Pages

Friday, October 10, 2014

"ஜெ " கைது "ரியாக்ஷன்" சிநிமாத்தனமாக

சினிமா கதாநாயகன்/  நாயகி,..சாதாரண சட்டை --அதுதான்-நாம்  போடும் சட்டை..போல்.. அணிந்திருந்தால் அவன்/ அவள் ..சினிமா கதாநாயகன்/ நாயகி அல்ல..

பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு  அலகு குத்தி,  காவடி,--8 பேரோடு  தீமிதி,---முன்று பேரோடு  அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது   சினிமாத்தனம்  அல்ல ..

108 பால் குடம்--1008 அலகு  குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது   சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை  விடுதலை கோரி அதிமுக காரன்   செய்தது போல-- .

 மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி  வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை  காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும்,  ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
"புதிய ஆங்கிள் " .கிடைக்கும்... .
  வேலூரில் தீமிதிப்பு,முப்பாத்தம்மன் கோவிலில் பால்குடம்,--குடந்தையில் யாகம், குமரியில் முளைப்பாரி, தேனியில் மண்சோறு, மதுரையில் அரிவாள் நேத்திகடன், பழனியில் மொட்டை என ஊருக்கு ஊர் "மாறுபட்ட ரோலில்" உடன்பிறப்புக்கள் ஆர்பாட்டம்..

, கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?

""தெய்வத்துக்கு சிறையா ?"---

"கர்னாடகாவே -- காவிரியை எடுத்துக்கொள்-- அம்மாவை விட்டுவிடு?"
" அம்மாவே வாயுபகவான்..உன்னோடு பெங்களுருக்கு வந்துவிட்டதால் ?--தமிழகத்தில் நாங்கள் முச்சுவிட திணறுகிறோம் --உடனே அனுப்பிவிடு அம்மா?"--
 இதைவிட பெரிய சினிமாத்தனம் --அமீருக்கும்--சீமானுக்கும், பாரதிராஜாவுக்கும் தான் .தெரியும்
அம்மா இத்தனை  நாட்கள் ஏசியில் இருந்து சலித்துப்போய் --ஒரு மாறுதலுக்காக "டிசியில்"( டிவைன் செல்) இருக்கிறார்.
பெங்களுருவின் இயற்கையான  குளிர்ச்சியும்,பரப்பர அக்ரஹார "புளியோதரையும், தயிர்சாதமும்," அம்மாவுக்கு அவர்களின் "அம்மாக்கால" நினைவுகளை ரீங்காரம் இடலாம்..
அன்பிற்கினிய  ரத்தத்தின் ரத்தமான அதிமுகவின்  உடன்பிறப்பே---நீ  போய் -பெங்களுரு சிறை --கோர்ட்டுமுன் "கத்தி--கோஷம் போட்டு, "ஜட்ஜுகளை "உசுப்பேத்தி",..வெளியே வரவேண்டிய உன் அம்மாவை--உள்ளே தள்ளிவிட்டாயே..

 ..இதற்கு உன் "சினிமாத்தனமான"---நடவடிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் தான் காராணம் என்றால் நீ  நம்பவா போகிறாய் உடன் பிறப்பே ..
சுப்ரீம் கோர்ட்டிலாவது உன் அம்மாவிற்கு பெயில் கிடைக்க வேண்டும் என்றால் உடன்பிறப்பே ---
பால்குடம் எடு-----ஆனால் அது பக்தியோடு---பணிவாக --கனிவாக--காதும் காதும் -வைத்தமாதிரி-தனியாக -- நீயாக எடு.-.கேமராவை  கூட்டிச்செல்லாதெ --ஜெயா டிவிக்கு "சிடி"கொடுக்காதே..பேஸ் புக்கில் போடாதே
அப்போது--அப்போதுமட்டுமே இது இயல்பானது..எதார்த்தமானது ..
அதுதான் " ஆண்டவனை மயக்கும்..கோர்ட்டை  மடக்கும்,அம்மாவை விடுவிக்கும் "--செய்வாயா?

No comments: