Pages

Friday, January 31, 2014

என்ன குடும்பம் இது--பாகம் இரண்டு

நான் கொஞ்சம் “லேட்தான்”—ஆனாலும் கருணாநிதி பற்றி எழுதினால் தாமதமானாலும்..சூடுகுறையாதுதான்..

துங்குகின்ற தந்தையை காலை 6.30 மணிக்கு எழுப்பிய தனயன் ( கருணாநிதி அதிகாலையிலேயே எழுந்து விடுவார் என்பதும், தற்போது நடக்க முடியாததால், யோகாசன பயிற்சி மட்டும் செய்கிறார் எனபதும் பத்திரிக்கை செய்திகள்)..தன் தரப்பு நியாயங்களை வாதிட்டதும், பிற்பகலில் தந்தை இவரை கட்சியை விட்டே நீக்கியதும், நாடறிந்த செய்தி..

பதவிப்போட்டிகள் உலகத்தில் “நடக்காதது ” ஒன்றுமில்லை..கலைஞர் குடும்பத்தில் இது நடப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை..ஆட்சியில் இருந்த போதே தமிழகத்தை 4 ஆக கூறு போட்டு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வசூல் உரிமை பட்டாவை  வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

முதல் பங்கை கடைசி மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி.யாகவும், இலக்கிய அணி செயலாளராகவும், கொடுத்து, துணைவி ராசாத்தி குடும்பம் “பொங்கி எழாமல்” “ அணைத்து” வைத்தார் கலைஞர்..

இரண்டாவது பங்கில், முதல் மனைவி, தயாளு குடும்பத்தில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும்தான் தொடர் குடைச்சல்கள்..இதற்கு முன்னமே அழகிரி கொடுத்த குடைச்சல்களில் அழகிரியை எவ்வளவு முறை தான் கலைஞர் காப்பாற்ற முடியும்?

இந்துமதம் தெய்வீக மதமல்லவா?—முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமல்லவா?—கலியுகத்தில் செய்தபாவங்களை கண்முன்னமே அனுபவித்தாகவேண்டும் என்பது விதியல்லவா?

கட்சியையே உயிராகவும் கலைஞரையே தெய்வமாகவும் நினைத்து பணியாற்றிய அவரது மந்திரிசபை சகா..தா.கிருட்டிணன்..அவர்களை மகன் அழகிரிக்கு போட்டியாக வந்துவிட்டதாக எண்ணி,மகனுடைய ஆட்கள் அவரை தீர்த்துக்கட்ட,--- நீதி வழங்கி அனுதாம் தெரிவிக்க வேண்டிய கலைஞர், ---மகனுக்கு ஆதரவாக, “இதுமாதிரி கொலைகள், திராவிட இயக்கத்தில், நடக்காத ஒன்றுமில்லை”, என்றார்..அதிமுக அரசு “நீதி வழங்கிவிடாமல்” இருக்க, வழக்கை அடுத்த மாநிலம், ஆந்திராவுக்கு மாற்றி, மகனுக்கு விடுதலை பெற்றுத்தந்தார் கலஞர் அவர்கள்..

மருமகன்கள், கலாநிதி, தயாநிதி, நடத்தும், பத்திரிக்கை தினகரனில், முதலமைச்சர் பந்தயத்தில் ஸ்டாலின் தான் முன்னிலை…அழகிரி ஆட்டத்திலேயே இல்லை..என எழுதியபோது, பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடி, தீவைத்து இரண்டு அப்பாவி உயிர்களை கொன்றது அழகிரி ஆட்களல்லவா?

ஆக தன் குடும்பத்திலுள்ளவர்களை எதிர்த்தால், அவன் ”மந்திரியானாலும், தீர்த்துக் கட்டு…மருமகனானாலும் போட்டுத்தள்ளு…தன் குடும்பத்திலுள்ளவரே தன்னை எதிர்த்தாலும், அவரை முடித்து விடு..கட்சி விட்டு நீக்கிவிடு… ””இறந்து போவாய் என சாபமிட்டார்”—என கொலைப்பழி சுமத்திவிடு…இதுவே திமுகவின் “கலைஞரிசம்”--வைக்கோவை கொலைப்பழி சுமத்திதானே வெளியாற்ரினார்கள்.

இதெல்லாம் சரிதான்..கலைஞர் குடும்பம் இப்படித்தான் சாதாரணகாலத்தில் “வேலையை காட்டுவார்கள்”..--பிரச்சினை என்று வந்துவிட்டால் ( 2000த்தில் கலைஞரை கைது செய்தபோது..நடந்தது கொண்டது போல..) குடும்பமே ஒன்றாய் கூடி ஊரையே ரெண்டு படுத்தி விடுவார்கள்..

எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை..படுக்கையில் இருந்த தகப்பன் கலைஞரை மகன் அடித்ததாக வந்த செய்தியில், ஆச்சரியம் எதுவும் இல்லை..அது அவர்கள் குடும்ப பண்பாடு—பாரம்பரியம்..ஏற்கனவே ஸ்டாலினும் தந்தைக்கு ”அடி”க்கடி”—இப்படித்தான் பரிசு கொடுப்பார் எனபதும் பத்திரிக்கை செய்தி..இப்படி ஒரு “பண்பட்ட “ குடும்பம் இது..

ஆனால் “ஸ்டாலின் இன்னும் நான்கு மாதத்தில்------------…………………….”என்று ஒருவேளை அழகிரி கூறினார் என்பது உண்மை என்று ஒத்துக்கொண்டால் கூட…அந்த செய்தியை ஒரு தகப்பனே பத்திரிக்கையில் எழுதுவது பேசுவது,  உலகில் எந்த நாகரீகமான குடும்பத்திலும் நடக்காது

இப்படிச்சொல்லி மகன் அழகிரியை “காட்டிக்கொடுப்பதால்---போட்டுக்கொடுப்பதால்”—தனுக்கு மாபெரும் தலைகுனிவு—அவமானம்—என்பதை கலைஞர் உணராமல் இருப்பார் என்று நீங்கள் நம்புகிருகீர்களா?
பின் ஏன் இப்படி அழகிரி மீது ஒரு மாபெரும் குற்றச்சாட்டு?—ஒருவேளை நாளைக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால்-----அத்ற்கான ஆதாரம் உண்டாக்கும் முயற்ச்சியா இது?—அல்லது அனுதாபம் தேடும் நிகழ்ச்சியா இது?

சேற்றில் விழுந்து உடலெல்லம் அசிங்கமானதை பற்றி கவலைப்படாமல், மூக்கில் வழிந்த சேரை அகற்றி மீசையை முருக்குவது போல,இந்த களயபரத்திலும், ஸ்டாலினுக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு கேட்டத்துதான்..சிரிப்பின் உச்சகட்டம்..

ஆக கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் கட்சிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது ஒருபுறம், குடும்பத்தில் நடக்கும் அடிதடிகளில், “தனயன்கள் ஒவ்வொருவரும் சுமத்திக்கொள்ளும கொலைப்பழியை ” பத்திரிக்கைகளுக்கு கொடுத்து விளம்பரம் தேடும் அவலம் மறுபுறம்..

என்ன குடும்பம் இது –விசித்திரமான குடும்பம்..

Sunday, January 12, 2014

100 நாட்கள் பொறுப்போம்

”ஆம் ஆத்மீயின் --ஜன்தா தர்பார்” ரில் கூச்சல்--குழப்பம்--திடீர் ரத்து”

ஆட்சிக்கு புதியவர்..ஆசைகள் அதிகம்--ஒரேநாளில் அத்தனையும் மாற்ற முடியும் --என காட்ட நினைக்கிறார்.. கெஜ்ரிவால்..அதனால் ஏற்பாடுகளில் குழப்பம்..எதிர்பார்க்காத அளவு கூட்டம்..

ஜனநெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

2000 பேரை எதிர்பார்த்து--- 1500 சேர்கள் போடப்பட்டு---50 ஆயிரம் பேர் கூடியுள்ளனர்..என்பது எதை காட்டுகிறது..

15ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை காட்டுகிறது..

காங்கிரசால் சீரழிந்த டெல்லி மக்கள் கெஜ்ரிவாலிடம் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது..

மக்களை கெஜ்ரிவால் காப்பாற்றுவாரா?---காங்கிரசின்மீது ஏறி சவாரி செய்துகொண்டே காங்கிரசின் கண்ணை  குத்த காங்கிரஸ் அனுமதிக்குமா? ..

“கன்னா--பின்னா” அறிக்கைகள் விடும் கட்சிக்காரர்களின் வாயை மூடி---மற்றகட்சிக்காரார்களின் “வாயில் விழாமல்” இருந்தால் கெஜ்ரிவாலுக்கு பாதி வெற்றிதான்..என்ன செய்யப்போகிறார்...

அன்று திமுக ஆட்சி அமைத்தபோது கர்மவீரர் காமராசரும்--இன்று வாழும் காமராசர் “பொன்னாரும்” சொன்னது போல்--குறைந்தது 100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..

Saturday, January 11, 2014

ஆம் ஆத்மீக்கு நன்றி..நன்றி..நன்றி

”பாஜக முதல்வர்கள் ஆம் ஆத்மீயை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள்”

இப்ப்படித்தான் மீடியாக்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்
..
ஆம்..ராஜஸ்தான் பாஜக முதல்வர்  வசுந்தரா ராஜே அவர்கள்  தான் வரும் பாதையில், தனக்கு..பொலீஸ்--” பாதுகாப்பு என்கிற பெயரில் கெடுபிடிகள்”--செய்யவேண்டாமென்று கூறியிருக்கிறார்....
சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங்கும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், “ஊழல் புகாரை தெரிவிக்க   தொலை பேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள்..”
இவைகளைத்தான்..பாஜக.. ஆமாத்மீ பார்ட்டி வழியில் செல்வதாக பத்திரிக்ககைகள் எழுத துவங்கியுள்ளனர்..

வசுந்தரா ராஜே சொன்னது..ஆம் ஆத்மீ அறிவிப்புக்கு முன்னரே ஆகும்....அவர்கள் பதவி ஏற்புக்கு முன்னதே. சொன்னது..
ராமன் சிங்க்கின் அறிவிப்பூம் ஆம் ஆத்மீ அறிவிப்புக்குமுன்னரே ஆகும்....ஆக மீடியாவின் எழுத்தின் உண்மை அளவு என்ன என்பது தெரியவே இதை எழுதுகிறேன்.

.அடுத்து...

“ஸ்வாகத்” என்னும் பெயரில் குஜராத்தில், . --2012 ஆம் ஆண்டிலிருந்தே மக்களை--மந்திரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும்  நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.. கடந்த ஓராண்டில் பெறப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான புகார் மனுக்களில் 98 சதவீதம் பேருக்கு  “நிவாரணம் “ கொடுக்கப்பட்டுள்ளது..கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்தே நரேந்திர மோடி அவர்கள் மக்களை தனது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்....
நரேந்திர மோடி அவர்கள் தலைநகரத்தில் அதாவது அகமதாபாத்தில் இருந்தால் 24 மணிநேரத்தில் அவரை சந்தித்து விடலாம் என்று பார்த்தவர்கள் உறுதி கூறுகின்றனர்..13 ஆண்டுகாலமாக மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவரை இவ்வளவு எளிதாக பார்க்கமுடியும் என்றால் உண்மையிலேயே  “யார் எளிமையானவர்? “ என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..

கோவாவின் முதல்வர்..மனோகர் பாரிக்கர்...எந்த விளம்பரமும் இன்றி..டாக்சியிலும், ஸ்கூட்டரிலும், இன்றும்..இன்னும்...சென்றுகொண்டிருக்கிறார்.ஐ.ஐ.டியில் படித்து பட்டம் பெற்று மாநிலத்தின் முதலமைச்சரான முதல் ஐ.ஐ.டி. பட்டதாரி இவர்தான் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்..பாஜக என்றாவது இப்படி விளம்பரம் செய்த்ததா?.
இது ஒருபுறம் இருக்க கடந்த 10 நாட்களாக இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டும் பார்க்கும் ஆங்கில மீடியாக்கள்..ஆம் ஆத்மீயின் சில அறிக்கைகளை தலைப்புச்செய்தியாக விளம்பரப்படுத்தி வருகின்றன....அது இதுதான்..
“ஆம் ஆத்மீ பார்ட்டி..வரும் லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் போட்டியிடும்..
ஆம் ஆத்மீ பார்ட்டி ஜனவரி 26 ஆம் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும்..
இவைகள் எல்லாம் ஆம் ஆத்மீ பார்ட்டியின் உள்கட்சி செய்திகள்..இவைகளுக்கு மீடியாக்கள் அதிமுக்கியத்வம் கொடுக்கும் நோக்கம் என்ன? 

இதே முக்கியத்துவம் இதற்குமுன்பு துவங்கப்பட்ட ஊழலை ஒழிக்க புறப்பட்ட “லோக்சத்தா” போன்ற  கட்சிகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? ..இந்த மீடியாக்களில் நேரடியாகவோ..மறைமுகமாகவோ..காங்கிரசின் பங்குகள் இருப்பதாலோ?..
ஆம் ஆத்மீ பார்ட்டியை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்..ஊழலை ஒழிக்கவும், காங்கிரசின் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும் ஆம் ஆத்மீ பார்ட்டியின் வரவு உதவும் என்று நான் எதிர்பார்த்தேன்..
ஆனால் ”ஆம் ஆத்மீ பார்ட்டி பாஜகவுக்கு மாற்றாக இருக்கும்”-- என்கிற காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் இடதுசாரிகளும் பிரச்சாரம் செய்வதை ஏற்கமுடியாது-- என்பதற்கு என்னுடைய காரணங்களை நான் கீழே தருகிறேன்..
ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஆம் ஆத்மீ கட்சி காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு” காங்கிரசிற்கு எதிரான வாக்குகளை பெற்று” ---ஆட்சி அமைப்பதற்க்காக..--ஊழலின் ஊற்றுக்கண்ணான காங்கிரசின் ஆதரவைப் பெற்றது  சரியா?
எளிமை ஏன்னும் பெயரில் மெட்ரொ ரயிலில் பிரயாணம் செய்து ஆம் ஆத்மீ கட்சிகாரர்கள் மொத்த ரயிலையே டிக்கட் இல்லாமல் பயணம் செய்த்தது சரியா?..இதுதான் எளிமையா?
இலவசங்களை அள்ளிவீசும் ஆட்சிக்கு எதிராக பேசிய ஆம் ஆத்மீ--- “பொய்யான இலவசமின்சாரம்”--மக்களை ஏமாற்றும் 700 லிட்டர் இலவச குடிநீர் “----அறிவிப்புக்கள்   சரிதானா?--

இவைகளைத்தானே இதுவரை காங்கிரஸ் செய்து வந்தது..? ஆம் ஆத்மீ காங்கிரசுக்கு மாற்றா? அல்லது காங்கிரசின் இரண்டாவது அணியா?
நாட்டின் மிக முக்கியமான பல பிரச்சினைகளில்..குறிப்பாக ஆர்டிகிள் 370, பொதுசிவில் சட்டம், போன்றவற்றிக்கு தங்கள் கொள்கைகளை ஆம் ஆத்மீ இன்னும் சொல்லவில்லையே ஏன்?---
மாறாக அவர்கள் கட்சியின் மிகமுக்கியமான தலைவர் பிரசாந்த் பூஷன் காஷ்மீர் பற்றி பேசி..  நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்து --அதை  “அது அவரின் சொந்த கருத்து “ என கெஜ்ரிவால் சொல்வது சரியா?--நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கட்சியின் கருத்து ஒன்றும், தனிப்பட்ட கருத்து ஒன்றும் வைத்துக்கொள்ளாமா?
அரசியலில் புதிதாக வந்திருக்கும் கட்சிக்கு வரவேற்பு தெரிவிக்க ஆசைபட்டேன்..அது காங்கிரசுக்கு மாற்றாக இருக்கும் என நினைத்து..ஆனால் அது காங்கிரசின் “பி” டீமாக இருப்பது கண்டு இப்போது வருத்தப்படுகிறேன்...
என்றென்றைக்கும் இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு பாஜகவும் நரேந்திர மோடியும்தான் என்பது மீண்டும் நிரூபணமாக்கிய ஆம் ஆத்மீக்கு நன்றி--நன்றி..நன்றி..