Pages

Wednesday, January 11, 2017

என் ஊடகத்தனிப்பிறப்புகளுக்கு” மனம் திறந்த மடல்

அன்பிற்கினிய என் ஊடக”தனிப்பிறப்புகளுக்கு”--

ஆட்சியாளரைவிட..மன்னிக்கவும் ஏன் ஆண்டவைவிட..நான்தான் உயர்ந்தவன் என நினைக்கும் உங்களின் சிலருக்கு...இந்த “தற்குரியின்” உளம்திறந்த மடல்..

“பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து விட்டது”--இனி விடுமுறை இல்லை...என “ஸ்குரோல்’--”தற்போது”...”பிரேக்கிங் நியூஸ்”---என பொளந்து கட்டிணீர்களே!

இதில் உண்மை இல்லை என தெரிந்தும் ஏன் போட்டீர்கள்?
இதுதான் “புது ஊடக தர்மமா?”

கடந்த 10 ஆண்டுகளாக “பொங்கல்” கட்டாய விடுமுறை லிஸ்டில் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?
பின் ஏன் பொங்கலுக்கு விடுமுறை இல்லை “ என “பச்சை பொய்” சொன்னீர்கள்.?

மாநிலங்களில் உள்ள..“மத்திய அர்சு ஊழியர் நல ஒருங்கிணைப்புகுழு” உறுப்பினர்கள்தான் “மாநில விடுமுறையை “ தீர்மானிக்கின்றனர்..அதாவது அந்த 3 சிறப்பு விடுமுறை தினத்தை முடிவு செய்கின்றனர்..என்பது உங்களுக்கு தெரிந்தும் இதில் மோடியையும் பாஜகவையும் மத்திய அரசையும் பழித்து ஏன் உண்மையை மறைத்தீர்கள்? பொய்க்கு துணை போனீர்கள்?

2017 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறைகள் 24.06.2016 அன்று அறிவிக்கப்பட்டு விட்டடதும்,14,01 2017 அன்று பொங்கல் அன்று சனிக்கிழமை அரசின் பொது விடுமுறை வருவதால், தசரா அன்று இன்னொருநாள் கூடுதல் விடுமுறை எடுத்துக்கொள்ள்லாம் என 23.11.2016 அன்று கூடிய அரசு ஊழியர் குழு முடிவுசெய்த்தை நீங்கள் மறைத்து செய்தி வெளியிட்டது ஏன்?

இப்போது பொங்கலன்று கட்டாய விடுமுறை உங்கள் கூப்பாட்டினால் அறிவிக்கப்பட்டுவிட்டது..அதிலும் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை..அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழுதான் இந்த மாற்றத்தையும் அறிவித்தது,,இதிலும் கூட மத்திய அர்சு பணிந்ததாக ஏன் பொய் செய்தி வெளியிட்டீர்கள்?..

ஒருநாள் அதிக லீவு கிடைத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு உங்களால் இப்பொது ஒருநாள் லீவை ரத்து செய்து அவரகள் வயிற்றெரிச்சலை ஏன் கொட்டிக்கொண்டீர்கள்?

நீங்கள் போட்ட “பரபரப்பு “ செய்தியை மத்திய அரசின் இணைய தளங்கலில் உறுதிசெய்து கொள்ளாத  “வீர”மனி”யும், சசியும், ஸ்டாலினும், வைகோவும், “”ஒப்பாரி அறிக்கை வெளியிட்டு இப்போது தலைகுனிந்து நிற்க நீங்கள் ஏன் காரணமானீர்கள்?

இவர்கள் மீது உங்களுக்கு என்ன கோபம்?

அத்தனை  தலைவர்களும் உண்மையை ஊர்ஜிதம் செய்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டு அவமானப்பட்டபோது, உண்மைதெரிந்து முழு ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை, பொன் ராதா, போன்றோர் அறிக்கையை இருட்டடிப்பு செய்தத்துதான் உங்கள் பத்திரிக்கை தர்ம லீலாவினோதமா?

மோடி அரசை தூற்றுவதன் மூலம்தான் உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்றால்  உங்கள் ஜீவாதாரத்தை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை!

ஆனால் “பொய் செய்திகளை மட்டுமே “ வெளியிட்டு “சென்சேஷன்” நிகழ்த்த விரும்பினால்....இப்படி ஏற்கனவே செய்தவர்களின் அழிவினால்தான், நீங்கள் வந்து இருக்கீறீர்கள்...நீங்களும் அதையே செய்தால் ..உங்களுக்குப்பின்னால்...”அடுத்த ஆள்” ரெடியாக இருக்கிறான்..என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..

“உயிரே போனாலும் உண்மையை போற்றுவோம்”  
”கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும், 
பொய்மைக்கு துணை போகோம்’

நன்றி!

என்றென்றும் நட்புடன்
எஸ்.ஆர்.சேகர்

No comments: