Pages

Friday, October 26, 2012

அனுபவம் புதுமை..ஆமதாபாத்தில் கண்டேன்..

மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்….3

குஜராத் வாக்காளர்கள் யார் பக்கம்?
குஜராத் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள்?
பிரம்மாண்டங்களை சாதிக்கும் மோடி அரசு சாமானியனுக்கு என்ன செய்தது?
வளர்ச்சி மட்டுமே முக்கிய நோக்கமென்றால் அன்றாடங் காய்ச்சிகள் நிலை என்ன?

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டி காத்துக்கிடந்தேன்..”சொசைட்டிகளில்”—(நம்மூர்..அப்பார்ட்மெண்ட்) சிக்கிய தமிழர்கள்…நவராத்திரி கொண்டாட்டங்களில்..வீடுகளுக்கு உறவுமுறைகளை அழைத்து ”கொலு”—வைத்து கூடியிருந்தார்கள்.

சுண்டலோடு சர்க்கரை பொங்கல் நம்மூர்..தொன்னையில் கொடுத்ததை சுவைத்துக்கொண்டே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்..

அதற்கு முன் ஒரு முக்கிய விஷயம் ..நான் தமிழர்களிடம் வாக்கு பற்றி பேசவில்லை..அவர்களின் வாழ்க்கைத்தரம்..மோடி அரசில் அவர்களீன் தேவைகள்…அவர்களது கோரிக்கைகள்…என்ன என்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்..

“ மோதி” அரசில் தினசரி தேவைகள்..அத்தியாவசிய தேவைகள்..குடிதண்ணீர்..சுகாதாரம்..மின்சாரம்..வேலைவாய்ப்பு…இவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை..
பெண்களுக்கு அவரவர்..தேவைக்கு ஏற்ப 7 நாட்களுக்கும் வேலை கிடைக்கிறது..வேலை செய்யும் “சூழலும்” நன்றாக இருக்கிறது..”

“ மோதி”—தமிழர்களிஅ அதிகம் நம்புகிறார்..அவரது அரசின் முக்கிய அதிகாரிகள்..பலர் தமிழர்களே..தகவல் கமிஷனர்…நர்மதா வேலி தலைவர்…வைபிரண்ட் குஜராத் சேர்மன்..பல மாவட்டங்களின் கலக்டர்..போலீஸ் கமிஷனர்கள்..தமிழர்களே..


மோதியின் சொந்த தொகுதியான மணிநகரில் 15000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்..அதனால்தான்..சென்னையில்..இங்கு துக்ளக்..ஆண்டுவிழாவில் அவர் பேசும் போது “என் வெற்றிக்கு தமிழர்களும் காரணம் “ என்றார்.
“யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கே இடமில்லை..எங்கள் ஓட்டு அனைத்தும் மோதிக்குத்தான்”—எனறனர்.

என்னுடைய ஆச்சரியமெல்லாம்..நான் சந்தித்த 500 பேரில் ஒருவர்கூட தன் ஓட்டு மோதிக்கு இல்லை என சொல்லவில்லை.
தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர் அவர்கள் 40 வருடமாக ஆமதாபாத்தில் பணி புரிகிறார்..என்னை பள்ளியின் மத்திய உணவுக்கு அழைத்தார்..

அன்று..வெஜிடெபில் புலாவ்…அதில் பச்சை பட்டாணி..முந்திரி பருப்பு..நெய்யுடன் சுடச்சுட..ஆவி பறக்க வந்தது..”டாரண்ட்” என்ற கார்பரேட் கம்பெனி..”செண்ட்ரலைசுடு..கிச்சனில்” சுத்தமாக—சுகாதாரமாக சமையல் செய்து..”ஹாட் பேக்கில்” ஆவி பறக்க குழந்தைகள் சாப்பிட 10 நிமிடம் முன் கொண்டுவந்து கொடுக்கின்றனர் …என்றார்..சேகர்..

குழந்தகள் வயிறு நிறைய கிடைக்குமா? என்றேன்..குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டத்து போக அதோ அங்கே இருக்கிறதே 4 பசு மாடுகள்..அதுவும் இதை சாப்பீட்டுத்தான் வளர்கிறது எண்றார்.
நம்மூர் மதிய உணவில் கரி அடுப்பு..விறகு அடுப்பு..பாதி வெந்தது..பாதி வேகாதது..பல்லி விழுந்தது…என ..எத்தனை ரகம்..

மனம் வருத்தப்பட்டது…தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு எப்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைக்கும்?..இதற்கும் மோடி தான் வரவேண்டுமா?..

ஒரு போக்குவரத்து காவலரை சந்தித்தேன்..வாய் நிறைய “பான்..பராக்”..குஜராத்தில் வாயில் பான் அடக்காதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மோதியின் ஆட்சியில் போலீஸ் கவுரவமாக நடத்தப்படுகிறார்களாம்.ஒரேஒரு குறைதானாம்..ஒருமுறை இவர் பணியின் இடையில் சிறுநீர் கழிக்க சென்ற போது..”வயர்லஸ் போனை” பக்கத்து கடையில் கொடுத்து விட்டு சென்றதால்…”அட்டண்” பண்ன முடியல்லையாம்…அதனால் ஒருவாரம் “சஸ்பெண்ட்டாம்”…

No comments: