Pages

Thursday, August 9, 2018

மறைந்திருக்கும் கலைஞரின் இணக்கமான பக்கம் |

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் "அந்தப் பக்கம் " ஒவ்வொரு பாஜக வினரும் படித்து தெரிந்து பாலோ செய்தால் அது நமக்கு சாதகமானது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் 

ஊழல்,  சொந்தக்காரர்களுக்கு பதவி கொடுப்பது, குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி ,இலவசங்கள், சாராயக் கடைகளை திறந்தது,தேர்தல் வாக்குக்கு பணம் கொடுத்தது, என்பதை உலகில் முதல் முதல் தமிழகத்தில் துவக்கியது மறைந்த கருணாநிதி தான். அவர் தலைமை ஏற்ற திமுக தான் என்பது உலகறிந்த உண்மை..

இந்து மத துவேஷம் ,பார்ப்பன எதிர்ப்பு, மாநில சுயாட்சி ,என்பன எல்லாம் கலைஞரின் பொழுதுபோக்கு. வேலை இல்லாத நேரங்களில் அதாவது கட்சியை முன்னெடுக்க ஏதுவான பிரச்சனைகள் கண்டுபிடிக்கமுடியாத காலங்களில் மேற்சொன்னவை கலைஞருக்கு உடனடியாக உதவும் "பாஸ்ட் ஃபுட் " 

இவையெல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே. .அரசாங்கம் தன்னிடம் இருக்கும் போது இரண்டாவது பாராவில் எழுதியதை எல்லாம் செயல்படுத்துவார். 

போதும் போதும் ஒருவர் இறந்த பின்பு ஈவு இரக்கமின்றி அவரது கடந்த கால செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறீர்கள் இது நியாயமா? என்று கேட்பது என் காதில் விழுகிறது 

வேறு என்ன செய்வது. தேசம் தெய்வம் தர்மம் விரோதி என்பவரை நாம் தூக்கியா பிடிக்க  முடியும்? இருந்தாலும் கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. குறிப்பாக இயக்க ரீதியான வளர்ச்சி, "அவர்களுக்கு என்ற திராவிட கட்டுப்பாடு ", அதை கட்டிக் காத்தல், கடுமையான உழைப்பு |சிறந்த எழுத்தாற்றல் | நிறைய வாசிப்பு, என்பன நமக்கு நமது இயக்க வளர்ச்சிக்கு தூண்டுகோலாக எடுத்துக்கொள்ளலாம் . 

நமது இன்றைய கட்டுப்பாடு, திட்டமிடல், கொள்கை ரீதியான ஞானம் | சித்தாந்தத்தில் ஈடுபாடு, இவைகளெல்லாம் ஷாக்கா நமக்கு கற்று கொடுத்தது. நமது வழிகாட்டியாக ஆதர்ச புருசனாக யாராவது ஒரு பிரச்சாரகர் நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறார். இருக்கிறார். நம்முடைய மூல்யங்கள் | பண்புகள் | வளர பிராத்தமிக்சிக்ஷா வர்க மற்றும் சங்க சிக்ஷா வர்க நமக்கு பயிற்சிகள் அளிக்கிறது..... 

 இப்படி நாம் வளர்ந்தோம் .வளர்க்கப்பட்டோம். ஆனால் கருணாநிதிக்கு யார் பயிற்சி கொடுத்தார்.? கேட்டால் நாங்கள் அண்ணாவின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தோம். பெரியாரின் குருகுலத்தில் பாடம் பயின்றோம். என்றெல்லாம் வசனங்கள் பேசுவார்கள்... 

கருணாநிதியின் ஆளுமை ,குறிப்பாக தன் கட்சியை தன்னுடன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுவும் முதல்வர் ஆக (1969) இருந்தது முதல் இன்று 2018 வரை 49 வருடம் என்பது மிகப் பெரிய சாதனைதான். கருணாநிதியின் ஆளுமையில் நம்மை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள் 3 

சி என் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு அவரது கட்சியும் நாடும் எதிர்பார்த்த விஷயம் கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆவார் என்று . இருந்தது .....

 ஆனால் ஒரே இரவில் அத்தனை எம்எல்ஏக்களும் தன் பக்கம் இழுத்தது மட்டுமல்லாமல் இவருக்கு இணையாக இருந்த மதியழகன் அன்பழகன் ஆகியோரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டது தான் .இதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது இடத்தில் இருந்த நெடுஞ்செழியனையும் அதே இரண்டாம் இடத்தில் மீண்டும் வைத்துக் கொண்டதுதான் 

1972இல் எம்ஜிஆர்  ஐ கருணாநிதி திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்தார். எம்ஜிஆர்  அதிமுகவை ஆரம்பித்தபோது திமுகவின் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மந்திரி கூட எம்ஜிஆருடன் செல்லவில்லை. இரண்டே இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே எம்ஜிஆருடன் போனார்கள். போகுமிடமெல்லாம்மக்கள் வெள்ளத்தில்  எம்ஜிஆர் மிதந்தார். திமுக அழிந்து போகும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தன் சாதுர்யத்தால் திமுகவை கட்டுகோப்பாக வைத்து கருணாநிதி காப்பாற்றினார். 

இந்த ஆளுமையை கருணாநிதிக்கு எந்த இயக்கம் கற்றுக் கொடுத்தது?. எந்த கல்லூரியில் இந்த பாடம் பயின்றார் ? என்பது எல்லாம் தான் வியக்க வைக்கும் விஷயம். 

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் பல திமுக மாவட்ட செயலாளர்களுடன் நான் ரகசிய தொடர்பில் இருந்தேன் .திமுக கலகலத்துப் போனது. பல தலைவர்கள் கருப்பு சிவப்பு கரைவேட்டியை கிழித்துப்போட்டு விட்டு தலைமறைவானார்கள். கருணாநிதி ஜனதாக் கட்சியோடு கூட்டு வைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆரிடம் தோற்றுப்போனார். இதன் பிறகு 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் கட்சி கரைந்து போகாமல் கட்சியை காப்பாற்றியது கருணாநிதிதான்.

 காமராஜர் பக்தவத்சலம் ராஜாஜி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று எந்த தலைவரையும் நாக்கில் நரம்பில்லாமல் விமர்சிப்பது கருணாநிதியின் இயல்பு .அவர் உபயோகித்த வார்த்தைகள் அச்சில் ஏற்றினால் அச்சம் தரும் வார்த்தைகள் ஆகும்...... 

 தன் கட்சிக்காரன், தான் போட்ட கோட்டைத் தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ளும் தந்திரமாக இந்த தூசணை வார்த்தைகளை கருணாநிதி உபயோகித்தார். . "நீ எரிந்த கட்சி நான் எரியாத கட்சி " சண்டையில் தொண்டனை மகுடிப் பாம்பாக கட்டுப்படுத்த இப்படியான பேச்சுக்களை கருணாநிதி பேசினார் 

ஆனாலும் அரசியலில் ஆட்சியில் இல்லாமல், அதுவும் ஒரு வெகுஜன மக்கள் தலைவர் எம் ஜி ஆருக்கு எதிரான ஒரு கட்சியை கலையாமல் 13 ஆண்டுகாலம் நடத்திய பெருமை கருணாநிதியையே சாரும் 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பார்வையில் 2 காரணங்களை நான் பார்க்கிறேன் .ஆரம்பம் முதலே கருணாநிதியின் யூஎஸ்பி எனப்படும் unique செல்லிங் பாயிண்ட் "தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் "  கவர்ச்சிகரமான பேச்சாற்றல் எழுத்தாற்றல் இந்த இரண்டையும் செவ்வனே பயன்படுத்தினார்

 தன் தொண்டர்களுக்கு தன்னுடைய கட்சிப் பத்திரிகையான முரசொலியில் தினசரி ."உடன்பிறப்புக்கு கடிதம் "எழுதினார். கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் திமுக என்பதற்கு அவர்களிடம் இரண்டு அடையாளம் இருக்கும். ஒன்று கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி கட்டியிருப்பார்.இதை இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது திமுகதான் இரண்டாவது முரசொலி பத்திரிக்கை கையில் இருக்கும் ......

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சில் உள்ள அமைப்புச் செயலாளர் பணியை எந்த போதனையும் பயிற்சியும் இல்லாமல் கருணாநிதி முரசொலியில் தன் கடிதத்தின் மூலம் தொண்டர்களுக்கு பயிற்றுவித்தார்......... 

அந்த தினசரி குறிப்புகள் வழிகாட்டுதல்கள் தொண்டனை கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இன்றைய வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ட்விட்டரில் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும் விஷயங்களை கருணாநிதி 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாக தொண்டனுக்கு எழுதி வகுப்பு நடத்தினார் .இதன் impact மிகப்பெரும் சாதகமாக அவருக்கு அமைந்தது ...

பேச முடியாத எமர்ஜென்சி காலத்திலும் சரி, இப்போதும் சரி, திமுக, திருமணம் முதல் கருமாதி வரை , அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் தங்கள் கருத்து சொல்ல பயன்படுத்தும் களமாக பயன்படுத்தியது ஃ கருணாநிதி இதை சிறப்பாக செய்தார் ஃ  

கட்சித் தொண்டனோடு தான்  நேரடியாக தொடர்பில் இருக்கும் விஷயத்தை ஆர்எஸ்எஸ் அல்லாத வேறு நபர் செய்தது கருணாநிதி மட்டுமா கத்தான்  இருக்க முடியும் ...... 

மேடைகளில் பேசும்போது protocol படி அனைத்து தொண்டர்களின் பெயரையும் கருணாநிதி குறிப்பிடுவார் ஃ இது தொண்டனுக்கான அங்கீகாரமாக ஒருபுறம்  எடுத்துக் கொண்டாலும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய பெயரை, தலைவரே சொல்லி விட்டார் என்ற பெருமிதம் தொண்டனுக்கு உண்டானது. இதனால் களப்பணியில் அவனது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.  ...

ஆட்சியில் இருந்தபோது ஒரு பகுதியிலிருந்து ஒரு கோரிக்கை மனு வருகிறது என்றால் அது அந்தப் பகுதி திமுக வட்ட செயலாளர் பரிந்துரைத்தாலே அந்தப் பெட்டிஷன் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற "முறையை " உருவாக்கினார் கலைஞர் ஃ இப்படி ஒரு அந்தஸ்தை அந்த தொண்டனுக்கு தந்தால் அவன் கருணாநிதியின் கட்டுப்பாட்டை விட்டு எப்படி  வெளியே போவான்..? --. 


"தனக்கு சாதகம், தனக்கு மட்டுமே சாதகமாக, " என்பதே எப்போதுமே கருணாநிதியின் நிலைப்பாடு. அதற்காக "யூ டர்ன் " "அந்தர்பல்டி ""சோமர் சால்ட் || அடிக்க கவலைப்படாதது தான் கருணாநிதி வெற்றியின் சூத்திரம் ....

பாஜககருணாநிதியின் organizational skills பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.. மற்றவைகள் நம் தேவையில் வரவில்லை ... அப்படியென்றால் கருணாநிதியின் அந்தப்பக்கம் நமக்கு கொஞ்சம் இணக்கம் தான்  


Monday, March 26, 2018

தமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்

தமிழ்நாட்டில்கோவை பா.ஜ.க அலுவலகத்தின் மீது மார்ச் 7ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பா.ஜ.கவை தவிர எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டிக்கவில்லை.
மார்ச் 9ம் தேதி சேலம் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கதவுகள் உடைக்கப்படுகிறது. யாரும் இதை கண்டிக்கவில்லை பா.ஜ.க தவிர.

மார்ச் 21ந் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கார் எரிந்து போகிறது! எந்த கட்சியும் கண்டிக்கவில்லை.

சென்ற ஆண்டு கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது பா.ஜ.க அதை கண்டித்தது. 

எங்கோ வடக்கே வி.ஹெச்.பி தலைவர், கருணாநிதி நாக்கை அறுப்பேன் /என சொன்னதற்கு தி.மு.க காலிகளால் சென்னை பா.ஜ.க கட்சி தலைமையகம் கமலாலயம் தாக்கப்பட்டது. 

எந்த கட்சியும் கண்டனமும் தெரிவிக்கவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை.


கடந்த காலத்தில் நடந்தவைகள் எல்லாம் ஒருபுறம் நாம் மறந்து விட்டாலும், தற்போது, ஒரு அரசியல் கட்சியின் அதுவும் ஆளும் கட்சியின் அலுவலகமும், மாவட்டத் தலைவர் வீடும் காரணமின்றி தாக்கப்பட்டதற்கு ஒரு கண்டனமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அரசியல் அநாகரிகம்!


ஹெச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் எழுதியமைக்கு -Ôமை காயும் முன்னேÕ வருத்தமும் மன்னிப்பும் கோரிய பின்பும் அது இன்னும் டி.விக்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியலாக்கப்படுகிறது. வீரவசனங்களை பேசப்படுகிறது. 

ஹெச்.ராஜா இன்னும் மற்ற கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு நியாயமாக இருந்தால். கோவை பா.ஜ.க அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டதற்கு  கண்டனம் தெரிவிக்க வேண்டியது மற்றொரு நியாயம் தானே! அது ஏன் செய்யப்படவில்லை.


ஆக தமிழகத்தில் அரசியல் ஒரு அசிங்க அரசியலாக, பா.ஜ.க வெறுப்பு அரசியலாக, ஆபத்தான ஜனநாயக விரோத அரசியலாக, இந்துக்களின் மீது காழ்ப்புணர்வு அரசியலாக, இந்திராகாந்தி இருந்தபோது இருந்த, மதவாத, ஓட்டுப் பொறுக்கி அரசியலாக மாறி வருவது கண்டனத்திற்குறியது.


இந்த தாக்குதல்களும், இதற்கு சொல்லி வைத்த மாதிரி சேர்ந்து கொண்டு பா.ஜ.க எதிர்ப்பில் ஓரணியாக மாறிவிட்ட மற்ற அரசியல் கூட்டணிகளும் சாதாரண நிகழ்வுகள் அல்ல.


இது அரசியல் லாபம் மட்டும் கருதி  இருந்தால் நாம் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. பொருந்தாத கூட்டணிகள் எவ்வளவோ, பல காலங்களில் கூடி, உருவாகி, உடைந்து பின்பு  காணாமல் போயிருக்கிறது! அதுபோல ஒரு நிகழ்வாக இதைப் பார்க்க இயலவில்லை.


பா.ஜ.கவின் 22 மாநிலங்களில் மாபெரும்  வெற்றி எதிரிகள் நிலை குலையச் செய்து விட்டது. தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற வேறுன்ற முடியாது என்று கீறல் வி-ழுந்த ரெகார்டு வார்த்தைகளை  சொல்லி வந்தவர்களுக்கு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா வெற்றிக்குப் பிறகு மரண பயம் வந்து விட்டது.


வெறும் 1.6 சதம் ஓட்டு, எம்.பி., & எம்.எல்.ஏ.,  & கவுன்சிலர் கூட இல்லாத மாநிலமாக இருந்த திரிபுராவில்  பா.ஜ.கவின் வெற்றி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மரண பயத்துக்கு இட்டுச் சென்று விட்டது?

இதில் தமிழகத்தில் தி.மு.க & அ.தி.மு.க மாறி மாறி ஜெயித்து வந்த நிலையை ÔஜெÕ  உடைத் தெறிந்த பிறகு, ஸ்டாலின் குழுமம் தனது ஒரிஜினல் தேச விரோத முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.

 அதன் வெளிப்பாடு  தான் ராமராஜ்ய ரத  யாத்திரைக்கு ஸ்டாலின் ஒவர் ரியாக்ஷன், தமிமுன் அன்சாரியின் சட்டசபை டான்ஸ். ஜவாஹிருல்லாவின் புது அவதாரம்! முதலியன.


ஏற்கெனவே தமிழகத்தில் தேசிய சக்திகள் அடக்கி வாசிப்பதும், தேச விரோத சக்திகள் ஆட்டம் போடுவதும் வழக்கம். இப்போது  தேச விரோதா, மைனாரிட்டி சக்தி ஒன்று சேர்ந்துள்ளன.

மோடியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரு சிஷீனீனீஷீஸீ கிரீமீஸீபீணீ மட்டுமே காங்கிரசைக் கூட இக்குழுமத்தில் ஈர்த்திருக்கிறது. 


துரதிருஷ்டவசமாக கழகங்களிலிருந்து வெளியேறி பலர் இன்று காங்கிரசில் பொறுப்பு வகிப்பது இதற்கு காரணம்.
வேல்முருகன், தனியரசு, போன்றோர் தேச விரோத கும்பலின் றிணீவீபீ றீவீst  ல் இருக்கலாம். 

திருமா ஏற்கெனவே சர்ச்சுகளின் சம்பள பட்டியலில்  உள்ளார். தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா  போன்றோர் மிஷிமிஷி ன் இந்திய ஏஜண்டுகள் இவர்களின் ஹிட் லிஸ்டில் மோடி உள்ளதால், இவர்களின் கைத்தடிகள் வேலைபார்க்கும் மீடியாக்கள் தேசவிரோத குரலாக தமிழகத்திறீ தினசரி ஒலிக்கிறது!


கோவை பா.ஜ.க அலுவலம், தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் ஒரு சாதாரணமான விஷயமா? இது ஏன் டி.வி விவாதங்களில் விவாதிக்கபடவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எந்த மாற்றுக் கட்சி தலைவர்களிடம் டிவி காரர்கள் Òமைக்கைÕÕ நீட்டி கேள்வி கேட்கவில்லை?


எந்தப் பத்திரிகையும், தமிழ் பத்திரிகை நடுவு ந¤லையாளர்கள் உட்பட தலையங்கங்கள் எழுதவில்லை. இதுதான் ஒரு மிகப்பெரிய கான்ஸ்பிரசி & இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யூனிஸ்ட், இந்து விரோதிகளின் கூட்டுச் சதி.


ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் எழுதுகிறீர்கள் என்கிற முணுமுணுப்பும் கேட்கிறது.

தி.மு.கவிற்கு அரசியல் நாகரீகம் என்றும் இருந்ததில்லை. இன்று மற்ற கட்சிகளிடம் அரசியல் நாகரீகம், மனிதாபிமானம் போன்றவை ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்கிற அதீத ஆசையால் தேச விரோதிகளின் சசித் திட்டத்தில் பலியாகி விட்டது.

உதாரணத்திற்கான சொல்கிறேன். கொங்கு ஈஸ்வன், தா.மா.கா வாசன் போன்றோர்கள் கூட கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறார்கள்.


ஆக தமிழகத்தில் தற்போது இரு துருவ அரசியல் வந்து விட்டதை பா.ஜ.க வரவேற்கிறது. 

சபாஷ் இச்சவாலை நெஞ்சு நிமிர்ந்து  பா.ஜ.க ஏற்கிறது. ஒன்றுமே இல்லாத  கட்சிக்காக எல்லாம் வைத்திருப்பவர்கள் ஒன்று கூடி எதிர்க்கிறார்கள் என்று மகிழ்ச்சியான சவால்!


தேசம் முழுவதும் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்

. அது புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் மாதம் ஒரு மாநிலம் என அவரது வெற்றி வேட்டை  தொடர்வதால் ஏற்பட்ட அச்சம்!
தமிழகத்தில் தான் பா.ஜ.க இல்லையே. இப்படித்தானே அவர்கள் டி.விக்களில்  கூறுகிறார்கள். பின் ஏன் இப்படி என்றால் அதுதான் மரண பயம்?


ஒன்று மட்டும் நிச்சயம்! 

அசிங்கமான ஆபாசமான அநியாயமான, ஆபத்தான அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழக அரசியல் கட்சிகளின் சகாப்தம் திரிபுரா, நாகலாந்து போல  எண்ணி 12 மாதத்திற்குள் முடியப் போவது நிச்சயம்!