Pages

Sunday, January 15, 2017

பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..


தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..
தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்”
மக்களின் மீது அளவற்ற பாசம்
கடவுளர்களின் மீது அதீத பக்தி
இவைகள் மட்டுமே போதுமா ?
ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு?
போதாது என்கிறது இன்றைய சூழ்ச்சி உலகு..
பொன்னார் ஏன் மன்னிப்புகேட்க வேண்டும்?
“பீட்டாவும், திமுகவும், காங்கிரசும், கடைசியாக அதிமுகவும், செய்துவிட்டுபோன “ஜல்லிக்கட்டு கொலைக்கு” பாஜகவும் பொன்னாருமா பொருப்பேற்க வேண்டும்? இது எந்த நாட்டு நியாயம்?
தமிழ் கலாச்சாரம், இந்திய பண்பாட்டின் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் சில தேசத்துரோகிகளின் “லாபியிங்”கில் வீழ்ந்த சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு,கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசுகள் வைத்த பலஹீனமான வாதத்தின் விளைவு..
இதற்கு பாஜகவும், பொன்னாரும் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் ஜல்லிக்கட்டடை மீட்டெடுக்க நாம் மட்டும்தான் உண்மையான, வீரச்சமர் புரிந்தோம்...என்பதை..
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய கட்சிகள், தங்களை நீதிபதிகளாக பிரகடனம் செய்துகொண்டால்...அதைப்பற்றி கவலைப்படவேண்டியது மக்களே..நாமல்ல!
விரைவில் “ஜல்லிக்கட்டை கொன்ற” தமிழக மா பாவிகள் மக்கள் மன்றத்தில் தூக்கிலடப்படுவார்கள்..
ஜல்லிக்கட்டு காளை புதிய பொலிவோடு தாமரை தடாகத்திலிருந்து சீறீப்பாயும்..

No comments: