Pages

Saturday, October 12, 2013

காற்றில் பறக்கும் இந்தியாவின் மானமும், ரூபாய் மதிப்பும்

ஆகஸ்ட் 2013 இல் முடிந்த 20 மாதத்துக்குள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.45 லிருந்து ரூ.70 ஆனது..இது வரலாறு காணாத வீழ்ச்சி..
கொந்தளிக்கும் நிலையிலும், “அமைதி காக்கவும், பதட்டப்படாதீர்கள்”--என பதபதைக்காமல் கூறியவர் நமது நிதி மந்திரி--ப.சிதம்பரம் அவர்கள்.
இந்த கஷ்ட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை வேறு ஏற்றினார்கள் என்பது வேறு விஷ்யம்.
இந்நிலைக்கு காரணம் என்ன? இதை சீர் செய்ய முடியுமா/--எப்படி என்பதற்கு சிறந்த பொருளாதார மேதையும் சிதனையாளருமான..ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அவர்கள்,,தினமணியில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..

இன்றைய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்மற்றும் தங்கம்.. இறக்குமதிதான்..அதுமட்டுமல்ல நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் ஒரு காரணம்..இவை பொருளாதார புலிகள் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தரப்பில் வைக்கப்படும் வாதம்..

உண்மைக்காரணம் என்ன?

நடப்புக்கணக்கு பற்றாக்குறை இன்ரைக்கு நேற்றைக்கு உண்டான பிரச்சினை அல்ல..ஆட்சியை விடும் போது 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு ரூ.2200 கோடி உபரி வைத்துவிட்டு போனது..அதற்கு பிரகு தொடர்ந்து இறங்கு முகம்தான்..217 கோடியில் ஆரம்பித்த பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் பெருகி 33900 கோடியனது..இந்த பற்றாக்குறையும் காரணமும் திடீரென முளைத்தல்ல..

இறக்குமதி வாயிலை எந்த கட்டுப்பாடுமில்லாமல் திறந்து விட்டு கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டில் தயாரிக்கும், தயாரிக்க முடிந்த மூலதபொருட்களை கட்டுக்கோப்பில்லாமல் இறக்குமதி செய்ததன் விளைவு..தொழில் உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சி--ஆனால் இறக்குமதி பொருட்கள் 79 சதவீதம் வளர்ச்சி..ஆபரேஷன் சக்சஸ்..பேஷண்ட் மரணம்..இது பெரிய முரண்பாடு..மூலதனபொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தாதும், ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்..இது மரைக்கப்படுகிறது..

அரசின் மோசமான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடின்மை காரண்மாக வருவாயைவிட செலவு மும்மடங்கு அதிகமானது..கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஆளில்லாத காரணத்தால், ஐ.மூ.கூ அரசின் முதல் ஐந்தாண்டை விட இரண்டாவது ஐந்தாண்டு,செலவினம் மும்மடங்கு அதிகமாகி, மோசமானது..இதுவும் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமானது..

வருமான வரும் வழிகளை அரசெ அடைத்த ஆச்சரியம் ஐ.மூ.கூ ஆட்ட்சியில் நடந்தது..சுங்க வரி உட்பட பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டன..சிலவை விலக்களிக்கப்பட்டன..சாதாரண மக்களுக்கல்ல..கார்ப்பரேட் என்னும் பண முதலாளிகளுக்கு..இதனால் அரசுக்கு 25 லட்சம் கோடி வருவாய் இழப்பு..16 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை..இது ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று..

ஆண்டுக்கு ஆண்டு போடும் பற்றாக்குறை பட்ஜெட்டும் அதை சரிகட்ட “கந்து வட்டி போடும் நாடுகளில் கடன் வாங்கியதும் “ ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் ஒரு காரணம்..இதனால் நம் வெளிநாட்டுக்கடன் மெலும் 21.6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகியது..இதுவும் ஒரு காரணமாகும்..

எரியும் நெருப்பில் எண்ணெய் சேர்த்த மாதிரி, நம் எதிரி நாடான சீனாவிடமிருந்து, ஏராமாளமான பொருட்களை இந்த ஆட்சியில் இறக்குமதி செய்யப்படுகிறது..எந்த அளவிற்கு என்றால் நாட்டின் மொத்த இறக்குமதியில் 25 சதம் அதாவது கால் பங்கு..அதுவும் மிகக்குறைந்த சுங்கவரியில்..சீனாவின் “குப்பைக்கிடங்காக” இந்தியாவை ஆக்கியது ஐ.மு.கூ அரசாங்கம்..இத்னால் மிகப்பெரிய வர்த்தக நிதி பற்றாக்குறை ஏற்பட்டது

..இதுவும் ஒரு பெரும் காரணம்..
இப்படி அடுக்கப்பட்ட காரணங்கள் அரசுக்கும் அடியாளர்களுக்கும் தெரியாததல்ல..தங்கள் தோல்வியை ஏற்க மறுக்கும் இந்த பொருளாதார புலிகள், கச்சா எண்ணெய்--தங்கத்தின் மீது மட்டும் பழியை போட்டு தப்பிக்க நினைக்கின்றனர்..
இந்தியாவையும் ரூபாயையும் காப்பாற்ற முடியுமா?..நமது இயற்கையான கலாச்சார அமைப்பு முறை ஒன்று நம்மை அறியாமலே--நமக்கு தெரியாமலே நம்மை காப்பாற்ரிக்கொண்டிருக்கிறது..
அதுதான் நம் குடும்ப அமைப்பும் அதன் சேமிக்கும்
பண்பும்..அதன் காரணமாக நம் வங்கிகளில் 10 லட்சம் கோடி ரூபாய் ஆண்ட்தோறும் சேமிப்பில் இருக்கிறது..வெளிநாடு வாழ் உள்ளிட்ட நம் இந்திய குடும்பங்கள் அந்நிய செலாவணியில் சுமார் 330 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு வைக்க காரணமாக இருந்து வருகிறது..இன்று நம் நாட்டை காப்பாற்றிக்கொண்டிருப்பது இந்த அரசும் ஆட்சியும் அல்ல.
இன்னும் இந்தியாவை சோமாலியா போல் கடன்கார நாடாக மாற்றாமல் காப்பது நம் அரசும் ஆடியாளர்களும் அல்ல..

.நம் குடும் அமைப்பும் அதன் சேமிக்கும் பண்பும்தான்..
   

1 comment:

Yaathoramani.blogspot.com said...

யதார்த்த நிலை சொல்லும்
அருமையான பயனுள்ள பதிவு
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்