Pages

Thursday, March 22, 2012

சிந்துபாத்தும் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையும்

சிந்துபாத்தும் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையும்

தினத்தந்தியில் சிந்துபாத் தொடர் முடிந்தாலும்  முடியும் ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை முடிவுக்கு வராது போலிருக்கிறதே..

அப்படித்தான் நேற்றைய இன்றைய செயல்பாடுகள் தொடர்கின்றன..

இது தமிழர் பிரச்சினை என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு போவதால் ஆந்திராவை தாண்டி டெல்லிவரை இதை என்னவென்று தெரிந்து கொள்ள பலர் தயாரில்லை எனும் சூழல்.

எதோ அமெரிக்க தீமானமாம்…ஜெனீவாவாம்…மனித உறிமை மீரலாம்..இலங்கை மீது கண்டன தீர்மானமாம்…அமெரிக்கா கொண்டுவரும் தீர்மான “ஷ்ரத்துக்களை “ “ மவுன மோகன் சிங் “ படித்துப்பார்க்கவில்லையாம்..ஆனாலும் ஆதரவு தெரிவிக்க தயாராம்..

பிரிட்டனின் “சானல்-4 “ போட்டுக்காட்டிய டி.வி. படங்கள் மனித இனத்தின் ரத்தத்தையே உறைய வைக்கிறது.காங்கிரஸுக்கும்..சோனியாவுக்கும்..மௌனமோகன் சிங்குக்கும் ரத்தம் ஓடுகிறதா என்பது தெரியவில்லை.

தான் கட்டிய கட்டடத்தில் நூலகம் வரவில்லையானால் “தீக்குளிப்பேன் “ என மிரட்டும் கருணாநிதி பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை திருத்தத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தரும் வாசகத்தை சேர்க்க ஏன் தயக்கம் காட்டினார்?..”பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் “ என்ற அவரின் ரெட்டை முகம்தானே இது..

சரி! அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கை மனித உரிமை மீறல்களை கண்டிக்குமா?..இலங்கையின் ”தமிழினக்கொடூரன்”..ராஜபட்சே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவாரா?
மனித உரிமைகளின் சர்வதேச அமைப்பு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்தி..அதை ஐ.நா. ஏற்று ராஜபட்சே உள்ளிட்ட மனித உரிமை மீறல் வாதிகளுக்கு தண்டனை கொடுக்குமா?

எந்த “பிஸ்கோத்தும் “ இல்லை.இல்ங்கை அரசே நடத்தும் விசாரணைக்குத்தான் இவ்வளவு “அலம்பல்களும்”..ஈரான் ஈராக்கில் அமெரிக்கா நடத்தும் மனித உரிமை மீரல்களுக்கு யார் தண்டனை கொடுபார்கள்.? என்பது வேறு விஷயம்..

அப்படியானால் இலங்கையிலுள்ள தமிழர்கள் ராஜபட்சே கையில் இன்றும் ..நாளை வேறு ஒரு பட்சேயோ..நாயகாவிடமோ சிக்கி “பரலோகம் ‘ போகவேண்டியதுதானா?அதுதான் அவர்கள் தலை விதியா?
காங்கிரஸும் சோனியாவும் தங்கள் தலைவர் கொலைக்கு இலங்கை தமிழர்களை மறைமுகமாக பழிவாங்கி வருகிறார்கள்..அதை தன்கையால் செய்ய முடியாது என்பதால் ஏற்கனவே தமிழர்கள் மீது “இனப்பகை “ கொண்ட ராஜ பட்சே மூலமாக செயல் படுத்தி வருகிறார்கள்..

அப்படியானால் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு விடுமா?..பிஜேபி தமிழர் பிரச்சினையை தீர்க்குமா?..ஆம்..தீர்க்கும்..

எப்படி?—
மதுரையில் “டெசோ” மாநாடு தொடங்கி வல்லவன் வாஜ்பாய் தமிழினத்தின் மீது வைத்திருந்த பாசம்—நேசம் காரணமாக..1998—2004 ஆட்சி வரை அவர் ஆட்சி செய்தகாலத்தில் இலங்கை அரசு தமிழர்கள் மீது வன்முறையை நிகழ்த்த அஞ்சியது உலகறிந்த உண்மை.

தமிழக மீனவர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தும் இதே சிங்கள ராணுவம்..வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் தமிழக மீனவர்கள் மீது கைவைக்க நடுக்கியது என்பதும் வரலாற்று உண்மை.இதனால்
இலங்கை பிரச்சினை தொடர்ந்தால்..அதை அரசியலாக்கி தாங்களும் ஆட்சியில் தொடரலாம் என்ற திராவிட கட்சிகள் வாஜ்பாய் ஆட்சியில் வேறு “வேலை பார்க்க வேண்டியிருந்தது..

இலங்கை தமிழர்கள் அனைவரும் இந்துக்கள்..இதை இந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதியாக எடுத்துச் சென்றால்..இந்தியா முழுதும் வெகுண்டெழும்..உலக இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஆதரிப்பர்.
மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதை மலேசிய இந்துக்கள் பிரச்சினையாக எடுத்ததால்தான்..மலேசிய முஸ்லீம் அரசு பணிந்தது.அதே போல சிங்கள இலங்கை அர்சும் பணிய நாம் ஒன்று சேர்வோம்..கழங்களின் “போலி திராவிட தமிழ்” முகமூடியை கிழிப்போம்.

இந்தியாவில் 75 கோடி “குபேரர்கள் “—திட்டக்கமிஷன் அறிக்கை




உனக்கு என்ன “மரை கழன்று விட்டதா?’ என சிரிக்காதீர்கள்..மர கழன்றது உண்மைதான்..ஆனால் எனக்கல்ல..திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிக் அலுவாலியாவிற்கும் அவரது தலைவர் “மண்” மோகன் சிங்கிற்கும்தான்.

இந்தியா ஏழைநாடு இல்லைதான்..பண்பாட்டில்..கலாச்சாரத்தில்..ஆன்மீகத்தில்..விஞ்ஞானத்தில் இந்தியா பணக்கார நாடுதான்.ஆனால் ஏழைகளே இல்லாத நாடில்லையே..
“மண்”மோகன் சிங் ஆட்சியில் மண்மூடிப்போன பொருளாதாரம் 65 சத இந்திய மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் கொண்டுபோனது…அந்த வறுமைக்கோடு எங்கே போடப்பட்டது தெரியுமா?
ஒரு நாளைக்கு நகர்வாசி ரூ.28 ம்..கிராம வாசி ரூ.22. ம் சம்பாதித்தால் அவன் வறுமை கோட்டிற்கு மேலாம்..இதுதான் “மண்” மோகன் சிங்கின் புதிய பொருளாதார கொள்கை.
நாள் பூரா 4 டீ சாப்பிட்டால் ( ஒரு டீ ரூ.7/=) பசி தீர்ந்துவிடுமாம்..சோனியவுக்கும் ராகுலுக்கும்..திக்விஜய் சிங்குக்கும்..கபில் சிபலுக்கும்..ப.சிதம்பரத்திற்கும் ஒரு நாளைக்கு ரூ 28/= கொடுத்துப்பார்ப்போம்..ஒரு வாரத்தில் இல்லை இல்லை..4 நாளில் செத்துப்போவார்கள்..இந்த ரூபாய்க்கு சாப்பிட்டால் பல் இடுக்கில்தான் போய் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வறுமையை குறை என்கிறோம் ..காங்கிரஸோ வறுமை கோட்டை குறைக்கிறேன் என்கிறது.
ஹய்யாம்..ஜாலி..ஜாலி…காங்கிரஸ் கணக்குப்படி நம்நாட்டில் 75 கோடி பேர் பணக்காரகள்..
அதான் தினசரி கூலி ரூபாய் 22 சம்பாதிப்பவர்கள்..

Friday, March 9, 2012

(அரசின்).. வறுமையை ஒழிக்க--- ”குடி”



கலால் வரித்துறையினர் “திடீர்..திடீரென” ரெயிட்..போகின்றனர்..எங்கே?--”
டாஸ்மாக்” கடைகளுக்கு...ஏன்?--போலிசரக்கு விற்கிறார்களா..என சோதிக்க..
இந்த சோதனைகளுக்கு காரணம் என்ன?-
-”சரக்கு “ விற்பனை குறைந்து வருவதால்..

கலக்டர் ஆபீஸ்களில் திடீர் திடீர் என கூட்டங்கள்..
கலால்துறை...ஓட்டல்..கிளப் வாலாக்கள்..கூடிக்கூடி பேச்சு..
ஏதாவது “காமன் வெல்த் கேம்ஸ்”க்கான முன்னோட்டமா?..இல்லை..பின்னர் வேரென்ன..?..
ஓட்டல்..கிளப்....பார்களில் “சரக்கு “ விற்பனையை அதிகப்படுத்த..அரசின் அதி  அவசர ஆலோசனைக் கூட்டங்கள்தான் இவை..

இந்த அக்கறையை மின்சார உற்பத்தியில் காண்பித்தால் மின்வெட்டு தீருமல்லவா?--தொழில் வளம் பெருகுமல்லவா?--
காசு பெருத்தால் டாஸ்மாக் கொழிக்குமல்லவா...
இதுகூட தெரியவில்லையே இந்த அரசுக்கு..

பிளஸ் 2 தேர்வும்..மூன்றாம் உலக சண்டையும்



கடந்த புதன் கிழமை முதல் தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின..”வரலாறு காணாத “ நியூஸ் கவரேஜ்”  இதற்கு..

1.பரிட்சை எழுதும்போது செய்யவேண்டியதென்ன?---மூத்த ஆசிரியை “டிப்ஸ்”

2. ஹாலுக்குள் நுழைந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?--ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் குறிப்புக்கள்..

3. பரிசை நாட்களில் உட்கொள்ளவேண்டிய உணவுப்பழக்கங்கள்..என்ன?--டயட்
டீஷியனின் அறிவுரை..

4. இன்னும் மாணவர்களை ஊக்கப்படுத்த “அள்ளி இரைக்கப்படும்”--குழப்பக் கரைசல்கள்--

5. மின்வெட்டால் ஏற்பட்ட பாதிப்புக்களை போக்க எத்தனை ஜெனரேட்டர்கள்--எத்தனை செண்டர்கள்--எத்தனை ஆசிரியர்கள்--காப்பி அடித்தால் பிடிக்க பறக்கும் படைகள்..என ஏராளமான “புள்ளி விவர அவலங்கள்”

6. அரசு அலுவலர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை.--.”.பிளஸ் 2 அப்பாக்கள்”--..20 நாட்கள் லீவு போட்டுவிட்டு தன் குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்யும் “திரைமறைவு  காட்சிகள்”..

”தேர்வுகள் “ --ஏன் “டென்ஷனை “ உண்டாக்கும் “உணர்வுகளாக” மாற்றப்பட்டு வருகின்றன ?
“செய்திகள்” என்ற பெயரில் “மீடியாக்கள்” ஏன் அவசியமற்ற புள்ளிவிவரங்களை “கடித்து துப்புகின்றன” ?

எப்போதும் நடக்கும் சாதாரண நடப்புக்களை..செய்திகளாக்கி இப்படி “இறக்கை கட்டி “ பறக்க விட வேண்டுமா?..
இப்போது என்ன “ மூன்றாம் உலக சண்டையா நடக்கிறது” ?