Pages

Sunday, October 28, 2012

மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா


மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா 


ஆமதாபாத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வசதிகள் சரியாக கிடைக்கிறது என்பதை இதுவரை சந்தித்த மக்கள் வாயிலாக அறிந்துகொண்டோம் ..

ஐந்தாவது நாள் பரோடா மக்களை சந்திக்க காரில் புறப்பட்டோம்... 6 வழி தேசிய நெடுஞ்சாலை அது.... வல்லவன் வாஜ்பாயியின் தங்க நாற்கர சாலைதிட்டத்தில் உருவானது.

என்னோடு வந்தவர்கள் பெருமையாக அந்த சாலையை பேசினார்கள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.நம்மூரில் கோவை --சேலம்--தருமபுரி--கிருஷ்ணகிரி
--சென்னை--திருச்சி--மதுரை--கன்யாகுமரி --சாலைகளை பார்த்து இது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.

விரைவு 
வண்டிகள் வலது  ஓர கடைசி லைனிலும் பெரிய வண்டிகள் நடுவிலும்-..ஆம்புலன்ஸ் இடது ஓர லைனிலும் செல்கிறார்கள்..
லைன்மாறினால் ஹாரன் அடித்து காதை  தொளைக்கிரார்கள் ..

பரோடா மன்னர்களின் சமஸ்தானம் ..கெய்க்வாட் அரசகுடும்பங்களின் தலைநகரம் ..ஊரும் அழ்காக பின்னப்பட்டிருக்கிறது...நடுத்
ட்டு--மேல்தட்டு மக்களின் சொர்க்க  பூமி ..

பரோடா தமிழ்சங்கத்தை சேர்ந்த திரு சேகர் செட்டி விட்டில் 50 க்கும் அதிகமான தமிழர்களை சந்தித்தோம்.அதை 
சுற்றியுள்ள 7 சட்டமன்ற தொகிதிகளில் 40,000 பேர்கள் வாழ்கிறார்களாம்.அனைவரும் ஒட்டு மொத்தமாக பாஜக விற்குத்தான் ஒட்டுப்போடுவார்கலாம்..

  நாங்கள் வந்த  செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்த ..பரோடா நகர பாஜக தலைவரும் அப்பகுதி கவுன்சிலரும் ..வீட்டுக்கு பார்க்க வந்துவிட்டார்கள்.கூடியிருந்தவர்கள் அனைவரையும்... கவுன்சிலர் பெயர் சொல்லி அழைக்கிறார்.அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் தொடர்பு  இருப்பதை பார்க்க முடிந்ததது

ஒரு தமிழ் நண்பர் மோடியின் உதவியால் அவர் பிரச்சினையை திர்த்தகதையை சொன்னார்.ஒரு சொத்து பிரச்சனையில் உள்ளூர் போலிஸ் எதிர்  பார்ட்டியிடம் காசு வாங்கி கொண்டு இவருக்கு எதிராக கஞ்சா கேஸ் போட்டு மூணு மாதம் இவரை உள்ளே தள்ளி விட்டார்களாம் .ஆமதாபாத் சென்று மோதியை பார்த்து ஆதாரங்களுடன் இவர் விளக்கியவுடன் ..இப்போது எஸ்.பி.முதல் பெரிய அதிகாரிகள் அனைவரும் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்கலாம்.---இது எப்பிடி இருக்கு..?இங்க இப்படி நடக்குமா .வளர்ப்பு மகன் மேலையே இங்கு கஞ்சா கேஸ் ..

ஆமதாபாத்தில் பி.ஆர்.ட்டி ..என்கிற விரைவு பஸ் போக்குவரத்து மிகவும் பிரபலமாகி வருகிறது.போக்குவரத்து 
நெரிசலில்      சீக்கிரமாக விரும்பும் இடங்களுக்கு போய்சேர -----இருக்கும் சாலைக்கு நடுவிலேயே மோதி-- ஒரு தனி பஸ் பாதையை அமைத்துள்ளார்....பிரயாண நேரம் வெகுவாக குறைந்து விட்டதாம்..இதுதான் அங்கு இப்போது "டாக் ஆப் தி டவுன் "..இம்ம்ம் .......நம்மூரில் இது எப்போது நடக்கும்.

நர்மதா நதிக்கரை ஓரம் மரங்கள் மிகுந்த பூங்காக்களை உருவாக்கி மிகவும் அழ்கு படுத்தி இருக்கிறார்கள். எதோ வெளி நாட்டில்  இருப்பது போல்
 இருக்கிறது ..

டாக்டர் சுரேந்திர சிங் ..கட்சியின் கட்சியின் நீண்ட  நாளைய உறுப்பினர்.தமிழர் ...மோடியின் சிறப்பு குணங்களை வரிசை படுத்தினார்..

பிரச்சாரம் --யாத்திரைகள்--நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு தெருவிலுள்ள தொண்டர்களையும் மோடி பெயர் சொல்லி அழைப்பாராம். வீடுகளுக்குள் சென்று நலம் விசாரிப்பாராம்..ஆமதாபாத் தெருக்களில் எந்த இடத்தில் வளைவுகள் வருகிறது..எந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளது என்ற தகவல் வரை அவருக்கு அத்துப்படி. என்றார்.

சென்ற  ஆண்டு கிளைக்கமிட்டி தலைவர் உட்பட பல ஆயிரம் பேர்களை சர்தார் சரோவர் பிராஜக்ட் பகுதிக்கு கூட்டிப்போனாரம்.மதிய உணவின் பொது ஒவ்வொரு தொண்டநிடமும் வந்து அவனிடம் அளவளாவி அவன் இலையில் இருந்து  உணவு எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம்

தொண்டனின் குஷிக்கு கேட்கவாவேண்டும் ..


மோடியின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா?

1 comment:

கோவை நேரம் said...

இது மாதிரி நம்ம ஊருல எப்பொ ந்டக்கும்...?