Pages

Monday, December 1, 2014

ஹெச்.ராஜா..பேசியது..சரியா?

அடிப்பது குற்றம் இல்லை--அழுவதுதான் குற்றம் என்றால் --ராஜா பேசியது தவறுதான்..

கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்..

ஒரு கட்சியின் தலைவரும்... நீண்ட அரசியல் அனுபவமுள்ள “வைகோ”--- தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்.. 
பேச்சில் எது சரி?--எது தவறூ ? என்று யார் தீர்மானிப்பது?தமிழருவி மணியனா?--ஜி.ராமகிருஷ்ணனா? 
அரசியல் நாகரீகம் என்பது என்ன?--அதையும் யார் நிர்ணயிப்பது?--ஈ.வி.கே.எஸ். இளங்கோவ்னா? 
போதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்--மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் “சுதந்திரமாக” 
இறங்கினர்.. 
இது எப்படி சாத்தியமாயிற்று?--யாரால் விடுதலை கிடைத்தது?--
காத்மாண்டு நகரில், “சார்க்க்” மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே --மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்.. 
இதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள “வைகோ” மட்டும் விடுதலையை” நாடகம்”-- என்று சொல்லுவது எந்த ”அரசியல்”--”கூட்டணி”--”நியாயம்”-”-தர்மம்”-- என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்.. 
வைகோ இதை நாடகம் என்று சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது ..காரணம் “இலங்கை பிரச்சனை “ வைகோவிற்கு வியாபாரம்--என்று அநாகரீகமாக சொல்லமாட்டேன்..வாழ்வாதாரம்..மோ--டியால் அது ”முடியும் நிலைக்கு”- வந்துவிட்டதால் ஏற்பட்ட “குமுறல்”..அதன் வெளிப்பாடே இந்த “வார்த்தை பிறழல்கள்”--அல்லது தடித்த வார்த்தைகள்.. 
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்...”இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்--உதவியும் வேண்டாம்--உபத்திரமும் வேண்டாம்”--நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்..” என்ற பிறகும்-- வைகோ--”வாக்கெடுப்பு நடத்த கோருவதும்”--அதற்காக ”காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த  இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை” என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை.. 
காரணம்...இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் “ அரசியல் சட்டம் என எழுதி--வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்” என்று ஜகா வாங்கி  விடுதலை பெற்றார்கள்.. 
“அடைந்தால் திராவிட நாடு--இல்லையேல் சுடுகாடு” என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அடக்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது. 
எனவே இவை திராவிட கட்சிகளின் “ஸ்டைலான” “போர் முழக்கம்”-- 
இது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், “வா--போ---வாடா--போடா”--என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம்  கவலை இல்லை....,  
ஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்?
 
அப்படிப்பட்ட “ஜடமாக” பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை.. 
சகதி எடுத்து வீசி--துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ---அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது.. 
நவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்.. 
மாறாக-- பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா? 
ஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய “தோலின் சென்சிவிட்டி”--அவ்வள்வுதான்.. 
இன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..

தலைவனை காக்க  வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..

ஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி-- சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.

வைகோ எப்போதும் “அதிர்ஷ்ட்ட கட்டை” என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து “நாக்கில் நர்தனமாடி” இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..

எதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன?

என்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..

போகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ--புரிஞ்சுக்குங்க---

.

Friday, October 10, 2014

"ஜெ " கைது "ரியாக்ஷன்" சிநிமாத்தனமாக

சினிமா கதாநாயகன்/  நாயகி,..சாதாரண சட்டை --அதுதான்-நாம்  போடும் சட்டை..போல்.. அணிந்திருந்தால் அவன்/ அவள் ..சினிமா கதாநாயகன்/ நாயகி அல்ல..

பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு  அலகு குத்தி,  காவடி,--8 பேரோடு  தீமிதி,---முன்று பேரோடு  அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது   சினிமாத்தனம்  அல்ல ..

108 பால் குடம்--1008 அலகு  குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது   சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை  விடுதலை கோரி அதிமுக காரன்   செய்தது போல-- .

 மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி  வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை  காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும்,  ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
"புதிய ஆங்கிள் " .கிடைக்கும்... .
  வேலூரில் தீமிதிப்பு,முப்பாத்தம்மன் கோவிலில் பால்குடம்,--குடந்தையில் யாகம், குமரியில் முளைப்பாரி, தேனியில் மண்சோறு, மதுரையில் அரிவாள் நேத்திகடன், பழனியில் மொட்டை என ஊருக்கு ஊர் "மாறுபட்ட ரோலில்" உடன்பிறப்புக்கள் ஆர்பாட்டம்..

, கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?

""தெய்வத்துக்கு சிறையா ?"---

"கர்னாடகாவே -- காவிரியை எடுத்துக்கொள்-- அம்மாவை விட்டுவிடு?"
" அம்மாவே வாயுபகவான்..உன்னோடு பெங்களுருக்கு வந்துவிட்டதால் ?--தமிழகத்தில் நாங்கள் முச்சுவிட திணறுகிறோம் --உடனே அனுப்பிவிடு அம்மா?"--
 இதைவிட பெரிய சினிமாத்தனம் --அமீருக்கும்--சீமானுக்கும், பாரதிராஜாவுக்கும் தான் .தெரியும்
அம்மா இத்தனை  நாட்கள் ஏசியில் இருந்து சலித்துப்போய் --ஒரு மாறுதலுக்காக "டிசியில்"( டிவைன் செல்) இருக்கிறார்.
பெங்களுருவின் இயற்கையான  குளிர்ச்சியும்,பரப்பர அக்ரஹார "புளியோதரையும், தயிர்சாதமும்," அம்மாவுக்கு அவர்களின் "அம்மாக்கால" நினைவுகளை ரீங்காரம் இடலாம்..
அன்பிற்கினிய  ரத்தத்தின் ரத்தமான அதிமுகவின்  உடன்பிறப்பே---நீ  போய் -பெங்களுரு சிறை --கோர்ட்டுமுன் "கத்தி--கோஷம் போட்டு, "ஜட்ஜுகளை "உசுப்பேத்தி",..வெளியே வரவேண்டிய உன் அம்மாவை--உள்ளே தள்ளிவிட்டாயே..

 ..இதற்கு உன் "சினிமாத்தனமான"---நடவடிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் தான் காராணம் என்றால் நீ  நம்பவா போகிறாய் உடன் பிறப்பே ..
சுப்ரீம் கோர்ட்டிலாவது உன் அம்மாவிற்கு பெயில் கிடைக்க வேண்டும் என்றால் உடன்பிறப்பே ---
பால்குடம் எடு-----ஆனால் அது பக்தியோடு---பணிவாக --கனிவாக--காதும் காதும் -வைத்தமாதிரி-தனியாக -- நீயாக எடு.-.கேமராவை  கூட்டிச்செல்லாதெ --ஜெயா டிவிக்கு "சிடி"கொடுக்காதே..பேஸ் புக்கில் போடாதே
அப்போது--அப்போதுமட்டுமே இது இயல்பானது..எதார்த்தமானது ..
அதுதான் " ஆண்டவனை மயக்கும்..கோர்ட்டை  மடக்கும்,அம்மாவை விடுவிக்கும் "--செய்வாயா?

Tuesday, October 7, 2014

”ஜெ”யை விடுவிக்காவிட்டால்…----?????????


“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல..

“ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த தண்டனை தவறு என்றோ நான் எழுதப்போவதில்லை..

இந்தியாவின் நீதித்துறை—சட்டம் எல்லாம் மே மாதம் 26 ந்தேதிக்கு முன்பாக “ஒரு மாதிரியாகவும்”, தற்போது “வேறு ஒரு மாதிரியாகவும்”, அதாவது “தள்ளாடாமல்” –சுத்ந்திரமாக, “தன்காலில்” நின்று செயல்படுகிறது..அதனால்தான் எழுதப்பட்ட தீர்ப்புக்கள் ”திருத்தப்படாமல்” வாசிக்கப்படுகின்றன..இங்கே “நீதி விற்பனைக்கல்ல” என்ற நிலை எழுந்துள்ளது..ஆறுதலான விஷயம்..

அது போகட்டும் ,,விஷயத்துக்கு வருகிறேன்..”ஜெ” யின் “வழக்கு தீர்ப்புநாள்” மற்றும் இன்று அதாவது “ஜாமீன் மனு தீர்ப்பு நாள்” இரண்டுக்கும் சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்..

செப்டம்பர் 27ந்தேதி “தீர்ப்பு” நாளன்று..பகல் 1.00 மணிவரை “தீர்ப்பு” தண்டனையில் முடியுமென்று..யாராலும் ஊகிக்க முடியாத படி கோர்ட்டின் செயல்பாடுகள் இருந்தது..3.00 மணிக்கு “ஜெ” குற்றவாளி—5.00 மணிக்கு தண்டனை விவரம் அறிவிப்பு வெளியானது..

அதெமாதிரி அக்டோபர் 7-ந்தேதியான இன்று..மாலை 4.00 மணிவரை, இடையில் அரசுதரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் “ஒரு பல்டியினால்” ஏர்பட்ட தற்காலிக “ஆரவாரம்” தவிர “ஜாமின் நிராகரிப்பு” இருக்கும் என யாரு கணிக்க முடியாத சூழல் இருந்தது..இவை இரண்டும் ஆட்சியாளர்களை விட நீதி மன்றத்தின் மேலாண்மை உயர்வானது என்பதற்கான ஒரு சிக்னல்..…

ஒரு சாமானியனாக எனக்கு இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றியது..

ஒன்று---”ஜெ” கைதுக்கும் “ஜாமீன் மறுப்புக்கும்” அதிமுகவினர் ஏன் இவ்வளவு “ரவுஸ்” விடுகின்றனர்..அப்படி என்ன-- “ஜெ” கைது செய்யப்படக்கூடாத—கைது செய்யப்பட முடியாத..”ஸ்பெஷல் பிறவியா”?—”ஜெ”வை விடுவிக்காவிட்டால், காற்று வீசுவது நின்றுபோகும்?—எப்போதாவது பெய்யும் ம்ழையும் கூட பொழியாது போகும்?—திருப்பூர் சாய ஆலைகள் கழிவு நீரை “பூரணமாக சுத்திகரித்து “வெளியில் விடுவர்?—என்பதெல்லாம் நடந்து விடுமா?

இரண்டு—அதிமுகவினர், கருப்பு சட்டை அணிவது.., , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது, சாலையில் படுத்து புரண்டு போராட்டம், அலகு குத்தி, தீ மிதித்து, காவடி எடுத்து, ஊர்வலம் போவது, பதவி ஏற்பில் “அழுதுகொண்டே” உரை வாசிப்பது, --இவை யாவும், ”கேமராவோ, வீடியோவோ படம் பிடிக்காது,” என்று சொன்னால், அப்போதும் இதுபோல செய்வார்களா?

எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்..இருந்தாலும் உள்ளுக்குள்ளே உருத்திக்கொண்டிருக்கும் உண்மை எழுதத்தூண்டுகிறது..

சங்கராச்சாரியார்—சங்கராச்சரியார் என்று மடத்துக்கு அதிபதி..ஜெயேந்திரர் என்று பெயர்..தவறு செய்தாரா?—தண்டனைக்கு உரியவரா? என்பதெல்லாம் எனக்குத்தெரியாது..இன்னும் சொல்லப்போனல் நான் மனிதர்களை வணங்குவதில்லை..என் தாய், தந்தை, குரு தவிர.--.எனவே எனக்கு ‘ஜெயேந்திரர்” மீது எனக்கு எந்த ஈர்ப்பும் “சாஃப்ட் கார்னரும்” கிடையாது.

ஆனால் லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில்  ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—

பிரபல பெண் எழுத்தாளர்கள், திரைப்பட நடிகைகளை எல்லாம் விட்டு, “எனக்கு சாமியாரோடு தொடர்பு உண்டு “ என அறிக்கை விடச்சொன்ன அநியாயம்..

அந்த மகானுபாவரின் “நெஞ்சு” எப்படி “வெந்து” இருக்கும்?—அந்த “மாமடத்தின்” மானம் எப்படி காற்றில் பறந்திருக்கும்??—”வாய்தா—வாய்தா””என எத்தனை முறை, அந்த பாதங்கள், கோர்ட் படி ஏறி இறங்கி இருக்கும்?

இவை எல்லாம் இப்போது நினைத்து பார்க்க காரணம் என்ன?—ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது,

,”தெய்வம் நின்று கொல்லும்”--.,

இந்து தர்மம் சனாதனமானது..புராதனமானது…இப்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் கணக்கு, இப்பிறவியிலேயே “சரி செய்யப்படும்”
—”நோ டேக்கிங் ஓவர்”—நோ கேரி ஃபார்வர்ட்”

இது “ஆச்சாரியாருக்கும் பொருந்தும்—ஆட்சியாளருக்கும் பொருந்தும்”

சரி பிளாஷ் பேக் முடிவுற்றது..சப்ஜெட்டுக்கு வருகிறேன்..

“ஊழல் என்பது மனித உரிமை மீறலாம்---ஊழல் வாதிகளுக்கு “ஜாமீன்” அடிப்படை உரிமை இல்லையாம்—

இதை கர்னாடகா ஹைகோர்ட் மட்டும் சொல்லவில்லை—ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட சொல்கிறது..

சொல்வதை சொல்லிவிட்டேன்..திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் திருந்தட்டும்..இல்லாவிட்டால்---

காலம் –திருத்தும்—

Sunday, September 28, 2014

”ஜெ”--வழக்கு---தண்டனை---நீதிபதி

அப்பாடா--கடைசியாக “ஜெ”  வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது..18 ஆண்டுகாலங்கள் நடந்த வழக்கு..12 ஆண்டு காலத்தை “ ஒரு மாமாங்கம்” என்பார்கள்..அப்படியானால், ஒண்ணரை மாமாங்கம் நடந்த வழக்கு..இதை எதற்கு சொல்கிறீர்கள் என்கிரீர்களா?

லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சௌவுதாலா, செல்வகணபதி இவர்களெல்லாம் “உள்ளே” போகவில்லையா?--”ஜெ” உள்ளே  போனதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?

பல புதுமைகளின் புகலிடம் இந்த வழக்கு..பல தீர்ப்புகளின் “தெளிரல்” இந்த வழக்கு.

1996 இல் தொடங்கிய வழக்கு...நூற்றுக்கணக்கான “வாய்தாக்கள்”---அதே அளவு அப்பீல்கள்---உயர்நீதி மன்றம் உச்சம்---உச்சநீதி மன்றம் மிச்சம்---என் அப்பீல்கள அளவு கடந்தன..

குற்றப்பத்திரிக்கை பல ஆயிரம் பக்கங்கள்..ஆங்கிலத்தில்...மொழி தெரியாது என தமிழில் மாற்றச்சொல்லி பலகாலம் இழுத்தடிப்பு...செய்த மொழிமாற்ரம் தவறு என இன்னும் கொஞ்சம் காலம் மேலும் இழுத்தடிப்பு..

நேரடி “ஆஜருக்கு” வரமுடியாது-- என பல ஆயிரம் பெட்டிஷன்கள்..செப்டம்பர் 20ந்தேதி தீர்ப்பை தள்ளிவையுங்கள் என “கடைசி “ வாய்தா...தீர்ப்புதேதியை 27 க்கு மாற்றிய பிறகும் உச்சநீதி மன்றத்தில் 27 ந்தேதி தீர்ப்பை நிறுத்தி வைக்க பெட்டிஷன்..

“ஜெ” மந்திரிகளை நம்புவதில்லை --”ம்ந்திரங்களை “ நம்புவார்..கோர்ட்டின் மீது இருந்த அவநம்பிக்கையால், 250 மாந்திரீகர்ளுடன் நள்ளிரவு யாகம்...,வீடிந்ததும் பெங்களூர் புறப்பட்டார்.என செய்திகள்..

இதற்கிடையே வக்கீல்கள் மாற்றம்.--.நீதிபதிகள் தூக்கியடிப்பு,-- என்ற நாடகங்கள்..தற்போதைய நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவும் இந்த அழுத்தங்களுக்கு தப்பவில்லை.”.27 ந்தேதியை நான் மாற்ற மாட்டேன்..வேண்டுமென்றல் நீங்கள் என்னை மாற்றிக்கொள்ளுங்கள்.”--.என்றா
ர், குன்ஹா.
தீர்ப்பு விவரங்கள் “கசிந்து விடக்கூடாது” என்பதால், தானே கைப்பட எழுதினார்..தானே தட்டச்சு செய்தார்..காலை 8 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 6 மணிக்கே வீடு திரும்புவார்..

தீர்ப்பு நாளில் கூட பல “சஸ்பென்ஸ்” 11 மணிக்கு தீர்ப்பு--அது 1.00 மணியானது..பிறகு 3. மணியானது..ஆனாலும், நமக்கு தெரிய 5.00 மணியானது..

யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு..சாதா--ரணமாக--த்தான் இருக்கும் என “ஜெ” உட்பட அனைவரும் நினைத்த தீர்ப்பு..”ஜெ” யின் ஆஸ்தான தமிழக “நுண்ணரிவு” போலிஸ் --மோப்ப சக்தி இழந்த -துப்பறியும் நாயானது.--

பகல் ஒரு மணிக்கு “குற்றவாளி” என்ற தீர்ப்பு--மாலை 5.மணிக்கே 4 வருட சிறைத்  தண்டனை--100 கோடி ரூபாய் அபராதம் என்கிற விஷயங்கள் வெளியிடப்பட்டன..6..மணிக்கே பக்கத்தில் இருந்த பரப்பனங்காடு அக்ரஹார சிறையில் ”ஜெ” அண்ட் கோ--அடைக்கப்பட்டனர்.... ஜெ யின்  மருத்துவ சிகிச்சை கோரிக்கைக்கு வெளி மருத்துவ மனைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு--என பலபுதுமைகள்..

66.6 கோடிரூபாய் ஊழலுக்கு இந்திய நீதிமன்றங்கள் கண்டிராத ரூ.100 கோடி அபராதம்..இதில் நீதிபதியின் கணக்கும் உள்ளது..66.6 கோடி ரூபாய்க்கு. 18 ஆண்டுகால “சாதா” வட்டி போட்டாலும், அது 350 கோடியை தாண்டுகிறது .. எனவே 100 கோடி ‘நியாயப்படி” குறைவுதான்..இதிலும் கர்நாடக அரசுக்கு இந்த வழக்கினால் ரு. 5. கோடி செலவு ஏற்பட்டதால், அதை கர்னாடக அரசு எடுத்துக்கொள்ளவும் --என உத்தரவு வழங்கிய நிதிபதி.. புதுமை--புதுமை--புதுமையோ புதுமைகள் என பல புதுமைகளை அரங்கேற்றியுள்ளார்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு தெம்பு, தைரியம், ஒரு நீதிபதிக்கு எப்படி வந்தது?--நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் செயலுக்கு முக்கிய காரணம் “நீதியையும் நீதிமன்றங்களையும் விலைக்கு வாங்கமுடியாது” என்ற உறுதி கொண்ட மாமனிதர் மோடியின் அரசின் செயல்பாடுதான் காரணம்..

இதே மதிரி எத்தனையோ தீர்ப்புக்கள் கடந்த காலங்களில்  எழுதப்பட்டிருக்கின்றன ..அவைகள் ஆட்சியாளர்களின் “நெருக்குதல்களால்” திருத்தப்பட்டிருக்கின்றன.....
நீதித்துறையில் அரசியல் குருக்கீடுகள் இருக்காது என்கிற பாஜக அரசின் உறுதி மொழி காப்பற்றபட்டிருக்கிறது..அதன் விளைவே இத்தகைய தீர்ப்புக்கள்..
சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் நேரில் வந்து பார்த்ததில் நம்பிக்கையுடன் இருந்த “ஜெ”--”மந்திரி வந்தாலும்--மந்திரம் செய்தாலும்”--நீதியின் ஆட்சியை” யாராலும் தடுக்க முடியாது என்ற பாஜக வின் நேர்மைக்கு இது ஒரு சாட்சி..

நீதியை நிலைநாட்டிய நீதிபதி டிகுன்ஹாவுக்கு மீண்டும் ஒரு சபாஷ்--நிதிமன்றங்களில் குறுக்கீடு செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தொடர்ந்து காப்பாற்றிவரும் மோடி அரசுக்கு ஒரு சபாஷ்..

இனி என் கவலையெல்லாம் அதிக நம்பிக்கையில் இருந்த ஆ.ராசா--கனிமொழி--தயாநிதி,கலநி
தி மாறன்களின் நிலையை நினத்துத்துதான்..66.கோடிக்கே 4 வருஷம் என்றால், 176000 கோடிக்கு எத்தனை வருஷம்..சொன்னாலே தலை சுத்துதே....

Friday, September 26, 2014

பிலாவலின் பேச்சு--மிரட்டலா?--"சும்மாவா?"



அரசியலில் அம்மாவும் பாட்டியும் கொள்ளு தாத்தாவும் பதவி சுகம் கண்டார்கள் என்பதால் பேரனும் “பவிஷாக பதவியை” அனுபவிக்க போட்டி போடுவது இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தனிலும் உள்ளது. 

தாத்தா ஜீல்பிகர் அலி பூட்டோ, யாஹயாகானுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரை பிரிக்க முயற்ச்சி செய்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த கிழக்கு வங்கத்தை (வங்காள தேசம்)  1971-ல் இழந்தார்கள்.

அம்மா பெனசீர் பூட்டோவும், அப்பா சர்தாரியும், பதவி அனுபவித்த்தோடு முடித்துக் கொண்டார்கள். சண்டை போட அவர்களுக்கு நேரமில்லை! ஆம்! அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை!

இன்னிலையில் தான் பெனசீர் பூட்டோ-சர்தாரி தம்பதியரின் அன்பு மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான “பிலாவல் பூட்டோ” என்கிற 24 வயது “வாரிசு ” இந்தியாவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கிறது !

ஆம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் “முல்த்தான்” பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய “பிலாவல்” “காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலத்தையும்” இந்தியாவிடம் இருந்து மீட்பேன் என வீராவேசமாக பேசியுள்ளார்.

பிலாவின் இந்த பேச்சுக்கு இரண்டு காரணம் உள்ளது. (1) அவர் பேசிய “முல்த்தான்” - தாலிபன்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி! அங்கு ஆவேச பேச்சுக்களே எடுபடும் (2) நவாஸ் செரீப்பின் கட்சிக்கு மாற்றாக இப்போது இம்ரான்கானின்  கட்சியே வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறை தேர்தலில் PPP மரண அடி வாங்கியுள்ளது. எனவே கட்சியை தூக்கி நிறுத்த ஒரு அசத்தலான, ஆர்ப்பாட்டமான புல்லரிக்கும் பேச்சு தேவைப்பட்டது. அதன் விளைவே இந்த ஆக்ரோஷம்!

இரண்டாவது பாகிஸ்தானில், இந்தியாவை பற்றி 14 சதவீதம் மக்களே நடு நிலை கருத்துக்களை  கொண்டுள்ளனர். 53 சத மக்கள்  இந்திய எதிர்ப்பு கொள்கையே கொண்டவராக உள்ளனர். பாக் ராணுவமும் ISI-யும் தாலிபான்களும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், எவ்வளவு மெஜாரிட்டியுடன் வந்தாலும், பாகிஸ்தானில் ராணுவம் வைத்தது தான் சட்டம் இதை மீற பாக், கோர்ட், பார்லிமெண்ட் மற்றும் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பிலாவலின் தாத்தா பூட்டோவை தூக்கில் போட்டவர், நவாப் ஷெரிப்பை   பர்வேஷ் முஷ்ரப்...ன்கிற  ராணுவ தளபதி நாடு கடத்தினார்.

இப்படி உள்ள நாட்டில், இந்திய எதிர்ப்பு கருத்தை பேசினாலேயே “பிழைக்க முடியும்” என்று பிலாவல் கருதியதால் வந்த விளைவு தான் காஷ்மீர் பேச்சு.

அது மட்டுமல்ல காஷ்மீரை துண்டாட வேண்டும் என்கிற, காஷ்மீருக்குள் உள்ள யாசின் மாலிக், கிலாணி போன்ற தேச விரோத சக்திகள், பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில்  உள்ளது. காந்தஹார் விமானகடத்தல், மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த ரசூல் மசூத்தை பாகிஸ்தனில் அடிக்கடி இவர்கள் சந்திக்கின்ற்னர். மும்பை குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஜ்மல் கசாப்பின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியில் பாகிஸ்தானில் யாசின் மாலிக் கலந்து கொண்டார்.

இது மாதிரி இந்தியாவை “சீண்டும்” பல விஷயங்களை இந்த தீவிரவாதிகள் செய்து வருகின்றனர். பிலாவலின் இந்த “காஷ்மீரை கைபற்றும்” பேச்சு தனி காஷ்மீர் கேட்கும் பிரிவினைவாதிகளுக்கு ஒரு டானிக் தான் இதனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக “மார் தட்ட முடியும்”

இந்த இரண்டு கருத்து தவிர மூன்றாவது ஒரு கருத்தும் பரவலாக பேசப்படுகிறது!

பிலாவலுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையது அவர் ஒரு “பிளே பாய்” அதனால்தான் தன்னை விட 20 வயது மூத்த மூன்று குழந்தைகளுக்கு தாயான முன்னாள் வெளியுறவு மந்திரி திருமதி  ரப்பானியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்பது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய அரசு தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சத்தில் அதிகமாக துபாயிலும், லண்டனிலும் வசித்து வருகிறார் பிலாவல்.

பிலாவல் பாகிஸ்தானின் “ராகுல் காந்தி” --எந்த ”கமிட் மொண்டும்;” கிடையாது --ராகுலின் கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா  பிரதம மந்திரியாக இருந்தது போல, பிலாவலின் தாத்தா, அம்மா, அப்பா, பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்துள்ளனர் வருகின்ற 2017 தேர்தலில் போட்டி பிரதமர் ஆவேன் என்கிறார்.பிலாவல் பூட்டோ 

இப்படி பட்ட பாரம்பரியத்தில் வந்த பிலாவனின் பேச்சை சாதாரண பேச்சு என்று “ஒதுக்கித்தள்ள முடியாது”

சரி! "காஷ்மீரின்  ஒரு அங்குலத்தை கூட விட்டுத்தர மாட்டேன்"-- என்று சொல்லும் பிலாவலின் “ஸ்டேட்மொண்ட்” எவ்வளவு வீரியம்  இருக்கிறது? காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தமா? காஷ்மீர் பிரிவினைவாதிகள் தவிர நடுலை காஷ்மீர் மக்கள் என்ன விரும்புகிறார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்!

முதலில் ஒரு சிறிய “பிளாஷ் பேக்”கிற்கு போவோம்! தொடர்ந்து எத்தனையோ “கருத்தரங்களிலும் களிலும் பல்வேறு புத்தக்ங்களிலும், " காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி "--என்றாலும் மீண்டும் இதை  மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதற்கு சுருக்கமாக மூன்றே மூன்று ‘பாயிண்டுகள் மட்டும்” வைக்கிறேன்.

1. 1947 - ல் இந்திய - பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது, இந்த இரண்டு நாடுகளிடமும் சேராமல் தனியாக “ஒதுங்கி நின்றது” காஷ்மீர் --பாகிஸ்தான் நேரடியாகவும், பழங்குடியினரை தூண்டிவிட்டும்  , காஷ்மீரை கொள்ளையடிக்க வைத்தும் --- மறைமுகமாகவும்-- காஷ்மீர் மீது படையெடுத்தது.

ராஜா ஹரிசிங், பிரதமர் நேருவுக்கு ஓலை அனுப்பி, ”இந்தியாவுடன் இணைவதாக” கையொப்பமிட்டு உறுதி மொழி பத்திரம் அனுப்பினார்-- இது சாட்சி ஒன்று

கலகம் ஓய்ந்த பிறகு  “வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைக்கு பதிலாக காஷ்மீருக்கு “சிறப்பு அந்தஸ்த்து Article 370 மூலம் கொடுக்கப்பட்டு ஷேக் அப்துல்லா பிரதமரானார் எனவே “வாக்கெடுப்பு மறக்கப்பட்டது---” Article 370ன் ஒரு அம்சமே ARTICLE 1 ன்   பகுதியான “இந்திய யூனியனின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கு” என்று தான் தொடங்குகிறது. எனவே காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் இது சாட்சி 2.

1952 முதல் 2014 வரை சட்ட சபை /பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருமளவில் கலந்து வாக்களித்ததன் மூலம் அங்கு “வாக்கெடுப்பு” வேண்டாம் என்பதும் , காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் என்பதும்  புலனாகிறது.

ஆக இந்தியவிற்குள், இந்திய மண்ணை தின்று பொன்னை அணிந்துவரும், சில தேச விரோதிகள், காஷ்மீர் பிரிவனைவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக பேசும் எந்த பேச்சுக்கும் துரும்பளவு கூட ஆதாரமில்லை என்பதை உணர வேண்டும்.

இதற்கெல்லாம் முன்பாகவே, சட்டமேதை, அம்பேத்கர்  ARTICLE 370-ஐ எதிர்த்தார் அவரோடு சேர்ந்து அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் ”மெனலானா ஹஸ்ரத் மொகானியும்” எதிர்த்தனர். ஜனசங்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதற்கெல்லாம் மேலாக, புதிய பிரதமர் 370 காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.!
காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்படவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்!


காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் சகோதரி, காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டதால் தனது சொத்துரிமையை இழந்தார்! 

ஆக திருமணமாகி வெளி மாநிலத்திற்கு செல்லும் பெண்கள் சொத்துரிமை இழக்கிறார்கள். இதற்கு “பெண்ணுரிமைவாதிகள்” என்ன தீர்வு சொல்லப்போகிறர்கள்!

டெல்லி" நிர்பயா" “பாலியல் கொலைக்கு பிறகு “பாலியல் வன் கொடுமை சட்டம் ” திருத்தப்பட்டுள்ளது. இது காஷ்மீரத்தில் செல்லுபடி  ஆகாது. இதனால் “ரேப்” கேசில் குற்றம் புரிந்த காஷ்மீர் மந்திரி ஒருவர் மீது வழக்கு தொடர முடியவில்லை! இதற்கு சமூக சிந்தனையாளர்கள் என்ன கூறப் போகிறார்கள்.

ஆக காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று ஆன பின்பும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்புகிறார்க்ளே! அவர்களை எந்த சட்டத்தில் தண்டிப்பது ?

இவ்வளவும் 370 ஐ நீக்கச் சொல்பவர்கள் உண்மையிலேயே காஷ்மீர் மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தானா?

பிலாவல் பூட்டோவின் “சிறுபிள்ளைத்தனமான” காஷ்மீர் பற்றிய பேச்சு “பெரிய மனிதத்தனமாக” நாம்  காஷ்மீரைப் பற்றி விரிவாக சிந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தது என்பது கெட்ட விஷயத்தி லும் ஒரு நல்ல செய்தியாகும்.

Sunday, September 21, 2014

இந்தியத்துவாவும்---இந்துத்துவாவும் ஒன்றுதான்--தி.இந்து தமிழ் நாளிதழில் பீட்டர் அல்போன்ஸ் கட்டுரைக்கு பதில்

இன்றைய 21.9.தி.இந்து தமிழ் நாளிதழில் காங்கிரஸ் முன்னாள் எம்பி.யும், எனது இனிய நண்பருமான திரு பீட்டர் அல்போன்ஸ் “இந்தியத்துவாவும், இந்துத்துவாவும் வேறு வேறு..” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்..
திரு பீட்டர் அவர்களுக்கு அவர் வணங்கும் ஏசுபிரான் ஒரு அபார ஆற்றலை. தந்துள்ளார்..அலங்கரமான வார்த்தைகளை வைத்து ஒரு இறந்துபோன பொருளுக்கு உயிர் கொடுக்க முயலுவார்..பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டும் நபர் போல , ஒத்தை வெடி வெடித்து அதை அணுகுண்டு சத்தம் என்று சொல்லி ஆர்ப்பரிப்பார்..
அப்படித்தான் இக்கட்டுரையும் உள்ளது.முதலில் “லவ் ஜிஹாத்” இருக்கிறதா?--இல்லையா? என்பதற்கும், அதைபற்றி யார் என்ன சொன்னார் என்பதற்கும்  பீட்டருக்கு பதில் சொல்வது “தூங்குவது மாதிரி நடிப்பவனை..எழுப்பும்” முயற்சியாகும்..அதனால் பதில் சொல்லப்போவதில்லை..
“லவ்ஜிஹாத்” வைத்து அரசியல் செய்வது பீட்டரின் கட்சியும்  அவரின் கூட்டணியும்தான்...”லவ்ஜிஹாத்” என்று ஒன்று நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள்,.யோகி ஆதித்யநாத் மற்றும் சாஷி மஹாராஜை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?--ஒருவேளை அவர்களின் பிரச்சாரம் பீட்டர் அவர்களின் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்தால், உஇ.பி.யில் காங்கிரஸ் கட்சியே இல்லையே..
அகிலேஷ் யாதவின் ஆட்சி பற்றிய நல்ல அபிப்ராயமும் அண்ணன் பீட்டருக்கு இல்லை..இப்படி “இல்லாத விஷயங்கள்”.ஏராளமாக இருக்கும்போது, பீட்டரின் கூற்றுப்படி இல்லாத “லவ்ஜிஹாத்” பற்றி பீட்டர் ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் புரியவில்லை..
மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய ஆட்சிக்கு எப்படி “எடைபோடும் “ அம்சமாகும் என்பது புரியவில்லை..அதுவும் உ.பி.யை ஆளும் சமாஜ்வாடி கட்சி, ஊழலிலும், தேர்தல் தில்லு முல்லுகளிலும், தமிழக “கழகங்களுக்கு” கொஞ்சம்கூட குறைந்ததில்லை” என்பதை நாடறியும்..இந்த முடிவுகளை வைத்து மோடி ஆட்சியை எடைபோடச்சொல்லும் பீட்டரின் நடுநிலை எடைதான்  குறைந்துள்ளது..
110 நாள் மோடியின் ஆட்சியின் “செயல் திறனில்” குறைகாண முடியாதவர்களும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சிக்குறியீடு எண் 5.7ஆக உயர்ந்தும், பணவீக்கம் 3.7 ஆக குறைந்தும், இருப்பதால் ஏற்பட்ட “மன உளைச்சல்--மற்றும் மன அழுத்தம்” காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை சொல்லி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடைந்து கொள்கிறது.
இடிவிழுந்தபோதும், இழவு விழுந்தபோதும் பேசாமல் இருந்துவிட்டு, ஊழல் குற்றச்சாட்டில் ஆ.ராசாவை காப்பாற்ற வாய்திறக்கும், “பேசாமடந்தை” மன்மோகன் சிங் போலல்லாது, பேச வேண்டிய நேரத்தில் மோடி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்...அண்ணன் பீட்டர் நினைக்குபோதெல்லாம் எப்படி மோடி  பேச முடியும்?
கலாச்சார ரீதியில் இந்நாடு ஒரேநாடு என்றால், நீங்கள் எங்கள் மதத்தில் கைவைக்கிறீர்கள் என்கிறார்கள்.இந்து என்பது மதமல்ல--அது கலாச்சாரம்--வாழ்க்கைமுறை,,இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் எம்மதமானாலும், தங்களது தினசரி வாழ்வில்..அதை கடை பிடித்து வருகிறார்கள்..என்று சொன்னல் அது மதவாதம் என்கிறார்கள்..
பீட்டர் அவர்கள் அவர் சொல்லும் “இந்தியத்துவாவை” ஏற்றுக்கொண்டாலே போதும்.. அண்ணன் என்றாலும் மூத்த சகோதரன் என்றாலும் ஒன்றுதான்..இந்துத்துவாவும், இந்தியத்துவாவும் ஒன்றுதான்.
இனி தன்னை அண்ணன் என்று பீட்டர் அவர்களை அழைப்பதை  விரும்பாவிட்டால், மூதத சகோதரன் என்று அழைக்கிறேன்..என்ன சரிதானே..

” ஜெ” யின் உள்ளாட்சி இடைத்தேர்தல் தகிடுதத்தங்கள்



தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதின ஆரம்பமே ஒரு குழப்பம் தான். ஆகஸ்டு 6 ஒரு முறையும் ஆகஸ்டு 28 ஒரு முறையும் அறிவிக்கப்பட்டது ஆனால், இரண்டிலும் செப்டம்பர் 18-தான் தேர்தல்.

கடந்த 15 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், கூட்டுறவு சங்க தேர்தல்களிலும், ஆளுங்கட்சியே தன் அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி மாநில தேர்தல் கமிஷனை "டம்மியாக்கி " வெற்றி பெற்று வந்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்தது அ.தி.மு.க... தொடர்ந்தது திமுக
 .
இதில் பங்கு பெற்ற இரண்டு கழகங்களும், எதிர் கட்சியாக இருக்கும் போது "நிற்காமல் ஒதுங்கிக் கொள்ளும்" அளவு ஆளும் கழகம் "உக்கிரமாக" நடந்து வந்துள்ளது* இம்முறையும் ஆளும் அ.தி.மு.க தன் முழு வலிமையை காட்டியது.

எப்போதும் போல, எல்லாக்கட்சிகளும், தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட பெருங்கட்சிகள், உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்வுடன் ஒதுங்கிக் கொண்டன. தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துவிட்டன. இந்நிலையில் "முடிவு எதுவும் அறிவிக்காமல் இருந்த" பாஜக தன் மௌனம் கலைத்து "ஜனநாயகத்தை காப்பாற்ற " தேர்தலில் போட்டி இடப்போவதாக அறிவித்தது.

அதுவரை "சந்தோஷமாக" இருந்த அதிமுக லேசாக "உதர" ஆரம்பித்தது... கண்ணுக்கெட்டிய தூரம் வரை "எதிரிகளையே காணவில்லை" என கொக்கரித்த "ஜெயலலிதா"பாஜக விலகிக் கொள்ளும் என்றுதான் நினைத்தது.

டெல்லியிலுள்ள பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் சென்னை வரும் போது "அம்மாவை" பார்த்துவிட்டு போவதால், "தான் கேட்காமலே" பாஜக போட்டியிடாது" என்கிற முடிவுக்கு "ஜெ" வந்திருக்கலாம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் தான் பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். "Prevention is better than cure" என்பது ஒரு மருத்துவப் பழமொழி. போட்டியிட அனுமதித்து பாஜகவிடம் தோற்றுப் போவதை விட, பாஜக வேட்பாளர்களை போட்டியிட அனுமதிக்காமல் செய்து விட்டால் ஆரம்பத்திலேயே வெற்றி உறுதியாகிவிடும் என்று அதிமுக கணக்குப் போட்டது.

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் அதை "நிராகரிப்பது" வேட்பாளர்களை கடத்திச் சென்று "காசு கொடுத்து" விலகல் கடிதம் பெறுவது மிரட்டி அடிபணிய வைப்பது, போன்ற திமுகவும், அதிமுகவும் உருவாக்கிய "புதிய அரசியல் ஜனநாயக நெறிமுறைகளைத் தவிர" இது வரை இவர்களே நினைத்திராத புதிய "யுக்தி" ஒன்றை ஆளும் அதிமுக புதுக்கோட்டை நகராட்சி தலைவருக்கான தேர்தலில் அரங்கேற்றியது.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் காலை 10.00 மணிக்கு பாஜக வேட்பாளர் பழ. செல்வம் "வேட்புமனு" வாங்க சென்ற போது அங்கு ஆயிரம் பேர் ஏற்கனவே "வேட்புமனு" பெற வரிசையில் நின்று கொண்டிருந்த அதிசயம், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நேரமாக மாலை 3.00 மணி வரை அந்த வரிசை "நகராமலே நின்று கொண்டிருந்த" வேடிக்கை, எல்லா வகையிலும் முட்டி முட்டி முடிந்தவரை எட்டி குதித்த வேட்பாளர் பழ. செல்வத்தை உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்ட ஆளுங்கட்சியினர், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த போலீசும், தேர்தல் அதிகாரிகளும் என ஒரு புதுக்கோட்டை பார்முலாவை அதிமுக இம்முறை அறிமுகப்படுத்தியது.

தேனி நகராட்சி வார்டு உறுப்பினர்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், நகராட்சி கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் அதை காலி செய்யச் சொல்லி அவரை மிரட்டியும் வேட்பு மனுவை நிராகரித்த கொடுமைகள் என புதிய புதிய அராஜக பார்முலாக்களை அதிமுக அறிமுகப்படுத்தியது.

தெலுங்கு சினிமா போல அரங்கேறிய இன்னொரு கதைதான் குன்னூர் நகராட்சி சேர்மன் பாஜக வேட்பாளரின் மனு நிராகரிப்பு "அபிடவிட்" என்பது இதுவரை "நோட்டரி பப்ளிக்" இடம் பெற்று சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இம்முறை மாநில தேர்தல் கமிஷனை "அபிடவிட்டுகளை" வழங்கியது அதில் தலைப்பு "அபிடவிட்" என்று இருக்கும். உள்ளே ஒரு இடத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு "LOCAL BODY" என்றும் நகராட்சி தேர்தலுக்கு "MUNICIPALITY" என்றும் எழுதியிருக்கும்.

இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே நகராட்சி அபிடவிட்டுகளையும், நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே உள்ளாட்சி அபிடவிட்டுகளையும் மாற்றி தந்து வேட்பு மனு செய்யும் வரை காத்திருந்து நிராகரித்திருக்கிறார்கள். இது மிகமிக சிறிய ஒரு "டெக்னிகல்" Error இப்படி சிறு குறுந்தவறுகளை செய்ய விட்டு "நிராகரிப்புகளை" செய்து அதிகாரிகள் தங்கள் ஆளும் கட்சி விசுவாசத்தை காண்பித்திருக்கிறார்கள்.

ஆக சர்க்காரியா கமிஷன் கூறியது போல திமுக விஞ்ஞான ரிதியாக ஊழல் செய்தது. அதிமுக "டெக்னிகல் ரிதியாக" வேட்புமனுக்களை நிராகரிக்கும் உத்திகளை கையாண்டது இத்தேர்தலில் புதிய அம்சமாகும்.

இப்படி ஒரு வழியாக பல பாஜக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த பின்பு ஏற்பட்ட மக்களின் அதிருப்தி ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்தது. இதன் முத்தாய்ப்பாக, தோற்றுவிடலாம் என்ற அச்சத்தால் நெல்லை மாநகராட்சி பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் கடத்தப்பட்டு விலை பேசப்பட்டு வாபஸ் வாங்க வைக்கப்பட்டார். இது மக்கள் மத்தியில் அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியது கோவையில் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பேச்சில் இது வெளிப்பட்டது.

"உட்கட்சி பூசலால் வெள்ளையம்மாள் வாபஸ் வாங்கிக் கொண்டார்" என புதிய அஸ்திரத்தை "ஜெ" ஏவினார். வாபஸ் வாங்க வைக்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை இல்லாத உட்கட்சி பூசல் திடீரென எங்கிருந்து முளைத்தது என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள் இதுவரை எந்தகட்சியும் நடத்திராக, அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் ஆளும்கட்சியையும், தேர்தல் கமிஷனையும் கண்களில் விரல் விட்டு ஆட்டிய  விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு புது நம்பிக்கை கொடுத்தது. அதிமுக இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவும் "மோடி அவர்களை ஆதரித்த போது" தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்டது போல 'ஜெ' வை ஆதரித்து பெரும் ஆச்சரியமாக இருந்தது. மின்வெட்டு சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, இந்து இயக்க தலைவர் கொல்லப்படுவது தொடர்ந்தது, குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது, ஊழல் என மக்கள் அதிருப்தியில் "ஊதிப் பெருத்திருந்த" அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
அந்தகேள்விக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் விடை தெரிந்துவிட்டது.
.
 கோவையில் 16 அமைச்சர்கள் 3 எம்.பிக்கள், 12 எம்.எல்.ஏக்கள், 22 மாவட்ட செயலாளர்கள் முகாமிட்டு வீடு வீடாக பணப்பட்டுவாடா உள்ளுர் கவுன்சிலர், எம்.எல்.ஏக்கள் போய் மக்களை சந்தித்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தால் வெளியூரிலிருந்த "ஆட்கள்" வரவழைக்கப்பட்னர்". 50 வாக்காளர்களுக்கு ஒரு மாவட்ட நிர்வாகி என பிரிக்கப்பட்டு 35 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டது. இதேபோல் தான் பார்லிமெண்ட் தேர்தலும் நடந்தது.

முன்பெல்லாம், வீடு வீடாக, பதுங்கிப் பதுங்கி திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் தான் இந்த பண பட்டுவாடா நடக்கும். "டோக்கன்" கொடுப்பார்கள். அதை கொண்டு சென்று "குறிப்பிட்ட இடத்தில்" கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். இந்த இடைத் தேர்தலில் நட்டநடு ரோட்டில், பட்டப்பகலில், வெளிப்படையாக பண வினியோகம் செய்தார்கள் ஆளும் கட்சியினர்.

கோவையில் பாஜகவினர் பல இடங்களில் பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து, போலீசிடமும், தேர்தல் ஆணைத்திடமும் ஒப்படைத்தும் எந்த வழக்குமில்லை, உடனடி விடுதலைதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

இதில் வேடிக்கை என்னவென்றால் "investigation Jurnalisam" செய்யும் தமிழக "கிசு கிசு" பத்திரிக்கைளும், 'டெகல்கா ஆபரேஷன் நடத்திய ஆங்கில பத்திரிக்கை, ஊடகங்களும், வாய்மூடி கைகட்டி "கப்சிப்" என இதை பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கெடுத்தாலும் கூக்குரல் எழுப்பும் "இடது சாரிகளும்" அவர்கள் அலுவலகத்தின் "வலது ஓரமாக" வாய்மூடி அமைதிகாத்தார்கள். பாஜக மட்டும் அராஜக போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்தது.

இந்த அராஜகங்களை பார்த்து வெறுத்துப் போன நல்லவர்கள் நடுநிலையாளர்கள், முணு முணுப்பதும் குற்றஞ்சாட்டுவதோடும் சரி, ஓட்டுப் போட வரவில்லை என்பதால் அதிமுக எப்போதும் போல "விலைக்கு வாங்கிய வாக்குகளையும்" அதிகாரிகளையும் பணிய வைத்து ஆளில்லாத போது போட்ட "சிறப்பு வாக்குகளையும்" பதிவு செய்தது.

தேர்தல் முடிவுகள் ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனாலும், எளிதாக வென்றுவிடலாம், எதிரிகளையே காணவில்லை என்று எக்காளமிட்ட ஆளும் கட்சியை தமிழக பாஜக "தண்ணி காண்பித்தது" என்பதுதான் இத்தேர்தலின் சிறப்பம்சம்.

Saturday, August 23, 2014

உம்மன் சண்டியின் வழியை பின்பற்றி“ஜெ” சாராயகடைகளை மூடுவாரா?


கேரளாவின் காங்கிரஸ் முதல்வர் திரு உம்மன் சண்டி அவர்களுக்கு எனதுகோடான கோடி நன்றியையும், பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..



கேரள ஆளும் ஐக்கிய முன்னணியின் “மதுக்கொள்கையை” வெளியிட்டு பேசிய உம்மன்சண்டி, ஏற்கன்வே உள்ள 730 பாருடன் கூடிய மதுபானகடைகளில், 418 க்கு மீண்டும் உரிமம் வழங்கப்போவதில்லை..என்றும், மீதமுள்ள 300 கடைகளையும், ஆண்டுக்கு 10 சதவீதமானம் வீதம், 10 ஆண்டுகளில் முழுவதையும் மூடிவிடுவதாகவும் அறிவித்தது ஆச்சரியமானது..பாராட்டுக்குறியது..



”மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு, ..மதுபானத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும்,” என்பனவெல்லாம் கேட்டு-கேட்டு புளித்துப்போன வாக்கியங்கள்..”சோம பானம்—சுறா பானம் “ தோன்றிய காலத்திலிருந்தே குடித்துக் கொண்டிருப்பவர்கள் கேரளத்தினர்..



நாட்டின் “மிகப்பெரும்—குடி மக்கள்” கேரளத்தினர்.---.தண்ணிய போட்டுட்டு, “டிச்” பக்கம் உருண்டு கிடப்பவர்கள் அல்ல கேரளத்தினர்..--ஆனாலும் மதுதந்து போகும் “மானியங்களான”—சட்டம் ஒழுங்கு சீர்கேடு…பாலியல் வன்கொடுமை—உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள்…கேரளாவில் கொடிகட்டி பறப்பது உண்மைதான்..



தேர்தல் எதுவே இல்லாத இந்த காலகட்டத்தில், காங்கிரசின் கொள்கையான ஓட்டு வங்கி அரசியல் லாபம் பர்க்காமல், உம்மன்சண்டி, செய்திருக்கும் இந்த “மதுவிற்கு விடை கொடுக்கும்”, அறிவிப்பு உண்மியிலேயே “கிரேட்”--இதை பாஜக காரனாக இருந்தாலும் மனம் திறந்து வரவேற்கிறேன்..



ஆனால் இந்த அறிவிப்பு எவ்வளவு தூரம் பலன் தரும்?—மது ஒரேயடியாக மறைந்து போகுமா?--கடைகளை மூடிவிட்டால், குடிப்பவன் குடியை மறந்து விடுவானா? என்ற கேள்விகளுக்கு உண்மையில் விடை என்ன என்பதை பார்ப்போம்..



“ஒருநாள் குடித்தாலும் அவன் ஆயுள் முழுதும் குடிகாரந்தான்”—இது குடிமொழி..---மது மனிதனின் மண்டையிலுள்ள சிறு மூளைக்கு “கிக்” தந்து, “இன்னும் தா—இன்னும் தா..””—” போதாது..போதாது..”--என கேட்கும் ஒருவகை “மனோ வியாதிதான்”—மதுப்பழக்கம்…எனவே குடிக்க ஆரம்பித்துவிட்டால், “பெக்குகள்” கூடுமே தவிர..குறையாது..(கிக்குகள்)..”ஏறுமே தவிர இறங்காது..”



எனவே கடைகளை மூடிவிட்டால், ஏற்கனவே குடித்துக்கொண்டிருப்பவர்கள், “சரக்கு “ கிடைக்கவில்லை என்பதற்காக, நிறுத்தி விடுவார்கள், என்று நாம் நினைத்தால், அது பேதமை.--.மாறாக “கிடைக்காது” என்ற இந்த “ டிமாண்ட்” மனப்பான்மை, இன்னும் அதிக்மக குடிக்க வைக்கவும், அல்லது “ வீடுகளில் –ஸ்டாக் “ வைக்கவும் தோன்றும்..ஒரு வேளை “சரக்கு “ கிடைக்காவிட்டால், “கள்ள சாரயத்தை” நாடும் அல்லது “காய்ச்ச “ பழகி கொள்ளும்..



எப்படி அபின் கஞ்சா அடிமைகள் அது கிடைக்காவிட்டால் வன்முறை யாளர்களாக மாறுகிறார்களோ—அது போல “குடிக்கு அடிமைகள்” “பெக்குகள்” கிடைக்காவிட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல்களாக மாறூவார்கள்.--.திருட்டு கொள்ளை ஓங்கும்..சட்டம் ஒழுங்கு சீர்கெடும்..கள்ளச்சாராயம் கரை புரளும்.==.குடிகாரர்கள் போதை ஏறி..நாடி அடங்கி மண்மூடுவர்..

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்த பின்பே மதுக்கடைகளை மூடும் படலத்தை அரசு துவங்க வேண்டும்..

முதலில் புதுக்குடிகாரகள் உருவாகமல் அரசு தடுக்க வேண்டும் –அதற்கு “பழைய குடிகளுக்கு” லைசன்ஸ் தரவேண்டும்..”உரிமம்” இருந்தாலே “பாட்டில்” கிடைக்கும் என்ற விதியை கொண்டுவரவேண்டும்..



“மதுவிலிருந்து மீண்ட “மருவாழ்வு மைய்யங்களை” “டி அடிக்‌ஷன்” செண்டர்களை உருவாக்க வேண்டும்..மதுவிலிருந்து மீளும் சிகிச்சையில் முழுக்குடும்பமும் பங்கு கொள்ள வேண்டும் என்பதால், ”குடும்ப பராமரிப்பு செலவை” அரசே ஏற்க வேண்டும்..



மதுக்கு அடிமை ஆனோருக்கான “மறு வாழ்வு சிகிசைக்கு” தனி ஆஸ்பத்திரிகள் ஊர் தோறும் உருவாக்க வேண்டும்..இயல்பாக வரும் நோய்களுக்கும், நோயாளிகளுக்குமே அரசு ஆஸ்பத்திகளில் இடம் இல்லை என்பதே இன்றைய நிலை...

மதுவினால் வந்த வருமானத்தை விட மது ஒழிப்புக்கு பலமடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும் இதை அரசு கவனத்தில் கொள்ளாவிட்டால் நாடு சுடுகாடாகும்..காரணம் தமிழ்நாட்டில் தற்போது 60 சதவீத இளைஞர்கள் மதுவிற்கு அடிமை என்பதே நிஜம்..இது ஒவ்வொரு நாளும் உய்ர்ந்து கொண்டே போகிறது..



இவ்வளவு முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகள் எடுத்தால்தான் “குடியை குறைக்க முடியும்” என்பதால்தான், அரசு சாரய கடைகளை மூட மறுக்கிறதோ?—இல்லை இரண்டு..மூன்று..சாரய தயாரிப்பு கம்பெனிகளிடமிருந்து தினசரி பல்கோடி ”தோட்டத்திற்கும்,” ”புரத்திற்கும்”--வருவதை வாங்கி அனுபவித்தவர்கள், அதில் சிறியதை நமக்கு தந்து, 37 பாரளுமன்ற சீட்டை வென்றவ்ர்கள்,எப்படி “டாஸ்மாக்—காமதேனுக்களை” மூட உடன்படுவார்கள்?—



எது எப்படியோ—உம்மன்சண்டி ஒரு நல்லவழி முறையை தைரியமாக காட்டி விட்டார்..அவருக்கு மீண்டும் ஒரு சபாஷ்..இந்த பாதைக்கு இனியாவது தமிழகம் திரும்பியாகவேண்டும்..



இல்லாவிட்டால் ஆளுபவர்களின் “ குடும்பங்கள்..நாசமாய் போகும்”—என்று குடிமகன்களின், பெற்றோரும் உற்றமும் இடும் “சாபத்தை” யாரலும் தடுக்க முடியாது..



குடி (நாடு) வாழ்க------குடிமக்கள் ( நாட்டு மக்கள் ) வாழ்க

குடி ( நாடு) வாழ— குடி ( மது) ஒழிக...

குடி ஒழிய ( மது )—குடிமக்கள் ( மது அருந்துவோர்) திருந்துக..

ஜெய் ஹிந்த்