Pages

Sunday, January 12, 2014

100 நாட்கள் பொறுப்போம்

”ஆம் ஆத்மீயின் --ஜன்தா தர்பார்” ரில் கூச்சல்--குழப்பம்--திடீர் ரத்து”

ஆட்சிக்கு புதியவர்..ஆசைகள் அதிகம்--ஒரேநாளில் அத்தனையும் மாற்ற முடியும் --என காட்ட நினைக்கிறார்.. கெஜ்ரிவால்..அதனால் ஏற்பாடுகளில் குழப்பம்..எதிர்பார்க்காத அளவு கூட்டம்..

ஜனநெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

2000 பேரை எதிர்பார்த்து--- 1500 சேர்கள் போடப்பட்டு---50 ஆயிரம் பேர் கூடியுள்ளனர்..என்பது எதை காட்டுகிறது..

15ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை காட்டுகிறது..

காங்கிரசால் சீரழிந்த டெல்லி மக்கள் கெஜ்ரிவாலிடம் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது..

மக்களை கெஜ்ரிவால் காப்பாற்றுவாரா?---காங்கிரசின்மீது ஏறி சவாரி செய்துகொண்டே காங்கிரசின் கண்ணை  குத்த காங்கிரஸ் அனுமதிக்குமா? ..

“கன்னா--பின்னா” அறிக்கைகள் விடும் கட்சிக்காரர்களின் வாயை மூடி---மற்றகட்சிக்காரார்களின் “வாயில் விழாமல்” இருந்தால் கெஜ்ரிவாலுக்கு பாதி வெற்றிதான்..என்ன செய்யப்போகிறார்...

அன்று திமுக ஆட்சி அமைத்தபோது கர்மவீரர் காமராசரும்--இன்று வாழும் காமராசர் “பொன்னாரும்” சொன்னது போல்--குறைந்தது 100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..

No comments: