Pages

Thursday, January 10, 2013

இந்திய ராணுவவீரர்கள் “தலை கொய்து” படுகொலை…

இந்திய –பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகில், காஷ்மீரின் “பூஞ்ச்” பகுதியில், கடந்தவாரம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து, இரண்டு இந்திய ஜவான்களை சுட்டுத்தள்ளி, தலையை கொய்துக்கொண்டு போயிருக்கிறது.

இது ராணுவத்தில் அடிக்கடி நடக்கும் செய்கைதானே..இதிலென்ன புதிது இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நமது எல்லைக்குள் புகுந்து, நமது வீரர்களைக்கொன்று, அவர்களின் தலையைக் கொய்து, உடலை சின்னாபின்னமாக சிதைத்து, சென்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்..

கொல்லப்படுவது ராணுவத்தில் சகஜம்..
கொடூரக்கொலைகள் பாகிஸ்தானுக்கு சகஜம்..
எதிர்ப்புதெரிவிக்கக் கூட தயங்குவது இந்தியாவுக்கு சகஜம்..
“மானங்காக்க போராடு” வது பா.ஜ.க.வுக்கு சகஜம்..
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு சகஜமாக இருக்கக்கூடாது…

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று இந்திய ராணுவம்..15 நிமிடம் இந்தியப்பிரதமரும்—ராணுவ மந்திரியும் கண்ணை மூடிக்கொண்டால், பாகிஸ்தானையும், பங்களாதேஷையும், பர்மாவையும், ஸ்ரீலங்காவையும், நேபாளத்தையும், பூடானையும், சுற்றிவளைத்து இந்தியாவோடு சேர்த்துவிடும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு உண்டு.

சர்வதேச விதிமுறைகளை மீறி..பாகிஸ்தான் செய்வது இது முதல் முறையல்ல..பாகிஸ்தான்மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் மீது தவறு இருப்பதுபோல், எழுதியுள்ள “தி இந்து” பத்திரிக்கைமீதும்,  அதன் ரிப்போர்ட்டர் “ப்ரவீண் சாமி” மீதும் சட்டப்படி  மத்திய அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும..

டெல்லி மாணவிமீது பாலியல்வன்கொடுமை “நிகழ்த்தப்பட்டத்தற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்த நாம் , பாகிஸ்தானின் இக்கொடூரத்திற்கு நாடு முழுதும் மிகப்பெரிய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்..

கோவையில் நேற்று நாங்கள் “மெழூகுவர்த்தி அஞ்சலியும்—கண்டனமும் “ தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளோம்..

No comments: