Pages

Thursday, December 15, 2011

பயம் ---பிராண நாசம்---ஜெ..யும்...சோனியாவும் வளர்ச்சி நாசம்



நீரின்றி வாழ்வே பறிபோகும்--இது தமிழகம்
நீரினால் உயிரே ஜலசமாதி ஆகும்--இது கேரளா

அணு உலை எங்கள் உயிருக்கு உலை வைக்கும்----இது கூடங்குள மக்கள்
வீட்டில் உலை கொதிக்க அணு உலை இயங்க வேண்டும்--இது தமிழக மக்கள்

ஒரு பகுதிக்கு வாழ்வு தரும் நீரும் ---உலையும்--இன்னொரு பகுதிக்கு காலனாக இருக்கிறது--இது உண்மையா?---இப்படித்தானே அந்தந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்..அதனால்தானே போராட்டம்.

முல்லைப்பெரியார்...இத்தனை லட்சம் மக்களுக்கு உணவளிக்கும் பாசனப்பகுதிகளுக்கான நீர் ஆதாரம்--அது பறிபோனால்..நாங்கள் பட்டினிகிடப்போம்.இது அப்பகுதி மக்கள் வாதம்

முல்லைப்பெரியார் உடையாமல் காக்க --இத்தனை லட்சம் டன்னில் -- கான்கிரீட் சுவர்கள்--கயிறுகள்---கம்பிகள்---ஆகவே கவலைப் படகாரணமில்லை--இது பொறியாளர்கள் அறிக்கை..

முல்லைப்பெரியார்---தமிழகம் சொல்கின்ற பாதுகாப்புக் குறிப்புக்களை பரிசீலித்ததில் --அவைகள் திருப்திகரம்--இது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்திற்கு தண்ணீர் தர எங்களுக்கு ஆட்சேபம் இல்லை--ஆனால் டேம் உடைந்தால்----3 ஜில்லாக்களில் மக்கள் “ஜலசமாதி “ ஆவார்களே--இது சரியா?
இது கேரளா வாதம்

டேம் பகுதி நில நடுக்க தாக்குதலுக்கு உட்பட்ட பகுதி--எந்நேரமும் நிலநடுக்கம் வரலாம்--வந்தால்---டேம் உடைந்தால்---உங்களை காக்கும் நீரே---எங்களை அழிக்குமே--இது நியாயமா?--இது இடுக்கி மக்களின் வாதம்--

மாறி மாறி மாநில அரசாங்கங்களின் அறிக்கை போர்--இரு மாநில மக்களிடையேயும் ஒரு அறிவிக்கப்படாத “போர் சூழல்”
நாம் எங்கே போகிறோம்?--இதற்கு தீர்வுதான் என்ன?  தீர்வு கிடைக்குமா?--சாத்தியமா?--

தீர்வு வந்துவிடக்கூடாது எனபதில் தீவிரமாக இருக்கும் கட்சிகளே ஆண்டன--ஆள்கின்றன--இது ஒரு புறம்..

கூடங்குளம் அணு உலை தொழில் நுட்பம்--- ரஷ்யவின் செத்துப்போன பழைய தொழில் நுட்பம்---அதை செயல் படுத்தி எங்களையெல்லாம் செத்துப்போகச் சொல்கிறீர்களா?--
செர்னோபில்---ஜப்பாந்-அணு உலைகள் வெடிப்பில் ஆயிரக்கணக்கில் மரணம்--லட்சக்கணக்கில் பாதிப்பு.. --தொழில் நுட்ப “கிங் “--ஜப்பானே இப்படி என்றால்...”பிஸ்கோத்து நாம்”-எங்கே?---கூடங்குளத்தில் எங்களை கொல்லவா பார்க்கிறீர்கள் ?--இது கூடங்குள மக்கள்

நம் மின் தேவை “விலைவாசி மாதிரி “ விர்ரென உயர்ந்து வருகிறது.மின் தேவைக்கும் தயரிப்புக்கும் உள்ள பெரும் இடைவெளியே 7--8 மணி நேர மின் வெட்டு...கூடங்குளம் இயங்கினால் நம் வளர்ச்சி உயரும்--இது தமிழக மக்கள்..

பிரச்சினையை சுருக்கினால்....கூடங்குள மக்களும் கேரள மக்களூம் ஓரணி---தமிழக மக்கள் ஓரணி என்று இப்போது எடுத்துக்கொள்லலாமா?  ஓகே..
இந்த இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் “ SILVER LINE " என்ன?/--

யார் பிரச்சினையை கிளப்பி விட்டார்கள்?--யாருடைய வாதம் சரி ?--ஸ்ட்ராங்?--யாருடைய தேவை ஞாயமானது?  இதற்கெல்லாம் பதில் நிச்சயமாக அவசியமில்லை..தீர்வுக்கு இவை எள்ளளவும் உதவாது...

வேறு வழி-?---உன் உயிருக்கு ஆபத்து---நீ ஜலசாமாதி ஆகிவிடுவாய்---என்று சொன்னால்--உன்னை அணுக்கதிர்வீச்சு கொன்று போடும்-- என்று சொன்னால் ---நம்பினால்----அரசோ--ஆள்பவரோ---தங்கத்தை மூட்டை மூட்டையாக கொடுத்தாலும்---ஹெலிகாப்டரை வீட்டுவாசலில் கொண்டு நிறுத்தினாலும்---மக்கள்  ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் மனம்தான் மாறுமா?---
உயிரா?---..சோறா..?-----ஒருபக்கம்----உயிரா..?---வளர்ச்சியா.?--மறுபக்கம்..

உயிருக்கு உத்தரவாதம் தருவோம் என்று யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்..அப்துல் கலாம் சொன்னார் --மக்கள் கேட்கவில்லையே--சுப்ரீம் கோர்ட் சொன்னது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லயே---

சோனியா--ஜெ---கருணா போன்ற ...வாக்கில் நேர்மையும் --தூய்மையும் இல்லாத தலைவர்கள் கூட்டமே மண்டிக்கிடப்பதால்... நாட்டின் வளர்ச்சி நாசம்...--அதன் தொடர்ச்சிதான்  போராட்டம்..

உண்மை ஊர்வலம் வர வேண்டும்--பொய்மை மூலையில் கிடத்தப்படவேண்டும்--அப்போதுதான் மக்கள் மனதிலுள்ள பயம் விரட்டப்படும்..ஊருக்குள் உலவும் சிங்கம்---- கூடங்குளமும் --முல்லைப்பெரியாரும் கூண்டிற்குள் போய் அடையும்..

No comments: