Pages

Saturday, December 22, 2012

ஹிண்டு....காங்கிரஸ்....கோயபெல்ஸ்”

ஒருவர் வெற்றி பெற்றால் அவரை பாராட்டுவதும்..மரணமடைந்து விட்டால் அவரது நற்குணங்களை சுட்டிக்காட்டி புகழ்வதும்…நம்நாட்டின் பண்பாடு..



இந்த பண்பாடும், நாகரீகமும், மாநிலத்துக்கு மாநிலம மாறுபடுவதில்லை…எல்லா மாநிலத்திலும் பின் பற்றப்படுவதுதான்..



ஆனால் காங்கிரஸ் கட்சியும் ”இந்துப்” பத்திரிக்கையும் என்.டி.டி.வியும் இதற்கு விதி விலக்கு!

தேர்தல் முடிவுகளை மீடியாக்கள் அலசிக்கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெற்ற காங்கிரசின் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மோடியை புழுதி வாரி தூற்றினார்…



இந்தியாவிலுள்ள அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து, குஜராத்தில் முகாமிட்டு மோடியை தோற்கடித்திருக்க வேண்டும்…என்றார்.



தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் , மோடியை, “ ஒரு மதவாதி…வன்முறையாளர், பிற்போக்குவாதி, “ என்றெல்லாம் திட்டி தீர்த்தார்.



அதற்கு பதிலடியாக நான் சொன்னேன்..” 6 கோடி குஜராத்திகளால் ஜனநாயக முறைப்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை, இப்படி கண்ணியக்குறைவாக பேச காங்கிரஸ் உங்களுக்கு சொல்லிக்கொடுதிருக்கிறதா?”..என்றேன்.
ோடியை முஜத்ிக்கள் ஓட்டுப்போட்டெர்ந்த்டத்ர்..என்ற உங்கு வம்...த்மா கந்தியும்...ர்ார் வல்லாய் பட்டேலும், மொரார்ஜி ேசாயும் கொடத்ுஜத்ையும் குஜத் மக்கையும் அவானத்ும் விாக.... இருக்கிறு என்றேன்..
  

1950 முதல் 2000 மாவது ஆண்டுவரையிலான 50 ஆண்டுகளில் இந்தியாவில நடந்த மதக்கலவரங்கள் சுமார் 1194..அதில் சுமார் 80 சதம் காங்கிரசின் பிரதமர்கள் , திரு நேரு, திருமதி. இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்தில் நடை பெற்றது..இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் கட்சிதான்..இதற்காக இவர்களுக்கு கிடைத்த பரிசு மூன்று “பாரத ரத்னா”..பட்டம்



இப்படி கலவரங்களை உண்டாக்கி முஸ்லீம்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு மதசார்பற்ற தன்மை பற்றி பேச அருகதை கிடையாது—என பீட்டருக்கு நான் பதிலளித்தேன்.

மாறாக இமாச்சலத்தில் தோல்வியை தழுவிய பாஜகவின் முதல்வர் பிரேம் குமார் தூமல்..”மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்” என்றார்.

காங்கிரசின் ராகுலையோ, சோனியாவையோ அவர் அவதூறாக பேசவில்லை.

கட்சிகளுக்குள்ளே கலாச்சார மாறுபாடுகளை பாருங்கள்..

.

மோடி மதவாதியாக இருந்திருந்தால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த 19 தொகுதிகளில் 12 தொகுதியை பாஜக எப்படி ஜெயித்து இருக்க  முடியும்?..

உண்மையை ஏற்றுக்கொள்ள என்றும் இவர்கள் தயாரில்லை..



வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து சொல்ல தயாரில்லாத..( தகுதியில்லாத பத்த்ரிக்கை  என்று நான் சொல்வேன்..) இந்து பத்திரிக்கை இப்படி தலையங்கம் எழுதியது..

“ மோடி…அவருடைய காட்டின் அரசன்…( KING OF HIS JUNGLE ) முஸ்லீம்களை கொன்று குவித்தவர்…டெல்லிக்கு படையெடுக்க முயற்சிக்கிறார்”—என்ன அநாகரீகம்..என்ன வயிற்றெரிச்சல்…



மோடி மதவெறியனாக இருந்திருந்தால்….2002 குஜ்ராத் கலவரத்தில் ஒரு இந்து கூட சுடப்பட்டுரிக்க கூடாது…மரணமடைந்திருக்கக் கூடாது…கைது செய்யப்பட்டு இருக்கக்கூடாது…..தண்டிக்க பட்டு இருக்கக்கூடாது..



ஆனால் துப்பாக்கி சூட்டில்…இந்து 193 பேர் முஸ்லீம் 77.. பேர்

கொல்லப்பட்டதில் இந்து 283 பேர்..முஸ்லீம்..788 பேர்

கைது செய்யப்பட்டதில் இந்து 27,000 பேர்..முஸ்லீம் 7000 பேர்



இவ்வளவு உண்மைகளுக்கிடையே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும் கோயபெல்ஸ் இந்து பத்திரிக்கை----என்.டி.டி.வி. மற்றும் காங்கிரசை என்ன செய்வது…..



குஜராத்தைப் போல…2014 லில்..டெல்லியையும் பிடிப்பத்தே இவரகளுக்கு பாடம் புகட்டும் ஒரே வழி.

Sunday, December 16, 2012

லஞ்சமாகும் மானியங்கள்..தினமலர்

மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு சிறந்த திட்டமாக தெரியும். அரசின் பல்வேறு திட்டத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள், மானியங்கள், மக்களை சென்றடைவதில்லை. இடையில் ஏற்படும் ஒழுகல், சிந்தல், சிதறல், உதிரல் போன்றவை, ராஜிவ் சொன்னது போல, ஒரு ரூபாய்க்கு, 17 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றது உண்மையே.இக்குறையை சரி செய்யத்தான், மக்களுக்கு, மானியங்களை பணமாக, அதுவும் வங்கி மூலமாக, நேரடியாக அவர்கள் கணக்கிலேயே செலுத்தி விட, அரசு முடிவு செய்துள்ளது; இது தவறா?

குஜராத்துக்கு வரும், 13 மற்றும் 17ம் தேதி தேர்தல். இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல், 51 மாவட்டங்களில், நான்கு மாவட்டம் குஜராத்தில் இருக்கின்றன.வாக்காளர் என்றால், காங்கிரசின் ஓட்டு கொட்டும் ஒரு ஏ.டி.எம்., காசு என்னும் கார்டை, வாயில், "ஸ்வைப்' செய்தால், வயிற்றிலிருந்து, "ஓட்டை' கொட்டும் இந்த இயந்திரம். இதை உறுதி செய்யும் சம்பவங்கள், சரித்திரத்தில் நடந்தேறியுள்ளன.

கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், "கரீபி ஹகட்டாவோ' வறுமையே வெளியேறு என்ற, கோஷத்தை முன் வைத்து, இந்திரா வெற்றி கண்டார்.கடந்த, 1971ம் வருடம், சுதந்திரம் பெற்று அன்று, 24 ஆண்டு ஆகியும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. இன்றும் அப்படித்தான் என்பது, வேறு விஷயம்.தோற்றுப்போகும் சூழல் உருவாகும் போதெல்லாம், காங்கிரஸ் புத்தியில் புதிய புதிய ஏமாற்றுத் திட்டங்கள் வேர்க்கும். அதே மாதிரி ஒன்று தான், இந்த மானியங்களை பணமாக, வங்கி மூலம் வழங்கும் திட்டம்.ஓட்டுக்காக, கட்சி பணத்துக்கு பதில், அரசு பணத்தையே, அதாவது, மக்கள் பணத்தையே, மக்களுக்கு கொடுக்க அறிவித்ததுதான் இந்த திட்டம்.

வெளிநாட்டிலிருந்து, ஈமு கோழி என்ற ஒரு பறவையை, இங்கு கொண்டு வந்து, அது இந்தியாவின் தட்பவெட்ப சூழலுக்கு வளருமா என்பதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளிடம் ஆசை வார்த்தை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டினர்.காலம் காலமாக வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டு, காவல் நிலைய வாசல்களில், அசலுக்காக தவங்கிடக்கும் காட்சி, தினசரி பத்திரிகைகள் படம் பிடித்து காட்டுகின்றன. சில தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை.

தனியார், மக்களை ஏமாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசே, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டை பறித்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதும், ஒரு சாராரின் கேள்வி.வாஜ்பாய், "வேலைக்கு உணவு' திட்டத்தை கொண்டு வந்தார்; எதற்காக? அன்றைய தினம், உணவு கிடங்குகளில், கோதுமை நிரம்பி வழிந்தது. சேமிக்க இடமில்லை. தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அதை ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார்.மக்கள், அரசிடம் கையேந்தக் கூடாது. எனவே, இலவசமாக கொடுக்க விரும்பாமல், அவர்களே அதை சம்பாதித்துக்கொள்ளும் வழியில், 8 மணி நேரம் வேலை கொடுத்து, சம்பளமாக கோதுமை கொடுத்தார்.வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, அதே திட்டத்தை, மாற்றுப்பெயரில் காங்கிரஸ் தொடர்ந்தது. பெயர் மட்டுமல்ல, வழிமுறை, செயல்பாடுகளும் மாறின. "தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்பது தான், அந்த புதிய பெயர். இதில், தானியத்துக்கு பதிலாக, பணம் கொடுக்கப்பட்டது. கணக்குக்கு, 100 முதல், 110 ரூபாய் சம்பளம். கைக்கு வருவதோ, 60 அல்லது 70 ரூபாய் மட்டுமே. இடையில், 40 முதல், 50 ரூபாய் வரை, ஒழுகல் இருந்ததால், உருப்படியான வேலை ஏதும் நடைபெறவில்லை.

தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றும், ஆளும் கட்சிக்காரர்கள் பிரித்தாண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்த வேலைக்கு, அவர்கள் கேட்ட விலை, தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனும் நிபந்தனை தான். இப்போது, "வங்கி மூலம் மானிய பணம்' திட்டம், நிஜமாகவே, ஒரு ஜாக்பாட் தான். இதே திட்டத்தை, இப்போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, "மாதிரி திட்டமாக' காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், "கோட்காசிம்' தாலுகாவில், நவம்பர், 2011ல் அறிமுகப்படுத்தினர்.முதலில் ஏழை குடும்ப கார்டுதாரருக்கு, வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்து, மண்ணெண்ணெய்க்கு மானியத்தை, வங்கியில் செலுத்த முடிவு செய்தனர். அதாவது, ஒரு கார்டுதாரர், மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 15 ரூபாய் என, மானிய விலையில் கொடுத்ததை, அதன் சந்தை விலையான, 49 ரூபாய்க்கு வாங்கி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் முதல் மாத மானியம், 340 ரூபாயை, முன்கூட்டியே வங்கி கணக்கில் கட்டி விடுவது என, முடிவு செய்தனர். இது முதல், மூன்று மாதங்களுக்கு தொடரும். இரண்டாவது, மூன்றாவது மாதத்திலிருந்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வாங்கும் மண்ணெண்ணெய்யின் அளவை பொறுத்து, மானிய தொகை, வங்கியில் செலுத்துவது என்பது ஏற்பாடு. திட்டம் துவங்கிய கடந்த ஓராண்டில், ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் மானிய தொகை, வங்கியில் செலுத்தப்படவில்லை. சந்தை விலைக்கே, ரேஷனில் மண்ணெண்ணெய்யை விற்பதால், எண்ணெய் வாங்க ஆளில்லை. அதாவது, ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை, 70 சதவீதம் குறைந்ததுஇந்த விற்பனை குறைவை, அரசு, தற்போது கையில் எடுத்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய், கள்ள மார்க்கெட்டுக்கு போனதை, அரசு தடுத்து விட்டதாம். இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு இதை வைக்கிறது.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. அரசின் மானியம், வங்கி கணக்கில் ஏறாததால், சந்தை விலையான லிட்டர், 49 ரூபாய்க்கு மக்களால் மண்ணெண்ணெய்யை வாங்க முடியாததால், கிராமவாசிகள், காட்டில் கிடைக்கும் விறகுகளை பொறுக்கி, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

இது தவிர, இந்த திட்டத்தில் வேறு என்ன பாதகங்கள் இருக்கின்றன என்று, கேட்பவர்களுக்கு, சில விவரங்கள்: வங்கிகள் இல்லாத கிராமங்கள் நாட்டில், 40 சதவீதத்துக்கும் அதிகம். பெரும்பாலான கிராம மக்கள், தபால் நிலையங்களில், கணக்கு வைத்துள்ளனர்.நாட்டின், 60 சதவீத தபால் நிலையங்கள், "இன்டர்நெட்'டினால் இணைக்கப்படவில்லை. இதை செய்து முடிக்க, அரசுக்கு, 2013 ஜூனில் ஆரம்பித்து, 15 மாத காலம் ஆகும் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.ஆக, "மாதிரி திட்டமே' ஓராண்டு கால சாதனையாக, வேதனையே தந்துள்ளது. அதுவும், ஒரே ஒரு பொருளுக்கு, அதாவது, மண்ணெண்ணெய் மானியத்துக்கு மட்டும்.

மிக முக்கியமான வங்கி கணக்கு வசதியே முழுமை பெறவில்லை. அரசு அறிவித்துள்ள, 51 மாவட்டங்களில் கூட, 71 சதவீதம், வங்கிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வசதி உள்ளதாக, மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், இதை அவசர, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? "தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ், இத்திட்டத்தை அறிவித்துள்ளது' என்ற குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் வாக்குமூலம் வலு சேர்க்கிறதே.நலத்திட்டங்கள், மானியங்கள், ஏழை மக்களை சமூகத்தில் முன்னேறியவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுவதற்காக, அரசு செய்ய வேண்டிய கட்டாயங்கள். அதனால் தான், நம் நாட்டின் அரசை, அரசமைப்பு சட்டத்தில், "மக்கள் நல அரசாங்கம்' என்று
குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இன்றைய அரசு, குறிப்பாக, "காந்தி' பெயர் கொண்ட, நேரு குடும்ப தலைமையிலான அரசுகள், மானியங்களை பணமாக தருகிறோம் என்ற பெயரில், லஞ்சமாக மாற்ற முயல்வது, இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.

Thursday, December 6, 2012

மீடியாவை துரத்து மோடி

இந்துப் பத்திரிக்க்கையில் உங்கள் கட்டுரை வரவேண்டுமா? அது ஒன்றும் கஷட்டமான விஷயம் இல்லை..நரேந்திர மோடியை தரக்குறைவாக திட்டி எழுதுங்கள்..அது கட்டுரை என்ற பெயரில் பிரசுரமாகிவிடும்.அப்படித்தான் ஊர் பேர் தெரியாத பலரிந்-..இன்றுகூட பத்ரி ரெய்னா என்பவர் உட்பட கட்டுரைகளை இந்து பிரசுரித்து வருகிறது..அப்படி வந்த பல வார்த்தைகளை படித்ததனால் கிடைத்த”ஞானமே” இக்கட்டுரையின் கரு.

புது புதிதாக வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் மீடியாக்கள் கில்லாடிகள்.முதலில் “மதவாதத்தை” –கண்டு பிடித்தார்கள்…அதற்கு எதிர்ப்பதம் தெரியாதமல் தவித்த போது ஒரு அறிவு ஜீவி ஓடிவந்து ”சுக்குலர்”—மதசார்பற்றவன்—என்பதை வீசி எறிந்தார்.

இரண்டிலும் சிக்கியவர்கள் “சூடோ செக்குலர்” என்ற வார்த்தையை தேடிக்கண்டு பிடித்தனர்.
இப்படி வார்த்தை ஜாலங்கள் மண்ணில் ஆடியது போதாதென்று விண்ணில் ஆடி அது தற்போது குஜராத்தில் கீழிறங்கியது.

அதுதான் “மெஜாரிடி கம்யூனலிசம்”—பெரும்பான்மை மதவாதமாம்..இதற்க்கு எதிப்பதம் சொல்லாமலே தெரியுமல்லவா? ஆம் அதுதான் சிறுபான்மை மதவாதம்..

கோத்ரா கலவரத்திற்கு பின்பு குஜராத் மயான பூமியானது..என்று சொல்லி மீடியாக்கள் மோடியை துரத்தின..மோடி ஓடினார்…

நரோடா பாட்டியா..பெஸ்ட் பேக்கரி வழக்கு—ஷொராபுதின் வழக்கு என கேஸ்மேல் கேஸ்..மோடியை துரத்தியது....மோடி ஒடினார்..

2007 தேர்தலில் இரை கிடைக்காமல் தவித்த இதே பூதங்களை தூக்கிவீசிய மக்கள் மோடி மீது வெற்றி மாலையை சூடினார்கள்.
காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களுக்கு அப்போதும் வன்மம் தீரவில்லை.2002இல் மோடிக்கெதிரன அவர்களுடைய “மைனாரிட்டி கம்யூனலிசமே” 2007 லும் அவர்களது ஆயுதமாகியது..

குஜராத்துக்கு வெளியே மக்கள் இந்த வாதங்களை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்..ஆனால் குஜராத் மக்களோ மோடியை தங்கள் “பாதுகாவலனாக”—”ஆபத்பாந்தவனாக”—பார்த்தார்கள்.
எதிர்ப்பை ஏற்படுத்தும் என நினைத்த மீடியாக்களின் பிரச்சாரம்..எதிர்விளைவை ஏற்படுத்தியதால் ஏமாந்துபோனார்கள்.

குஜராத் இன்று மோடியின் கோட்டை..இம்முறை மோடியின் வெற்றி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை..மாதவ் சிங் சோலங்கி பெற்ற 140 இடங்களை விட  அதிகம் வெற்றியை நோக்கி மோடி போய்க்கொண்டிருக்கிறார்.

பிரச்சாரதில் 3-டி போன்ற தகவல் தொழில்நுட்பம்—ஒரே நேரத்தில் 10 ஊர்களில் மக்களிடம் நேரடிப்பேச்சு..இந்த தொழில்நுட்ப உரிமையை 2014 வரை தானே சொந்தமாக்கிக்கொண்ட சாமர்த்தியம்..

தினசரி 10 ஊர்களி பொதுக்கூட்டம்—10 மணிநேரம் வானில் பறக்கும் வேகம்—யாரு நினத்துப்பார்க்கமுடியாத வியூகம்—பிரச்சார தந்திரம்.. ..இதனால் ஆடிப்போன எதிரி மீடியாக்களின் கடைசி ஆயுதந்தான்..”மெஜாரிட்டி கம்யூனலிசம்”—பெரும்பான்மை வகுப்புவாதம்—

இதை---இதை—இதைத்தானே எதிர்பார்த்தோம்..
ஓடஓட மோடியை விரட்டிய மீடியாக்கள் அவர் திரும்பியவுடன் தலைதெரிக்க  ஓடுகிரது..
மோடியை மீடியா துரத்திய 2002 போய்
மோடி மீடியாவை துரத்தும் 2012 வந்துள்ளது
என்னே காலத்தின் அபூர்வம்
தர்மத்தின் தீர்மானம்.

Wednesday, November 28, 2012

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவை லேத்துபட்டறை மாணிக்கத்தின் மனம் நொந்த மடல்



அன்புடையீர் வணக்கம்.
நான் கடந்த 40 ஆண்டுகளாக கோவையில் லேத் வொர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறேன்..கடந்த 4 ஆண்டுகளாக சரியாக “கரண்ட்” வராததால். என் சர்வீஸை 36 ஆண்டுகளாக குறைத்து கொள்கிறேன்.

நான் என்ன சொல்லவருகிறேன் எனபது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்...மின்வெட்டு என்றால் ...கடிதம் மாநில முதல்வருக்கோ,,,மின்துறை அமைச்சருக்கோதானே எழுத வேண்டும் எங்களுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது..

இந்த மின்வெட்டு பிரச்சனை தீர்ப்பதில் உங்களுடைய தனிப்பட்ட பங்கு..மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டுப் பங்கை நீங்கள் செய்யாததால் தான் எழுதுகிறேன்.

முதலில் ஆளும் அண்ணா (அம்மா) திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என் வணக்கம்.
மின்வெட்டினால் நான் ரொம்பவே நொந்து போயிருக்கேனுங்க.உங்க அம்மா..”நாங்க ஆட்சிக்கு வந்தா 6 மாதத்துல மின் வெட்ட சரிசெய்வேன்னு “ சொனனாங்க..ரொம்பவே சந்தோஷப்பட்டு பின்னங்கால் பிடரியில் இடிக்க குடும்பத்தோட ஓடிப்போய் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டேன்.
கண்ட பலன் என்ன? கருணாநிதி ஆட்சியில 4 மணி நேரமாய் இருந்த “பவர்கட்” உங்க ஆட்சியில 16 மணிநேரமாய் பதவி உயர்வு பெற்றதுதான் மிச்சம்…

மிக்ஸி--,கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள்னு கொடுத்து தான்சொன்ன வாக்குறுதியெல்லாம் நிறைவேத்தின உங்கள் “அம்மா” மின்வெட்ட மட்டும் நீக்காம எங்க வாழ்க்கையை நடு ரோட்டுக்கே கொண்டு வந்துட்டாங்க..

கரண்ட் இல்லாததால் வேலை இல்லை..அதனால் வருவாய் இல்லை..செலவுக்கு பணம் இல்லாததால் கடன்.--.கடன்--..என கடன் மேல் கடன் வாங்கி..கடனில் மூழ்கி வருகிறேன்..நானும் என்னை நம்பியுள்ள 4 தொழிலாளர்களும் வாழவழி தெரியாமல் பித்து பிடித்து அலைகிறோம்..
இனியும் என்னால் பொறுக்க முடியாது எனது 4 கோரிக்கைகளில் எதாவது ஒன்றையாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்..வணக்கம்,

கேப்டனின் சட்டமன்ற அன்புத்தம்பிகளுக்கு வணக்கம்..
நீங்களெல்லாம் சட்டமன்றத்துக்கு போனதும் நீறைய நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தேன்..கேப்டனும் அம்மாவும் சேர்ந்து வெற்றி பெற்ற மாதிரி மின்வெட்டையும் சேர்ந்து ஜெயிப்பார்கள் என்று காத்திருந்தேன்.

கேப்டனுக்கு சினிமாவில் வாய்ப்பு வராததால் சட்டசபைக்கு போய் சண்டை காட்சிகளில் நடிச்சார்..நாக்கை துருத்தி கையை மடக்கி ஆவேசப்பட்டவரை அம்மா வெளியே அனுப்பினார்..அப்போது போனவர்தான் இன்னும் வரவில்லை.
தமிழ் நாட்டின் தலைஎழுத்து எதிர் கட்சித்தலைவர் சட்டசபைக்கு வருவதே இல்லை.இனி எங்கள் கோரிக்கைகளை எதிர் கட்சியாய் யார் பேசுவார்.
உங்களிடத்திலும் அதே 4 கோரிக்கைகளை வைக்கிறேன்..உடனடியாக ஏதாவது ஒன்றை நிறைவேற்றுங்கள்.. வணக்கம்.

மேன்மை தங்கிய கலைஞர் சட்டமன்ற் உறுப்பினர்களுக்கு வணக்கம்.
“செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பது பழமொழி…நீங்கள் தோற்றும் “கெடுத்து”தான் வருகிறிர்கள்.தமிழகத்தை ஆண்டபோது 4 மணிநேரம் பவர்கட் உங்கள் பரிசளிப்பு…இப்போது இந்தியாவை ஆளும் போது மன்மோகந்-சோனியாவிடமிருந்து “கரண்ட்” வாங்கித்தர மறுக்கிறீர்கள்.அம்மாமேல இருக்கிற கோபத்தை எங்கள் மீது காட்டுகிறீர்கள்.

மத்திய மின்சாரத்தை கையில் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு மின்சாரம் தர மறுக்கும் நீங்கள் தமிழர்கள் தானா? என சந்தேகம் வருகிறது.
மத்தியிலிருந்து உடனடியாக தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரமுடியாவிட்டால்..என்னுடைய நான்காவது கோரிக்கையாவது உடனடியக நிறைவேற்றுங்கள்..

அன்பிற்கினிய காங்கிரஸ் பேரியக்க சட்டமன்ற சகோதரர்களுக்கு வணக்கம்..
அடுத்த கூட்டணியை பற்றி மட்டுமே கவலைப்படும் உங்களிடம் சொல்லி எந்தப்பயனுமில்லை..வாய்பேசாத வாசன்..ஞானம் மட்டுமே உள்ள “பாவம்”தேசிகன்..வாயையே மூடாத நாரயண சாமி,,இவர்களெல்லாம் இருந்து என்ன பயன்?--குறைந்த பட்சம் சோனியாவிடம் சொல்லி டெல்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்..வேண்டாமென்று ஒப்படைத்த1745 மேகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தர செய்யுங்கள்..

சோனியாவுக்கு தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருப்பது தெரியாது..பாவம் அவர் இத்தலிக்காரர்..நீங்கள் இந்திய வரைபடத்தை காட்டி புரியவைய்யுங்கள்.
முடியாவிட்டால் எனது 4வது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள்.

போராட்டம் செய்யவும்..கூட்டணியில் இடம்பிடிக்க துண்டுபோடுவைதையும் மட்டுமே தெரிந்த கம்யூனிஸ்ட் தோழர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதால் அவர்களுக்கு இந்த கடிதம் இல்லை.

ராமதாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் இல்லை ..அவரிடம் மின்சாரம் கேட்டால்..மின்சாரம் கொடுக்கும் “ஷாக்கை” விட பெரிய ஷாக் கொடுப்பார்..அதான் அன்புமணியை முதலமைச்சார் ஆக்குங்கள்  என்பார்..

அன்பிற்கினிய தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வணக்கம்..
என்னைப்போல பாதிக்கப்பட்ட லட்சக்கணகானவர்களின் சார்பாக என் 4 கோரிக்கைகள் வருமாறு…

1…மின்வெட்டை ரத்து செய்து உடனடியாக 16 மணிநேரமாவது தொடர் மின்சாரம் கொடுங்கள்.

2..முடியாவிட்டால்..உடனடியாக..”மாற்றுவழி மின்சாரம்—ALTERNATIVE POWER”—கொடுங்கள்..இலவசமாக வேண்டாம்—மானியமும் வேண்டாம்..இப்போது அரசு வசூலிக்கும் மின்விலைக்கு சம்மான மின்விலைக்கு கொடுங்கள்.

3..அதுவும் முடியாவிட்டால்..திமுக ஆட்சியில் ஒன்றரை வருடம் உங்கள் ஆட்சியில் ஒன்றரை வருடமாக கரண்ட் இன்றி நஷ்ட்டம் தலைக்கேறி நொந்து நூடுல்ஸ் ஆன எனக்கும் என்னிடம் வேலை பார்க்கும் 4 ஊழியர்களுக்கும் இன்றைய விலைவாசியில் குடும்பம் நடத்த மாதம் தலா ரூ.10,000/= மாவது கொடுங்கள்.

4…அதுவும் முடியாவிட்டால்..உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ—பதவி--..ராஜினாமை கொடுங்கள்..மின்சாரம் தரும் வல்லமை உடைய வேறு ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்….
( ஆண்டவா..இம்முறையாவது வாக்குறுதியை கொடுத்துவிட்டு..ஏமாற்றாத எம்.எல்.ஏயை எங்களுக்குத்தருவாயா?)

 வணக்கம்………………………………………………………………………………………………………இங்ஙனம்
மிசாரத்துக்காக ஏங்கி  காத்துக்கிடக்கும்       மாணிக்கம்-கோவை

Sunday, October 28, 2012

மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா


மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா 


ஆமதாபாத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வசதிகள் சரியாக கிடைக்கிறது என்பதை இதுவரை சந்தித்த மக்கள் வாயிலாக அறிந்துகொண்டோம் ..

ஐந்தாவது நாள் பரோடா மக்களை சந்திக்க காரில் புறப்பட்டோம்... 6 வழி தேசிய நெடுஞ்சாலை அது.... வல்லவன் வாஜ்பாயியின் தங்க நாற்கர சாலைதிட்டத்தில் உருவானது.

என்னோடு வந்தவர்கள் பெருமையாக அந்த சாலையை பேசினார்கள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.நம்மூரில் கோவை --சேலம்--தருமபுரி--கிருஷ்ணகிரி
--சென்னை--திருச்சி--மதுரை--கன்யாகுமரி --சாலைகளை பார்த்து இது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.

விரைவு 
வண்டிகள் வலது  ஓர கடைசி லைனிலும் பெரிய வண்டிகள் நடுவிலும்-..ஆம்புலன்ஸ் இடது ஓர லைனிலும் செல்கிறார்கள்..
லைன்மாறினால் ஹாரன் அடித்து காதை  தொளைக்கிரார்கள் ..

பரோடா மன்னர்களின் சமஸ்தானம் ..கெய்க்வாட் அரசகுடும்பங்களின் தலைநகரம் ..ஊரும் அழ்காக பின்னப்பட்டிருக்கிறது...நடுத்
ட்டு--மேல்தட்டு மக்களின் சொர்க்க  பூமி ..

பரோடா தமிழ்சங்கத்தை சேர்ந்த திரு சேகர் செட்டி விட்டில் 50 க்கும் அதிகமான தமிழர்களை சந்தித்தோம்.அதை 
சுற்றியுள்ள 7 சட்டமன்ற தொகிதிகளில் 40,000 பேர்கள் வாழ்கிறார்களாம்.அனைவரும் ஒட்டு மொத்தமாக பாஜக விற்குத்தான் ஒட்டுப்போடுவார்கலாம்..

  நாங்கள் வந்த  செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்த ..பரோடா நகர பாஜக தலைவரும் அப்பகுதி கவுன்சிலரும் ..வீட்டுக்கு பார்க்க வந்துவிட்டார்கள்.கூடியிருந்தவர்கள் அனைவரையும்... கவுன்சிலர் பெயர் சொல்லி அழைக்கிறார்.அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் தொடர்பு  இருப்பதை பார்க்க முடிந்ததது

ஒரு தமிழ் நண்பர் மோடியின் உதவியால் அவர் பிரச்சினையை திர்த்தகதையை சொன்னார்.ஒரு சொத்து பிரச்சனையில் உள்ளூர் போலிஸ் எதிர்  பார்ட்டியிடம் காசு வாங்கி கொண்டு இவருக்கு எதிராக கஞ்சா கேஸ் போட்டு மூணு மாதம் இவரை உள்ளே தள்ளி விட்டார்களாம் .ஆமதாபாத் சென்று மோதியை பார்த்து ஆதாரங்களுடன் இவர் விளக்கியவுடன் ..இப்போது எஸ்.பி.முதல் பெரிய அதிகாரிகள் அனைவரும் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்கலாம்.---இது எப்பிடி இருக்கு..?இங்க இப்படி நடக்குமா .வளர்ப்பு மகன் மேலையே இங்கு கஞ்சா கேஸ் ..

ஆமதாபாத்தில் பி.ஆர்.ட்டி ..என்கிற விரைவு பஸ் போக்குவரத்து மிகவும் பிரபலமாகி வருகிறது.போக்குவரத்து 
நெரிசலில்      சீக்கிரமாக விரும்பும் இடங்களுக்கு போய்சேர -----இருக்கும் சாலைக்கு நடுவிலேயே மோதி-- ஒரு தனி பஸ் பாதையை அமைத்துள்ளார்....பிரயாண நேரம் வெகுவாக குறைந்து விட்டதாம்..இதுதான் அங்கு இப்போது "டாக் ஆப் தி டவுன் "..இம்ம்ம் .......நம்மூரில் இது எப்போது நடக்கும்.

நர்மதா நதிக்கரை ஓரம் மரங்கள் மிகுந்த பூங்காக்களை உருவாக்கி மிகவும் அழ்கு படுத்தி இருக்கிறார்கள். எதோ வெளி நாட்டில்  இருப்பது போல்
 இருக்கிறது ..

டாக்டர் சுரேந்திர சிங் ..கட்சியின் கட்சியின் நீண்ட  நாளைய உறுப்பினர்.தமிழர் ...மோடியின் சிறப்பு குணங்களை வரிசை படுத்தினார்..

பிரச்சாரம் --யாத்திரைகள்--நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு தெருவிலுள்ள தொண்டர்களையும் மோடி பெயர் சொல்லி அழைப்பாராம். வீடுகளுக்குள் சென்று நலம் விசாரிப்பாராம்..ஆமதாபாத் தெருக்களில் எந்த இடத்தில் வளைவுகள் வருகிறது..எந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளது என்ற தகவல் வரை அவருக்கு அத்துப்படி. என்றார்.

சென்ற  ஆண்டு கிளைக்கமிட்டி தலைவர் உட்பட பல ஆயிரம் பேர்களை சர்தார் சரோவர் பிராஜக்ட் பகுதிக்கு கூட்டிப்போனாரம்.மதிய உணவின் பொது ஒவ்வொரு தொண்டநிடமும் வந்து அவனிடம் அளவளாவி அவன் இலையில் இருந்து  உணவு எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம்

தொண்டனின் குஷிக்கு கேட்கவாவேண்டும் ..


மோடியின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா?

Friday, October 26, 2012

அனுபவம் புதுமை..ஆமதாபாத்தில் கண்டேன்..

மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்….3

குஜராத் வாக்காளர்கள் யார் பக்கம்?
குஜராத் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள்?
பிரம்மாண்டங்களை சாதிக்கும் மோடி அரசு சாமானியனுக்கு என்ன செய்தது?
வளர்ச்சி மட்டுமே முக்கிய நோக்கமென்றால் அன்றாடங் காய்ச்சிகள் நிலை என்ன?

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டி காத்துக்கிடந்தேன்..”சொசைட்டிகளில்”—(நம்மூர்..அப்பார்ட்மெண்ட்) சிக்கிய தமிழர்கள்…நவராத்திரி கொண்டாட்டங்களில்..வீடுகளுக்கு உறவுமுறைகளை அழைத்து ”கொலு”—வைத்து கூடியிருந்தார்கள்.

சுண்டலோடு சர்க்கரை பொங்கல் நம்மூர்..தொன்னையில் கொடுத்ததை சுவைத்துக்கொண்டே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்..

அதற்கு முன் ஒரு முக்கிய விஷயம் ..நான் தமிழர்களிடம் வாக்கு பற்றி பேசவில்லை..அவர்களின் வாழ்க்கைத்தரம்..மோடி அரசில் அவர்களீன் தேவைகள்…அவர்களது கோரிக்கைகள்…என்ன என்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்..

“ மோதி” அரசில் தினசரி தேவைகள்..அத்தியாவசிய தேவைகள்..குடிதண்ணீர்..சுகாதாரம்..மின்சாரம்..வேலைவாய்ப்பு…இவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை..
பெண்களுக்கு அவரவர்..தேவைக்கு ஏற்ப 7 நாட்களுக்கும் வேலை கிடைக்கிறது..வேலை செய்யும் “சூழலும்” நன்றாக இருக்கிறது..”

“ மோதி”—தமிழர்களிஅ அதிகம் நம்புகிறார்..அவரது அரசின் முக்கிய அதிகாரிகள்..பலர் தமிழர்களே..தகவல் கமிஷனர்…நர்மதா வேலி தலைவர்…வைபிரண்ட் குஜராத் சேர்மன்..பல மாவட்டங்களின் கலக்டர்..போலீஸ் கமிஷனர்கள்..தமிழர்களே..


மோதியின் சொந்த தொகுதியான மணிநகரில் 15000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்..அதனால்தான்..சென்னையில்..இங்கு துக்ளக்..ஆண்டுவிழாவில் அவர் பேசும் போது “என் வெற்றிக்கு தமிழர்களும் காரணம் “ என்றார்.
“யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கே இடமில்லை..எங்கள் ஓட்டு அனைத்தும் மோதிக்குத்தான்”—எனறனர்.

என்னுடைய ஆச்சரியமெல்லாம்..நான் சந்தித்த 500 பேரில் ஒருவர்கூட தன் ஓட்டு மோதிக்கு இல்லை என சொல்லவில்லை.
தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர் அவர்கள் 40 வருடமாக ஆமதாபாத்தில் பணி புரிகிறார்..என்னை பள்ளியின் மத்திய உணவுக்கு அழைத்தார்..

அன்று..வெஜிடெபில் புலாவ்…அதில் பச்சை பட்டாணி..முந்திரி பருப்பு..நெய்யுடன் சுடச்சுட..ஆவி பறக்க வந்தது..”டாரண்ட்” என்ற கார்பரேட் கம்பெனி..”செண்ட்ரலைசுடு..கிச்சனில்” சுத்தமாக—சுகாதாரமாக சமையல் செய்து..”ஹாட் பேக்கில்” ஆவி பறக்க குழந்தைகள் சாப்பிட 10 நிமிடம் முன் கொண்டுவந்து கொடுக்கின்றனர் …என்றார்..சேகர்..

குழந்தகள் வயிறு நிறைய கிடைக்குமா? என்றேன்..குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டத்து போக அதோ அங்கே இருக்கிறதே 4 பசு மாடுகள்..அதுவும் இதை சாப்பீட்டுத்தான் வளர்கிறது எண்றார்.
நம்மூர் மதிய உணவில் கரி அடுப்பு..விறகு அடுப்பு..பாதி வெந்தது..பாதி வேகாதது..பல்லி விழுந்தது…என ..எத்தனை ரகம்..

மனம் வருத்தப்பட்டது…தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு எப்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைக்கும்?..இதற்கும் மோடி தான் வரவேண்டுமா?..

ஒரு போக்குவரத்து காவலரை சந்தித்தேன்..வாய் நிறைய “பான்..பராக்”..குஜராத்தில் வாயில் பான் அடக்காதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மோதியின் ஆட்சியில் போலீஸ் கவுரவமாக நடத்தப்படுகிறார்களாம்.ஒரேஒரு குறைதானாம்..ஒருமுறை இவர் பணியின் இடையில் சிறுநீர் கழிக்க சென்ற போது..”வயர்லஸ் போனை” பக்கத்து கடையில் கொடுத்து விட்டு சென்றதால்…”அட்டண்” பண்ன முடியல்லையாம்…அதனால் ஒருவாரம் “சஸ்பெண்ட்டாம்”…

Thursday, October 25, 2012

மோடி ராஜ்ஜியம்—ராமராஜ்ஜியம்—2


ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பு –அரசு அதிகாரிகள்..தமிழ்ச்சங்க நிவாகிகள்…மற்றும் ஆமாதாபாத் வைதீக சமாஜ முக்கியஸ்தர்கள்.. இருந்தனர்..

என் பேச்சுக்கு எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்..ஒரு குழு மட்டும் வாய் திறவாமல் இருந்தது..
நான்…..தமிழ்நாட்டில் இப்போது “சேனல்கள்” பல வந்துவிட்டன..நான் டி.வி.விவாதங்களில் பங்கு கொள்கிறேன்..பெரும்பாலான டி.வி.க்களில் இப்படித்தான் கேள்வி கெட்கிறார்கள்….

”குஜராத்தில் ரத்த ஆறு ஓடுகிறது..மோடி ஒரு மரண வியாபாரி..இந்துமத வெறியன்..முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார்..” என்று கேட்கிறார்கள்.என்றேன்……எனக்கு பதில் தெரியவில்லை..இது உண்மையா..நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றேன்..

அதுவரை பங்குகொள்ளாத குழு கொதித்தெழுந்தது..”இங்கு இந்துக்கள் உயிரோடு நடமாட முடிகிறது என்றால் அது மோதியால்தான்..இந்துப்பெண்கள் இரவில் தனியாக நடுநிசிவரை வேலை பார்த்துவிட்டு தனியாக வீடு திரும்ப முடிகிறது என்றால்..அது மோதியால்தான்..

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எப்போதும் 144 தடைதான்..ஊரடங்கு உத்தராவுதான்..வீடுபுகுந்து முஸ்லீம் நம்மை அடிக்கும்போதெல்லாம் எந்த நாதியும் இல்லாதிருந்தோம்..
இன்று குஜராத்துக்கு மோதி வேண்டுமோ இல்லையோ..எங்களுக்கு மோதி வேண்டும்..உங்கள் தமிழ்நாட்டு பத்திரிக்கை டி.வி. காரர்களை இங்கு வரச்சொல்லுங்கள்..நாங்கள் செலவை ஏற்றுக்கொள்கிறோ.ம்..நேரில் பார்க்கட்டும்..அப்போது புரியும் “ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தனர்.

பிற்பகலில் முருகன் கோவிலில் ஒரு பெரிய பெண்கள் குழுவை சந்தித்தோம்..
“இங்கு ரேஷன் கடைகளில் எந்த இலவசமும் கிடையாது..ரேஷன் கார்டு ஒரு அடையாள அட்டைதான்..பி.பி.எல்.கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன்…அதுவும் நம்மூர் மதிரி இலவசம் கிடையாது..விலை குரைவு..மிகவும் தரமான சரக்கு..இங்கு யாரும் இலவசங்களை விரும்புவதில்லை…
எங்களது வீடுகளில் நாங்கள் இரவில் கதவை பூட்டுவதே இல்லை..ஸ்கூட்டர்—கார்கள் ரோட்டில் பூட்டாமலே கிடக்கும்..நாங்கள் இரவில் மில் வேலை முடித்து 2. மணிக்குதான் அதுவும் தனியாகவே வீடு திரும்புவோம் எந்த பயமும் கிடையாது.”.என்றனர்…

மறுபடியும் கிள்ளிப்பார்த்து கொண்டேன்..நான் கனவு கானவில்லையே என்று..

உசிலம்பட்டியை சேர்ந்த ராமுத்தேவர்..15 பையன்களை தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து கடலை மிட்டாய்—தேன் மிட்டாய்—லட்டு வியாபாரம் கடந்த 15 வருடமாக செய்கிறார்..

“நாங்கள் பரம்பரை திமுக..எங்க ஊரில் ஓட்டு மாற்றிப்போட்டால்..மாறு கை..மாறு கால்தான்>>.ஆனால் குஜராத்தில் நாங்கள் மோதி ஆள்..
முன்பெல்லாம் வியாபாரத்துக்கு போய்..திரும்ப வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..அதுவும் முஸ்லீம் ஏரியாக்களுக்கு போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம்..மோதி வந்த பிறகு எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது..வியாபாரம் செய்த காசும் ஒழுங்காக திரும்பி வருகிரது..”என்றார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு…கேசுபாய் பட்டேலோ..சோனியா காந்தியோ..மோடியின் வெற்றிக்கு இடைஞ்சல்…என்று யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிரது..

குஜராத்தில் காங்கிரசுக்கு 10 சீட் கிடைத்தால் பெரிது..என்பதே இன்றைய நிலை..

Wednesday, October 24, 2012

மோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1

கடந்த வாரம் பணி நிமித்தமாக குஜராத் போயிருந்தேன்…மோடி மீதும் பா.ஜ.க மீதும் சேற்றை வாரி இறைக்கும் “மீடியா” வும்,,காங்கிரசும் சொல்லுவது உண்மைதானா?..என்பதை கண்ணால் கண்டுவிடவேண்டும் என்பதை மனம் சொல்லிக்கொண்டிருந்தது..

குஜராத் தலைநகர் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல்.ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்..கண்ணால் காண்பது எல்லாம் மனதுக்குள் “போட்டோ” பிடித்து வைத்துக்கொண்டேன்.
தங்குமிடம் செல்ல “ஆட்டோவையே”.. தேர்வு செய்தேன்..பேச்சு கொடுக்கலாமல்லவா?..ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளலாமல்லவா?



“மஹிந்தர் ராஜ்புட்”..ஆட்டோவாலா..(அங்கு அப்படித்தான் நாமகரணம்)…பேசுகிறார்…”மோதி..ராஜ்ஜியத்தில் ( குஜராத்தில் “மோடி”யை..”மோதி” என்றுதான் உச்சரிக்கிறார்கள் )நாங்கள் சுதந்திரமாக ஆட்டோ ஓட்ட முடிகிறது…ஒரு பகுதியிலிருந்து முன்னமெல்லாம் நினைத்த போது செல்ல முடியாது..மாதத்தில் பாதி நாள் “ஊரடங்கு உத்தரவு—144 தடை “ இருக்கும்..சில பகுதிகளில் இந்த தடை மாதக்கணக்கிலும் நீடிக்கும்..அதனால் எங்களுக்கு நோட்டம் இருக்காது..வருமானம் இருக்காது..
இப்போது அதெல்லாம் “பழங்கதை”..மீண்டும் இந்த தேர்தலில் “மோதிதான்”ஜெயிப்பார்..அதுவும் பெரும் மெஜாரிட்டியோடு>>ஏனெனில் அவர்தான் எங்களுக்கு “பாதுகாப்பு”..

ஆரம்பமே நல்லா இருக்கே..போகப்போக எப்படி இருக்கும்..என் ஆர்வம் அதிகரித்தது..பார்த்துவிடுவோம்.என .தங்குமிடத்துக்கு வந்தவுடன் ஓட்டல்காரரை கேட்டேன்..
“ 24 மணி நேரமும் “தரமான மின்சாரம்”.( லோ..வோல்டேஜ்..இல்லை)..எங்கள் ஓட்டலில் யு.பி.எஸ்.இல்லை..ஜெனெரெட்டர் இல்லை..24 மணிநேரமும் “டேப்பை” திருகிணால் தண்ணீர்..அதும் குடி தண்ணீர்.”மோதி சாப்” வந்தவுடன் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த “டார்ச்சரும்” இல்லை..”

நான் நாடு மாறி போய் விட்டேனா?—இல்லை கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?—கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்..
மனம் சும்மா இருக்க விடவில்லை..சாலையில் சென்று “ஒரு பாணிபூரி வாலாவை” பார்த்தேன்..கேட்டேன்..கேள்விக்கணைகளை தொடுத்தேன்..

“நான் ராஜஸ்தானை சேர்ந்தவன்..குஜராத் வந்து 20 வருஷமாகிறது..எனக்கு 2 பெண் குழந்தைகள்..பள்ளியில் படிக்கிறார்கள்..படிப்பு—புத்தகம்—சீருடை—மதிய உணவு இலவசம்..(நம்மூர் பாஷை படி “விலையில்லா”) இப்போது அரசே “இலவச…விலையில்லா..ஸ்கூல் பஸ்” குழந்தைகளை வீடுதேடி வந்து கூட்டிப்போகிறது..”
“மோதி” வந்த பிறகு சாலையில் வியாபாரம் செய்யும் என்னிடம் இதுவரை எந்த போலீஸும் “கை நீட்டியதில்லை”
சலை வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்காது..அசுத்தப்படுத்தாது..வியாபாரம் செய்தால்..மோதி சர்க்கார் ஒன்றும் செய்யாது..குஜராத்தில் வெளிமாநிலத்துக்காரர்கள் நிம்மதியாக வாழ முடிகிறது…இந்த தேர்தலில் “வெளிமாநில ஓட்டுக்கள் முழுதும்” மோதிக்குத்தான்..”என கொட்டித்தீர்த்தார்.

ஆஹா..நரி முகத்தில் முழித்துவிட்டுத்தான்..ஆமதாபாத்..பிளைட் ஏறினோம் போலிருக்கிறது..என நினைத்துக்கொண்டேன்.படுக்கப்போகும் முன் ஒரு கிளாஸ் “தூத்”.(பால்) ஆர்டர் செய்தேன்..வந்தது..ஒரு கண்ணாடி டம்ளரில் சுமார் அரை லிட்டருக்கு பக்கமிருக்கும்.குடித்தால் கிளாஸிலிருந்து பால் வெளியெ வர வெட்கப்பட்டது. அவ்வளவு “திக்னஸ்”—கள்ளிச்சொட்டாய்”” ”அமுல்” தந்த  தேசமல்லவா..பாலுக்கு என்ன குறைச்சல்..

அடுத்த நாள் என் வேட்டையை தொடர்ந்தேன்..இம்முறை நம் தமிழ் நண்பர்களை பார்த்துவிடுவதென்று,,
ஆமதாபாத் தமிழ்ச்சங்கத்தலைவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன்..அவர் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நம்மை அழைத்துச் சென்றார்…குஜராத்தின் “தமிழ்க்குரல்” எப்படி இருக்குமோ என பயந்தேன்..ஆனால் பார்த்தவுடன்..-கேட்டவுடன்....வியந்தேன்..

“மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்---2”--தொடரும்

Sunday, September 9, 2012

பொய்யை வாந்தி எடுக்கும் ..கபில் சிபலே ராஜினாமா செய்



நிலக்கரி ஒதிக்கீட்டு ஊழலுக்கு காரணம் மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டிதான் “ எனவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம்—சத்தீஷ்கர்—ஜார்க்கண்ட் முதல்வர்கள் ராஜினாமா செய்யவேண்டும்---

என்ற புதிய குண்டை இன்று மத்திய “பொய்த் தகவல்துறை “ மந்திரி கபில் சிபல் சொல்லியுள்ளர்..

இவர்தான் ஏற்கனவே 2-ஜி ஊழலில் “சைபர் லாஸ் “ என்றார்.

முதலில் மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

1..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டி “ சட்ட அந்தஸ்து இல்லாதது..இதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டியதில்லை..
இதற்கு ஆதாரம் மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசின் கல்வி மந்திரியின் தகப்பனாரும் எம் .பி யுமான விஜெய் தாதா விற்கு ஜார்கண்ட் அரசு நிலக்கரி சுரங்க ஒதிக்கீடு செய்ய மறுத்தது..விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது.

ஆனால் மத்திய மின்துறை அமைச்சகம் அவருக்கு லைசன்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் நிலக்கரி சுரங்கமும் ஒதிக்கீடு அதே ஜார்கண்ண்டில் செய்தது…மாநில அர்சுக்கு எவ்வளவு “பவர் “ என்பது இதிலிருந்தே தெரிகிறது..கபில் சிபலின் அறிக்கை எவ்வளவு பொய் என்பதற்கு இதுவே சான்று..

2..அன்றைய ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா..ராஜேவின் ஏப்ரல் 5—2005 ஆம் தேதியிட்ட கடிதத்தில் “ஸ்கீரினிங் கமிட்டி “ தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் என்பதும் கபில் சிபலின் வாதம்..
ஆனால் ஜூலை 25ந்தேதி..2005 ஆம் ஆண்டு (அதே ஆண்டு )..பிரதம மந்திரி அலுவலகத்தின் முதன்மை செயலாளர்..டி.கே.ஏ.நாயர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதிச் செயலாளர்..மின்துறை செயலாளர்—தொழில்துறை செயலளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…   ”சுரங்க சட்டத்தை திருத்தி ஏலமுறை அமுல் படுத்த காலதாமதம் ஆவதால்..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கம்மீட்டி “   தொடரும் என்று தீர்மானித்திருக்கிறது..இதன் “மினிட்ஸ்” நேற்று எல்லா ஆங்கில நாளேடுகளிலும் வந்துள்ளது..
இதற்கு பின்னரும் இவ்வளவு பெரிய பொய்யை கபில் சிபல் அவிழ்த்துட்டுள்ளார்..என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி

3..ஊழலின் ஊற்றுக்கண்..கருணாநிதியின் கைத்தடி..ஜகத்ரக்‌ஷகன்..மீதுள்ள நிலக்கரி ஊழலை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு..மத்திய சட்டதுறை மந்திரி..சல்மான் குர்ஷித்..”அவர்மீது புகார் இதுவரை வரவில்லை..அப்படியே வந்தாலும் “ஸ்கீரினிங் கமிட்டி “ முறையாக தீர்மானிக்க வில்லை “ என்ற குற்றச்சாட்டு வந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் “ என்று கூறியுள்ளார்..

ஆக “ஸ்கீரினிங் கமிட்டியின் “ சூத்திர தாரிகள் காங்கிரசும் மத்திய அரசும் என்பது இதிலிருந்தும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

நாம் ஏன் பிரதமரை ராஜினாமா செய்யச்சொல்கிறோம்..

கட்டடமே இல்லாத –ஆபீசே இல்லாத காங்கிரஸ் எம்.பி விஜய் தார்தா வின் கம்பனியின் 10 ரூபாய்..ஷேர் ரூபாய் 8880 க்கு விற்று கொள்ளை அடித்ததும்..

நிலக்கரி துறைக்கு சம்பந்தமே இல்லாத ஜகத்ரக்‌ஷகன்…கம்பனி ஆரம்பித்த 4 நாளில் பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசின் "பிப்டிக்" உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு “நிலக்கரி லைசன்ஸ்..மற்றும் சுரங்கம் ஒடிசாவில் பெற்றுக்கொண்டு..6 ஏ மாதத்தில் அதன் 51 சதவீத பங்குகளை பல்லாயிரம் கோடிகளுக்கு விற்றதும்…....
 ஊழலில்லை என்கிறார்..பிரதமர்—
சோனியா—காங்கிரஸ் காரர்கள்..
நியாயமா..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Wednesday, September 5, 2012

”காங்”-ணக்கியமும்---SC/ST—பதவி உயர்வு மசோதாவும்



என் நண்பரின் பேரனிடம் ”கை”.ய்யில் எந்த பொருளை கொடுத்தாலும்..கீழே போட்டு உடைத்து விடுவான்..பொருளின் “வலிமையை” சோதிக்க அவனிடம் கொடுத்தால் போதும்.அவன் “ கை” பட்டு பொருள் உடையவில்லை என்றால் அது ஐ.எஸ்.ஓ.—ஐ.எஸ்.ஐ..சான்றுக்கு மேலானது..

மெஜரிட்டியே இல்லாமல்..ஒரு மைனாரிட்டி சர்க்காரை உயிர்போகாமல் காப்பது எப்படி –(நரசிம்மராவ்..அரசு)…
மாநிலமே(தெலுங்கானா-ஆந்திரா) தீப்பற்றி எரிந்தாலும் ஆட்சி கவிழாமல் இருக்க வைப்பது எப்படி?---

ஆதர்ஷவில் இருந்து 2-ஜி- ஊழல்வரை—எவ்வளவு “ஸ்கேம்கள்” வெளிச்சம் போட்டாலும்” தைரியமாக முகத்தை காட்டிக்கொண்டு வெளியில் நடமாடுவது எப்படி”?

தற்போது வசமாக மாட்டிக்கொண்ட “நிலக்கரி ஒதிக்கீட்டு” ஊழலிலும்..அதனால் பார்லிமெண்ட் முடக்கத்திலிருந்தும் தப்பிப்பது எப்படி ?” என்கிற கலைகளிலும்…புதிய பாடம் எழுதி—புதிய சிலபஸ் உருவாக்கி…பி.ஹெச்.டி—பட்டம் பெருவது எப்படி?---
என உலகிற்கே ஊழலில் வழிகாட்டியாய் இருக்கும் காங்கிரசின் நெகட்டிவ் திறமையை பார்த்து மயிர்கூச்செரிகிறது..

10 நாட்களுக்கு மேலாக பார்லிமெண்ட் நடக்கவில்லை…பிஜெபியின் இந்த அரசியல் வெற்றியை எப்படி முறியடிக்க முடியும்?—என திட்டம் போட்டது காங்கிரஸ்..தனது ஒவ்வொரு பழைய--- பதுக்கி வைத்த பாடங்களை தூசி தட்டி எடுத்தது காங்கிரஸ்..

முதலில் தன் கட்டுபாட்டில் உள்ள சிபிஐ கோர்ட்டின் குஜராத் நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக வாசித்து..ஒரு களயபரம் உண்டு பண்ன முயற்சி செய்தது…ஆனால் எதிர்பார்த்த அளவு அதில் வெற்றி பெறவில்லை..

நிலக்கரி ஒதிக்கீடு ஊழலில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வலியுருத்தியதன் பேரில்தான் “ஸ்டீரிங் கமிட்டி” நடைமுறையை பின்பற்றினோம் என்றது,,

ஆனால் நிலக்கரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிரது..ஸ்டீயரிங் கமிட்டி சட்டபூர்வ அந்தஸ்து இல்லாதது..அதை மத்திய அரசு “பைபாஸ்” செய்ய முடியும்..என்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தவுடன் காங்கிரசின் ஆட்டம் அடங்கிப்போனது..

ஆனாலும் முழுமையாக அடங்கவில்லை..எந்த விஷயத்தை எடுத்தால் எல்லோரும் “வாய் மூடுவர்—பிஜேபி அடங்கும்”—என “ரூம்” போட்டு யோசித்து—இப்போது  SC/ST அதிகாரிகள் பதவி உயர்வு சட்டத்தை கைய்யில் எடுத்துள்ளது..

எல்லோரும் கேட்கும் கேள்விதான்..காங்கிரசுக்கு இந்த மசோதா மீது திடீரென ஏன் ஆவல்—பாசம்—இது பற்றி இத்தனை ஆண்டுகளாகளில் குறிப்பாக—இந்த ஆண்டில்-- அதிலும் குறிப்பாக  இந்த மழைக்கால கூட்டத்தொடரில்..எந்த பேச்சும் இல்லையே..இப்போது திடீரென ஏன்?..இப்படி?—

2—3—நாட்களாக இந்த “காங்”(சா)-ணக்கிய  கும்பல் ராப்-பகலாக ஒர்க் பண்ணி..இந்த ”ஐயிட்டத்தை”—தேடிப்பிடித்து…இன்று எல்லா கட்சிகளின் காங்—எதிர்ப்பை முடக்கி—அவர்களை திருப்பி முடக்கும் வித்தையை துவக்கி---புதிய விறு விறுப்பை உருவாக்கியுள்ளது..

மக்களுக்கு நல்லாட்சி தர சிந்திக்கும் பாஜக ஒரு பக்கம்—ஆட்சியை பிடிக்க ஆலாய் பறக்கும் மற்ற கட்சிகள்..மறு பக்கம்…

இதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே செய்யும் காங்கிரசின் மறு பக்கம் மீண்டும் வெளியே தெரிந்து விட்டது..
இதுவும் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்போமே….

Saturday, September 1, 2012

ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”

அஹமதாபாத் சிறப்புநீதிமன்ற நீதிபதி.திருமதி ஜோத்சனா யாக்னிக்..அளித்த “நரோடாஅ பாட்டியா வழக்கு” தீர்ப்பு---காங்கிரஸுக்கு லாபமா?—மோடிக்கு பின்னடைவா?

மோடியின் மந்திரிசபை முன்னாள் சகா டாக்டர்.மாலாபென்னுக்கு 28 ஆண்டும்—பஜ்ரங்தள் தலைவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது..இது சட்டத்தின் ஆட்சியின் வெற்றியா?—மோடியின் முஸ்லீம் விரோத முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதா?

முதலில் கோத்ரா ரயில் நிலயத்தில் 56 அப்பாவி கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்காவிட்டால்…”நரோடா பாட்டியாவில்”- 97- அப்பாவி முஸ்லீம்கள் பலியாகி இருக்கமாட்டார்கள்..
அப்படியானால் “தூண்டியவன் தூய்மையானவன்…---துடித்தெழுந்தவன் துஷ்டனா?”.---.”அடித்தவன் காந்தியவாதி….அழுதவன் கோட்சேயா?

இரண்டாவது…1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு..டெல்லியில் 3000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்ததே—பலிவாங்கியதே—பழிவாங்கியதே..காங்கிரஸ்..----28 ஆண்டுகள் உருண்டோடியும் வழக்கு இல்லை—தண்டனை இல்லை—கூக்குரல் இல்லை…கொலைகாரர்கள் சஜன் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் (இன்னொரு குற்றவாளி ஹெச்.கே.எல்.பகத்..காலமானார்)—ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்களே..
மார்வா கமிஷன்
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிஷன்
ஜெயின் பானர்ஜி கமிஷன்
போட்டி –ரோசா கமிஷன்
ஜெயின் –அகர்வால் கமிஷன்
அகுஜா கமிஷன்
தில்லான் கமிஷன்
நருலா கமிஷன்
நானாவதி கமிஷன்
என போட்ட எல்லா கமிஷனும் ஒன்றுவிடாமல் குற்றவாளி என அறிவித்த காங்கிரசின் எம்.பிக்கள் சஜன் குமாரும் –ஜகதீஷ் டைட்லரும் இன்னும் தண்டிக்கப்படவில்லையே…அவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலில் டிக்கட் வழங்கவேண்டும் என்பதற்காக.------- முடியும் தருவாயில் இருந்த வழக்குகளை--- சிபிஐ வாபஸ் வாங்கியதே..இது எந்த ஊர்—எந்த நாட்டு---எந்த மதத்து—நியாயம்?..ஓஹோ..இது காங்கிரஸ் கட்சி நியாயமோ?

மாறாக தனது மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும்..தனது மந்திரிசபை முன்னாள் சகா..மாலாபென்னை பதவி நீக்கியது மட்டுமின்றி…நீதிமன்றத்தில் நிறுத்தினாரே மோடி…இதுதான் இந்துக்களின் நியாயமோ..இந்திய நியாயமோ----..பிஜேபி நியாயம்..

மூன்றாவதாக--------நீதிபதி தனது தீர்ப்பில்…” போலீஸ் அசட்டையாக இருந்தது…கலவரக்காரர்களுக்கு துணை போனது…இந்த்..இந்த போலீஸ் அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்”--…என ஒரு வரி கூட கூற வில்லையே…இதற்காக தனி அஃபிடவிட் நீதிமன்றத்தில் ..போலீசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்ததை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறாறே…இது போதாதா..மோடியின் நல்லாட்சிக்கு..நடுவுநிலை தவறாமைக்கு..

மாறாக..டெல்லி சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் நிகழ்த்திய போது..”போலீஸ் அதிகாரிகள் கண்மூடி இருந்தனர்…போலீஸ் ஸ்டேஷன்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..கபூர்—மிட்டல் கமிஷன் குற்றம் சுமத்திய 72 போலீஸ் அதிகாரிகள் மீது இன்றுவரை வழக்கில்லை..
காங்கிரஸ் குண்டர்களால் சீக்கிய சகோதரர்கள் தாக்கப்பட்டபோது..வாக்களர்பட்டியலை வைத்துக்கொண்டு…சீக்கியர்களின் வீடுகளை அடையாளம் காட்டியதே-- டெல்லி போலீஸ்.
ஆக இந்தியாவில் உயிருக்கென்று “தனியாக “ மதிப்பில்லை…
யார் தாக்குகிறார்..யாரை தாக்குகிறார்..என்பதை பொருத்தே உயிரின் மதிப்பு கணிக்கப்படுகிறது…இதில் இரு விதி விலக்குகள்…நிரந்தரமாக..
1 இந்துவை யார்தாக்கினாலும் அந்த உயிர் கணக்கில் வராது
2..காங்கிரஸ்காரன் யாரை தாக்கினாலும் அதுவும் கணக்கில் வராது..

இறுதியாக …
இந்த சிறப்பு நீதி மன்றம் ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே…இதற்குமேல் உயர்நீதி மன்றம்—உச்சநீதிமன்றம்—உள்ளது…
மாவட்ட நீதிமன்றத்தின் அனேக தீர்ப்புக்கள் உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சரித்திரம் உண்டு.
இந்த தீர்ப்பு பத்திக்கைகளுக்கு “அவல்”---காங்கிரசின்  “ஆவலுக்கு”—கிடைத்த வைக்கோல்..அத்தனை “ஸ்கேம்”-களினால் மக்களின் “தூற்றல்களிலிருந்து” சிறிது நேரம் இளைப்பார காங்கிரசுக்கு கிடைத்த சிறு “தூரல்”..அவ்வளவுதான்.

“For every action there is an equivalent and opposite reaction “—
இதை ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”---
குஜராத் மக்கள் செய்தால் “சதியா”—

ஒருவேளை மோடி திட்டமிட்டு முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால்….2002 டிசம்பரில் (கலவரம் நடந்த 10 வது மாதத்தில்)நடந்த தேர்தலில் –உலகத்தின் அத்தனை மீடியாக்களும் வரிந்து கட்டி எதிர்த்த போதும் 3இல் 2 பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க முடியுமா?
மோடியின் மீது தூஷணைகள் 2007 இலும் தொடர்ந்தது..வெற்றியும் தொடர்ந்தது..   இப்போது இன்னும் 2012 தேர்தலுக்கு 100 நாளைக்கு முன் வந்த இந்த தீர்ப்பை..”மோடியின் பிரதமர் கனவு கலைகிறது” என தலையங்கம் தீட்டி ஆங்கில பத்திரிகைகள் தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்கின்றன.

யாருடைய ஆதரவில்லாமல்—எந்த ஆயுதமும்(..பணம்..மீடியா ஆதரவு) இல்லாமல்---உலகுக்கு தான் யார் என்பதே தெரியாமல்-- 2002இல் இருந்த  மோடியையே இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை..

இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..
கங்கிரசுக்கு போதாத காலம்..
குஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..
பாவம்..