருணாநிதி வெற்றியின் சூத்திரம் ....

பாஜககருணாநிதியின் organizational skills பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.. மற்றவைகள் நம் தேவையில் வரவில்லை ... அப்படியென்றால் கருணாநிதியின் அந்தப்பக்கம் நமக்கு கொஞ்சம் இணக்கம் தான்  


Monday, March 26, 2018

தமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்

தமிழ்நாட்டில்கோவை பா.ஜ.க அலுவலகத்தின் மீது மார்ச் 7ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பா.ஜ.கவை தவிர எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டிக்கவில்லை.
மார்ச் 9ம் தேதி சேலம் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கதவுகள் உடைக்கப்படுகிறது. யாரும் இதை கண்டிக்கவில்லை பா.ஜ.க தவிர.

மார்ச் 21ந் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கார் எரிந்து போகிறது! எந்த கட்சியும் கண்டிக்கவில்லை.

சென்ற ஆண்டு கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது பா.ஜ.க அதை கண்டித்தது. 

எங்கோ வடக்கே வி.ஹெச்.பி தலைவர், கருணாநிதி நாக்கை அறுப்பேன் /என சொன்னதற்கு தி.மு.க காலிகளால் சென்னை பா.ஜ.க கட்சி தலைமையகம் கமலாலயம் தாக்கப்பட்டது. 

எந்த கட்சியும் கண்டனமும் தெரிவிக்கவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை.


கடந்த காலத்தில் நடந்தவைகள் எல்லாம் ஒருபுறம் நாம் மறந்து விட்டாலும், தற்போது, ஒரு அரசியல் கட்சியின் அதுவும் ஆளும் கட்சியின் அலுவலகமும், மாவட்டத் தலைவர் வீடும் காரணமின்றி தாக்கப்பட்டதற்கு ஒரு கண்டனமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அரசியல் அநாகரிகம்!


ஹெச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் எழுதியமைக்கு -Ôமை காயும் முன்னேÕ வருத்தமும் மன்னிப்பும் கோரிய பின்பும் அது இன்னும் டி.விக்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியலாக்கப்படுகிறது. வீரவசனங்களை பேசப்படுகிறது. 

ஹெச்.ராஜா இன்னும் மற்ற கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு நியாயமாக இருந்தால். கோவை பா.ஜ.க அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டதற்கு  கண்டனம் தெரிவிக்க வேண்டியது மற்றொரு நியாயம் தானே! அது ஏன் செய்யப்படவில்லை.


ஆக தமிழகத்தில் அரசியல் ஒரு அசிங்க அரசியலாக, பா.ஜ.க வெறுப்பு அரசியலாக, ஆபத்தான ஜனநாயக விரோத அரசியலாக, இந்துக்களின் மீது காழ்ப்புணர்வு அரசியலாக, இந்திராகாந்தி இருந்தபோது இருந்த, மதவாத, ஓட்டுப் பொறுக்கி அரசியலாக மாறி வருவது கண்டனத்திற்குறியது.


இந்த தாக்குதல்களும், இதற்கு சொல்லி வைத்த மாதிரி சேர்ந்து கொண்டு பா.ஜ.க எதிர்ப்பில் ஓரணியாக மாறிவிட்ட மற்ற அரசியல் கூட்டணிகளும் சாதாரண நிகழ்வுகள் அல்ல.


இது அரசியல் லாபம் மட்டும் கருதி  இருந்தால் நாம் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. பொருந்தாத கூட்டணிகள் எவ்வளவோ, பல காலங்களில் கூடி, உருவாகி, உடைந்து பின்பு  காணாமல் போயிருக்கிறது! அதுபோல ஒரு நிகழ்வாக இதைப் பார்க்க இயலவில்லை.


பா.ஜ.கவின் 22 மாநிலங்களில் மாபெரும்  வெற்றி எதிரிகள் நிலை குலையச் செய்து விட்டது. தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற வேறுன்ற முடியாது என்று கீறல் வி-ழுந்த ரெகார்டு வார்த்தைகளை  சொல்லி வந்தவர்களுக்கு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா வெற்றிக்குப் பிறகு மரண பயம் வந்து விட்டது.


வெறும் 1.6 சதம் ஓட்டு, எம்.பி., & எம்.எல்.ஏ.,  & கவுன்சிலர் கூட இல்லாத மாநிலமாக இருந்த திரிபுராவில்  பா.ஜ.கவின் வெற்றி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மரண பயத்துக்கு இட்டுச் சென்று விட்டது?

இதில் தமிழகத்தில் தி.மு.க & அ.தி.மு.க மாறி மாறி ஜெயித்து வந்த நிலையை ÔஜெÕ  உடைத் தெறிந்த பிறகு, ஸ்டாலின் குழுமம் தனது ஒரிஜினல் தேச விரோத முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.

 அதன் வெளிப்பாடு  தான் ராமராஜ்ய ரத  யாத்திரைக்கு ஸ்டாலின் ஒவர் ரியாக்ஷன், தமிமுன் அன்சாரியின் சட்டசபை டான்ஸ். ஜவாஹிருல்லாவின் புது அவதாரம்! முதலியன.


ஏற்கெனவே தமிழகத்தில் தேசிய சக்திகள் அடக்கி வாசிப்பதும், தேச விரோத சக்திகள் ஆட்டம் போடுவதும் வழக்கம். இப்போது  தேச விரோதா, மைனாரிட்டி சக்தி ஒன்று சேர்ந்துள்ளன.

மோடியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரு சிஷீனீனீஷீஸீ கிரீமீஸீபீணீ மட்டுமே காங்கிரசைக் கூட இக்குழுமத்தில் ஈர்த்திருக்கிறது. 


துரதிருஷ்டவசமாக கழகங்களிலிருந்து வெளியேறி பலர் இன்று காங்கிரசில் பொறுப்பு வகிப்பது இதற்கு காரணம்.
வேல்முருகன், தனியரசு, போன்றோர் தேச விரோத கும்பலின் றிணீவீபீ றீவீst  ல் இருக்கலாம். 

திருமா ஏற்கெனவே சர்ச்சுகளின் சம்பள பட்டியலில்  உள்ளார். தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா  போன்றோர் மிஷிமிஷி ன் இந்திய ஏஜண்டுகள் இவர்களின் ஹிட் லிஸ்டில் மோடி உள்ளதால், இவர்களின் கைத்தடிகள் வேலைபார்க்கும் மீடியாக்கள் தேசவிரோத குரலாக தமிழகத்திறீ தினசரி ஒலிக்கிறது!


கோவை பா.ஜ.க அலுவலம், தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் ஒரு சாதாரணமான விஷயமா? இது ஏன் டி.வி விவாதங்களில் விவாதிக்கபடவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எந்த மாற்றுக் கட்சி தலைவர்களிடம் டிவி காரர்கள் Òமைக்கைÕÕ நீட்டி கேள்வி கேட்கவில்லை?


எந்தப் பத்திரிகையும், தமிழ் பத்திரிகை நடுவு ந¤லையாளர்கள் உட்பட தலையங்கங்கள் எழுதவில்லை. இதுதான் ஒரு மிகப்பெரிய கான்ஸ்பிரசி & இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யூனிஸ்ட், இந்து விரோதிகளின் கூட்டுச் சதி.


ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் எழுதுகிறீர்கள் என்கிற முணுமுணுப்பும் கேட்கிறது.

தி.மு.கவிற்கு அரசியல் நாகரீகம் என்றும் இருந்ததில்லை. இன்று மற்ற கட்சிகளிடம் அரசியல் நாகரீகம், மனிதாபிமானம் போன்றவை ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்கிற அதீத ஆசையால் தேச விரோதிகளின் சசித் திட்டத்தில் பலியாகி விட்டது.

உதாரணத்திற்கான சொல்கிறேன். கொங்கு ஈஸ்வன், தா.மா.கா வாசன் போன்றோர்கள் கூட கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறார்கள்.


ஆக தமிழகத்தில் தற்போது இரு துருவ அரசியல் வந்து விட்டதை பா.ஜ.க வரவேற்கிறது. 

சபாஷ் இச்சவாலை நெஞ்சு நிமிர்ந்து  பா.ஜ.க ஏற்கிறது. ஒன்றுமே இல்லாத  கட்சிக்காக எல்லாம் வைத்திருப்பவர்கள் ஒன்று கூடி எதிர்க்கிறார்கள் என்று மகிழ்ச்சியான சவால்!


தேசம் முழுவதும் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்

. அது புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் மாதம் ஒரு மாநிலம் என அவரது வெற்றி வேட்டை  தொடர்வதால் ஏற்பட்ட அச்சம்!
தமிழகத்தில் தான் பா.ஜ.க இல்லையே. இப்படித்தானே அவர்கள் டி.விக்களில்  கூறுகிறார்கள். பின் ஏன் இப்படி என்றால் அதுதான் மரண பயம்?


ஒன்று மட்டும் நிச்சயம்! 

அசிங்கமான ஆபாசமான அநியாயமான, ஆபத்தான அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழக அரசியல் கட்சிகளின் சகாப்தம் திரிபுரா, நாகலாந்து போல  எண்ணி 12 மாதத்திற்குள் முடியப் போவது நிச்சயம்!             

Monday, July 24, 2017

இனி இது ‘காவிகளின்’ தேசம்


இந்நாடு என்றைக்கு கருப்புகளின் தேசமாகவோ, சிவப்புகளின் கூடாரமாகவோ இருந்தது?

கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றிய பாரதம் ஆஞ்சனேயனும், அர்ச்சுனனும், பரசுராமனும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும், சிவாஜியும், ராணா பிரதாபனும், தங்கள் தேர்களில் மாளிகையில் பறக்க வைத்த கொடி காவிக் கொடி. அதன் கீழ்தான் அவர்கள் ஆட்சி! அப்போதும் இந்நாடு ‘காவி தேசம்தான்’ இன்றும் ‘காவி தேசம் தான்’. இப்போது புதிதாக நீங்கள் சொல்லிதான் இது காவிதேசமாகிவிடப் போகிறதோ? என நீங்கள் கேட்பதும் புரிகிறது!

 இந்த நாட்டின் ஜனாதிபதி, துணைஜனாதிபதி (ஆர்.எஸ்.எஸ்ல் பயிற்சி எடுத்த திரு. ராம்நாத் கோவிந்த், திரு. வெங்கையா நாயுடு ஆகியோர்) ஆக பதவியேற்றிருப்பர். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ஸின் முழு நேர ஊழியராக (பிரச்சாரக்) இருந்த திரு. அடல்பிஹாரி இந்நாட்டின் முதல் ஆர்.எஸ்.எஸ். பிரதமராக பதவியில் இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரே பிரதமராயிருக்கிறார்.
பாரத நாட்டில் இந்த நூற்றாண்டில் அதிகமாக எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டார்கள் இருவர்தான்.

ஒருவர்ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம். இரண்டாவது பிரதமர் நரேந்திர மோடி. இந்த எதிர்மறை விமர்சனங்களில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்ட மக்கள், மோடிக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதை அமெரிக்காவின் ‘போர்பஸ்’ பத்திரிக்கையும் கடந்த மாத பதிப்பில் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் மோடி அரசாங்கத்தை நாட்டின் 73% சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதோடு உலக நாடுகளில் மக்கள் அதிக அளவில் ஆதரிக்கும் அரசுகளில் இந்தியாவின் மோடி அரசு முதலிடத்தையும் பெற்றுள்ளது!
ஆர்.எஸ்.எஸ். தான் இந்நாட்டை ஆள்கிறது! ஆர்.எஸ்.எஸ். தான் பாஜகவை ஆட்டிப்படைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை உங்கள் எழுத்து உறுதி செய்கிறதே என நீங்கள் கேட்கலாம்!

ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, தேசபக்தி இவைகளை புகட்டுவது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். ஊழியனும் இதை தன் வாழ்நாளில் செயல்படுத்துகிறான்! ஒரு மகனின் / மகளின் வளர்ப்பில் தாயின் குணம் எப்படி வெளிப்படுகிறதோ அது போலத்தான் இதுவும். இதற்குமேல் விளக்கம் வேண்டுபவர்கள் விதண்டாவாதிகள்!
சரி சப்ஜெக்டுக்கு வருவோம்! சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கழித்து நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவியை காங்கிரஸ் கட்சி அல்லாதவர் ஒருவர் அலங்கறித்திருக்கிறார்அதாவது
 காங்கிரஸ் கட்சியின் கடைசி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்றாகி இருக்கிறது!

தற்போது பாஜகவிற்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. இதை வைத்து எப்போதுமே பாஜக வெற்றி பெறும் என்று எப்படி நீங்கள் கூறலாம் என நீங்கள் கேட்பதும் கேட்கிறது!

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை காங்கிரஸ் அல்லாதவர் ஆளமுடியும் என்பது கனவாகவே இருந்தது. பாஜகவின் மீது தொடுக்கப்பட்ட ‘இந்துத்வா’ ‘மதவாத’ குற்றச்சாட்டு காற்று முழுவதும் நிறைந்திருந்தது. எதிர் சித்தாந்தத்துக் காரர்களின் அத்தனை கணக்குகளையும் உடைத்து மோடி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்.

இன்று இந்தியாவின் நிலை என்ன? வேண்டாம், வரக் கூடாது, ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று எதிர்க்கப்பட்ட கட்சி நாட்டின் 31 மாநிலங்களில் 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 31 மாநில சட்டசபைகளில் மொத்தம் 1410 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. நாட்டின் 60 ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி தேய்ந்து 5 மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்கிறது. அதில் கர்னாடகம் மற்றும் பஞ்சாப் மட்டுமே பெரிய மாநிலம். மொத்தம் 786 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதன் கணக்கில் உள்ளனர்.

நாடு முழுவதையும் தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் இன்று 4 மாநில சட்டமன்றங்களில் ஒரு இடம் கூட பெறவில்லை! இதுதான் காலத்தின் கோலம்! இதுதான் இந்துத்வா எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு.

உ.பி. சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்த வெற்றி மக்கள் மன மாற்றத்தின், இதுவரை ஆண்டவர்கள் போலியானவர்கள் என்பதை நிரூபித்ததற்கான ஆதாரம்! அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கை பாஜகவிற்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யஅப்பட்ட மைனாரிட்டிகள் 22 சதம் இருந்தனர். 96 சட்டமன்ற தொகுதிகள் வெற்றியை அவர்களே தீர்மானிப்பார்கள் என்றிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 66 சட்டமன்றம் பாஜக வெற்றி!

இது அடுத்த தலைமுறையை பாஜக ஆளும் என இந்த தலைமுறை செய்த முடிவாகும்!

1984 பொதுத் தேர்தலில், அது இந்திரா காந்தி சுடப்பட்டதற்கு பிறகு நடைபெற்றது, பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கட்சியை கலைத்து விடலாம் என்று கூட சிலர் பேசினார்கள். 1996ல் அமைந்த ஆட்சியை ஆதரிக்க எந்த கட்சியும் தயாரில்லாததால் 13 நாட்களில் ஆட்சி முடிந்தது!

இன்றென்ன பார்லிமெண்ட் நிலை! லோக்சபாவில் பாஜக கூட்டணி 336, காங்கிரஸ் 44. ராஜ்ய சபாவில் பாஜக கூட்டணி 74, இன்னும் இரண்டு ஆண்டில் ராஜ்யசபாவிலும் பாஜக மெஜாரிட்டி பெரும் என்பது அரசியல் மாற்றம் எவ்வளவு வேகமாக அரங்கேறுகிறது என்பதற்கு அத்தாட்சிகள்!

இந்த அரசியல் மாற்றம் நிரந்தரமானதா? எப்போது வேண்டுமானாலும் மக்கள் எதிராக திரும்பலாம் அல்லவா? என்பதும் சிலரின் சந்தேகங்கள்!

நேற்றைக்கு விடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி திரு. பிரனாப் முகர்ஜி தனது டுவிட்டரில் ”இந்தியாவை ஒரு சிறந்த தேசபக்த பிரதமரிடம் விட்டு செல்கிறேன்” என தனது நம்பிக்கையை தெரிவித்திருப்பதுதான் ஒரு பானை சோற்று உதாரணம்!

ஒரு பக்கம் நமது வெளியுறவு உச்சம் பெற்று கொடிகட்டி பறக்கிறது. முன் எப்போதும் இல்லாத இந்தியாவிற்கு உலக நாடுகளின் அங்கீகாரம்! இன்னும் சொல்லப்போனால், இன்று நாம் உலகத் தலைவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்!
சீனா, பாக் உள்ளிட்ட அச்சுறுத்திய அண்டைநாடுகள் கட்டுக்குள் வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட நிலை 60 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்துள்ளது!

நாட்டின் வளர்ச்சி தாரக மந்திரமாகி, அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிக்கான இன்றைய விதை, பண மதிப்பிழப்பு, நாடு முழுதும் ஒரே வரி என்ற சீர்திருத்தம் தூவப்பட்டுள்ளது! இந்த தைரியஅமான செயலை உலகமே பார்த்து வியக்கிறது!

ஏதோ பாஜகவின் வளர்ச்சி, உயர்ச்சி, ஆட்சி பற்றியே எழுதிக் கொண்டு போகிறீர்களே இதற்கும் உங்கள் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகமும் எனக்கு புரிகிறது!

‘இந்துத்வா’ அல்லது ‘காவிமய’ சித்தாந்த குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரன் ‘வரவே முடியாது’ என்றார்கள். வந்துவிட்டோம்! அதுமட்டுமல்ல நாடு முழுதும் இந்திய வரைபடம் அவர்கள் கொடுக்கப்பட்ட கலரின் காவிமயம்! (நமக்கு எல்லா நிறமும் நம் நிறம்தான். காவி மீது ஒரு தனி மரியாதை அவ்வளவுதான்) இந்த மாற்றங்களை விளக்கவே சட்டமன்ற (நாடாளுமன்ற) ஆட்சி புள்ளிவிவரங்கள்!

இனி இதை எப்படி தக்க வைத்துக் கொள்வீர்கள்? என நம் ஆதரவாளர்களும் கேட்பது புரிகிறது!

மக்கள் நல அரசு, மக்கள் நலனோடு நின்று விட்டால், நலன் தொடரலாம்! அரசு தொடருமா என்பது சந்தேகமே! 1996ல் மிகச் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேச சந்தர்லால் பட்வா அரசு கட்சி தொண்டர்கள் மக்களை சந்திக்க மறந்ததால் தோற்றது!
தற்போதைய பாஜக கட்சியும் மக்களும் இரண்டற கலக்க, இடைவிடாது பணிபுரிகிறது!
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துவிட்டோம் என்ற மமதையில் இல்லாமல், தொடர்ந்து வெற்றிபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் மக்களை அமீத்ஷா முதல் அடிமட்ட தொண்டன் வரை சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடந்து வருகிறது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ‘நாட்டுக்காக நம்மை அர்ப்பணிப்போம்’ என முழுநேரம் கொடுத்து இயக்கப்பணி செய்யும் தன்னார்வ தொண்டர்கள் எண்ணிக்கை வெள்ளம் போல உயர்ந்து வருகிறது!

ஒரு மிகச் சிறந்த தொழிலதிபர் தன் தொழிலின் விஸ்தரிப்புக்கு ‘எல்லைகளை நிர்ணயிக்காது’ ‘எல்லையில்லாது’ விஸ்தரிப்பை தொடர்வது போல, கட்சியின் மக்கள் சந்திப்பு மற்றும் விஸ்தரிப்பு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

சித்தாந்தம் என்பது இதயத்தில் இருத்தியது! சிந்தனையில் கலந்தது! அது நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும், அதிலே இரண்டற கலக்கும்! இதற்கு இதை கற்பித்த குரு அருகிலிருக்க வேண்டும், போன் போட்டு சொல்ல வேண்டும், இருவர் இடையேயும், கயிறு போட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியல் செயல் வடிவம் பாஜக என்பது மறைக்க வேண்டிய ரகசியமல்ல! அரசியல் களமில்லா மற்ற களங்களில் இதை கொண்டு சென்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் போல, அரசியல் களத்தில் பாஜக எடுத்துச் செல்கிறது!

இந்த இரண்டின் கூட்டுத் தொகை இப்போது வெற்றிகளை குவித்து வருகிறது!

ஆதலால் இது என்றென்றும் காவிதேசம். என்றாலும்

இனிமேல் இது ‘காவி களின்’ தேசம்!

Friday, July 14, 2017

‘பிக்பாஸ்’ என்னும் ‘பன்றிக் காய்ச்சல்’


கமலஹாசன் என்னும் சினிமா நடிகர் ‘சர்ச்சைக்கு’ பெயர் போனவர்! தான் உலகுக்குத் தெரிய வேண்டும் என்கிற ‘அங்கீகாரப் பசி’ Rewgniion Hunger காரணமாக, ஏதாவது ஒரு கோரிக்கையை முன்நிறுத்தி நிர்வாணமாக ஓடுவது வெளி நாடுகளில் சகஜம்!
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன் இறக்குமதி செய்து டெல்லியில் ‘வெள்ளோட்டம்’ விட்டார். 20 ஏக்கர் ஏழை விவசாயி ‘ஆடிக்கார் அய்யாக்கண்ணு’.
சினிமா வியாபாரம் படுத்துக் கொண்ட பிறகு, சின்னத் திரையில் ‘சின்னத்தனமான’ வியாபாரம் செய்து, தன் வக்கிர எண்ணங்களை வடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
விஜய் டிவி, அதன் தயாரிப்பு நிர்வாகம் கிறிஸ்தவர் கைக்கு போன பிறகு, இன்று மத விரோத, கலாச்சார விரோத, பழக்க வழக்க விரோத, நிகழ்ச்சிகளை தயாரித்து ‘சர்ச்சைக்கிடமான’ நிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது!
வெளி நாடுகளில் பிரபலமாகி, தற்போது இந்தி டிவிக்களில் ‘சக்கை போடு’ போட்டுவரும், 100 நாள் ‘கம்யூன்’ வாழ்க்கை டிவி தொடர்  ‘பிக் பாஸ்’.
சமூகம் ஏற்றுக் கொள்ளாத, புறக்கணித்த, செய்கைகளை பத்துப் பன்னிரண்டு பேர், சேர்ந்து வாழ்வதாக, ஓரிடத்தில் வைத்து, அவர்களது படுக்கை அறையில், கேமராவை நுழைத்து, ‘வக்கிர’ எண்ணத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை, ‘சென்சார்’ இல்லாமல் காட்டும் நிகழ்ச்சிதான் ‘பிக்பாஸ்’.
இந்த தொடர் 100 நாட்கள் நடப்பதாக விளம்பர படுத்தி வசனம் எழுதி, ஒத்திகை பார்த்து (10 நாளிலேயே) ஷூட்டிங் முடித்து, இயல்பாக நடப்பதுபோல ‘பாவ்லா’ காண்பிக்கிறார்கள்.
 பிக்பாஸ்  அது ஒளிபரப்பாகும் அத்தனை காட்சிகளிலும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்க வேண்டும். அதைப் பற்றியே மக்கள் பேச வேண்டும். அதன் டிஆர்பி ரேட்டிங் மேலே மேலே எகிர வேண்டும். விஜய் டிவியின் ‘கஜானா’ நிரம்பி வழிய வேண்டும். மக்களின் ‘ஏமாளித்தனம்’ தொடர்ந்து உயர்ந்து வரவேண்டும். இதுதான் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் உள்நோக்கம்!
எது எப்படியும் தொலையட்டும்! உள்ளே அடிக்கும் ‘கூத்து’ பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது ‘ஒத்திகை பார்த்து மீண்டும் கேமராமுன் அரங்கேறும் கூத்து’.. வெறும் வாயில் அள்ளி அள்ளி அவலைப் போட்டு, ஊர்வாய் மூடாமல் பார்த்துக் கொள்ளும் குழாயடிச் சண்டை, டீக்கடை பெஞ்ச் கூத்து! அதற்கு நேரம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் அதை பார்த்துக் கொள்ளட்டும்!
நமது கவலையெல்லாம், கமலஹாசனின் இரண்டு ‘திருவாய் மலர்ந்து’ அருளல் பற்றியதுதான்! ஒன்று தமிழ்நாட்டில் உணவுக்கு ஏன் மதத்தின் பெயரை வைத்தீர்கள்? சைவ உணவு அசைவ உணவு என்று எப்போது ஏன் எதற்காக பெயரிடப்பட்டது! என்பதுதான்!
இமயமலைக்கு தெற்கே இருப்பது தான் பாரதம் என்பது நமது முன்னோர்கள், நூல்கள், இதிகாசங்களின் அருள்வாக்கு! எம்பெருமான் ஈசனை வணங்குபவர்கள் சைவர்கள். அவர்கள் உண்ணும் உணவு சைவம் என்று சொல்லமுடியாது. காரணம் ஈசனை வணங்குபவர்களில் மாமிசம் உண்பவர்களும் உள்ளனர்!
உணவுப் பழக்கம் ஒரு மனிதனின் மனம், குணத்தை நிர்ணயிக்கும், மாமிச உணவே வீரத்தையும் அதிக சக்தியையும் தரும் என்பவன எல்லாம் நம்பிக்கைகளே! ஆக்ரோஷமான, வலிமையான இரண்டு மிகப் பெரும் காட்டுவிலங்குகள், காண்டாமிருகமும், யானையும் சாகபட்சிணி, கமலஹாசனுக்கு புரியும் பாஷையில் சொன்னால் சைவம்!
உடற்கூறு விஞ்ஞானம் கூட, மனித உடலின் ஜீரண உறுப்புக்கள், மரக்கறி உணவை செரிப்பதற்குண்டான, அமினோஅமிலங்களை மட்டுமே சுரக்கிறது என விளிக்கிறது!
உலகின் மிகப் பெரிய இயக்கம் ‘வேகன்’ 'Vegan' என்னும் மரக்கறி உணவு சாப்பிடுவோர் இயக்கம். இது பிரிட்டனில் 1800களில் தோற்றுவிக்கப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான சைவ உணவாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதற்கு விலக்கல்ல!
தமிழ்நாட்டில் ‘கழகங்களின்’ கை ஓங்குவதற்கு முன்பு வரை சைவ உணவு ஓட்டல்கள் என்ற பெயர் வழக்கில் இல்லை! மரக்கறி உணவு வேண்டுவோருக்கென இருந்தது ‘பிறாமணாள் காபி கிளப்’புக்கள் தான்! அசைவத்துக்கு மதுரை முணியாண்டி விலாஸ். பின்னாளில் திராவிடர் கழகங்களின் பூணூல் அறுப்பு வெறியாட்டத்தினால் இங்கு பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, தமிழ் தேசிய வாதிகள் மற்றும் தனித்தமிழ் கழகக் காவலர்கள் ஆசியுடனே ‘சைவ உணவு ரெஸ்ட்ராண்ட்’கள் அறிமுகம் ஆக ஆரம்பித்தது! என்னுடைய இந்த கருத்து விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியது!
சரி! கமலஹாசனின் குற்றச்சாட்டுக்கு வருவோம்; எப்போதும் ‘மமதையில்’ இருப்பதால், மதம் அவர் மனதை உறுத்துவதால், உணவுப் பழக்கத்தில், வழக்கில் உள்ள ஒரு பெயரை மதத்துக்கானதாக எடுத்துக்கொண்டு, தமிழகம் நினைத்துப் பார்க்காத, ஏன் திராவிட இயக்கத்தினரே யோசிக்காத குற்றச்சாட்டை நம் மீது எய்திருக்கிறார்.
இரண்டாவதாக இப்போது அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு அரசில் ஊழல் மலிந்துவிட்டதாக புலம்புகிறார்! ‘ஜெ’ உயிரோடு இருந்தவரை ‘அரசியல் பற்றி வாய்திறக்காத’ இந்த வாய் சொல்லாளர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இவர் நம்பிய இவரது இஸ்லாமிய நண்பர்கள் தடைபோட்டு வெறுப்பேற்றியபோது மண்டியிட்டு, துவாசெய்து அவர்கள் சொன்ன இடங்களிலெல்லாம் ‘வெட்டி’ படத்தை வெளியிட்டு தன்னை காத்துக் கொண்டவர், ஊழல் பற்றி பேசி அரசியல் களத்தில் நுழைய எத்தனிக்கிறார்!
கமலஹாசனின் அரசியல் ஆசை, பிரவேசம் பற்றி நமக்கு எந்த கருத்துமில்லை! ஆனால் இந்த புது அவதாரம், வேஷம், அரிதாரம் நடிகனுக்கு புதிதில்லையென்றாலும், அரசியல் களத்தின் இன்றைய காலகட்டத்துக்கு புதிது! ரஜினிக்கு போட்டியாக, களத்தில் கமலஹாசன் குதித்தால், அவரது ரசிகன் குதுகலிக்கலாம்! இதில் நமக்கென்ன  இருக்கிறது!
பன்றிக்காய்ச்சல், சாதாரண உடல்வலி, உடல் உஷ்ணத்தோடு தான் ஆரம்பிக்கும்! சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. உயிரைப் போக்கும் எந்த அறிகுறிகளையும் தராது! சரியான மருத்துவரிடம், சரியான நேரத்திற்கு செல்லாவிட்டால், கதை கந்தல்தான்!
விஷவித்துக்களை, தினசரி சாப்பிடும் தானியங்களோடு கலந்துவிடுவது, தேசவிரோத, கலாச்சார விரோத கும்பலுடைய வாடிக்கை! இந்த கும்பல்களின் ஆதிக்கம் பாரதத்தின் பலத் துறைகளிலும் பரவி இருக்கிறது! நரேந்திர மோடி அரசு இந்த ‘வைரஸ்களை’ அழிக்கும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து அழித்து வருகிறது! ஆனால் வைரஸ்களும் தனது பெருக்கத்தை குறைக்க மறுக்கிறது!
இந்த தேசவிரோத கும்பலின் தற்போதைய தமிழ் ஊடகப் பணிமனை விஜய் டிவி. புதிதாக வந்த வாகனத்தின் சீப் மெகானிக், ‘வைரஸ் வியாபாரியாக’ கமலஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்! இந்த வைரஸ்களை பார்த்து பழக்கப்பட்டுப்போன மாற்று மருந்து ஏற்கனவே ‘இந்துத்வா பணிமனையில்’ இருப்பில்(ஸ்டாக்கில்) உள்ளது!
எடுப்போம்! எய்துவோம்! அழிப்போம்! அகற்றுவோம்! 

காப்பாற்றுவோம் தமிழ்நாட்டை!

Monday, January 23, 2017

மெரினா போராட்டக்களத்திலிருந்து எனக்கு வந்த கடிதம்

மெரினா போராட்டக்களத்திலிருந்து இளஞர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில்
உங்கள் பார்வைக்கு........

என் சந்தேகம் உறுதியானது. நான் நேற்றே குறிப்பிட்டிருந்தேன் மாணவர்கள் கூட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுறுவல். Now it's confirmed.  இவர்கள்தான் இப்போது #கடற்கரை_கூட்டத்தை_கலைய_விடாமல்_பாதுகாத்து_வருபவை.

1.  மே 17 விடுதலைப் புலி ஆதரவு இயக்கம்.
2.  மக்கள் கலை இயக்க கழகம் எனப்படும் நக்சல் இயக்கம்.
3.  கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் எனும் அந்நிய தேசத்திடமிருந்து நிதி பெறும் இயக்கம்.
4.  எஸ்.டி.பி.ஐ. எனப்படும் கொலை வெறிக்குத் தயங்காத இஸ்லாமிய ஜிகாதி இயக்கம்.
5.  மக்கள் அதிகாரம் என்னும் கம்யூனிஸ்ட் குரூப்.
6.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு.
7.  பெயர் தெரியாத சில கிறிஸ்தவ அமைப்புகள்.

> இந்த இயக்கங்கள் எதற்கும் பொது ஜன ஆதரவு கிடையாது.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஒப்புக் கொள்ளாதவை, பன்முகத் தன்மைக்கு எதிரானவை.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் அந்நிய நிதியால் நடத்தப்படுபவை, இந்திய இறையாண்மைக்கு எதிரானவை.

இவைகள் இணைந்து...

தானே கூடிய தன்னார்வத் தமிழனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்பும் அவர்களை கலையவிடாமல் தடுப்பது ஏன் ? 

அவசரச் சட்டம் தற்காலிகமானது என பொய் கூறுவானேன்..? 

ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..!  கலைந்து செல்ல அறிவிப்பு விட வேண்டிய நேரம் இது..!

மத்திய மற்றும் மாநில உளவுத்துறை இப்போது செயலில் இறங்கி விட்டதாக தகவல். எந்த அசம்பாவிதமும் இன்றி அப்பாவி மாணவர்களை இந்த தீய அமைப்புகளின் பிடியிலிருந்து அரசு மீட்க வேண்டும். மாணவர்கள் தேசத்தின் வருங்காலம். அவர்கள் எந்த அமைப்பாலும் மூளைச்சலவை செய்யப்படுவது நல்லதல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் இதில் உண்மையான அக்கறை வேண்டும்.

Sunday, January 15, 2017

பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..


தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..
தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்”
மக்களின் மீது அளவற்ற பாசம்
கடவுளர்களின் மீது அதீத பக்தி
இவைகள் மட்டுமே போதுமா ?
ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு?
போதாது என்கிறது இன்றைய சூழ்ச்சி உலகு..
பொன்னார் ஏன் மன்னிப்புகேட்க வேண்டும்?
“பீட்டாவும், திமுகவும், காங்கிரசும், கடைசியாக அதிமுகவும், செய்துவிட்டுபோன “ஜல்லிக்கட்டு கொலைக்கு” பாஜகவும் பொன்னாருமா பொருப்பேற்க வேண்டும்? இது எந்த நாட்டு நியாயம்?
தமிழ் கலாச்சாரம், இந்திய பண்பாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் சில தேசத்துரோகிகளின் “லாபியிங்”கில் வீழ்ந்த சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு,கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசுகள் வைத்த பலஹீனமான வாதத்தின் விளைவு..
இதற்கு பாஜகவும், பொன்னாரும் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் ஜல்லிக்கட்டடை மீட்டெடுக்க நாம் மட்டும்தான் உண்மையான, வீரச்சமர் புரிந்தோம்...என்பதை..
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய கட்சிகள், தங்களை நீதிபதிகளாக பிரகடனம் செய்துகொண்டால்...அதைப்பற்றி கவலைப்படவேண்டியது மக்களே..நாமல்ல!
விரைவில் “ஜல்லிக்கட்டை கொன்ற” தமிழக மா பாவிகள் மக்கள் மன்றத்தில் தூக்கிலடப்படுவார்கள்..
ஜல்லிக்கட்டு காளை புதிய பொலிவோடு தாமரை தடாகத்திலிருந்து சீறீப்பாயும்..

ஸ்டாலினுக்கு ஒரு நடிகையின் கேள்வி?


அப்பாவை கைபிடித்து நடந்தது
தவறில்லை ஸ்டாலின்
அப்பாவை போல இப்போது நடப்பதுதான்
தவறு ஸ்டாலின்
’”ஜல்லிக்கட்டுக்கு மனுகொடுக்கச் சென்ற
தமிழக எம்பிக்களை ஏன் பார்க்கவில்லை மோடி?
நடிகைகளை பார்க்கமட்டும் நேரமிருக்கிரதாம்...
அதிலே கவுதமிக்கி முதலிடமாம்.....”
நக்கலான நயவஞ்சகக் கேள்வி!
நடிகைகள் என்றால் கடைச்சரக்கா?
வியாபார பொருளா?
வெளிச்சத்தில்கூட கௌவுரவம்
திமுகவில் இல்லையா ஸ்டாலின்?
காளைகளையும், கன்னியரையும் விட்டுவிடுங்கள்
என கமலஹாசன் சொல்கிறார்
நடிகர்களை நரேந்திர மோடியுடன்
இணைத்துவிடும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்
இளமையில் போட்ட ஆட்டம்
ஏற்றுக்கொள்ள முடியும் ஸ்டாலின்.
63 இல் ஆடமுடியவில்லை என்பதால்
தப்பாட்டம் ஆடாதீர்கள் ஸ்டாலின்
எங்களுக்கு காவிரி தெரியாது...
ஜல்லிக்கட்டு தெரியாது...
சொல்லிக்கொடுத்தபடி
நடிக்கமட்டும்தான் தெரியும்
அதுவும் கேமராவுக்கு முன்பு..
உங்களைப் போல் “மல்டி ஃபேஸ் “
எங்களுக்கில்லை ஸ்டாலின்
திரிஷாவை வம்புக்கிழுத்தீர்கள்
ஆரியாவை விரட்டியடித்தீர்கள்.
கவுதமியை கலாய்த்தீர்கள்
ரஜ்னிகாந்த்தை ஏகடியம் பேசினிர்கள்
நாங்கள் வாங்கிக்கொடுத்த ஓட்டுக்கு
நன்றியுணர்ச்சி வேண்டாம்
நாவடக்கமாவது வேண்டுமல்லவா? ஸ்டாலின்
இருட்டிலே ஒருமுகம்..
வெளிச்சத்தில் வேறுமுகம்
இது அப்பாவோடு போகட்டும் ஸ்டாலின்
நீங்களும் தொடராதீர்!
நரேந்திர மோடியை தொடாதீர்!
அது உங்களுக்கு நல்லதல்ல! ஸ்டாலின்