Pages

Friday, December 16, 2011

சோனியாவும் கலஞரும் மாறிவிட்டார்கள்---புதிய “வேக்சின்” (vaccine )--மகத்துவம்



அப்பப்பா...அப்பப்பா...--என்ன சண்டை...என்ன சண்டை--காலைல எழுந்திருச்சா....எந்த செய்தி “சானலை ‘ திருப்பினாலும்...ஒரே போராட்ட மயம்..

அதுக்கும் ஒரு எல்லை இல்லை...விவஸ்தையும் இல்லை..ஒரு ஊரே மலைமேல ஏறி நின்னு தற்கொலை பண்ணிக்குமாம்..முல்லைபெரியார் பிரச்சினையை தீர்க்கலைன்னா..

இதுவரை மாநில லெவலுக்கு வந்துவிட்டோம்..இனி இது ரொம்ப ஸ்பீடாக மாறி--..மாவட்டம்---ஊரை கிராஸ் செய்து...தெருவுக்கு தெரு சண்டை வரவேண்டியதுதான் பாக்கி..அதுவராதுன்னு உறுதியா சொல்லமுடியல்லியே..

கற்பனை செய்யமுடியாதது எல்லாம் “நிஜத்தில் “ நடக்கும் கலிகாலம் தான் இது.

அது சரி மலையாளி கடைகளையெல்லாம் உடைக்கிறோமே....கேரளாவில் இருக்கும் தமிழனின் நிலையை எண்ணி பார்த்தோமா?  -நம்மை பார்த்துட்டு அவங்களும் செய்ய நாம் காரணமாகணுமா?-- நாம் நிறுத்தக்கூடாதா?--”அவனை நிறுத்த சொல்லு..நான் நிறுத்தரேன்னு வசனம் பேசணுமா?--

பால் பொங்கி கருகின வாட வருது...சாம்பார் மணம் மூக்கை துளைத்து  ஒரேடியா பசி ஆகுது ---“இதற்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன்தான் காரணம்-- என்று அடித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் போகப்போகிறோமா?--

இதெல்லாம் நமக்கு பழக்கமானதா?--இவ்வாறு நாம் செய்திருக்கிறோமா?--நமக்கு அன்னியமான விஷயங்களை எல்லாம் நாம் தேடி போய் செய்து கொண்டு இருக்கிறோமே..
நம் உறவுகள் எவ்வளவு சௌஜன்யமானது--அதாவது பரிபூரணமானது---விட்டுக்கொடுத்து வாழ்வது...இது எங்கே போனது--இதன் சிதைவுக்கு யார் காரணம்?--

உலக நாடுகளிலேயே குடும்ப உறவு பூரணமானது நம் நாட்டில் மட்டும் தான்..”வசுதெய்வ குடும்பகம்”--அதான் பக்கத்துவீடு---பக்கத்து மாநிலம்...பின் ஏன் அடித்துக்கொள்கிறோம்.?

ஒரு பிரச்சினைக்கு மாநில சட்டசபைகள் தீர்மானம் போடுகிறது? யாரை திருப்திப்படுத்த?--  யார் தவறை மறைக்க?-- தலைவர்கள் “பாகிஸ்தானை---சீனாவை”--திட்டுவதுபோல --அண்டை மாநிலத்தை திட்டி வீர உரை ஆற்றுகிறார்கள்..மககளை உசுப்பேத்துகிறார்கள்.

மாற வேண்டியது யார் மக்களா?--மன்னனா?--தவறிழைத்தது யார் மக்களா?--மன்னனா?--நிவாக சீர்கேடு யாரால்?--மக்களா?--மன்னானா?

காமராஜர் முதல்வராக இருந்தபோது காவிரியில் தண்ணீர் திறக்க போராட்டம் ஏதும் நடக்கவில்லையே ஏன்?--
அன்றைய முதல்வர் நிஜலிங்கப்பாவோடு பேசி காதும் காதும் வைத்தமாதிரி..தண்ணிர் திறந்துவிடப்பட்டது..அரசியல் இல்லை...ஆர்பாட்டம் இல்லை..மக்களுக்கு தெரிய வேண்டியது மட்டும் தெரிந்தால் போதும்..அரசியல் ஆதாயத்துக்காக அநியாயமாக மக்களை தவறான வழியில் நடத்தவில்லை..

இன்றைய தவறுகளுக்கு யார் காரணம்?--ஆட்சியாளர்கள்தானே?--அவர்கள்தானே திருத்திக்கொள்ள வேண்டும்..பின் ஏன் நாம் மலை மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?--கட்சிகளும் கனவான்களும் செய்து கொள்ளட்டுமே?--

யார் கேட்டார் இந்த சட்டசபை தீர்மானங்களை?--அரசின் முழுபக்க விளம்பரங்களை..பஸ்--ரயில் மறியல்களை.

நேற்றைய “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” ஒரு செய்தி..ஏதோ “synthetic biology "--யாம்...அதிலெ ஒரு மருந்தாம்... computer software இல் செய்வது  போல அந்த மருந்தில் ஏற்கனவே “புரொகிறாம் “ செய்திருப்பார்களாம்..  ..அதை நம் உடலில் செலுத்தினால்..அந்த “புரோகிறாமில்” உள்ளது போலவே நம் மூளை செயல் படுமாம்..

அப்பாடா..இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று கவலையாய் இருந்தேன்..பயந்திருந்தேன்..இப்போது விடிவு கிடைத்து விட்டது..

“சண்டை சச்சரவை உருவாக்காத....ஊழல் புரியாத....நிர்வாகத்திறன் கொண்ட...மக்களை நேசிக்கிற மன கொண்ட ஒரு “புரோகிறாமை “ கொண்ட “வாக்ஸினை “ரெடி பண்ணி  சோனியா---உம்மன் சண்டி---ஜெயலலிதா..கருணாநிதி--லாலுபிரஸாத்--மாயாவதி---மன்மோகன் சிங்---குழுமத்திற்கு செலுத்தினால்....தீர்வுகிடைப்பது நிச்சயம்..

மருந்து வரப்போகிறது..நம் பிரச்சினை தீரப்போகிறது...நன்றி.....சிந்தடிக் பயாலஜி..மீண்டும் மீண்டும் நன்றி--உனக்கு.

No comments: