Pages

Monday, January 23, 2017

மெரினா போராட்டக்களத்திலிருந்து எனக்கு வந்த கடிதம்

மெரினா போராட்டக்களத்திலிருந்து இளஞர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில்
உங்கள் பார்வைக்கு........

என் சந்தேகம் உறுதியானது. நான் நேற்றே குறிப்பிட்டிருந்தேன் மாணவர்கள் கூட்டத்தில் தேசவிரோதிகள் ஊடுறுவல். Now it's confirmed.  இவர்கள்தான் இப்போது #கடற்கரை_கூட்டத்தை_கலைய_விடாமல்_பாதுகாத்து_வருபவை.

1.  மே 17 விடுதலைப் புலி ஆதரவு இயக்கம்.
2.  மக்கள் கலை இயக்க கழகம் எனப்படும் நக்சல் இயக்கம்.
3.  கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம் எனும் அந்நிய தேசத்திடமிருந்து நிதி பெறும் இயக்கம்.
4.  எஸ்.டி.பி.ஐ. எனப்படும் கொலை வெறிக்குத் தயங்காத இஸ்லாமிய ஜிகாதி இயக்கம்.
5.  மக்கள் அதிகாரம் என்னும் கம்யூனிஸ்ட் குரூப்.
6.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு.
7.  பெயர் தெரியாத சில கிறிஸ்தவ அமைப்புகள்.

> இந்த இயக்கங்கள் எதற்கும் பொது ஜன ஆதரவு கிடையாது.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஒப்புக் கொள்ளாதவை, பன்முகத் தன்மைக்கு எதிரானவை.

> இந்த இயக்கங்கள் அனைத்தும் அந்நிய நிதியால் நடத்தப்படுபவை, இந்திய இறையாண்மைக்கு எதிரானவை.

இவைகள் இணைந்து...

தானே கூடிய தன்னார்வத் தமிழனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்பும் அவர்களை கலையவிடாமல் தடுப்பது ஏன் ? 

அவசரச் சட்டம் தற்காலிகமானது என பொய் கூறுவானேன்..? 

ஜல்லிக்கட்டுக்காகக் கூடிய நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..!  கலைந்து செல்ல அறிவிப்பு விட வேண்டிய நேரம் இது..!

மத்திய மற்றும் மாநில உளவுத்துறை இப்போது செயலில் இறங்கி விட்டதாக தகவல். எந்த அசம்பாவிதமும் இன்றி அப்பாவி மாணவர்களை இந்த தீய அமைப்புகளின் பிடியிலிருந்து அரசு மீட்க வேண்டும். மாணவர்கள் தேசத்தின் வருங்காலம். அவர்கள் எந்த அமைப்பாலும் மூளைச்சலவை செய்யப்படுவது நல்லதல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் இதில் உண்மையான அக்கறை வேண்டும்.

Sunday, January 15, 2017

பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..


தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..
தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்”
மக்களின் மீது அளவற்ற பாசம்
கடவுளர்களின் மீது அதீத பக்தி
இவைகள் மட்டுமே போதுமா ?
ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு?
போதாது என்கிறது இன்றைய சூழ்ச்சி உலகு..
பொன்னார் ஏன் மன்னிப்புகேட்க வேண்டும்?
“பீட்டாவும், திமுகவும், காங்கிரசும், கடைசியாக அதிமுகவும், செய்துவிட்டுபோன “ஜல்லிக்கட்டு கொலைக்கு” பாஜகவும் பொன்னாருமா பொருப்பேற்க வேண்டும்? இது எந்த நாட்டு நியாயம்?
தமிழ் கலாச்சாரம், இந்திய பண்பாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் சில தேசத்துரோகிகளின் “லாபியிங்”கில் வீழ்ந்த சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு,கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசுகள் வைத்த பலஹீனமான வாதத்தின் விளைவு..
இதற்கு பாஜகவும், பொன்னாரும் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் ஜல்லிக்கட்டடை மீட்டெடுக்க நாம் மட்டும்தான் உண்மையான, வீரச்சமர் புரிந்தோம்...என்பதை..
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய கட்சிகள், தங்களை நீதிபதிகளாக பிரகடனம் செய்துகொண்டால்...அதைப்பற்றி கவலைப்படவேண்டியது மக்களே..நாமல்ல!
விரைவில் “ஜல்லிக்கட்டை கொன்ற” தமிழக மா பாவிகள் மக்கள் மன்றத்தில் தூக்கிலடப்படுவார்கள்..
ஜல்லிக்கட்டு காளை புதிய பொலிவோடு தாமரை தடாகத்திலிருந்து சீறீப்பாயும்..

ஸ்டாலினுக்கு ஒரு நடிகையின் கேள்வி?


அப்பாவை கைபிடித்து நடந்தது
தவறில்லை ஸ்டாலின்
அப்பாவை போல இப்போது நடப்பதுதான்
தவறு ஸ்டாலின்
’”ஜல்லிக்கட்டுக்கு மனுகொடுக்கச் சென்ற
தமிழக எம்பிக்களை ஏன் பார்க்கவில்லை மோடி?
நடிகைகளை பார்க்கமட்டும் நேரமிருக்கிரதாம்...
அதிலே கவுதமிக்கி முதலிடமாம்.....”
நக்கலான நயவஞ்சகக் கேள்வி!
நடிகைகள் என்றால் கடைச்சரக்கா?
வியாபார பொருளா?
வெளிச்சத்தில்கூட கௌவுரவம்
திமுகவில் இல்லையா ஸ்டாலின்?
காளைகளையும், கன்னியரையும் விட்டுவிடுங்கள்
என கமலஹாசன் சொல்கிறார்
நடிகர்களை நரேந்திர மோடியுடன்
இணைத்துவிடும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்
இளமையில் போட்ட ஆட்டம்
ஏற்றுக்கொள்ள முடியும் ஸ்டாலின்.
63 இல் ஆடமுடியவில்லை என்பதால்
தப்பாட்டம் ஆடாதீர்கள் ஸ்டாலின்
எங்களுக்கு காவிரி தெரியாது...
ஜல்லிக்கட்டு தெரியாது...
சொல்லிக்கொடுத்தபடி
நடிக்கமட்டும்தான் தெரியும்
அதுவும் கேமராவுக்கு முன்பு..
உங்களைப் போல் “மல்டி ஃபேஸ் “
எங்களுக்கில்லை ஸ்டாலின்
திரிஷாவை வம்புக்கிழுத்தீர்கள்
ஆரியாவை விரட்டியடித்தீர்கள்.
கவுதமியை கலாய்த்தீர்கள்
ரஜ்னிகாந்த்தை ஏகடியம் பேசினிர்கள்
நாங்கள் வாங்கிக்கொடுத்த ஓட்டுக்கு
நன்றியுணர்ச்சி வேண்டாம்
நாவடக்கமாவது வேண்டுமல்லவா? ஸ்டாலின்
இருட்டிலே ஒருமுகம்..
வெளிச்சத்தில் வேறுமுகம்
இது அப்பாவோடு போகட்டும் ஸ்டாலின்
நீங்களும் தொடராதீர்!
நரேந்திர மோடியை தொடாதீர்!
அது உங்களுக்கு நல்லதல்ல! ஸ்டாலின்

Wednesday, January 11, 2017

என் ஊடகத்தனிப்பிறப்புகளுக்கு” மனம் திறந்த மடல்

அன்பிற்கினிய என் ஊடக”தனிப்பிறப்புகளுக்கு”--

ஆட்சியாளரைவிட..மன்னிக்கவும் ஏன் ஆண்டவைவிட..நான்தான் உயர்ந்தவன் என நினைக்கும் உங்களின் சிலருக்கு...இந்த “தற்குரியின்” உளம்திறந்த மடல்..

“பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து விட்டது”--இனி விடுமுறை இல்லை...என “ஸ்குரோல்’--”தற்போது”...”பிரேக்கிங் நியூஸ்”---என பொளந்து கட்டிணீர்களே!

இதில் உண்மை இல்லை என தெரிந்தும் ஏன் போட்டீர்கள்?
இதுதான் “புது ஊடக தர்மமா?”

கடந்த 10 ஆண்டுகளாக “பொங்கல்” கட்டாய விடுமுறை லிஸ்டில் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?
பின் ஏன் பொங்கலுக்கு விடுமுறை இல்லை “ என “பச்சை பொய்” சொன்னீர்கள்.?

மாநிலங்களில் உள்ள..“மத்திய அர்சு ஊழியர் நல ஒருங்கிணைப்புகுழு” உறுப்பினர்கள்தான் “மாநில விடுமுறையை “ தீர்மானிக்கின்றனர்..அதாவது அந்த 3 சிறப்பு விடுமுறை தினத்தை முடிவு செய்கின்றனர்..என்பது உங்களுக்கு தெரிந்தும் இதில் மோடியையும் பாஜகவையும் மத்திய அரசையும் பழித்து ஏன் உண்மையை மறைத்தீர்கள்? பொய்க்கு துணை போனீர்கள்?

2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறைகள் 24.06.2016 அன்று அறிவிக்கப்பட்டு விட்டடதும்,14,01 2017 அன்று பொங்கல் அன்று சனிக்கிழமை அரசின் பொது விடுமுறை வருவதால், தசரா அன்று இன்னொருநாள் கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள்லாம் என 23.11.2016 அன்று கூடிய அரசு ஊழியர் குழு முடிவுசெய்த்தை நீங்கள் மறைத்து செய்தி வெளியிட்டது ஏன்?

இப்போது பொங்கலன்று கட்டாய விடுமுறை உங்கள் கூப்பாட்டினால் அறிவிக்கப்பட்டுவிட்டது..அதிலும் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை..அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுதான் இந்த மாற்றத்தையும் அறிவித்தது,,இதிலும் கூட மத்திய அர்சு பணிந்ததாக ஏன் பொய் செய்தி வெளியிட்டீர்கள்?..

ஒருநாள் அதிக லீவு கிடைத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு உங்களால் இப்பொது ஒருநாள் லீவை ரத்து செய்து அவரகள் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக்கொண்டீர்கள்?

நீங்கள் போட்ட “பரபரப்பு “ செய்தியை மத்திய அரசின் இணைய தளங்கலில் உறுதிசெய்து கொள்ளாத  “வீர”மனி”யும், சசியும், ஸ்டாலினும், வைகோவும், “”ஒப்பாரி அறிக்கை வெளியிட்டு இப்போது தலைகுனிந்து நிற்க நீங்கள் ஏன் காரணமானீர்கள்?

இவர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?

அத்தனை  தலைவர்களும் உண்மையை ஊர்ஜிதம் செய்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு அவமானப்பட்டபோது, உண்மைதெரிந்து முழு ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை, பொன் ராதா, போன்றோர் அறிக்கையை இருட்டடிப்பு செய்தத்துதான் உங்கள் பத்திரிக்கை தர்ம லீலாவினோதமா?

மோடி அரசை தூற்றுவதன் மூலம்தான் உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்றால்  உங்கள் ஜீவாதாரத்தை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை!

ஆனால் “பொய் செய்திகளை மட்டுமே “ வெளியிட்டு “சென்சேஷன்” நிகழ்த்த விரும்பினால்....இப்படி ஏற்கனவே செய்தவர்களின் அழிவினால்தான், நீங்கள் வந்து இருக்கீறீர்கள்...நீங்களும் அதையே செய்தால் ..உங்களுக்குப்பின்னால்...”அடுத்த ஆள்” ரெடியாக இருக்கிறான்..என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

“உயிரே போனாலும் உண்மையை போற்றுவோம்”  
”கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும், 
பொய்மைக்கு துணை போகோம்’

நன்றி!

என்றென்றும் நட்புடன்
எஸ்.ஆர்.சேகர்