1853 ஆம் ஆண்டு தொடங்கிய ராமஜன்மபூமி பிரச்சனை---1857 ஆம் ஆண்டு
“பிரச்சனைக்குறிய பகுதிகளை “ வேலிபோட்டு பிரித்தது...பிரிட்டிஷ்
அரசு..பிறகு நாட்டையே பிரித்தது..அதுவேறு விஷயம்..
1949 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஆட்சியில் அதாவது
காங்கிரஸ் ஆட்சியில், ராமர் கோயிலுக்குள் இந்துக்கள் ராமபிரானின்
விக்கிரஹத்தை கொண்டுபோய் வைத்தனர்..பிரச்சனை வெடித்தது..நேருவின் காங்கிரஸ்
அரசு, இந்து ,முஸ்லீம் இரண்டு பக்கத்தையும் கோர்ட்டுக்கு போகச்சொல்லி,
கோயிலுக்கு பூட்டு போட்டது..
ஆக 90 ஆண்டுகாலமாக பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் ராமர் விக்கிரத்தை வைக்க ஆதரவு தந்தது பண்டித நேருவின் அரசு..
அதற்குப்பிர்கு பல்வேறு போராட்டங்கள்...1984 க்கு பிறகே விஷ்வஹிந்து பரிஷத் களத்தில் இரங்குகிறது..
1986 இல் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் அரசு கோயிலின் பூட்டை
திறந்து வழிபாட்டுக்கு வழிவிட்டது.--.ஷாபானு என்கிற முஸ்லீம் பெண்ணுக்கு
ஆதரவாக ஜீவனாம்சம் கொடுக்கவேண்டிய தீர்ப்பை மாற்றியெழுத, இந்திய தண்டனை
சட்டத்தை மாற்றி எழுதியதற்கு பரிகாரமாக கோயிலை திறந்துவிட்டார்
ராஜீவ்காந்தி.
மறுபடியும் பற்பலபோராட்டங்கள்.....1992 டிசம்பர் 6 ந்தேதி,
1.5 லட்சம் கரசேவகர்கள் ஒரே நேரத்தில் தொட்டதால், பாழடைந்த அந்த பழைய
கட்டிடம் இடிந்து வீழ்ந்தது சரித்திரம்...அது தரைமட்டமானதை உறுதி செய்து
கொண்ட பிறகே..அங்கு ராணுவத்தை அனுப்பி தன் ”ஸ்ரீ ராமர் பக்தியை”
காட்டிக்கொண்டார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்..அப்போது உள்துறை
மந்திரியாக இருந்த எஸ்.பி.சவாணிடம் இது பற்றி கேட்ட போது பாப்ரி மஜ்ஜித்
கட்டடம் இடிக்கப்பட்டதே தனக்குத்தெரியாது என்றார்...
காங்கிரசுடன் முஸ்லீம் லீக்கும் சரி, மற்ர முஸ்லீம்
இயக்ககங்களும் சரி, இஸ்லாமிய வாக்களார்களும் சரி, இக்காலகட்டங்களில்,
நட்பாகவும் விசுவாசமாக வும் இருந்துள்ளார்கள் என்பது நன்றாக தெரிந்த
ஜவஹருல்லா..பி.ஜே.பி.யை குற்றஞ்சாட்டுவது என்ன நியாயம் என்பது புரிய
வில்லை....
No comments:
Post a Comment