Pages

Tuesday, October 29, 2013

பாட்னா குண்டு வெடிப்பில் மக்கள் உயிரைகாத்த மோடியின் சமயோஜிதம்

தன்னுடைய ஊருக்கு வந்த வேற்று மாநில முதல்வர் நரேந்திர மோடியை வரவேற்றால் “ மதவாதம் தொற்றிக்கொள்ளும்” என நித்தீஷ் குமார் பயந்து ஊரைவிட்டு ஓடியதை புரிந்து கொள்ள முடிகிறது..பிஹாரின் 20 சத முஸ்லீம் ஓட்டை அவர் நம்பி இருப்பதால் வந்த பயம் இது..
ஆனால் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வளையத்தின் இசட் பிளஸ்--பாதுகாப்பு  பிரிவில் இருக்கும் நரேந்திர மோடிக்கும் அவரது பேச்சு கேட்க வரும் மக்களுக்கும் பாதுகாப்பு மறுத்து ஊரைவிட்டு ஓடிய நித்தீஷ்குமார் போன்ற கோழைகளை பார்க்கமுடியுமா?
10 லட்சம் பேர் கலந்துகொண்ட பாட்னாவின் காந்திமைதான கூட்டத்தின் 8 வாயிலகளிலும், ஒன்றில்கூட “மெட்டல் டிடக்டர்”  சோதனை இல்லை..மேடையை சுற்றிலும், மைதானத்தை சுற்றிலும், “பாம் ஸ்குவாட்” இல்லை..மோப்ப நாய் இல்லை.. போதிய எண்ணிக்கையில் போலீஸ் காரகள்கூட இல்லை..வெடிக்காத குண்டுகளை மக்களே கண்டுபிடித்தபின்பும், அதை “டிஃப்யூஸ்” செய்ய போலீஸ்காரகள் வரவில்லை..ஆக மொத்தம் அரசும் போலீசும் கண்டுகொள்ளாத ஒரு மாபெரும் பேரணி..பாதுகாப்பின்றி நடை பெற்றுள்ளது.
எப்படியாவது..யாராவது,,,ஒருவெடிகுண்டாவது வெடித்துச் சிதறி.. மோடிக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதா?அவரை அரசியல் ரீதியாக வீழ்த்தமுடியாததால், குண்டின் மூலமாகவாவது வீழ்த்திவிடலாம்..என்ற நப்பாசையில் நடந்த சம்பவங்களாகவே இவைகள் தெரிகிறது..
இதைவிட கேவலம், காங்கிரஸ்காரர்களின் பேச்சும் நடந்துகொண்ட விதமும்தான்..
“இந்த குண்டுவெடிப்பினால், பா.ஜ.க விற்கு மாபெரும் லாபம்” ...என கோமாளி திக்விஜை சிங் “டுவீட்” செய்ததும்..”குண்டு வெடித்த.. இடமும், நேரமும், பாஜகவிற்கு சாதகம்” என ஐக்கிய ஜனதா தளத்தில் பொதுச்செயலாளர் சபீர் அலி பேட்டி கொடுத்ததும், “மோடியின் பேச்சால்தான், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என் காங்கிரசின் பி.சி.சாக்கோ உளரியதும் கேவலத்திலும், கேவலமானது..இதைவிட கேவலம், நம்மூர் பீட்டர் அல்பொன்ஸ் “ குண்டு வெடிக்கும் போது மோடி ஏன் பேசிக்கொண்டிருந்தார்” என்பதும்தான்..
உயிர்ப்பலிகளில் அரசியல் லாபம் பார்க்கும் கேவலமான எண்ணம் காங்கிரசுக்கு மட்டுமே உண்டு..அதனால்தான், தன் பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் சிந்தி ராகுல் அதை ஓட்டாக மாற்ற முயன்றதை நாடும் நாமும் சில நாட்களுக்கு முன் பார்த்தோம்..
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மொகல் சாராய் ரயில் நிலயத்தில் கொல்லப்பட்டதையும், டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிரையில் ஷேக் அப்துல்லாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டதையும், தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, என நூற்றுக்கணக்கான பாஜக, இந்து இயக்க சகோதரர்கள் கொல்லப்பட்டதையும், ராகுல் போல நீலிக்கண்ணீர் வடித்து பாஜக என்றும் ஓட்டாக மாற்ற முயற்சித்தது கிடையாது..
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அன்று நானும் மறைந்த அகில இந்திய தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி அவர்களும், தென்கனிகோட்டையில் பிரச்சாரம் முடித்து மதுரை திரும்பிகொண்டிருந்தோம்...சேலம் வந்தபோது ராஜீவின் கொலை செய்தி கிடைத்தது..பத்திரிக்கையாளர் ஒருவர் “ராஜீவின் மரணம் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக லாபம்தானே?” எனறபோது கொதிதெழுந்த ஜானாஜி..”ஒருவரின் உயிரிழப்பில் அரசியல் லாபம் தேடும் கேவலமான எண்ணம் பாஜகவிற்கு கிடையாது” என்றார்..இதுதான் பிஜேபி..
சரி..சப்ஜெட்டுக்கு வருகிறேன்...பாட்னாவில் முதல் குண்டு வெடித்தபோதே..மோடி பாட்னா விமான நிலையம் வந்து விட்டார்...அவரது பாதுகாப்பு அதிகாரிகள்(குஜராத்)  மீட்டிங்கை கேன்சல் செய்ய அறிவுறுத்தியும், மோடி அப்படி செய்யவில்லை...மேடையில் பேசிய எந்த தலைவரும் குண்டு வெடிப்பை வெளியடவில்லை..பேச்சை நிறுத்தவில்லை..கொஞ்சம்கூட பதட்டத்தை காண்பிக்கவில்லை..
அவ்வாறு செய்திருந்தால், அடுத்தடுத்து வெடித்த குண்டுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டிருப்பர்...பயத்தினால் மக்கள் முண்டி அடித்து ஓடி, ”ஜன நெரிசல் “ ஏற்பட்டு அதிலும் ஆயிரக்கணக்கன அப்பாவிகள் மரணமடைந்திருப்பர்..”அதிமேதாவி பீட்டர் அல்போன்ஸ்சே “ புரிந்து கொள்ளுங்கள்.
மோடியின் தைரியம்..சமயோஜிதத்தினால், அத்தனை பேரும் காப்பாற்றப்பட்டனர்..”எல்லோரும் உடனடியாக  நேராக பத்திரமாக வீடு போய் சேருங்கள்” என்பதைதவிர மோடி வேறு ஏதும் சொல்ல வில்லை..
யார் ராஜதந்திரி...யார் மக்கள் விசுவாசி...யார் சிறந்த நிர்வாகி...யோசியுங்கள்...பயத்
தை விதைத்து, மதத்தை பிரித்து, மக்களை பலிகொள்ளும் காங்கிரசா?..இம்மாதிரி பயங்கரமான நிகழ்ச்சியிலும், சிறந்த முறையில் மக்களை வழிநடத்தி அத்தனை பேரையும் காத்த மோடியா?---

தீர்ப்பு தெரிந்ததுதானே..

Monday, October 28, 2013

”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்

ப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொடையாளிகள்..நிறைந்த இனம்..

எல்லாவற்றிக்கும் விதிவிலக்கு உண்டல்லவா?...அந்த விலக்கு இந்த உலக்கை ப.சிதம்பரம்தான்..

“அவா” பற்றிய அவருடைய பேச்சு அருவருக்கத்தக்கது..ஒருவேளை “சரக்கடித்துவிட்டு” பேசியிருப்பாரோ?—அவர் “சரக்குள்ள” மனிதர் என்பார்களே?—சரக்கு “தீர்ந்ததால்” உளறினாரோ?..

இப்படி எழுதுவதற்கு எனக்கு கூச்சமாக உள்ளது…அது என் எழுத்தின் “அர்த்தம் பற்றியல்ல..என் எழுத்தின் காரணகர்த்தாவான “அந்த அனர்த்தத்தை” பற்றியது....

சிதம்பரத்திற்கு அப்படி என்ன “அவா” மீது ஆத்திரம்--…நிறவேறாத அவரது “அவா”க்களால் கஷ்ட்டப்படும் சிதம்பரம் “உவ்வ்வ்வ்வே” செய்யுமளவு பேசுவது அவரது “அவா”வோ

பிரதமராகும் “அவா” சிதம்பரத்துக்கு உண்டு—காங்கிரஸ்
தலைவராகும் “அவா”வும் சிதம்பரத்துக்கு உண்டு..
இவை புரிந்து கொள்ளமுடிந்த”அவா”க்கள்
காங்கிரசில் நேரு குடும்பத்தை சேர்ந்த “அவா”ளுக்குத்தானே..பிரமர் பதவி…இது தெரிந்தும் சிதம்பரம்..தன் “அவா”வை மாற்றிக்கொள்ளாமல், ஏன் பார்த்த”அவா”ளை..கேட்ட “அவா”ளை எல்லாம் கடிக்கிறார்..அவர் கடிக்க வேண்டியது நேரு குடும்ப “அவா”ளை.—(அதை செய்தால் இவர் பல் மட்டுமல்ல இவரே..தெரித்துப் போவார்.)..

அதை விட்டு விட்டு தினமணியையும், தினமலரையும், கடிப்பது ஏன்?
“அவா” வெகுண்டு எழுந்தால்..”உயரே” போய்விடுவீர்…..புரிந்ததா..சிதம்பரம்?

-- ஆர்.எஸ்.எஸ்.ஐ அவதூறாக பேசி கோர்ட்டை அவமதித்த ..ப.சிதம்பரத்தை கைது செய்

இளவரசர் ராகுல் காந்தியின் தவறான  பேச்சால், கொள்கையால், செய்கையால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமானது.

ஆனாலும்..
அந்த தொடரும் உளறல்களால், நாடு நன்மை அடையப்போகிறது இன்று..

ஆம்..முசாபர்பூரில் அவரது "ஐ.எஸ்.ஐ." உளறல்கள், ராஜஸ்தானில், அவரது, பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் போல நானும் கொல்லப்படுவேன் " என்ற ஒப்பாரிகள், இன்று மக்களிடையே அவரது "அசல் முகத்தை காட்டி". நரேந்திர மோடிக்கு  மேலும் ஆதரவை கூட்டி வருகிறது..

அதே மாதிரி இன்று ராகுலின் ஒப்பாரி கூட்டத்தில்  மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார்..அவர்தான் செட்டிநாட்டு மக்களின் பெயரை கெடுக்க வந்த ப.சிதம்பரம் அவர்கள்.

வல்லபாய் பட்டேலும் சரி, கபூர் கமிஷனும் சரி, பிற்காலத்தில் ஜவர்ஹர்லால் நேருவும் சரி, காந்திகொலைக்கும் ஆர்.எஸ். எசுக்கும்,எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளித்த பின்பும், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதை உறுதி செய்தபின்பும், "சிறுமதி " படைத்த ப.சிதம்பரம் மீண்டும் ஆர்.எஸ்.எச்சை,, தொடர்பு படுத்தி பேசுவது, சட்டவிரோதம், மட்டுமல்ல..கோர்ட்டை அவமதித்ததும் ஆகும்...

எனவே அவர்மீது "கோர்ட் அவமதிப்பு வழக்கு மற்றும் மான நஷ்ட்ட வழக்கும் " தொடரவேண்டும்..

அவரது சிந்தனைகள் (அப்படி ஒன்று இருந்தால் ) செத்துப்போய்விட்டது...மண்டை கனத்துப்போய் விட்டத்து..மனம் மற(ந )த்துப்போய் விட்டது....அதனால்தான் திருச்சி பொது கூட்டத்தில் வல்லவன் வாஜ்பாயை அமரராக்கி ஆனந்தம் கண்டிருக்கிறார்..

யார் இருக்கிறார்...இல்லை..என்பதைக்
கூட நினைவில் வைக்க முடியாதவர் இந்தியாவின் "பொக்கிஷ" மந்திரி..நேற்று திருச்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் "அமரரான வாஜ்பாயை பற்றி பேசுவது சரியாகாது" என "தவறாக " பேசியுள்ளார்..மேடையில் இருந்த நம் முன்னாள் சகா ..இந்நாள் காங்கிரஸ் ..திருநாவுக்கரசரும், சிதம்பரத்தின் மைந்தர் கார்த்தியும், தலையில் கைவைத்துகொண்டனராம்..நாட்டு மக்களும், ப.சிதம்பரத்தின் இந்த பயித்தியக்காரத்தனமான பேச்சால், தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கின்றனர்..
நேற்று திருச்சி கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஐ வரிக்கு வரி திட்டி தீர்த்த இதே சிதம்பரம்தான், 2001 ஆம் ஆண்டு இரும்பு மனிதர் அத்வானியின் வீட்டுக்கு சென்று என்னை பாஜகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..என மன்றாடியதும், இளகிப்போன அத்வானி அங்கிருந்து இதே திருச்சியில் இருந்த இல.கணேசனிடம் கருத்து கேட்டதும், தலைவனின் கருத்துக்கு முதன்முறையாக எதிர்கருத்து தெரிவித்து "இந்த புல்லுருவியை சேர்க்கவேண்டாம்" என தெரிவித்ததும், அப்படி விரட்டி விடப்பட்டவர்தான் இந்த ப.சிதம்பரம் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இந்திய அரசியல் இப்போது ஒரு புதிய பரிணாமத்தில் செல்கிறது..கடந்த 10 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரத்தால்" கடுமையாக விமர்சிக்கப்பட்டு, மிகப்பெரும்புகழ்  பெற்ற ஒரு "பாசிட்டிவ் மனிதர்" வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடி ..

அதேபோல் கடந்த 88 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரங்களை" கண்டு கவலைப்படாத.. மிகவேகமாக வளர்ந்து ..உயர்ந்த "பாசிட்டிவ்" இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.மாளிகைகளை உருவாக்கும் மகாபாரத "மயன்" போல மனிதர்களை உருவாக்கி வருகிறது..

ஆக பதவியை விட்டு ஆட்சியை விட்டு நாட்டை விட்டு போகின்ற காலத்தில், காங்கிரசும், ராகுலும், சிதம்பரமும், தங்கள் தவாறன பேச்சினால், மோடியையும், ஆர். எஸ்,எஸ்.ஐயும் வளர்த்துவிட்டு செல்கின்றனர்..தவறிலும் ஒரு நல்லது செய்வதால், நரகத்தில் அவர்கள் கழிக்கும் காலத்தை குறைத்து விடுமாறு  எல்லாம் வல்ல எமதர்ம ராஜனை பிராத்திக்கிறேன்

Monday, October 14, 2013

சிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிகை உயர்வுக்கு யார் காரணம்?

கடந்தவாரம், புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் என்னோடு கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் --ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..டாக்டர்.ஜஹருல்லா..இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் தொகையைவிட சிறைச்சாலைகளில் அவர்களின் சதவீதம் அதிக மாக உள்ளது..என்றார்..வேண்டுமென்றே அரசு பொய்வழக்கு போட்டு முஸ்லீம் இளைஞர்களை சிறையில் அடைப்பதாக குற்றஞ்சாட்டினார்..
நான் அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான்...மேற்குவங்க மக்கள் தொகையில் முஸ்லீகள் 25 சதவீதம் உள்ளார்கள்..மேற்கு வங்க சிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 46 சதவீதம்..மேற்கு வங்கத்தை இதுவரை 35 ஆண்டுகாலமாக ஆண்டது இவர்களுடன் நெருக்கமாக்--ஒட்டி உறவாடிய இடது சாரி--வலதுசாரி கம்யூனிஸ்ட்கள்..இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா சிறைச்சாலைகளில் முஸ்லீம் எண்ணிகையை பெருக்கியது யார் .?
உ.பி.யின் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 20 சதவீதம்..உத்திரப்பிரதேச சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் 27 சதவீதம்..உ.பி.யை அப்போது காங்கிரசும், இப்போது முஸ்லீம்களின் பெருவாரியான ஆதரவோடு ஆண்டுகொண்டிருப்பது முலயாம் சிங்கின் சமாஜவாடி கட்சியும் தான்...இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா..முஸ்லீம்களின் இந்த நிலக்கு யார் காரணம்?
மராட்டிய மக்கள் தொகையில் 10 சதவீதம் முஸ்லீம்கள்..சிறைச்சாலைகளில் அவர்களின் தொகை 32 சதவீதம்..மராட்டியத்தை அன்றும் இன்றும் யார் ஆளுகிறார்கள்..உங்களின் தயவோடு..ஆதரவோடு காங்கிரசும், சர்த்பவார் கட்சியும் ஆளுகிறார்கள்..ஜவஹருல்லாவிற்கு சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்..
நீங்கள் ஆளும் குஜராத் பற்றி மட்டும் நீகள் ஏன் சொல்ல வில்லை  என்று நீங்கள் கேட்டு விடக்கூடாதல்லவா? சொல்கிறேன் கேளுங்கள்..குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 9 சதவீதம்..
.குஜராத் சிறைச்சலைகளில் அவர்கள் 18 சதவீதம்.

.இப்போது சொல்லுங்கள் எஸ்.ஆர்.சேகர்..முஸ்லீம்கள் மீது மோடி அரசு பொய் வழக்கு போட்டதால்தானே எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது..என்று நீங்கள் கேட்க நினைப்பது என் காதில் விழுகிறது..
குஜராத்தில் மோடிக்கு இது 4 வது முறை..பாஜகவிற்கு 5 வது முறை..1995 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இதே சதவீதம் தான் அங்கு தொடர்கிறது என்ற உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்..
பாகிஸ்தான் எல்லை பகுதியில் குஜராத் இருப்பதால், கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை காலம் காலமாக முஸ்லீம்கள் செய்து வருவது சரித்திர பூர்வமான உண்மை...அதனால் வந்த உயர்வு இது..
இப்போது மோடி காரணம் என்று நீங்கள் கூறினால், மோடிக்கு முன் யார் காரணம்?
ஜவஹருல்லா பதில் சொல்வாரா? .

காங்கிரசின் “பலவேஷம்”

1853 ஆம் ஆண்டு தொடங்கிய ராமஜன்மபூமி பிரச்சனை---1857 ஆம் ஆண்டு “பிரச்சனைக்குறிய பகுதிகளை “ வேலிபோட்டு பிரித்தது...பிரிட்டிஷ் அரசு..பிறகு நாட்டையே பிரித்தது..அதுவேறு விஷயம்..

1949 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஆட்சியில் அதாவது காங்கிரஸ் ஆட்சியில், ராமர் கோயிலுக்குள் இந்துக்கள் ராமபிரானின் விக்கிரஹத்தை கொண்டுபோய் வைத்தனர்..பிரச்சனை வெடித்தது..நேருவின் காங்கிரஸ் அரசு, இந்து ,முஸ்லீம் இரண்டு பக்கத்தையும் கோர்ட்டுக்கு போகச்சொல்லி, கோயிலுக்கு பூட்டு போட்டது..
ஆக 90 ஆண்டுகாலமாக பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் ராமர் விக்கிரத்தை வைக்க ஆதரவு தந்தது பண்டித நேருவின் அரசு..
அதற்குப்பிர்கு பல்வேறு போராட்டங்கள்...1984 க்கு பிறகே விஷ்வஹிந்து பரிஷத் களத்தில் இரங்குகிறது..
1986 இல் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் அரசு கோயிலின் பூட்டை திறந்து வழிபாட்டுக்கு வழிவிட்டது.--.ஷாபானு என்கிற முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக ஜீவனாம்சம் கொடுக்கவேண்டிய தீர்ப்பை மாற்றியெழுத, இந்திய தண்டனை சட்டத்தை மாற்றி எழுதியதற்கு பரிகாரமாக கோயிலை திறந்துவிட்டார் ராஜீவ்காந்தி.
மறுபடியும் பற்பலபோராட்டங்கள்.....1992 டிசம்பர் 6 ந்தேதி, 1.5 லட்சம் கரசேவகர்கள் ஒரே நேரத்தில் தொட்டதால், பாழடைந்த அந்த பழைய கட்டிடம் இடிந்து வீழ்ந்தது சரித்திரம்...அது தரைமட்டமானதை உறுதி செய்து கொண்ட பிறகே..அங்கு ராணுவத்தை அனுப்பி தன் ”ஸ்ரீ ராமர் பக்தியை” காட்டிக்கொண்டார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்..அப்போது உள்துறை மந்திரியாக இருந்த எஸ்.பி.சவாணிடம்  இது பற்றி கேட்ட போது பாப்ரி மஜ்ஜித் கட்டடம் இடிக்கப்பட்டதே தனக்குத்தெரியாது என்றார்...
காங்கிரசுடன் முஸ்லீம் லீக்கும் சரி, மற்ர முஸ்லீம் இயக்ககங்களும் சரி, இஸ்லாமிய வாக்களார்களும் சரி, இக்காலகட்டங்களில், நட்பாகவும் விசுவாசமாக வும் இருந்துள்ளார்கள் என்பது நன்றாக தெரிந்த ஜவஹருல்லா..பி.ஜே.பி.யை குற்றஞ்சாட்டுவது என்ன நியாயம் என்பது புரிய வில்லை....

பேப்பரை கிழித்து சட்டத்தை காப்பாற்றிய பலவான் --ராகுல் காந்தி



நமக்கெல்லாம் தெரியும்--உழல் வாதிகளை காப்பாற்றும் அவசர சட்டத்தை ராகுல்காந்தி எப்படி தாக்கல் நிலையிலேயே தாக்கி அழித்தார் என்பது....

"பேப்பரை கிழிப்பேன் " என்கிற ஒரே ஒரு வாசகமும், "நான் சென்ஸ்" என்கிற அவரது ஒரே ஒரு வார்த்தையும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபை, கூடி விவாதித்து, எடுத்த, முடிவை மாற்றக்கூடிய வல்லமை பெற்று இருக்கிறது என்றால், ராகுல் காந்தி ஒரு " ராம்போ" தானே..

இதே மாதிரி ஒருசில பேப்பரை கிழித்து போட்டால், 2 ஜி முடிந்தது--ஆதர்ஸ் ஒழிந்தது--நிலக்கரி ஊழல்  போயே .."போயிந்தி"--அல்லவா..

சி.பி.ஐ டைரக்டர் சும்மா உட்கார்ந்திருப்பார்..சி.பி.ஐ. கோர்ட்டுகள் விடுமுறையில் பூட்டியிருக்கும்..சுப்ரீம் கோர்ட்டுக்கு ஊழல்களில் தலையிட்டு தீர்ப்புவ்ழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...கஷ்ட்டப்பட்
டு பிரதமர் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம், ராகுல், ஒரேநாளில் முடித்து விட்டுரிப்பார் அல்லவா?
ராகுல்ஜி உங்களுடைய இவ்வளவு பெரிய பலத்தை இவ்வளவு நாள்--வருடங்கள்-- ஏன் மூடி மரைத்திர்கள்?--உங்களிடம் ஒரே ஒரு கேள்வி ராகுல்..இவ்வளவு நாள்  இந்த பலத்தை எங்கு மறைத்தி  வைத்திருந்திர்கள்,என்ற ரகசியத்தை சொல்விர்களா...ராகுல்ஜி..

இன்னொரு உபகெள்வி ராகுல்ஜி ...இந்த பலத்தை மன்மோகன் சிங்கை மிரட்ட மட்டும்தான் பயன் படுத்துவிர்களா?---அல்லது உங்கள் மச்சான் ராபர்ட் வதேராவுக்கு, எதிராகவும் பயன்படுத்தும் "தகிரியம் "--உங்களுக்கு உண்டா ராகுல்ஜி..

ஏதாவது தப்பா கேட்டிருந்தா...வருத்தப்படாதீங்
க ராகுல்ஜி..இன்னும் 6 மாதத்தில் நீங்கள் பிரதமர் ஆகிவிடுவீங்க ராகுல்ஜி...இத்தாலிக்கா?--இல்ல..வேறு வெளினாட்டுக்கா..என்பதை அப்புறம் சொல்றேன் ராகுல்ஜி...

Saturday, October 12, 2013

காற்றில் பறக்கும் இந்தியாவின் மானமும், ரூபாய் மதிப்பும்

ஆகஸ்ட் 2013 இல் முடிந்த 20 மாதத்துக்குள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.45 லிருந்து ரூ.70 ஆனது..இது வரலாறு காணாத வீழ்ச்சி..
கொந்தளிக்கும் நிலையிலும், “அமைதி காக்கவும், பதட்டப்படாதீர்கள்”--என பதபதைக்காமல் கூறியவர் நமது நிதி மந்திரி--ப.சிதம்பரம் அவர்கள்.
இந்த கஷ்ட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை வேறு ஏற்றினார்கள் என்பது வேறு விஷ்யம்.
இந்நிலைக்கு காரணம் என்ன? இதை சீர் செய்ய முடியுமா/--எப்படி என்பதற்கு சிறந்த பொருளாதார மேதையும் சிதனையாளருமான..ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அவர்கள்,,தினமணியில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..

இன்றைய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்மற்றும் தங்கம்.. இறக்குமதிதான்..அதுமட்டுமல்ல நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் ஒரு காரணம்..இவை பொருளாதார புலிகள் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தரப்பில் வைக்கப்படும் வாதம்..

உண்மைக்காரணம் என்ன?

நடப்புக்கணக்கு பற்றாக்குறை இன்ரைக்கு நேற்றைக்கு உண்டான பிரச்சினை அல்ல..ஆட்சியை விடும் போது 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு ரூ.2200 கோடி உபரி வைத்துவிட்டு போனது..அதற்கு பிரகு தொடர்ந்து இறங்கு முகம்தான்..217 கோடியில் ஆரம்பித்த பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் பெருகி 33900 கோடியனது..இந்த பற்றாக்குறையும் காரணமும் திடீரென முளைத்தல்ல..

இறக்குமதி வாயிலை எந்த கட்டுப்பாடுமில்லாமல் திறந்து விட்டு கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டில் தயாரிக்கும், தயாரிக்க முடிந்த மூலதபொருட்களை கட்டுக்கோப்பில்லாமல் இறக்குமதி செய்ததன் விளைவு..தொழில் உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சி--ஆனால் இறக்குமதி பொருட்கள் 79 சதவீதம் வளர்ச்சி..ஆபரேஷன் சக்சஸ்..பேஷண்ட் மரணம்..இது பெரிய முரண்பாடு..மூலதனபொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தாதும், ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்..இது மரைக்கப்படுகிறது..

அரசின் மோசமான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடின்மை காரண்மாக வருவாயைவிட செலவு மும்மடங்கு அதிகமானது..கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஆளில்லாத காரணத்தால், ஐ.மூ.கூ அரசின் முதல் ஐந்தாண்டை விட இரண்டாவது ஐந்தாண்டு,செலவினம் மும்மடங்கு அதிகமாகி, மோசமானது..இதுவும் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமானது..

வருமான வரும் வழிகளை அரசெ அடைத்த ஆச்சரியம் ஐ.மூ.கூ ஆட்ட்சியில் நடந்தது..சுங்க வரி உட்பட பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டன..சிலவை விலக்களிக்கப்பட்டன..சாதாரண மக்களுக்கல்ல..கார்ப்பரேட் என்னும் பண முதலாளிகளுக்கு..இதனால் அரசுக்கு 25 லட்சம் கோடி வருவாய் இழப்பு..16 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை..இது ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று..

ஆண்டுக்கு ஆண்டு போடும் பற்றாக்குறை பட்ஜெட்டும் அதை சரிகட்ட “கந்து வட்டி போடும் நாடுகளில் கடன் வாங்கியதும் “ ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் ஒரு காரணம்..இதனால் நம் வெளிநாட்டுக்கடன் மெலும் 21.6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகியது..இதுவும் ஒரு காரணமாகும்..

எரியும் நெருப்பில் எண்ணெய் சேர்த்த மாதிரி, நம் எதிரி நாடான சீனாவிடமிருந்து, ஏராமாளமான பொருட்களை இந்த ஆட்சியில் இறக்குமதி செய்யப்படுகிறது..எந்த அளவிற்கு என்றால் நாட்டின் மொத்த இறக்குமதியில் 25 சதம் அதாவது கால் பங்கு..அதுவும் மிகக்குறைந்த சுங்கவரியில்..சீனாவின் “குப்பைக்கிடங்காக” இந்தியாவை ஆக்கியது ஐ.மு.கூ அரசாங்கம்..இத்னால் மிகப்பெரிய வர்த்தக நிதி பற்றாக்குறை ஏற்பட்டது

..இதுவும் ஒரு பெரும் காரணம்..
இப்படி அடுக்கப்பட்ட காரணங்கள் அரசுக்கும் அடியாளர்களுக்கும் தெரியாததல்ல..தங்கள் தோல்வியை ஏற்க மறுக்கும் இந்த பொருளாதார புலிகள், கச்சா எண்ணெய்--தங்கத்தின் மீது மட்டும் பழியை போட்டு தப்பிக்க நினைக்கின்றனர்..
இந்தியாவையும் ரூபாயையும் காப்பாற்ற முடியுமா?..நமது இயற்கையான கலாச்சார அமைப்பு முறை ஒன்று நம்மை அறியாமலே--நமக்கு தெரியாமலே நம்மை காப்பாற்ரிக்கொண்டிருக்கிறது..
அதுதான் நம் குடும்ப அமைப்பும் அதன் சேமிக்கும்
பண்பும்..அதன் காரணமாக நம் வங்கிகளில் 10 லட்சம் கோடி ரூபாய் ஆண்ட்தோறும் சேமிப்பில் இருக்கிறது..வெளிநாடு வாழ் உள்ளிட்ட நம் இந்திய குடும்பங்கள் அந்நிய செலாவணியில் சுமார் 330 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு வைக்க காரணமாக இருந்து வருகிறது..இன்று நம் நாட்டை காப்பாற்றிக்கொண்டிருப்பது இந்த அரசும் ஆட்சியும் அல்ல.
இன்னும் இந்தியாவை சோமாலியா போல் கடன்கார நாடாக மாற்றாமல் காப்பது நம் அரசும் ஆடியாளர்களும் அல்ல..

.நம் குடும் அமைப்பும் அதன் சேமிக்கும் பண்பும்தான்..
   

"தி இந்து" வில் வந்த ஞானியின் கட்டுரைக்கு பதில்

"கடந்தகாலத்தை" மறந்துவிடும்..."ஞாபகமறதி "--வியாதி இந்தியர்களுக்கு அதிகம் என்பதால், ஞானி போன்றவர்கள் "ஞானோபதேசம் " செய்கிறார்கள்...

"தனி நபர் வழிபாடு " என்பதும், "தனிநபர் துதி" என்பதும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது..என்பது ஞானிக்கு தெரியாதது அல்ல..

நேருவுக்கு பிறகு ( சாஸ்திரி தவிர )..இந்திரா--ராஜீவ்---சோனியா (நிழல் பிரதமர் )---ராகுல் என குடும்ப அரசியல், தனிக்குடும்ப அரசியல்,...ஒரே குடும்ப அரசியல் என்ற் காங்கிரசை விமர்சனம் செய்வதை ஞானியின் மனம் ஏற்காது..ஏனெனில் அது பாஜக ஆதரவு நிலைப்பாடு ஆகிவிடும் அல்லவா?

1966 இல் லால்பஹதூர் சாஸ்திரி மறைந்த போது அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மொரார்ஜி தேசாயை ஓரங்கட்டிவிட்டு நேருவின் புதல்வி இந்திராகாந்தியை பிரதமராக்கியது மாபெரும் ஜனநாயக பின்னணியோ ?

இந்திராவிற்கு சமமாக காங்கிரசில் யாருமே இல்லாததால், 20 ஆண்டுகாலம் அவரும் அவரது மகன் ராஜீவ் காந்தியும், பிரதமர் பதவியை வகித்தார்கள் என்பதும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் மாபெரும் பனி என்பது ஞானியின் வாதமோ? 

1980இல் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்த போது பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கோஷம் என்ன தெரியுமா? உங்களில் யார் பிரதமர் ( ஜனதா கட்சியில் )--எங்களில் ( காங்கிரசில் )இந்திரா காந்தி பிரதமர் ..ஸ்திரமான ஆட்சி--வலுவான பிரதமருக்கு காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற காங்கிரசின் பிரச்சாரம் ஞானிக்கு தெரியாதா?

"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என் கருணாநிதியும்  --தன பங்குக்கு காங்கிரசுக்கு அடித்த ஜால்ரா ஞானிக்கு நினைவில்லையோ --இப்படி 33 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் யார் என்பதை சொல்லி காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது என்று பறை சாற்றியது அன்றைக்கு நல்லது  இன்றைக்கு கெட்டதோ..

1989 இல் எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததை சுட்டிக்காட்டி, அவர்களால் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூ ற முடியுமா என்று காங்கிரஸ் கட்சி கேட்டதை ஞானி ஏன் சவுகர்யமாக மறந்து விட்டார்..

1996 இலும் 1998 இலும் பிரதமர் வேட்பாளர் யார் என்று பெயரை அறிவித்தாலேயே காங்கிரசுக்கு பதில் தரமுடியும் என்ற நிலையில், வாஜ்பாய் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்தது..அப்போது நேரு குடும்பத்திலிருந்து பிரதமர் பதவிக்கு சோனியாவோ ராகுலோ முன்வராத காரணத்தால் காங்கிரஸ் பின்வாங்கியது ஞானிக்கு நினைவில்லையா?( இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பயங்கர வாதிகளுக்கு இரையான பயத்தால் )  

2004 ஆம் ஆண்டு கூட மாப்பிளை தோழனாக வந்தவர் மாப்பிள்ளை ஆன கதையும், 2009 இல் அவரே மாப்பிள்ளையாக வேறு வழி இன்றி தொடர்த்தும் அப்போது பாஜக சார்பில் அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடு அறிந்த கதை ..நிலைமை இப்படி இருக்க இப்போது புதிதாக பிரதமர் வேட்பாளர் என்று உண்டா என்று ஞானி ஏன் கேள்வி கேட்கிறார் என்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.. 

பாஜக சார்பில் மோடி அறிவிக்கப்பட்டு விட்டார்...காங்கிரஸ் சார்பில் ராகுலை மட்டுமே அறிவிக்க முடியும் அதுதான் காங்கிரசின் கலாச்சாரம்..நேரு குடும்பத்தை விட்டு பிரதமர் பதவி யாருக்கும் கிடையாது.. ஆனால் ராகுலால் மோடியோடு போட்டியிடும் நிலை இன்று இல்லை ஆகவே இப்போது பிரதமர் பதவிக்கு முன் கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நியாயமா என ஞானி போன்றவர்களை விட்டு காங்கிரஸ் குடும்பம் எழுதவைத்துள்ளது..

எப்படி தூற்றினாலும், எவ்வளவு அநியாயமாக எழுதினாலும், பிரச்சாரம் செய்தாலும், மோடியின் எழுச்சியை வருகையை யாராலும் தடுக்க முடியாது..இது காலத்தில் கட்டாயம்..

இந்தியா வளர --மீண்டும் எழ ---மோடியே வா ..என்பதே கோடிக்கணக்கான இந்திய இளைனர்களின் கோஷம்--நம்பிக்கை --எதிர்பார்ப்பு---இதை யாராலும் தடுக்க முடியாது..

Wednesday, October 9, 2013

”இந்து”-வித்யா சுப்ரமணியத்தின் 8.10.13.கோயபல்ஸ் பிரச்சார கட்டுரைக்கு பதில்

தி.இந்துவிற்கு பதிலளிப்பதே அவசியமற்றது..ஆனால் அதன் தொடர்ந்த பொய் கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.—பாஜக—மோடிமீது அமிலம் கொட்டும் வார்த்தைகள், முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

இதற்கு வழி என்ன..--இந்து திருந்தாது…--அது திருந்த வேண்டியது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை..ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரம் முழுக்க முழுக்க இந்துவால் “அப்யூஸ்” செய்யப்பட்டு வருகிறது.
 
வித்யா சுப்ரமணியத்தின் இன்றய கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை…இடை இடையே ஓரிரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்தசரக்கால் “மேனுபிலேட்” செய்யப்பட்டு எழுதப்பட்ட  கட்டுரை இது..

உண்மையிலேயே இதற்கு பதில் சொல்லவேண்டியதில்லை..ஏனெனில் இதில் ஒன்றுகூட உண்மையில்லை..இந்துவிற்கு பையித்தியம் பிடித்துவிட்டது…தொடர்ந்து “மோடி ஜுரம் “ உச்சத்தில் இருக்கிறது....மோடி ஜுரம் என்பதைவிட “மோடி பயம் “ என்பதே சரியாக இருக்கும்..

64 ஆண்டுக்கு முன்பான சரித்திரத்தை எடுத்து எழுதினால், யாருக்கு உண்மை தெரியப் போகிறது?..யார் ஆதாரங்களை “வெரிஃபை” செய்ய போகிறார்கள்?...என்ற அசட்டுத்தனதில் எழுதியிருக்கிறார்..வித்யா..

திருமதி வித்யா அவர்களுக்கு ஒரு வார்த்தை…..தொடர்ந்து எழுதுங்கள்….இப்படியே எழுதுங்கள்…அப்போதுதான்..நீங்கள் சரித்திரத்தின் பக்கங்களில், ஒரு “ மூன்றாம் தர எழுத்தாளர்—காழ்ப்புணர்ச்சி களஞ்சியம்”—என்று வர்ணிக்கப்பட்டு காணாமல் போவீர்கள்..உங்களின் நோக்கங்களிலும் சரி..எழுத்திலும் சரி…உண்மையும் நேர்மையும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது…

ஒருவேளை உங்கள் உள் உணர்வில் அது கொஞ்சமாவது இருக்குமானால், நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அது எந்த ஊரில் இருப்பதானாலும், அதற்கு செல்லுங்கள்…ஓரிரு நாள் தங்கிய பின் மீண்டும் எழுதுங்கள்..அப்போது உண்மையை உணர்வீர்கள்…

அன்பிற்கினிய இந்து ஆசிரியர் அமெரிக்க குடிமகன்…சித்தார்த் வரத ராசனுக்கு ஒரு வேண்டுகோள்…பாஜக..ஆர்.எஸ்.எஸ்..”வெறுப்பே” உங்கள் பிறவி லட்சியமானால், உங்கள் எழுத்தில் அது தொடருமானால், வாசகர்களுக்கு அது சலித்துப்போகும்..வெறுத்துப்போகும்…ஏனெனில் வாசகர்களுக்கு உண்மை தெரியும்,…
உங்களின் மூதாதையர்கள் கட்டிக்காத்த நடுவு நிலைமை..நாவடக்கம்..( எழுத்தடக்கம்)..இவைகளை நீங்கள்..காப்பற்ற முடியாவிட்டாலும், காற்றில் பறக்க விடாதீர்கள்..

மண்டபத்தில் உள்ளோரையும் ரோட்டில் போவோர் வருவோரையும் தேடிக்கண்டு பிடித்து, பி.ஜே.பி –ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எழுதவைத்து வரும், உங்களை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது..தயவு செய்து ஒரு “சைக்கியாடிரிஸ்டை” …கன்சல்ட் செய்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து அவதூராக எழுதிவரும் இந்து பத்திரிக்கைகளுக்கு..( தமிழ் பதிப்பையும் சேர்த்து)…எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக…தயவு செய்து அவதூறை நிறுத்தி விடாதீர்கள்…நீங்கள் எழுத எழுதவே…மக்கள்..”இவர்களை பார்க்க வேண்டும்” என எங்களை நோக்கி வருகிறார்கள்..நேரில்  பார்த்ததும்..நேர்மையானவர்கள்” என்பதை புரிந்து எங்களோடு இணைந்து கொள்கிறார்கள்…

செலவில்லாமல்..எங்களுக்கு மிகப்பெரிய  அளவில்..விளம்பரமும்..ஆதரவும்..தேடித்தரும் இந்து குழுமத்திற்கு எங்கள் “நன்றி” உரித்தாகுக…

இத்தனை நாள் உங்களின் அவதூறு பிரச்சாரமே…எங்கள் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவை தேடித்தந்தது..அதே போன்ற ஆதரவை ஆர்.எஸ்.எஸுக்கும் தேடித்தர ஒற்றைக்காலில் நிற்கும் உங்களுக்கு மீண்டும் நன்றி..

சுசில் குமார் ஷிண்டே பேப்பர் படிக்கிறாரா...


“அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை விடுதலை செய்க”--என மத்திய உள்துறை மந்திரி சுசில் குமார் ஷிண்டே...மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது...மாநில உரிமைகளில் குறுக்கீடு செய்வதாகும்..

அப்பாவியா..அடப்பாவியா..என்பது தீர்ப்பு வெளிவரும்போதுதான் தெரியும்..ஷிண்டேயின் இந்த பேச்சு..நீதிபதிகள் மீது “தீர்ப்பை..திணிப்பது” போலாகும்..

சரி..இந்த சுசில்குமார் ஷிண்டே யார்..அவரது நதிமூலம் என்ன?--கர்னாடகதில் வேலை பார்த்த அஸ்ஸாமியர் சிலர் சென்ற ஆண்டு தாக்கப்பட்டதும்,அதனால் ஏற்பட்ட புரளியில் அவர்கள் அஸ்ஸாமுக்கு திரும்ப ரயிலகளில் முண்டியடித்து ஏறி பதட்டப்பட்டது, அந்த பதட்டத்தை தணிக்கவேண்டிய உள்துறை மந்திரி, நிறைய ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லி பதட்டதை அதிகப்படுத்தியதும் நாடறிந்ததே..

நம்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 60 சதவீதத்திற்குமேல் ”விசாரணைக்கைதிகள்”...இதில் இந்து முஸ்லீம்--கிறிஸ்தவர் என எல்ல மதத்திலும் அப்பாவிக்கைதிகல் இருக்கிறார்கள்..இதில் முஸ்லீம்களுக்கு மட்டும் சலுகை என்றால்...மற்றமத கைதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படாதா?--இதனால் ஜெயிலுக்குள்ளே மதக்கலவரம் வெடிக்காதா?

காங்கிரசுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன கவலை?..ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருப்பதை 5 வருடமாக பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறார்கள்..

போலீஸ் மதம் பார்க்கிறது..முஸ்லீம்களை குறிவைக்கிரது என்கிறார்கள்......ஆந்திராவில் பிடிபட்ட பயங்கரவாதிகள்..போலீஸ் பக்ரூதீன்.-பன்னா இஸ்மாயில் வீட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணமும், டன்..-டன்ன்னாக வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுருக்கிறதே...ஆதா
ரம் இருப்பதால்தானே.போலீஸ் பிடிக்கிறது என்பதை உணரமறுப்பது மதவாதம்தானே...
ஆந்திரா..ஹைதிராபாத்..ஜும்மா மஸ்ஜித் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான 75 முஸ்லீம் இளைஞர்கள் ஆந்திர அரசு தண்டத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர ஹைகோர்ட் தள்ளுபடி செய்திருக்கிறது..

நமது உள்துறை மந்திரி ஷிண்டே பேப்பர் படிப்பதில்லை போலிருக்கிறது..அதனால்தான் மாநிலங்களுக்கு எழுதிய தனது கடிதத்தில்..முஸ்லீம் இளைஞர்களுக்கு தண்டத்தொகையும், நிவாரணமும் வழங்கவேண்டும் என கட்டளையிட்டுருக்கிறார்.ஆந்திர ஹைகோர்ட் உத்தரவை அவரது உதவியாளர்கள் அவருக்கு படித்து சொல்லவில்லை போலும்...

பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் தவறாக கைது செய்யப்படுகிறார்கள்..என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது ..இதற்கு யார் காரணம்?

குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க நம்நாட்டில் மேலை நாடுகள் போல் வசதிகள் இல்லை.அஅர்களின் உறவினர்கள், நண்பர்களை அள்ளிப்போட்டு “கவனித்து”-குற்றவாளிகள் தானாக சரணடைய செய்வதுதான் போலீஸ் டெக்னிக்..
ஆனால் முஸ்லீம்களை பொருத்தமட்டில் இந்த டெக்னிக் செல்லுபடியாவதில்லை..

அவர்கள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சிறப்பு மரியாதை செய்து, ஹீரோவாக்கி --காட்டிக்கொடுக்க மறுப்பதால்..அதற்கு ஆளும் காங்கிரஸ் அரசும் ஆதரவாக இருருப்பதால் போலீஸ் வேறு என்னதான்  செய்ய முடியும்?

ஆக இது முஸ்லீம்கள் மத்தியிலுள்ள குறைபாடு மட்டுமல்ல..குற்றவியல் நீதி பரிபாலனத்திலும், உள்ளது..லட்சக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன..லாலு பிரசாத்தின் வழக்கு “விரைவு கோர்ட்டிலேயே” 14 ஆண்டு நடந்தபின்பே தீர்ப்பு வெளியாகியுள்ளது..

ஆக முஸ்லீம்கள் நடைமுறை திருந்த வேண்டும்..குற்றவியல் நடைமுறை நீதிபரிபாலத்தில் திருத்தம் வேண்டும்....காங்கிரஸ் “நாகாக்க” வேண்டும்.குற்றவாளிகள் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கப்படவேண்டும்.அப்போதுதான்
உண்மையான மதசார்பற்ற தன்மை தழைக்கும்..