Pages

Sunday, September 9, 2012

பொய்யை வாந்தி எடுக்கும் ..கபில் சிபலே ராஜினாமா செய்



நிலக்கரி ஒதிக்கீட்டு ஊழலுக்கு காரணம் மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டிதான் “ எனவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம்—சத்தீஷ்கர்—ஜார்க்கண்ட் முதல்வர்கள் ராஜினாமா செய்யவேண்டும்---

என்ற புதிய குண்டை இன்று மத்திய “பொய்த் தகவல்துறை “ மந்திரி கபில் சிபல் சொல்லியுள்ளர்..

இவர்தான் ஏற்கனவே 2-ஜி ஊழலில் “சைபர் லாஸ் “ என்றார்.

முதலில் மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

1..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டி “ சட்ட அந்தஸ்து இல்லாதது..இதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டியதில்லை..
இதற்கு ஆதாரம் மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசின் கல்வி மந்திரியின் தகப்பனாரும் எம் .பி யுமான விஜெய் தாதா விற்கு ஜார்கண்ட் அரசு நிலக்கரி சுரங்க ஒதிக்கீடு செய்ய மறுத்தது..விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது.

ஆனால் மத்திய மின்துறை அமைச்சகம் அவருக்கு லைசன்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் நிலக்கரி சுரங்கமும் ஒதிக்கீடு அதே ஜார்கண்ண்டில் செய்தது…மாநில அர்சுக்கு எவ்வளவு “பவர் “ என்பது இதிலிருந்தே தெரிகிறது..கபில் சிபலின் அறிக்கை எவ்வளவு பொய் என்பதற்கு இதுவே சான்று..

2..அன்றைய ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா..ராஜேவின் ஏப்ரல் 5—2005 ஆம் தேதியிட்ட கடிதத்தில் “ஸ்கீரினிங் கமிட்டி “ தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் என்பதும் கபில் சிபலின் வாதம்..
ஆனால் ஜூலை 25ந்தேதி..2005 ஆம் ஆண்டு (அதே ஆண்டு )..பிரதம மந்திரி அலுவலகத்தின் முதன்மை செயலாளர்..டி.கே.ஏ.நாயர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதிச் செயலாளர்..மின்துறை செயலாளர்—தொழில்துறை செயலளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…   ”சுரங்க சட்டத்தை திருத்தி ஏலமுறை அமுல் படுத்த காலதாமதம் ஆவதால்..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கம்மீட்டி “   தொடரும் என்று தீர்மானித்திருக்கிறது..இதன் “மினிட்ஸ்” நேற்று எல்லா ஆங்கில நாளேடுகளிலும் வந்துள்ளது..
இதற்கு பின்னரும் இவ்வளவு பெரிய பொய்யை கபில் சிபல் அவிழ்த்துட்டுள்ளார்..என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி

3..ஊழலின் ஊற்றுக்கண்..கருணாநிதியின் கைத்தடி..ஜகத்ரக்‌ஷகன்..மீதுள்ள நிலக்கரி ஊழலை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு..மத்திய சட்டதுறை மந்திரி..சல்மான் குர்ஷித்..”அவர்மீது புகார் இதுவரை வரவில்லை..அப்படியே வந்தாலும் “ஸ்கீரினிங் கமிட்டி “ முறையாக தீர்மானிக்க வில்லை “ என்ற குற்றச்சாட்டு வந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் “ என்று கூறியுள்ளார்..

ஆக “ஸ்கீரினிங் கமிட்டியின் “ சூத்திர தாரிகள் காங்கிரசும் மத்திய அரசும் என்பது இதிலிருந்தும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

நாம் ஏன் பிரதமரை ராஜினாமா செய்யச்சொல்கிறோம்..

கட்டடமே இல்லாத –ஆபீசே இல்லாத காங்கிரஸ் எம்.பி விஜய் தார்தா வின் கம்பனியின் 10 ரூபாய்..ஷேர் ரூபாய் 8880 க்கு விற்று கொள்ளை அடித்ததும்..

நிலக்கரி துறைக்கு சம்பந்தமே இல்லாத ஜகத்ரக்‌ஷகன்…கம்பனி ஆரம்பித்த 4 நாளில் பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசின் "பிப்டிக்" உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு “நிலக்கரி லைசன்ஸ்..மற்றும் சுரங்கம் ஒடிசாவில் பெற்றுக்கொண்டு..6 ஏ மாதத்தில் அதன் 51 சதவீத பங்குகளை பல்லாயிரம் கோடிகளுக்கு விற்றதும்…....
 ஊழலில்லை என்கிறார்..பிரதமர்—
சோனியா—காங்கிரஸ் காரர்கள்..
நியாயமா..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1 comment:

sakthi said...

எங்கும் ஊழல் ,எதிலும் ஊழல், இது தான் அவங்க ஸ்டைல் .எல்லாம் தலைவிதி அனுபவித்து தானே ஆகணும் அண்ணா !