Pages

Friday, December 16, 2011

சோனியாவும் கலஞரும் மாறிவிட்டார்கள்---புதிய “வேக்சின்” (vaccine )--மகத்துவம்



அப்பப்பா...அப்பப்பா...--என்ன சண்டை...என்ன சண்டை--காலைல எழுந்திருச்சா....எந்த செய்தி “சானலை ‘ திருப்பினாலும்...ஒரே போராட்ட மயம்..

அதுக்கும் ஒரு எல்லை இல்லை...விவஸ்தையும் இல்லை..ஒரு ஊரே மலைமேல ஏறி நின்னு தற்கொலை பண்ணிக்குமாம்..முல்லைபெரியார் பிரச்சினையை தீர்க்கலைன்னா..

இதுவரை மாநில லெவலுக்கு வந்துவிட்டோம்..இனி இது ரொம்ப ஸ்பீடாக மாறி--..மாவட்டம்---ஊரை கிராஸ் செய்து...தெருவுக்கு தெரு சண்டை வரவேண்டியதுதான் பாக்கி..அதுவராதுன்னு உறுதியா சொல்லமுடியல்லியே..

கற்பனை செய்யமுடியாதது எல்லாம் “நிஜத்தில் “ நடக்கும் கலிகாலம் தான் இது.

அது சரி மலையாளி கடைகளையெல்லாம் உடைக்கிறோமே....கேரளாவில் இருக்கும் தமிழனின் நிலையை எண்ணி பார்த்தோமா?  -நம்மை பார்த்துட்டு அவங்களும் செய்ய நாம் காரணமாகணுமா?-- நாம் நிறுத்தக்கூடாதா?--”அவனை நிறுத்த சொல்லு..நான் நிறுத்தரேன்னு வசனம் பேசணுமா?--

பால் பொங்கி கருகின வாட வருது...சாம்பார் மணம் மூக்கை துளைத்து  ஒரேடியா பசி ஆகுது ---“இதற்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன்தான் காரணம்-- என்று அடித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் போகப்போகிறோமா?--

இதெல்லாம் நமக்கு பழக்கமானதா?--இவ்வாறு நாம் செய்திருக்கிறோமா?--நமக்கு அன்னியமான விஷயங்களை எல்லாம் நாம் தேடி போய் செய்து கொண்டு இருக்கிறோமே..
நம் உறவுகள் எவ்வளவு சௌஜன்யமானது--அதாவது பரிபூரணமானது---விட்டுக்கொடுத்து வாழ்வது...இது எங்கே போனது--இதன் சிதைவுக்கு யார் காரணம்?--

உலக நாடுகளிலேயே குடும்ப உறவு பூரணமானது நம் நாட்டில் மட்டும் தான்..”வசுதெய்வ குடும்பகம்”--அதான் பக்கத்துவீடு---பக்கத்து மாநிலம்...பின் ஏன் அடித்துக்கொள்கிறோம்.?

ஒரு பிரச்சினைக்கு மாநில சட்டசபைகள் தீர்மானம் போடுகிறது? யாரை திருப்திப்படுத்த?--  யார் தவறை மறைக்க?-- தலைவர்கள் “பாகிஸ்தானை---சீனாவை”--திட்டுவதுபோல --அண்டை மாநிலத்தை திட்டி வீர உரை ஆற்றுகிறார்கள்..மககளை உசுப்பேத்துகிறார்கள்.

மாற வேண்டியது யார் மக்களா?--மன்னனா?--தவறிழைத்தது யார் மக்களா?--மன்னனா?--நிவாக சீர்கேடு யாரால்?--மக்களா?--மன்னானா?

காமராஜர் முதல்வராக இருந்தபோது காவிரியில் தண்ணீர் திறக்க போராட்டம் ஏதும் நடக்கவில்லையே ஏன்?--
அன்றைய முதல்வர் நிஜலிங்கப்பாவோடு பேசி காதும் காதும் வைத்தமாதிரி..தண்ணிர் திறந்துவிடப்பட்டது..அரசியல் இல்லை...ஆர்பாட்டம் இல்லை..மக்களுக்கு தெரிய வேண்டியது மட்டும் தெரிந்தால் போதும்..அரசியல் ஆதாயத்துக்காக அநியாயமாக மக்களை தவறான வழியில் நடத்தவில்லை..

இன்றைய தவறுகளுக்கு யார் காரணம்?--ஆட்சியாளர்கள்தானே?--அவர்கள்தானே திருத்திக்கொள்ள வேண்டும்..பின் ஏன் நாம் மலை மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?--கட்சிகளும் கனவான்களும் செய்து கொள்ளட்டுமே?--

யார் கேட்டார் இந்த சட்டசபை தீர்மானங்களை?--அரசின் முழுபக்க விளம்பரங்களை..பஸ்--ரயில் மறியல்களை.

நேற்றைய “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” ஒரு செய்தி..ஏதோ “synthetic biology "--யாம்...அதிலெ ஒரு மருந்தாம்... computer software இல் செய்வது  போல அந்த மருந்தில் ஏற்கனவே “புரொகிறாம் “ செய்திருப்பார்களாம்..  ..அதை நம் உடலில் செலுத்தினால்..அந்த “புரோகிறாமில்” உள்ளது போலவே நம் மூளை செயல் படுமாம்..

அப்பாடா..இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று கவலையாய் இருந்தேன்..பயந்திருந்தேன்..இப்போது விடிவு கிடைத்து விட்டது..

“சண்டை சச்சரவை உருவாக்காத....ஊழல் புரியாத....நிர்வாகத்திறன் கொண்ட...மக்களை நேசிக்கிற மன கொண்ட ஒரு “புரோகிறாமை “ கொண்ட “வாக்ஸினை “ரெடி பண்ணி  சோனியா---உம்மன் சண்டி---ஜெயலலிதா..கருணாநிதி--லாலுபிரஸாத்--மாயாவதி---மன்மோகன் சிங்---குழுமத்திற்கு செலுத்தினால்....தீர்வுகிடைப்பது நிச்சயம்..

மருந்து வரப்போகிறது..நம் பிரச்சினை தீரப்போகிறது...நன்றி.....சிந்தடிக் பயாலஜி..மீண்டும் மீண்டும் நன்றி--உனக்கு.

Thursday, December 15, 2011

பயம் ---பிராண நாசம்---ஜெ..யும்...சோனியாவும் வளர்ச்சி நாசம்



நீரின்றி வாழ்வே பறிபோகும்--இது தமிழகம்
நீரினால் உயிரே ஜலசமாதி ஆகும்--இது கேரளா

அணு உலை எங்கள் உயிருக்கு உலை வைக்கும்----இது கூடங்குள மக்கள்
வீட்டில் உலை கொதிக்க அணு உலை இயங்க வேண்டும்--இது தமிழக மக்கள்

ஒரு பகுதிக்கு வாழ்வு தரும் நீரும் ---உலையும்--இன்னொரு பகுதிக்கு காலனாக இருக்கிறது--இது உண்மையா?---இப்படித்தானே அந்தந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்..அதனால்தானே போராட்டம்.

முல்லைப்பெரியார்...இத்தனை லட்சம் மக்களுக்கு உணவளிக்கும் பாசனப்பகுதிகளுக்கான நீர் ஆதாரம்--அது பறிபோனால்..நாங்கள் பட்டினிகிடப்போம்.இது அப்பகுதி மக்கள் வாதம்

முல்லைப்பெரியார் உடையாமல் காக்க --இத்தனை லட்சம் டன்னில் -- கான்கிரீட் சுவர்கள்--கயிறுகள்---கம்பிகள்---ஆகவே கவலைப் படகாரணமில்லை--இது பொறியாளர்கள் அறிக்கை..

முல்லைப்பெரியார்---தமிழகம் சொல்கின்ற பாதுகாப்புக் குறிப்புக்களை பரிசீலித்ததில் --அவைகள் திருப்திகரம்--இது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்திற்கு தண்ணீர் தர எங்களுக்கு ஆட்சேபம் இல்லை--ஆனால் டேம் உடைந்தால்----3 ஜில்லாக்களில் மக்கள் “ஜலசமாதி “ ஆவார்களே--இது சரியா?
இது கேரளா வாதம்

டேம் பகுதி நில நடுக்க தாக்குதலுக்கு உட்பட்ட பகுதி--எந்நேரமும் நிலநடுக்கம் வரலாம்--வந்தால்---டேம் உடைந்தால்---உங்களை காக்கும் நீரே---எங்களை அழிக்குமே--இது நியாயமா?--இது இடுக்கி மக்களின் வாதம்--

மாறி மாறி மாநில அரசாங்கங்களின் அறிக்கை போர்--இரு மாநில மக்களிடையேயும் ஒரு அறிவிக்கப்படாத “போர் சூழல்”
நாம் எங்கே போகிறோம்?--இதற்கு தீர்வுதான் என்ன?  தீர்வு கிடைக்குமா?--சாத்தியமா?--

தீர்வு வந்துவிடக்கூடாது எனபதில் தீவிரமாக இருக்கும் கட்சிகளே ஆண்டன--ஆள்கின்றன--இது ஒரு புறம்..

கூடங்குளம் அணு உலை தொழில் நுட்பம்--- ரஷ்யவின் செத்துப்போன பழைய தொழில் நுட்பம்---அதை செயல் படுத்தி எங்களையெல்லாம் செத்துப்போகச் சொல்கிறீர்களா?--
செர்னோபில்---ஜப்பாந்-அணு உலைகள் வெடிப்பில் ஆயிரக்கணக்கில் மரணம்--லட்சக்கணக்கில் பாதிப்பு.. --தொழில் நுட்ப “கிங் “--ஜப்பானே இப்படி என்றால்...”பிஸ்கோத்து நாம்”-எங்கே?---கூடங்குளத்தில் எங்களை கொல்லவா பார்க்கிறீர்கள் ?--இது கூடங்குள மக்கள்

நம் மின் தேவை “விலைவாசி மாதிரி “ விர்ரென உயர்ந்து வருகிறது.மின் தேவைக்கும் தயரிப்புக்கும் உள்ள பெரும் இடைவெளியே 7--8 மணி நேர மின் வெட்டு...கூடங்குளம் இயங்கினால் நம் வளர்ச்சி உயரும்--இது தமிழக மக்கள்..

பிரச்சினையை சுருக்கினால்....கூடங்குள மக்களும் கேரள மக்களூம் ஓரணி---தமிழக மக்கள் ஓரணி என்று இப்போது எடுத்துக்கொள்லலாமா?  ஓகே..
இந்த இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் “ SILVER LINE " என்ன?/--

யார் பிரச்சினையை கிளப்பி விட்டார்கள்?--யாருடைய வாதம் சரி ?--ஸ்ட்ராங்?--யாருடைய தேவை ஞாயமானது?  இதற்கெல்லாம் பதில் நிச்சயமாக அவசியமில்லை..தீர்வுக்கு இவை எள்ளளவும் உதவாது...

வேறு வழி-?---உன் உயிருக்கு ஆபத்து---நீ ஜலசாமாதி ஆகிவிடுவாய்---என்று சொன்னால்--உன்னை அணுக்கதிர்வீச்சு கொன்று போடும்-- என்று சொன்னால் ---நம்பினால்----அரசோ--ஆள்பவரோ---தங்கத்தை மூட்டை மூட்டையாக கொடுத்தாலும்---ஹெலிகாப்டரை வீட்டுவாசலில் கொண்டு நிறுத்தினாலும்---மக்கள்  ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் மனம்தான் மாறுமா?---
உயிரா?---..சோறா..?-----ஒருபக்கம்----உயிரா..?---வளர்ச்சியா.?--மறுபக்கம்..

உயிருக்கு உத்தரவாதம் தருவோம் என்று யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்..அப்துல் கலாம் சொன்னார் --மக்கள் கேட்கவில்லையே--சுப்ரீம் கோர்ட் சொன்னது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லயே---

சோனியா--ஜெ---கருணா போன்ற ...வாக்கில் நேர்மையும் --தூய்மையும் இல்லாத தலைவர்கள் கூட்டமே மண்டிக்கிடப்பதால்... நாட்டின் வளர்ச்சி நாசம்...--அதன் தொடர்ச்சிதான்  போராட்டம்..

உண்மை ஊர்வலம் வர வேண்டும்--பொய்மை மூலையில் கிடத்தப்படவேண்டும்--அப்போதுதான் மக்கள் மனதிலுள்ள பயம் விரட்டப்படும்..ஊருக்குள் உலவும் சிங்கம்---- கூடங்குளமும் --முல்லைப்பெரியாரும் கூண்டிற்குள் போய் அடையும்..

Tuesday, December 6, 2011

சலிக்குமா.... சரணமையப்பா ?


காலையில் எந்த  ரேடியொவை திருப்பினாலும்…சரணமையப்பா பாடல்களே காதைப் பிளக்கிறது..
கார்த்திகை …மார்கழி மாதங்கள் என்பதால்தான் இது...
ரேடியோ..டி.விக்காரர்களும்…துணிக்கடைக்காரகளும் கடைந்தெடுத்த வியாபாரிகள்..

ஜாதி..மதம் பார்க்காத உண்மையான “செக்குலரிஸ்ட் “ அவர்கள்தான்..
அத்தனை பண்டிகைகளையும் “ சரியாக  ஞாபகபடுத்துபவர்கள் அவர்கள்தான்..
”தவறாக “ ஒளி..ஒலி..பரப்புபவர்களும் அவர்கள்தான்..

இப்படி செய்தால்தான் “ வாடிக்கையாளர்கள்—பக்தர்கள் “—திருப்தியுருவார்களோ..?..
இதை கேட்டு..கேட்டு..உண்மையான பக்தர்கள்..கொதித்துப் போகிறார்கள்….
வெறுத்துப் போகிறார்கள்---சோர்வுறுகிறார்கள்…

இப்படி வருடம் முழுதும் விழாக்கொண்டாடி..கடவுளை தூங்க விடாமல்…
கடவுள் பெயரால் நம்மையும் தூங்க விடாததால்தான் ..
சூரிய உதயத்தையே பார்க்காத சூரியன் கட்சிகாரர்கள்..பொங்கி எழுந்து
“இறைவனுக்கெதிராக “ போராட்டங்கள்  நடத்தினார்கள்..

உண்மையில் நம் முன்னோர்கள்..திருவிழாக்களை காலத்திற்கேற்ப திட்டமிட்டே ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
அதை “ஓவராக “ செய்யும் வியாபாரிகளும் விவஸ்தை கெட்டவர்களும்..
” ஈ.வே.ரா.க்கள்” உருவாக காரணமாகிவிட்டர்கள்..

நாம் “செம்மரி ஆட்டுக்கூட்டமா /” –பிரிட்டிஷ் காரன் சொன்னது சரியா?..

ஒரு டி.வி—ரேடியொவில் “ ஒரு நிகழ்ச்சி பிரபலமானால்..
உடனே அதே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு .டி.வி..க்களும் கொண்டுவருகிறதே..ஏன்.?

ஒரு சினிமாவோ—பாடலோ பிரபலமானால்---
அதே மாதிரி ( பெயர் கூட...கிழக்கு வாசல்...கிழக்குக் கரை..) .கதைகளும்..பாடல்களும்
( கொலவெறி..டி..) புற்றீசல் போல் பிரபலமாவது ஏன் ?

“மானாட..மயிலாட..” பிரபலமானால்—
குயிலாடா..கோட்டானாட…--குட்டிப்போடுகிறதே  ..ஏன் ?”

ஒருவர் தென்னை மரம் வைத்தால்….”வெனிலா கன்று “ வைத்தால்..
பொள்ளாச்சி முழுதும்..மரக்கன்றுகளே..ஏன்..?

பம்பு செட்…கிரைண்டர்….பட்டாசுக்கடை----மெடிகல் ஷாப்----
ஒன்று வைத்தால் கோவை முழுதும் பல முளைக்கிறது..எப்படி..?

லயன் டேட்ஸ்…வியாபார ரீதியில் வெற்றி பெற்றால்…
புலி டேட்ஸ்…நரி டேஸ்…என ஊரெங்கும் ஒரே டேட்ஸ் மயம் ..ஏன்?

பட்டி மன்றங்கள்—இப்படித்தான் பிரபலம் ஆனது
—ஆர்க்கஸ்ட்ரா…கலக்கப்போவது யாரு ?—என கோயில் விழாக்கள்—
குத்தாட்டங்களின் கூடாரம் ஆனது இப்படித்தான்..

“ஜெர்ஸி பசு வந்ததும்—நாட்டு மாடுகள் காணாமல் போயின—
காங்கேயம் காளைகள் வந்தது..உள்ளூர் மயிலை காளைகள்—மொட்டை மாடுகள்..மறைந்தே போயின..

கிராம சந்தைகளில் சிம்லா ஆப்பிள்..மெழுகு பூசப்பட்ட வெளிநாட்டு ஆப்பிள்கள்..
உள்ளூர் காய் கனிகள் எங்கே காணாமல் போயின ?—

இந்த “காப்பி அடிக்கும் பழக்கம்—நோகாமல் நோம்பி நூற்கும் பழக்கம் “ எப்போது மறையும்?

இந்த பழக்கத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம். ?—ஊருக்கு என்ன நஷ்டம்?—
”survaival of the fittest “—சாமர்த்தியம் உள்ளவன் சம்பாதிக்கிறான்
“ உனக்கு ஏன் பொறாமை ?—என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது..

புதுமைகளை செய்யாமல்---சிந்திக்காமல்—புகுத்தாமல்---
”சிந்தனைகளை கடன் வாங்கினால் “----
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ரொம்ப நல்லதிட்டமாகவே தெரியும்..

புதுக்கல்யாணம் ஆறுமாதம் ( ஆசை அறுவது நாள் )--
நல்லாத்தான் இருக்கும்..அதற்குப்பிறகுதான் நம்ம மாப்பிள்ளை..
பெண்ணை அரபு நாட்டுக்கு விற்கும் “ லவ் ஜிஹாத் “ என்று புரியும்…

இதையே “வால் மார்ட் “ தொழிலாக செய்கிறான்..
ஏமாறுவதையே நாம் “தொழிலாக “ கொள்ளலாமா..?

சரி..ஐய்யப்பனிடம் ஆரம்பித்து வால்மர்ட்ல முடிச்சுட்டேனே ....
இது சரிதானா ?—ஆம்..சரிதான்.—

சாமி பேரை சொல்லி கூப்பிட்டாவது..
உங்கள் அகக் கண்களை  திறக்க முடிகிறதா என்று பார்த்தேன்..

சலிக்காது..... சரணமையப்பா…

Sunday, December 4, 2011

என்(ன) குடும்பம் இது..?



சிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன்மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்..

சிறையிலிருந்து “ஜாமீனில் “ வெளிவந்த பிறகு...அப்பாவே “ஏர்போர்ட் “ சென்று வரவேற்றதை புரிந்து கொள்ள முடியவில்லையே---

அரசியலில் இதெல்லாம் சஹஜமப்பா--என்பதா?..
தாரை தப்பட்டை--பாண்டுவாத்யங்கள்---
ஒயிலாட்டம்..கரகாட்டம்---”சிறைப்பறவையே--சீறும் கடலலையே---அடுத்த முதல்வரே...
என தடபுடலான..”பிளக்ஸ்  ..போர்டுகளுடன்”--வரவேற்பு..

அப்பாவும் மகளும் அருகருகே காரில் அமர்ந்திருக்கும் “போஸுடன் “பத்திரிக்கையில் படங்கள்..

இவையெல்லாம் என்ன கொலை பாதகங்களா?--
வரவேற்க போகக்கூடாதா?--
பத்திரிக்கையில் படங்களே வரக்கூடாதா?---

-சரி..இப்படி கேள்வி கேட்பது தவறானவையா?--

நம் வீட்டில் வெளியூரிலிருந்து வரும் நம் குடும்பத்தினரை கூப்பிட்டு வர..ரயில் நிலையம்--ஏர்போர்ட்டுக்கு நாம் செல்வோம்.இது வரவேற்க அல்ல..அழைத்து வர...ஒருவேளை நாம் இல்லாவிட்டால்..ஓட்டுனரை அனுப்புவோம் வண்டியுடன்.அதுவும் இயலாவிட்டால் அவர்களே வாடகை வண்டியில் வீடு வந்து சேர்வர்..
அதுதானே வழக்கம்..

கருணாநிதி குடும்பம் வித்தியாசமானது...தகப்பன்..---மகனை--தம்பி என்று அழைப்பார்...
அப்பனை..மகன்கள்..மகள்..பார்க்கும் போதெல்லாம் மாலை--சால்வை அணிவித்து வரவேற்பர்..
பேரக்குழந்தைக்கு..தாத்தாவை காட்டுவதெல்லாம் டி.வி.க்கள் மூலமே நடைபெரும்..

ஒருவேளை கருணாநிதி முதலமைச்சராகவும் கனிமொழி மத்திய அமைச்சராகவும் இருந்திருந்தால் வரவேற்க செல்வது “பதவி நிமித்தமாக “ என்று சொல்லலாம்.
இது “உறவு நிமித்தமாக” என்றால் --நம் நாட்டில் எந்தக் குடும்பத்தில் இப்படி நடக்கிறது...கிடையாதே..
ராகுல் காந்திகூட சோனியாவை வரவேற்க ஏற்போர்ட் போவதில்லையே..
விஜயகாந்தை வரவேற்க பிரேமலதா செல்வதில்லயே..
”ஜெ”யை வரவேற்க “சசி “ செல்வதில்லையே..(எப்போதும் ஒருவரை
விட்டு ஒருவர் பிரிவதில்லை எனபது வேறு விஷயம் )..

பணத்தாலே--பதவியாலே மட்டும் கட்டுண்டுள்ள  குடும்பத்தில்
..”வரவேற்புக்கள் “நிகழ்த்தப்படாவிட்டால்..உறவுகள் “மரவுரி “தரிக்கும்.--
ராசாத்திக்கள்--ராட்சசிக்களாக மாறுவர்..
அம்மாக்கள் அதிருப்தி அடைவர்...
சகோதர சகோதரிகள்..சதுராடுவர்---

அப்படி ஒரு விஷப் பரிட்சை நடத்தும் நிலையில் கருணாநிதி இன்று இல்லை...

தடபுடல் வரவேற்பு --கருணாநிதியின் இடர்களை சரிசெய்யவே..

இது என்ன குடும்பம் என்கிறீர்களா?--இதுதான் அவர் குடும்பம்..

Monday, November 21, 2011

கட்டண உயர்வுக்குப்பின் நிலமை சீரடையுமா?--”ஜெ”க்கு ஒரு ஏமாந்த சோணகிரியின் யதார்த்த கடிதம்



பால் விலை உயர்வு!--பஸ் கட்டண உயர்வு--காத்திருக்கும் மின் கட்டண உயர்வு--தமிழ்நாடே “அல்லொஹல்லோல” பட்டுகொண்டு இருக்கிறது..

அத்தனை எதிகட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு முதல்வர் ஜெய லலிதாவை வாட்டி வதைத்து வருகின்றனர்..விஜய் காந்த்துக்குக் கூட கோபம் பொத்துக்கொண்டு வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆர்ப்பாட்டங்கள்--சாலை மறியல்--ஓரிரு மாதங்களுக்கு கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான்..-பத்திரிக்கை--
டி.வி களுக்கு பெரும் தீனி..




விலை உயர்வை ஆதரித்து சொல்லுகின்ற வாதங்கள் என்னென்ன?


1.பஸ் கட்டணம்--கடைசியாக உயர்த்தப்பட்டது 2001 ஆம் வருடம்தான்
2.மற்ற மநிலங்களை காட்டிலும் நம் கட்டணம் மிகக் குறைவு
2.உதிரி பாகங்கள்--தொழிலாளர் சம்பளம் உயர்ந்து விட்டது..
எப்போது சொல்கின்ற
“எல்லாவற்றிக்கும் திமுகவே காரணம் --கருணாநிதியே காரணம்”--
என்கின்ற பாயிண்டையும் சேர்த்து வாசித்துக்கொள்ளவும்
எனவே விலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயாம்.


ஜய லலிதாவின் டி.வி உரை--மற்றும் அறிக்கையில் மனம் மாறி --ஒரே வரியில் சொல்வதானால்--”கட்டண உயர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”-என 6 1/2 கோடி தமிழ் மக்களின் சார்பாக” ஜெ” யிடம் நான் உறுதி கூறுகிறேன்..( நீ யார் எங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ள என என் மனைவி மகனே கேட்கின்றது காதில விழுகிறது)--


கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டாகிவிட்டது..

எந்த கால கெடுவும் கொடுக்காமல் கட்டண உயர்வு உடனே அமுலுக்கு வந்து விட்டது..

ஒரு நாள் எக்ஸ்ட்ரா கூட அரசு தாங்காது என்பதால் மக்கள் உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்..
சென்ற ஆண்டு 6150 கோடி ரூபாய் நஷ்ட்டம் அடைந்த போக்குவரத்து துறையை எப்போது தூக்கி நிறுத்துவீர்கள். (எப்படி என்று கேட்கமாட்டோம்--நீங்கள் தான் நிர்வாகத்தில் புலியே--நாங்கள் வெறும் எலியே )




ஓட்டை உடைசல் பஸ்கள் எப்போது சரியாகும் ?--மூட்டை பூச்சிகள் எப்போது நாடுகடத்தப்படும் ?-பஸ்கள் எப்போது நேரத்துக்கு வரும் --போகும் ?--தனியார் பஸ்களின் --சுகம்--தரம்--சேவை--போல எப்போது கிடைக்கும் ?--இவைகளுக்கு எத்தனை மாசகாலம் தங்களுக்கு வேண்டும்?-- இந்த கேள்விகளேல்லாம் சரியா?--தவறா ?--அல்லது இவைகளெல்லாம் “சிலபஸ்ஸில் “   ( out of syllabus ) இல்லையா?


சீர் படுத்த முடியாத “லெவலை “ நோக்கி போக்குவரத்து துறையும் --மின்வாரியமும் போய்க்கொண்டுரிக்கிறது..கட்டண உயர்வால் வெறும் 2100 கோடி ரூபாய் வருவாய் வரப்போகிறது. 


.உங்கள் கூற்றுப்படி மத்திய அரசு உதவி செய்யாது.. உங்கள் தேவையோ மிகப்பெரிது..எற்கனவே சாராயத்தில் “ஃபுல் “ வருவாய் வருகிறது..இதற்குமேல் வேண்டுமென்றால் வீட்டிற்கு ஒரு --பாக்ஸ்-- விஸ்கி கட்டாயம் வாங்கவேண்டும் என்று உத்தரவு போட்டு நாட்டு மக்கள் அனைவரையும் குடிகாரகள் ஆக்கினால் தான் உண்டு.இந்த கட்டண உயர்வு உங்களுக்கு என்ன பேருதவியை செய்து விட முடியும் ?.



"QUALITY HAS NO PRICE "- தரத்துக்கு விலை கிடையாது..மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வார்கள்--( நாம் ஏற்கவில்லையென்றால் நீங்கள் விட்டு விடவா போகிரீர்கள் ).உங்களால் தரமும் -சேவையும் தரமுடியுமா ?.இதுவரை அரசு இதை செய்ததாக வரலாறில்லையே ?.




நீங்கள் இவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் உங்கள் வார்த்தையை மக்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள்.?.ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் ?.


கருணாநிதியின் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு” எதிரான வடிகால் தான் உங்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு பதிலாக “கும்பல் ஆட்சி “-”ஆகிவருகிறதே உங்கள் ஆட்சி--பொதுப்பணித்துறை--போக்கு
வரத்து--மின்சாரம்--போலிஸ்--கல்வி--என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் “தலைவிரித்து “ ஆடத்துவங்கி விட்டதே..


கலக்டர்-- போலீஸ் அதிகாரி-- மாநாடு போட்டு கம்பீர்த்தை காட்டும் நீங்கள்--ஊழல்--கும்பல் ஆட்சியில் ஏன் ஒளிந்து மறைகிரீர்கள்.?--இதை சரி செய்ய முடியவில்லையா ?--அல்லது உங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?.

மின் வெட்டு இதுவரை சரி செய்யப்படவில்லை--நிபுணர்களையு
் அதிகாரிகளையும் கேட்டால்..--நீண்ட கால திட்டம் ஏதும் அரசிடம் இல்லை..உடனடியாக மின் வரத்துக்கு-- சமீபத்தில் முடியும்--என்ற-- எந்த திட்டமும் அரசின் கைவசம் இல்லை---அடிக்கடி அதிகாரிகள் மாற்றம்-- திறமையற்ற நிர்வாகம் காரணமாக மின்வெட்டு ரத்தாகாது--வேண்டுமானால் கருணாநிதி மீது பழியை போட்டு --கொஞ்சம் காலத்தை ஓட்டலாம்--என்கின்றனர்.


பால் விலை உயர்வு ஓ.கே..குடி தண்ணீரே ரூபாய் 16 விற்கிறது என காரணம் சொல்லிக்கொள்ளலாம்.--ஆவின் --எப்போது சரியாகும்--நிர்வாக சீர்கேடு--லஞ்சம்--அரசியல் தலையீடு இல்லா “ஆவின் “ எப்போது பிறக்கும்?.விலை உயர்வு உங்களுடைய நஷ்ட்டத்தை சரி கட்ட மட்டும் இருக்கக்கூடாது..நுகர்வோருக்கு
இதனால் பயன் வரவேண்டும் அல்லவா ?.உங்களுடைய லாபம் ---மக்களுக்கு நஷ்டமாக இருக்கலாமா ?.”பயன்கள் “ இருவழிப்பாதையாக இருக்க வேண்டுமல்லவா ?..


சரி.. முதல்வர் ஜெ அவர்களே..தெரியாமல் கேட்கிறேன்..அரசின் வேலை “பஸ் ஓட்டுவதா “ ?.ராமன் & ராமன்..-எஸ்.ஆர்.வி.எஸ்---டி.வி
.எஸ்..போன்ற பஸ் முதலாளிகளை ஒழிக்கவே 1971 இல் கருணாநிதி பஸ் களை தேசிய மயமாக்கினார்..இதனால் போக்குவரத்து சீரானது--மக்கள் சேவை பெருகியது என வரலாறு கூறவில்லையே ?.மக்களுக்கு தேவை--சேவை---அதை அரசுத்துறையால் தரமுடியவில்லையே ?--இன்றைய நிலையில் போக்கு வரத்து கழகங்களின்  நஷ்டத்தை உங்களால் சீராக்க முடியாது..அப்படி ஒருவேளை நடந்தாலும் அது தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே ?...


நீங்கள் தான் புரட்சி தலைவி ஆயிற்றே--உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...அரசுத்துறையின் தோல்வியை ஒத்துக்கொண்டு ( சாரி உங்கள் மனசாட்சி இடக்கொடுக்காது--அப்படி வேண்டாம் )--எதாவது ஒரு காரணத்தை சொல்லி---பஸ் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடுங்களேன்.முதலில் ஒரு பெரிய தொகையை உங்களின் ரத்தத்தின் ரத்தங்கள் பார்க்கலாம்--அவ்வப்போது வசூல் நடத்த “அக்‌ஷய பாத்திரமாகவும் “ பஸ் முதலாளிகள் இருப்பார்கள்..எங்களுக்கும் ஓட்டை உடைசல்கள் பஸ்ஸிலிருந்து விடுதலை கிடைக்கும்..

ஒவ்வொரு விலை உயர்வும்--கட்டண உயர்வும் ---ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு-- மக்கள் அனுபவிக்கும் தண்டனையாக இருக்கிறது..5 வருடத்திற்கு ஒருமுறைதான் அரசியல் வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்..மக்களின் கோபத்தை சம்பாதித்ததனால் தான் திமுக ஆட்சி தண்டிக்கப்பட்டது..

உங்கள் ஆட்சியும் சம்பாத்யத்தில் (மக்கள் கோபம் உட்பட ) இறங்கிவிட்டது..சம்பாத்யத்தின் அளவை பொறுத்து தண்டனை நிச்சயம்--இதை உணர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவாவது..”ஊழலற்ற நிர்வாகம்--திறமையான நிர்வாகம் “ நடத்துவீர்களா ?--அதை இந்த விலை உயர்விலிருந்து தொடங்குவீர்களா ?.

Wednesday, November 16, 2011

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

ரேடியோ மிர்ச்சியில் இன்றுகாலை “சீமை சரக்குக் கடைகள் “( ELITE WINE SHOPS) பற்றி ஒரு கேலி விமர்சனம் கேட்டேன்.
“ஜெ” ஒரு controversy யின் கட்டாகவே ( bundle ) மாறி வருகிறார்..சமச்சீர் கல்வி---சட்டசபை கட்டிடம்—அண்ணா நூலகம்—இப்போது புதிதாய் 200+600—புதிய சாராயக்கடைகள்..திறப்பு அறிவிப்பு..


கீழ்த்தட்டு மக்களுக்கும் நடுத்தட்டு மக்களுக்கும் “டாஸ்மாக் “ மூலம் ”சாராய சேவை”—நடந்து வருகிறது..நடுமேல் தட்டு மற்றும் மேல்தட்டு மக்களுக்காகவே சீமைசரக்குக் கடைகளை அம்மா திறக்க இருக்கிறார்..
இவை முடிந்தவுடன் அடுத்த கட்டமாக..பெண்கள் குழந்தைகளுக்கான “சிறப்பு சாராய கடைகளை “ திறக்க அம்மா உத்தரவிடுவார்..
இது ரொம்ப “ ஓவராக “ இருப்பதாக நினைக்கவேண்டாம்—இந்த அரசின் “பணப்பசிக்கு “இது மட்டுமல்ல—இதற்கு மேலும் நடந்தாலும் நடக்கும்.

ஒரு அரசாங்கத்தின் கடமைகள் மூன்று—
1—ஒழுங்குபடுத்தல்—(REGULATORY )

தொலை தொடர்பு—வர்த்தகம்—போக்குவரத்து போன்ற துறைகளில் செயல்பாடுகளை நெறிமுறை படுத்தும்—ஒழுங்கு படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும்—செய்கிறதா?

2—வளர்ச்சி—( DEVELOPMENT)
1991 ஆம் ஆண்டுவரை நாட்டின் மொத்த வருமானத்தை ஜி.டி.பி.ஆல் வகுத்தால் தனி மனித வருமானம் என்றிருந்தது..இது உண்மையில் எல்லாதரப்பு மக்களின் வருமனத்தையும் பிரதிபலிக்க வில்லை.(.இன்று கூட நம் நாட்டின் தனிமனித வருமான்ம் ரூ.30 என மாண்டேக் சிங் அலுவாலியாவும்..இல்லை என வேறு சிலரும் கூறுவதை நாம் கேட்க முடிகிறது)..

ஆகவே பாகிஸ்தானின் பொருளாதார மேதை “மெஹ்பூப் உல் ஹக் “—அவர்களின் மனித வளர்ச்சிக்கான சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு—உண்மையான வளர்ச்சி எது என்பது மாற்றி அமைக்கப்பட்டது..

இன்று மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி—ஒரு பக்கம் அம்பானிக்கள்—அஜிஸ் பிரேம்ஜிக்கள்—மறு பக்கம் அன்னாடம் காய்ச்சிகள்—தினசரி கூலிகள்—என ஏற்ற தாழ்வுகள் “மலைக்கும் மடுவுக்கும் “ உள்ள இடைவெளியாகிவருகிறது..

இச்சூழலில் 10 ஆம் வகுப்பு பெயிலான ராமசாமியால்—எம்.பி.ஏ.பாஸ் செய்த ரமேஷோடு எப்படி போட்டியிடமுடியும்..ஆண் –பெண் பாகுபாட்டினால் எற்படுத்தபட்ட போட்டி—படிப்பு—அந்தஸ்து—ஜாதி—மதத்தால்—எற்படுத்தப்பட்ட போட்டி—இவைகளால் “வளர்ச்சி “ எல்லோருக்கும் எப்படி சமமாக போய்ச்சேர முடியும்.... இதை சரிப்படுத்துவதே அரசின் கடமை—வேலை—பணி—இதைச் செய்கிறதா நம் அரசு?

3—மக்கள் நலன்,,-(WELFARE )
அரசின் மிக முக்கிய பணி மக்கள் நலன்--..வளர்ச்சியை முக்கிய அங்கமாக செய்யும் அரசு –அதை முழுவதும் சமமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் காலம் வரை “வீழ்ந்து கிடக்கும் குடிமகனை “—தூக்கிவிட ஏதுவாக –இலவசங்கள்—கல்வி..வேலை வாய்ப்பில் இடஒதிக்கீடு—மான்யங்கள்—தர வேண்டும்..

இதில் அரசின் –பங்காக—பணியாக—வேலையாக—கடமையாக—”சாராயம் “ எங்கே வந்தது?—

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் குடிமகனை சாராயத்தினால் வீழ்த்தி—நிரந்தரமாக “வீழ்ந்து கிடக்கும் “”குடி “ மகனாக “அரசு ஏன் ஆக்கவேண்டும்?—

நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டிய திட்டங்களுக்கும்,,பணம் திரட்ட வேறு வழியே கிடையதா?—

ஆம்—உண்டு—இருக்கு—எஸ்---

பின் ஏன் முந்தைய கருணா அரசும் இன்றைய “ஜெ” அரசும் சாராயத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்கிறது?
மதுவிலக்கு இருந்தும் கூட பொருள் திரட்டும் “குஜராத்தை பாருங்கள் “ என்று நாம் அடிக்கடி சொல்லவேண்டுமா?

3 நாளைக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு புள்ளிவிவரம் வெளிவந்தது..அதில் 2011—அக்டோபர்-- நவம்பர் –மாத “டாஸ்மாக்’ விற்பனை உயர்வு---16.78-சதம்----டாஸ்மாக்குக்கு சப்ளை-செய்யும் “டிஸ்லரிகள்”—அவைகளில் “பேராசைகாரன் “—தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்னும் வரம் கேட்ட  “மிடாஸ் “என்ற மைதாஸ் பெயர் கொண்ட டிஸ்ட்லரி—ஜெ வுக்கு சொந்தம்—(இதை ஜெ பலமுறை மறுத்திருக்கிறார்.இருந்தாலும் உண்மை ஊரறியும்.).இதன் விற்பனை உயர்வு 34 சதவீதம்---இப்போது புரிகிறதா சாராயம ஏன் தொடர்கிறது என்று..-

இந்த லாபங்கள் யாருக்கு போகிறது---ஜெ யிக்கு..

மக்கள் நல திட்டங்களை செயல் படுத்த அரசுக்கு வருவாய் ஈட்ட—வேறு வழி தெரியவில்லை—எனவேதான் சாரயங்கள் தொடர்கிறது..”டாஸ்மாக்” திறந்திருக்கிறது..பெருந்தனக்காரர்கள்—சீமான்களுக்காக---சீமை சரக்கு கூடங்களை சீஃப்மினிஸ்டர் திறக்க இருக்கிறார்..இதன் மூலம் அதிக வருவாய் வருமல்லவா?—அதன் மூலம் அரசு--- நலத்திட்டங்களை செயல் படுத்தலாமல்லவா?—
இது உண்மையா?—

அரசுக்கு வருவாய் எனபதை விட அம்மாவுக்கு வருவாய்—ஆள்பவர்களுக்கு வருவாய்—எனபதே உண்மை..

மாறாக இந்த சாராய வியாபாரத்தால் சந்திக்கும் சமூக கொடுமைகள் என்ன என்ன??—மாற்ற முடியா பாதிப்புக்கள் என்னென்ன?

ஓட்டுரிமை வயது 18—ஆனால் குடிமகனின் வயது 13 ஆக குறைந்துள்ளது..(என்னே சாதனை )..
ஆண்டுக்கு 18 சதவீதம் புதுக்குடிகாரகள் உருவாகிறார்கள்..( என்னே வளர்ச்சி )—
தமிழக ஜனத்தொகையில் இன்று பாதிபேர் “குடிகாரர்கள்” –

விளைவு?
மனைவியை—குழந்தைகளை—அடித்து துன்புறுத்தும் “குடிகார “கணவன்கள் எண்ணிக்கை “விர்” ரென உயர்ந்து வருகிறது..

சம்பளம் முழுவது சரக்குக்கே செலவிடுவதால்—குடும்பச்சுமையை தாங்க வேலைக்கு போகும் சிறுவர்கள்..

குடும்ப அமைதி சீர்குலைவால் “விவாக ரத்து “கேட்கும் மனைவிமார்கள்—

நிரந்தர குடியால் உடல்நிலை கெட்டு சீக்கிரமே சிவலோக பதவி அடையும் கணவன் மார்கள்.—
அதனால் இளம்விதவைகள்..பெருகும் அபாயம்..

சாரயம் கொடுத்த தையிரியத்தால் –வழிப்பறி—கொள்ளை—கொலை—என பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு..( இதை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் திருமதி.ஹேமா கருணாகரன் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்)..

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் பெருகி வரும் சாலை விபத்து மரணங்கள்—

இவ்வளவு நன்மைகள் இருப்பதால்தான் அரசு “சீமான்களுக்காக”—புதிய சீமை சரக்கு கடைகளை திறக்கிறதோ?

இப்போது ஆரம்பித்தால் கூட மதுவை ஒழிக்கவும்---மது தங்களை ஒழிப்பதற்க்குள் அவர்களை காப்பாற்றவும்—அதற்கான சிகிச்சைகளை ஏற்படுத்தி—மறுவாழ்வு இல்லங்களை ஏற்படுத்தி—மக்களை ஆரோக்கிய பாதைக்கு கொண்டுவரவும் –இன்னும் 20திலிருந்து 30 ஆண்டுகள்வரை  ஆகும்.

இந்நிலையில்..சீமை சரக்கானாலும் சரி—நாட்டுச்சரக்கானாலும் சரி—சீமானுக்காகவும் சரி—சாமான்யனுக்காகவும் சரி—மேலும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது---மது விற்பது அரசின் வேலை அல்ல..

 

Tuesday, November 8, 2011

தமிழ் நாடும் தாய்லாந்தும



ஒருவாரம் பெய்தமழை தமிழ் நாட்டை உலுக்கி விட்டது..அப்படியானால் பேய் மழையா?—வரலாறு காணாத மழையா?—ஆண்டு சராசரியை தூக்கியடித்து “சிரபுஞ்சி நிலையா”?—ஊம்…ஹூம்…ஒன்றும் இல்லை..

பின் ஏன் இந்த நிலை?—தினசரி செய்தியில் வானிலை ஆராய்ச்சி மைய டைரக்டர் ரமணன் என்ன சொல்கிறார் என் எல்லோரும் ஆவலோடு பார்த்தனர்…

சென்னைக்குள் “ஆயிரம் குளங்கள் “—அம்பத்தூர் போன்ற “அவுட்டர் ஏரியாக்களில்”-சில இடம் “கடலாக காட்சி “—”நீ வரவேண்டாம் நானே வருகிறேன் “—என் சில தாழ்வுப் பகுதிகளில் வீட்டுக்குள் வந்த வெள்ளம்—தண்ணிக்கு அல்லாடும் திருப்பூர் பகுதியில் “ஆறு—ஊருக்குள் “ புகுந்து அழித்த அவலம்..

வேட்டியை மடித்துக்கட்டி..குடை சகிதமாக “மேயர்களும்—ம்ந்திரிகளும்”—தண்ணீருக்குள் மக்கள் படும் அவலத்தை பார்த்த  காட்சி..படங்களுடன் செய்தி..

இப்படி மக்கள் அல்லாட காரணம் என்ன?—அளவான் மழையே அளவில்லா சேதம் ஏற்படுத்த காரணம் என்ன?—இப்படி ஆயிரம் “என்னக்கள் “ உள்ளனவே இதற்கெல்லாம்.பதில்தான் என்ன..என்ன...

ரொம்ப சிம்பிள்—எதையும் திட்டமிட்டு செய்தால்…எந்த பேரிடரும் தீங்கிழைக்க முடியாமல் ஓடி ஒளியும்..
கோவையில் நிரஞ்சன் மார்டி என்பவர் கமிஷனராக இருந்தார்..பருவ மழை காலத்திற்கு முன்பே ஓடைகளை, கழிவுநீர் பாதைகளை, தூர்வாரி, சாலைக்குழிகளை செப்பனிட்டு விடுவார்..இதுதான் வருமுன் காத்தல்.இதை கடந்த முறை கமிஷனாராக இருந்த அன்சுல் மிஸ்ராவும் செய்தார்..அதை முடிக்குமுன்னே அவர் தூக்கியடிக்கபட்டார்..

இவைகளை செய்திருந்தால் “மழையால் மரணமடைந்தவர்” யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.ஒரு லட்சம் உதவி அவசியமாய் இருந்திருக்காது  .சென்னை தி.நகரில் சாலைக்குழிக்குள் ஆசிரியை விழுந்து அநியாயமாக பலியாகி இருக்க மாட்டார்கள். கருப்பு பேண்ட் போட்டுக்கொண்டு கணுக்கால் தண்ணியில் ஸ்டாலின் “பிரெட்” வினியோகித்திருக்க மாட்டார்..

நமக்கருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டிலும் வரலாறு காணாத மழை..4 தலைமுறையாக இதுபொன்ற மழையை மக்கள் பார்த்ததில்லையாம்.உலகின் மிகப்பெரிய கம்யூட்டர் ஹார்டுவேர் பொருட்களும்—கார் உதிரி பாகங்களும் தயார் செய்யும் நிறுவனங்கள்..இங்குதான் இருக்கின்றன.

ஒருசில உதிரி பாகங்கள் –உலகில் தயாரிக்க படுவதில் நான்கில் ஒரு பகுதி இங்குதான் தயாரிக்க படுகிறது என்றால் எவ்வளவு பெரிய தொழிற்சாலைகள் இங்கிருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்..

நம்மூரில் தண்ணீர் வடிந்து விட்டது..அங்கு மூன்று வாரமாகியும் தண்ணீர் வடிந்த பாடில்லை….ராட்ஷ்ச மோட்டார்கள் 24 மணிநேரமும் வேலை செய்தும் நீர் குறைந்த பாடில்லை..அரிக்கும் அமிலத்தன்மையில் தண்ணீர் இருக்கிறதென்றால் எவ்வளவு “மாசு “பாருங்கள்..நாம் தேவலாமோ?

ஆம்..அவர்களும் சில விஷயங்களில் நம்மோடு போட்டி போடுகிறார்கள்..வடக்கு பாங்காக்கில் தான் இவ்வளவு சேதம்..காரணம்—விளை நிலங்கள் அழிக்கப்பட்டு—நம்மைப்போல் ரியல் எஸ்டேட்—ஷாப்பிங் மால்—தொழிற்சாலை கட்டப்பட்டதால்..நீ உறிய—வடிய வழியில்லாமல் போனதாம்..

இதற்குக் காரணம் நில உடமைதாரர்களுன் பேராசைதான் காரணம் என்கின்றனர் அங்குள்ளவர்கள்..எப்படி தாய்லாந்தும் நம் தாய்நாடு தமிழ்நாடும் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா?

அது கிடக்கட்டும்..இந்த மழையை தாங்கி விட்டோம்—அடுத்த ஆண்டு வரும் மழையை தாய்லாந்து தாங்க முடியுமா? என்றால்..நிச்சயமாக தாங்கமுடியாது..என்கிறார்கள் தாய்லாந்துகாரர்கள்..ஆனால் அதற்குள் வடிகால் உருவாக்கி விடிவு காண்போம் என்றும் சொல்கிறார்கள்.

நம்மால் அப்படி சொல்ல முடியுமா?—எத்தனை ஆண்டுகளாக மழை பெய்கிறது..வெள்ளம் வருகிறது—குடில்கள் சேதம்—சாலை சேதம்—பொருள் சேதம்—உயிர் சேதம் ஏற்படுகிறது--.விடிவு உண்டா?—ஆட்சி மாறுகிறது—காட்சிகள் மாறுவதில்லையே?—கஷ்ட்டப்படுவது எங்கள் விதி—தலை எழுத்து—இது எப்போதும் மாறாது-----இதுதானே சரி…

Monday, November 7, 2011

அம்மாவுக்கு ஒரு சொல்

அம்மாவுக்கு ஒரு சொல்

வீட்டை   இடி   மாளிகை  கட்டு
காரை  மாற்று  கடனை  வாங்கு

ஒருவாய்   சோற்றுக்கே
ஊசல்   ஆடும்போது
இவைபோல்   ஆர்ப்பாட்டங்கள்
அவசியமா   அம்மா

செயலகம்   கட்டி
செயலற்றுப்  போச்சு
நூலகம்  கட்டி
படிப்பற்று  போச்சு

ஒருவர்  கட்டுவதும்
வருபவர்  அழிப்பதும்
யார்வீட்டு  சொத்திது
ஒங்கப்பனா  எங்கப்பனா

ஆக்கபூர்வமாக  செயல்  பட
ஆயிரம்  இருக்குதே அம்மா
அதை  செய்யுங்க  அம்மா
மற்றதை  மறங்க  அம்மா..

Sunday, November 6, 2011

நல்ல மாப்பிள்ளை--நல்ல மாமனார்

முத்து வேலருக்கு மூன்று மருமகன்கள்---மனைவி ராசாத்திக்கு மகள்கள் மீது அதீத பாசம்..மகள்களை...மருமகன்கள் நன்றாக வைத்துக்கொள்கிறார்களா? என்கிற சந்தேகம் மாமியாருக்கு நீண்ட நாட்களாக இருந்தது.ஒரு “டெஸ்ட்” வைக்கத்தீர்மானித்தாள்..

ஒரு நாள் முதல் மருமகனை அழைத்துக்கொண்டு ”போட்டில்”-- கடலுக்கு போனாள்..திடீரென தண்ணீரில் குதித்து “காப்பாற்று--காப்பாற்று” --என சத்தமிட்டாள்..மருமகன் பதறிப்போய்...மாமியாரை காப்பாற்றி வீடுவந்து சேர்ந்தான்..ராசாத்திக்கு ஒரே சந்தோஷம்--முதல் மருமகனுக்கு ஒரு “இன்னோவா கார் “ பரிசளித்தாள்.

ஒருமாதம் சென்று இரண்டாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட் “டை வைத்தாள்..அவனும் காப்பாற்றி கரை சேர்ந்தான்..இரண்டாவது “இன்னோவா” வீட்டில் காத்திருந்தது..

இன்னொரு மாதம் சென்று மூன்றாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட்”--ராஜாத்தி நீரில் குதித்தாள்..காப்பாற்று காப்பாற்று என கதரினாள்.மருமகன் கண்டுகொள்ளவில்லை..”ஒரு ராட்சசியை மகளாக பெற்று என் தலையில் கட்டிவிட்டாய் அல்லவா?”--செத்து மடி--அதான் உனக்கு தண்டனை--என அவளை சாகடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்..

அங்கே அவனுக்கு “ஒரு பென்ஸ் கார் “ காத்திருந்தது...ஆம்..ராசாத்தியிடமிருந்து தன்னை காத்ததற்காக--முத்துவேலரின் அன்புப் பரிசு...

புரட்சித் தலைவியின் “சீட்டுகட்டு ராஜாக்கள் ”—பாகம் 1



இடம் –போயஸ் தோட்டம் –கான்ஃபரன்ஸ் ஹால்

“ ஜெ “ –சசி—சோ—இளவரசி---வளர்மதி—பேசிக்கொண்டிருக்கிறார்கள்..

ஓ.பன்னீர் செல்வம் சோகமாக உள்ளே நுழைகிறார்..

ஜெ---ஏன்யா..மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டுருக்க…உன்னதான் ..மாத்தல்லியே.

ஓபி---அதான்மா பயமா இருக்கு---அடுத்து நான் தானோ.ன்னு.

சசி—சேச்சே—அக்கா அப்பிடி செய்யமாட்டாங்க---செங்கோட்டையன பாத்து பயந்துட்டுங்கிளா-----பெங்களுரு கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு நீதான்யா சிஎம்..

ஜெ----(-சசியை முறைத்துப் பார்த்து…)---அப்பிடி எதுவும் நடக்காது---நம்ம ஜோசியர் சொல்லிட்டார்---

சசி-----அதுக்கில்லக்கா---ஓபிஎஸ்..மாதிரி நல்ல ”எந்திரன் “ நமக்கு யார் கிடைப்பாங்க அக்கா..

ஜெ----ஆமான்..ல்..ல..

வளர்மதி---அம்மா..என்ன..கொஞ்சம்..கவ…னிங்க..ம்மா----…(என இழுக்க..)

சசி---நீ 25 வது ரீஷஃப்ல இருக்க..வளர்..

வளர்மதி----அம்மா அவ்வ்ளவு நாளாகுமா..

ஜெ----அது ஒன் அதிர்ஷ்டத்தை பொறுத்தது..அடுத்த மாசமே வந்தாலும் வரலாம்..

சோ---அதிருக்கட்டும் அம்மு---( சோ--—ஜெயை அப்படித்தான் அழைப்பாராம் )—இந்த லைப்ரரியை மாத்தரது எனக்கு சரியாப்படல்லை..

ஜெ-----எனக்கும்தான்-இந்த “பெரிசு “சும்மா இல்லாமல் என்ன சீண்டிகிட்டே இருக்கே----அப்ப நான் மாத்துரத தவிர வேறு என்ன செய்ய—

சோ-----இவ்வளவு ..மக்கள் ..எதிர்ப்பு இருக்கே----

ஜெ------எந்த மக்கள் எதிர்ப்பும் இல்லை—கருணாநிதி மக்கள் மட்டும்தான் எதிர்க்கிறார்கள்ளுன்னு..உளவுத்துறை டி.ஐ.ஜி.யே சொல்லிட்டார்..ஜோசியர் பணிக்கரும்..லைப்ரரி குள்ள..கண்ணகியோட புக் ஒண்ணு இருக்காம்—அது எனக்கு ஆகாதாம்—

சோ---அதுக்காக…லைப்ரரியவே மாத்தணூமா---

ஜெ-------லைப்ரரிய மாத்தரப்ப அந்த புக்க தூக்கி எரிஞ்சுடுவேன்..இல்ல

இந்நேரம் பார்த்து ஐ.ஏ.எஸ்—ஐ.பி.எஸ்----ஆஃபிஸர் அச்சோசியேஷன் சேர்ந்தவர்கள் உள்ளே வந்து ஜெ யிடம் ஒரு மகஜர் தருகிறார்கள்..
அதில் அடிக்கடி “மாற்றல்கள்” சிரமமாக உள்ளது என்று இருக்கிறது

ஜெ---அதுக்கு நான் என்ன செய்யணும்---

ஆஃபிசர்கள்---   மேடம்—நீங்க—பதவியையும்—ஊரையும் மாத்துங்க—ஆனால்..நாங்க உக்காந்திருக்கிற சீட்டை மட்டும் மாத்தாதீங்க..எங்களால அலைய முடியலை..

சோ---அது எப்பிடி முடியும்—

ஜெ---சோ..நீங்க சும்மா இருங்க---( ஆஃபிசர்களை பார்த்து ஜெ )நீங்க அதே சீட்ல அதே ஊர்ல இருங்க---டிபார்ட்மெண்ட் அங்கேயே வரும் –நான் பார்த்துக்குரேன்..

அப்போது செங்கோட்டையன் உள்ளே நுழைகிறார்..

செங்----அம்மா—ஐ.டி—பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதேம்மா—

ஜெ-----ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்கரது..எனக்கு தெரியும் –அதனால தான் போட்டேன்..

செங்—இன்னும் எவ்வளவு நாள் நான் கஷ்ட்டப்படணூம் அம்மா

ஜெ----ஜஸ்ட்—25 அவர்ஸ்

சோ---அதென்ன 25 மணி நேரம்..அம்மு

ஜெ-----எத செஞ்சாலும் 16—25---34—லதான் செய்யணுமாம்—ஜோசியர் சொல்லியிருக்கார்..

சோ—அப்ப மந்திரி மட்டும் எப்பிடி 6 மாத்தின

ஜெ---இந்த மாசம் 6 தான் நல்ல நம்பர்

சோ---நீங்க போர போக்க பாத்தா..எல்லாருக்கும் மந்திரி பதவி கொடுத்துடுவீங்க போல இருக்கே அம்மு

சசி---துக்ளக் ஸார்..( சோவை சசி அப்படித்தான் அழைப்பாராம் )ஒருசில பேருக்கு ஒருதடவைக்கு மேல் சான்ஸ் கிடைக்கலாம்

சோ----அடுத்தடவை மந்திரிங்களை எப்பிடி செலெக்ட் பண்ணுவீங்க சசி—

சசி—செலக்‌ஷனாவது மண்ணாவது---முதல்ல அக்காவோட---,என்னோட ஜாதகத்தோட ஒத்து போகணும்---குடுக்குர பொட்டிய திறக்காம கொண்டு குடுப்பார்ன்னு உளவுத்துறை டி.ஐ.ஜி.சொல்லணும்..அப்புறம் அக்கா சீட்டு குலுக்கி போடும்—நான் எடுப்பேன்..

சோ---மொட்டை தலையை தடவியபடி---இப்பவும் நம் செலக்‌ஷன் தப்புதான் போலிருக்கிறது--என முணுமுணுத்தபடி நடையை கட்டுகிறார்..

அப்ப நாமும் தலைப்ப மாத்துவோம்—சீட்டுகட்டு ராஜா இல்ல—சீட்டுகுலுக்கல் மந்திரிகள்..

இலவச இணைப்பு:-----