Pages

Saturday, December 22, 2012

ஹிண்டு....காங்கிரஸ்....கோயபெல்ஸ்”

ஒருவர் வெற்றி பெற்றால் அவரை பாராட்டுவதும்..மரணமடைந்து விட்டால் அவரது நற்குணங்களை சுட்டிக்காட்டி புகழ்வதும்…நம்நாட்டின் பண்பாடு..



இந்த பண்பாடும், நாகரீகமும், மாநிலத்துக்கு மாநிலம மாறுபடுவதில்லை…எல்லா மாநிலத்திலும் பின் பற்றப்படுவதுதான்..



ஆனால் காங்கிரஸ் கட்சியும் ”இந்துப்” பத்திரிக்கையும் என்.டி.டி.வியும் இதற்கு விதி விலக்கு!

தேர்தல் முடிவுகளை மீடியாக்கள் அலசிக்கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெற்ற காங்கிரசின் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மோடியை புழுதி வாரி தூற்றினார்…



இந்தியாவிலுள்ள அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து, குஜராத்தில் முகாமிட்டு மோடியை தோற்கடித்திருக்க வேண்டும்…என்றார்.



தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் , மோடியை, “ ஒரு மதவாதி…வன்முறையாளர், பிற்போக்குவாதி, “ என்றெல்லாம் திட்டி தீர்த்தார்.



அதற்கு பதிலடியாக நான் சொன்னேன்..” 6 கோடி குஜராத்திகளால் ஜனநாயக முறைப்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை, இப்படி கண்ணியக்குறைவாக பேச காங்கிரஸ் உங்களுக்கு சொல்லிக்கொடுதிருக்கிறதா?”..என்றேன்.
ோடியை முஜத்ிக்கள் ஓட்டுப்போட்டெர்ந்த்டத்ர்..என்ற உங்கு வம்...த்மா கந்தியும்...ர்ார் வல்லாய் பட்டேலும், மொரார்ஜி ேசாயும் கொடத்ுஜத்ையும் குஜத் மக்கையும் அவானத்ும் விாக.... இருக்கிறு என்றேன்..
  

1950 முதல் 2000 மாவது ஆண்டுவரையிலான 50 ஆண்டுகளில் இந்தியாவில நடந்த மதக்கலவரங்கள் சுமார் 1194..அதில் சுமார் 80 சதம் காங்கிரசின் பிரதமர்கள் , திரு நேரு, திருமதி. இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்தில் நடை பெற்றது..இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் கட்சிதான்..இதற்காக இவர்களுக்கு கிடைத்த பரிசு மூன்று “பாரத ரத்னா”..பட்டம்



இப்படி கலவரங்களை உண்டாக்கி முஸ்லீம்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு மதசார்பற்ற தன்மை பற்றி பேச அருகதை கிடையாது—என பீட்டருக்கு நான் பதிலளித்தேன்.

மாறாக இமாச்சலத்தில் தோல்வியை தழுவிய பாஜகவின் முதல்வர் பிரேம் குமார் தூமல்..”மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்” என்றார்.

காங்கிரசின் ராகுலையோ, சோனியாவையோ அவர் அவதூறாக பேசவில்லை.

கட்சிகளுக்குள்ளே கலாச்சார மாறுபாடுகளை பாருங்கள்..

.

மோடி மதவாதியாக இருந்திருந்தால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த 19 தொகுதிகளில் 12 தொகுதியை பாஜக எப்படி ஜெயித்து இருக்க  முடியும்?..

உண்மையை ஏற்றுக்கொள்ள என்றும் இவர்கள் தயாரில்லை..



வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து சொல்ல தயாரில்லாத..( தகுதியில்லாத பத்த்ரிக்கை  என்று நான் சொல்வேன்..) இந்து பத்திரிக்கை இப்படி தலையங்கம் எழுதியது..

“ மோடி…அவருடைய காட்டின் அரசன்…( KING OF HIS JUNGLE ) முஸ்லீம்களை கொன்று குவித்தவர்…டெல்லிக்கு படையெடுக்க முயற்சிக்கிறார்”—என்ன அநாகரீகம்..என்ன வயிற்றெரிச்சல்…



மோடி மதவெறியனாக இருந்திருந்தால்….2002 குஜ்ராத் கலவரத்தில் ஒரு இந்து கூட சுடப்பட்டுரிக்க கூடாது…மரணமடைந்திருக்கக் கூடாது…கைது செய்யப்பட்டு இருக்கக்கூடாது…..தண்டிக்க பட்டு இருக்கக்கூடாது..



ஆனால் துப்பாக்கி சூட்டில்…இந்து 193 பேர் முஸ்லீம் 77.. பேர்

கொல்லப்பட்டதில் இந்து 283 பேர்..முஸ்லீம்..788 பேர்

கைது செய்யப்பட்டதில் இந்து 27,000 பேர்..முஸ்லீம் 7000 பேர்



இவ்வளவு உண்மைகளுக்கிடையே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும் கோயபெல்ஸ் இந்து பத்திரிக்கை----என்.டி.டி.வி. மற்றும் காங்கிரசை என்ன செய்வது…..



குஜராத்தைப் போல…2014 லில்..டெல்லியையும் பிடிப்பத்தே இவரகளுக்கு பாடம் புகட்டும் ஒரே வழி.

2 comments:

sakthi said...

well said anna.

jai hind

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கட்டுரை சிந்திக்க வைக்கிறது.