Pages

Saturday, April 28, 2012

மதுரை ஆதீனத்தின் விலை ஒருகோடியா?


கட்சிகள் கூட்டணி போட்டன..ஜாதிகள் கூட்டணி போட்டன..கிறிஸ்தவமும் --இஸ்லாமும் கூட்டணி போட்டன..இப்போது புதிதாய் ஒரு “மடக்” கூட்டணி.
ஆனால் இது ச..ரி..யா..ன..கூட்டணி...சபல கூட்டணி..மடத்துக்குள்ளேயே “டிஸ்கொத்தே “ ஆடும்  காவி போர்வை போர்த்திய கூட்டணி..

இந்த கூட்டணிக்காக கை மாறிய பணம் பலகோடி..ஆனாலும் உடனடியாக ஒருகோடி...ஒருமாதத்தில் மதுரை ஆதீனத்திற்கு “கதவை திற..நாத்தம் வரும் “ புகழ் நித்தி...தங்க சிம்மாசனம் --பீடம்..கிரீடம்...செங்கோல்..தருவாராம்..அடுத்த சில ஆண்டுகளில் மதுரை ஆதீன உலகப் புகழ் பெருமாம்..

மதுரை ஆதீனத்தின் 293 வது பட்டமாக ஸ்ரீல ஸ்ரீ ரஞ்சிதா நித்தியானந்தா.பதவிப்பிரமாணம் செய்யப்பட்டிருக்கிறார்.இதில் பல..”இல்லாததும்.பொல்லாததும் “அரங்கேரியிருக்கிறது.

ஏற்கனவே தனக்கு ஒரு மடத்தை நிறுவி அதன் “அதிபதி “ யாக இருக்கும் “நித்தி” மீண்டும் வேறு ஒரு மடத்திற்கு அதிபதி ஆக்கப்பட்டிருக்கிறார்.இதுமாதிரி “கவர்னர் ஆக்டிங்” போவது போலவோ அல்லது இரண்டு மடத்திற்கு ஒரு பீடாதிபதி என்பது போலவோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிரீர்களா?..நான் படவில்லை..

பதவி ஏற்பு விழா போட்டோவை பாருங்கள்..ஏதோ அரசவையில், சக்ரவர்த்தி இளவரசருக்கு பட்டம் சூட்டுவது போன்ற தங்க மயமான அலங்காரம் ,ஆபரணம், தங்க கிரீடம், பீடம், அப்பப்பா...மூக்கின்மேல் விரல் வைக்கும் காட்சிகள்,இதைக்காண ஏராளமான பெண்களொடு திருமதி ரஞ்சிதா நித்தியும் வந்திருந்தது, மேலும் ஒரு கவர்ச்சி.

மதுரை ஆதீனமே ஒரு பொறம்போக்கு..அதற்கு நித்தியை ரொம்ப பிடிக்குமாம்..ஏனாம்?..நித்தியுடைய பக்தர்களில் பெரும்பாலும் பெண்களாம்..அமக்களமாய் டான்ஸ் ஆடுவாராம்..இவருக்கும் “பெண் டான்ஸ் “ பிடிக்குமாம்..இதை நான் சொல்லவில்லை தினமலரில் அவர்களே சொன்னவை..என்ன ஒற்றுமை--என்ன நட்பு..என்ன டேஸ்ட்..

சென்சார் இல்லாமல் நீலப்பட வீடியோ பார்க்கணும்ன்னா..மானாட மயிலாட--அதையே பிராக்டிகலா செய்யணும்னா..நித்தி ஆசிரமம்..இப்போ அதுக்கு மதுரையில் ஒரு பிராஞ்ச் திறந்திருக்கிறார்கள்..மதுரைவாசிகளுக்கு ஜாலிதான்.

நான் சாதாரண அப்பாவி இந்து..எனக்கு சாமானியனும்..சாமியாரும் ஒன்றுதான்..என் மதத்தை அழிக்க இறைவனே எழுந்தாலும் ...அதை அவனை.. எதிற்ப்பேன்..இந்த “ஜுஜ்ஜுபீ”  நித்தி...”பிஸ்கோத்து” மதுரை ஆதீன கூட்டணியின்  நடத்தும் கலாச்சார சீரழிவை..தொடர்ந்து கண்டிப்பேன்..

காவிப்போர்வைக்குள் காமக்கேளிக்கை நடத்தும் இவர்களை தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..அதை அவரிடம் “டொனேஷன்-லஞ்சம் “
வாங்குபவர்கள் செய்யட்டும்..

No comments: