Pages

Friday, April 29, 2011

மக்கள் பணம்; மக்களுக்கு வர வேண்டிய பணம்

தாய்மார்களுக்கு சத்தான உணவு கிடைக்காததால், இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு சத்து குறைந்த குழந்தைகளாக பிறக்கின்றன. ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளில் சரிபாதி குழந்தைகள், குறைவான எடையுள்ள குழந்தைகளாக உள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் போன்ற மிக அதிகமான செலவு செய்த விளையாட்டுக்கள் நம்நாட்டுக்கு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. விளையாட்டு போட்டிகளால், ஊரின் கட்டமைப்பு உயருகிறது. வெளிநாட்டுக்காரர்கள் வருவதால், சுற்றுலா பெருகுகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வருமானம் தரும் தொழிலில் சுற்றுலா பெரும்பங்கு வகிக்கிறது.
சுற்றுலாவால் நாட்டின் பெருமையும், மரியாதையும் உயருகிறது. இவ்வளவையும் தரவேண்டியதை, நடைபெற்று முடிந்த, "காமன்வெல்த் விளையாட்டு' தந்ததா, என்பதும் ஒரு கேள்வி. சரி,"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு வருவோம். மேலே சொன்ன நலிந்தவர்களை தூக்கிவிட, மக்கள் நல அரசுக்கு தேவை நிதி. அதை அள்ளித் தருகிற, "அட்சய பாத்திரம்'மாக, "2ஜி' இருந்தது. ஆனால், அதில் கிடைத்த வருமானம் போய்ச் சேர்ந்ததோ, ஒரு சில தனிப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே.
"2ஜி'க்கு பிறகு நடைபெற்ற, "3ஜி' ஏலம், பிரணாப் முகர்ஜி தலைமையில் வெளிப்படையாக நடந்தது. அதனால், 35 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் எதிர்பார்த்த ஏலம், ஒரு லட்சம் கோடி ரூபாயை ஈட்டித் தந்தது. அப்போது தான், "2ஜி'யின் செல்வாக்கு என்ன, அதில் வந்த வருமானம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தது. நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
காமன்வெல்த் போட்டிகளுக்காக செலவழித்ததாக கூறி சுருட்டப்பட்டது மக்களுடைய வரிப்பணம்; "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டதும், மக்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம். இந்த பணம் இரண்டு பேரால் மட்டுமே சுருட்டப்பட்டதாக இப்போதைக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் வெளியில் தெரியும் முகங்களே. ஒளிந்திருக்கும் முகங்கள் யார் யார், அவர்களுக்கு சென்று அடைந்தது எவ்வளவு, ஆட்சியும், அதிகாரமும் தான் அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதா? "பதவி இழந்த பிறகும், மரியாதை பெறுபவனே பண்பாளன்' - இது சாணக்கியன் கூற்று. பதவி போன பிறகு இவர்கள் நிலை என்ன, செல்லாக் காசா, ஜெயில் வாசமா, காலம்தான் பதில் சொல்லும்.

கனிமொழியும், கல்மாடியும்

காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்காக சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் கைது. நாளையோ அல்லது மே மாதம் 6ம் தேதியோ கனிமொழி கைதாகலாம். கனிமொழி கைதானால், அது, தி.மு.க.,விற்கு தேய்பிறை தான்.சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "ஒரு கூட்டமே கைது செய்யப்பட வேண்டிய இடத்தில், ஒருவர் தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்' என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியே குற்றங்களுக்குள் ஒளிந்திருப்பதால், கனிமொழி கைதானால், காங்கிரசும் காட்டிக் கொடுக்கப்படலாம். இருவருமே அனைத்து ஊழல்களிலும், பின்னிப் பிணைந்திருப்பதால், அரசியலிலும் கைதேர்ந்தவர்கள் என்பதால், ஒருவர் ஏற்படுத்தும் உராய்வு, இருவரையுமே சேர்த்து, "சந்திக்கிழுக்கும்' என்பதை இருவருமே அறியாதவர்கள் அல்லர்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், "2ஜி' அலைக்கற்றை ஊழலும் பல ஒற்றுமைகளைக் கொண்டவை. இரண்டிலேயும், வெளியே தெரியும் முகங்கள் ஒன்று; வெளியே தெரியாத உண்மையான முகங்கள் அதிகம். இரண்டு ஊழல்களிலும் நாட்டின் மிகப்பெரிய, "தலைகள்' பங்கு பெற்றிருக்கின்றன.பெரிய இடத்து சம்பந்தம் - பெருந்தலைகளின் பங்கு இருப்பதாலேயே, கனிமொழியும், கல்மாடியும் சிறிதும் அச்சப்பட்டதாகத் தெரியவில்லை. கல்மாடி, தான் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவெடுத்ததாக தைரியமாக சொல்கிறார். இதை உறுதிப்படுத்தும் வண்ணம், சி.பி.ஐ., விசாரணைக்குப் பின், அவர், மன்மோகன், சோனியா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். மேலிடமும் தன்னோடு சேர்ந்து, "சிக்கி' இருப்பதாலேயே, தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.

இந்த விவகாரத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, நிதின் கட்காரி பெற்ற தகவலும், பண பரிவர்த்தனைகள், நிதி முடிவுகள் அனைத்தும், அமைச்சர்கள் குழு, அமைச்சரவை உப கமிட்டி, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமருக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது."2ஜி' அலைக்கற்றை ஊழலிலும், கலைஞர், "டிவி'க்கு கொடுக்கப்பட்ட, 210 கோடி ரூபாயை பார்க்கும் போது, "தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல்' பட்டம் தகுதி இழந்தது தெரிகிறது. ஆண்டு வருமானம் வெறும், 47 கோடி உள்ள கலைஞர், "டிவி' வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு கொண்ட, தன்னை விட மிகச்சிறிய இரண்டு நிறுவனங்களிலிருந்து, 210 கோடி ரூபாய் கடன் பெறுவது என்பது, தி.மு.க.,வின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் பெருமைக்கு ஒரு களங்கம். எங்கோ தப்பு நடந்திருக்கிறது; யாரோ தவறாக ஆலோசனை கூறியிருக்கின்றனர்.

சர்க்காரியா காலத்திலிருந்த விவேகம், இப்போது கருணாநிதியின் வாரிசுகளிடம் இல்லை. லாபம் வரும் என்று தெரிந்தே தான் ராஜா தொலைத் தொடர்பு அமைச்சராக, கனிமொழியால் ஆக்கப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை சொல்கிறது. விவசாயத்திலிருந்து வருமானமில்லை, வாழ்வு நடத்த வழியில்லை என்பதால், தினசரி 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே நாட்டில் ஊழல்கள் மூலம் ஆயிரம், லட்சம் கோடிகளை குவிப்பவர்களும் இருக்கின்றனர். இதற்கு எப்போது வரும் தீர்வு?

Saturday, April 16, 2011

ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?

சட்டசபை தேர்தலில், 80 சதவீதத்திற்கு அதிகமாக மக்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்பதா? ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி என கொள்வதா? வாக்காளர்கள் கடமை இதோடு முடிந்து விட்டதா? நாம் யாரை தேர்வு செய்ய ஓட்டளித்து இருக்கிறோம்? அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த ஊழல் கட்சி கையில் அதிகாரம் போகப் போகிறது?

தமிழ்ப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "குடவோலை' ஓட்டு முறை மூலம், ஜனநாயகத்தை உலகத்திற்கு கற்றுத் தந்தவர்கள் தமிழ் மன்னர்கள். சர்வ அதிகாரமும் பெற்றவன் மன்னன். அனைவரும் அவன் கொடை கீழ் தான் என்றிருந்த போதும், தமிழ் மன்னர்கள் ஜனநாயகத்தைப் போற்றி வந்திருக்கின்றனர். 

குற்றமிழைத்தவர்கள், கொலைகாரர்கள், குடிகாரர்கள், சமூக அந்தஸ்து இல்லாதவர்கள், தனக்குப் பின் தன் வாரிசு என்போருக்கெல்லாம் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை என, அன்றே நிர்ணயித்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது கண்டு, நெஞ்சம் கனக்கிறது. 

அன்றைய 10ம் நூற்றாண்டில் மட்டுமல்ல, இன்றைய, 21ம் நூற்றாண்டிலும் தமிழகம் தலை நிமிர்ந்து தான் நின்றது. உலகின் மிகப்பெரும் ஐ.டி., நிறுவனங்கள், நாசா போன்ற விண்வெளி அமைப்புகள், தமிழர்களையும், சீனர்களையும் தான் தங்கள் நிறுவனங்களுக்கு தேர்வு செய்தனர். தமிழர்களின் அறிவுத்திறன், வேகம், முற்போக்கு சிந்தனையே இதற்கு காரணம் என்று பில்கேட்ஸ் முதலானோர் கூறினர்.

இத்தகைய பெருமை பெற்ற தமிழகம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்து தமிழ், தமிழன் என்று பேசி, நம்மை ஏமாற்றி, உலகம் நம்மை எள்ளி நகையாட வைத்த கட்சிகளால், இன்று, தலைகுனிந்து நிற்கிறது. ஓட்டளித்த 80 சதவீத மக்கள், இன்றைய ஆட்சியாளரை மாற்றிவிட்டால், இந்த நிலை மாறி விடுமா? தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து விடுமா? 

ஆட்சியாளர்களுக்கு நாம் அதிகாரம் வழங்குகிறோம், பொறுப்பு கொடுக்கிறோம். அதற்கு ஆட்சியாளர்கள், மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அவர்கள் பதில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலின் போது மட்டும் தான் இருக்கிறது என்பதும் ஒரு காரணம். 

மக்கள் நலனுக்காக ஆட்சி செய்ய வேண்டிய நல்லவர்கள் கிடைக்காததால், வாக்காளர்களும், உண்மையான ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாமல், இதுவரை, ஒரே தோசையை திரும்பத் திரும்ப, திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு? புதிய ஆட்சியாளர்களை கொண்டு வர முடியாதா? 

ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டசபைக்குள்ளும், சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி வேண்டும். அது தரமான, தகுதியான, நிரூபிக்கப்பட்ட, மக்கள் நலம் விரும்பும் சக்தியாக இருக்க வேண்டும். நீதிபதிகள், தேர்வாணைக் குழு நிர்வாகிகள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் என்பன போன்ற பல்வேறு மக்கள் நல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் அல்லது தகுதியில்லாதவர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்க, இந்த மூன்றாவது சக்தி சட்டசபைக்குள் வர வேண்டும்.

சட்டசபைக்கு வெளியேயும் ஒரு மூன்றாவது சக்தி தேவை. அதுவும், தரமும், தகுதியும் வாய்ந்த அரசு சாரா பொது நல அமைப்பாக இருக்க வேண்டும். இன்று ஊழலுக்கு எதிராக, இந்தியாவை உலுக்கிய, இளைஞர்களை கவர்ந்த சமூக ஊழியர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாதிரியான ஒரு காவல் அமைப்பு வேண்டும். 

அதில் பொதுமக்கள் பெருமளவு பங்கு கொள்ள வேண்டும். இந்த சமூக அமைப்பிலிருந்து பாதி பேர், அரசின் பிரதிநிதிகள் பாதி பேர் என்று சேர்ந்த குழுவே, அரசின் கொள்கைகளை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளே இறுதியில் சட்டமாக்கப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாட்டுக்கு ஓட்டுரிமை மூலம் மக்கள் தீர்ப்பளிக்கின்றனர். அதுவும், இன்றைய அரசுக்கு தண்டனை தரப்படுகிறதே தவிர, நாளைய நல்ல அரசு தேர்வுக்கான தீர்ப்பாக அது இருப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும் என்றால், அரசின் ஐந்து ஆண்டு கால செயல்பாட்டிலும், மக்களின் பங்கும், பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஓட்டுரிமை பயன்படுத்தும் போது மட்டுமே வாக்காளர்களின் பங்கு அரசியலில் இருக்கிறது என்ற நிலை உள்ளதாலேயே, இம்மாதிரி ஊழல் அரசுகள் வந்து போகின்றன. அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. உள்ளொன்றும், வெளியொன்றும் என இரு முகங்களில் உள்ளதை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.

அரசை யாரெல்லாம் நடத்துகின்றனர்? தமிழ், தமிழன், இந்தியன் என்போரெல்லாம், இந்தியாவின் இறையாண்மையை எப்படி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்? பன்னாட்டு கம்பெனிகள் எப்படி இந்திய அரசுகளை ஆட்டிப் படைக்கின்றன? இவையெல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. 


இந்த நிலை தொடராமல் இருக்க, அரசின் கொள்கை முடிவு எடுப்பதில், அதை அமல்படுத்துவதில், வாக்காளர்களாகிய நம் பங்கு இருக்க வேண்டும். அதுவும், ஆட்சி செய்யும் ஐந்து ஆண்டு காலமும் இருக்க வேண்டும். இதற்கு நம் உரிமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், ஜனநாயக தத்துவத்தை குடை சாய்க்கும் ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த முடியும்.
]
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது சாத்தியம். இதில், பத்திரிகை, ஊடகங்கள் பங்கு மகத்தானது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நான்கே நாட்களில் உலகறியச் செய்தது ஊடகங்கள் தான். இதே ஊடகங்கள் தான், தரமுள்ள, தகுதியாக மூன்றாவது சக்தியை சட்டசபைக்குள் கொண்டு செல்ல காரணமாக இருக்க வேண்டும். 

சட்டசபைக்கு வெளியே வலிமையான மக்கள் சக்தி கொண்ட, தகுதியான சமூக குழுக்களை உருவாக்க பத்திரிகைகள் உதவ வேண்டும். இந்த இரண்டும் நடக்கும்போது, ஊழல் பறந்தோடும்; நேர்மை நெஞ்சு நிமிரும்; தமிழகம் மீண்டும் தலை நிமிரும்.

Thursday, April 14, 2011

இளமையில் எங்கிருந்தார் இராகுல் காந்தி





ராகுல் காந்தி சென்றவிடமெல்லாம் காங்கிரஸை தோற்கடித்து, ”அதை இல்லாமல் செய்துவரும் பெரும்பணியை” --செய்துவருவது நாம் அறிந்ததே..அந்தவகையில் தமிழ்நாட்டிற்கும் வந்து காங்கிரஸையும்--திமுகவையும் தோற்கடிக்கப் போகும் பெருமையை ( மே--13ந்தேதி புரியும்).செய்திருக்கிறார்.

கேரளாவிற்கு சென்று அங்கு 87 வயது “அச்சுவை” சாடியிருக்கிறார். மீண்டும் முதல்வரானால் 87 வயது “அச்சுவிற்கு “--பதவி முடியும் போது 92 வயதாகுமாம்.பெரியவர்களை மதிக்கும் தேசம் இது--கொஞ்சம் காலம் முன்பு வரை காங்கிரஸ் தலைவர்களின் சராசரி வயது 75.

திடீர் தலைவரான இவருக்கு இவை தெரிந்திருக்க நியாமில்லை.
அது போகட்டும் .இவர் ஆதரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனை வயதாம்?--தமிழ்நாட்டில் 87 என்ற எண் நல்ல எண்--கேரளாவில் அதே 87 என்ற எண் கெட்ட எண்ணா?--








எவ்வளவோ வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வந்து ஆன்மீக பலம் பெற்றனர்..

ராகுலின் 15 வயது முதல் 30 வயதுவரையிலான இருந்த இடம் யாருக்கும் தெரியவில்லை ...இந்தியாஅவில் பிறந்த இந்த வெளிநாட்டவர் பெண்மீக பலம் நாடி ஏதோ ஒரு நாட்டில் இருந்திருக்கலாம்--நாடுதான் தெரியவில்லை---

--