Pages

Tuesday, April 30, 2013

போணி ஆகாத விஜய காந்தும், வைக்கோவும் ஏணி ஆவார்களா?


இன்று ( 30.4.13 )..இந்து பத்திரிக்கையில் ஒரு “நாலு பத்தி படம்”—திருமாவளவனும், வைக்கோவும் சிரித்து போஸ் கொடுக்கும் படம்..நேற்றைய முன்தினமும்  விஜகாந்த்தும், திருமாவளவனும் சிரித்து போஸ் கொடுத்து இதே அளவு படம் வந்தது.

திடீரென இவர்கள் “உறவாட “ என்ன காரணம்?..சினிமாவை வெறுக்கும் ராமதாசு முகாமிலிருந்து சினிமாக்காரர் விஜயகாந்த் முகாமுக்கு திருமா தாவக் காரணம் என்ன?

மது ஒழிப்பு நடை பயணம் மூலம், தன் கட்சிக்கு “கூட்டணிக்குள் சேரும் “ அந்தஸ்தை உய்ர்த்திக்காட்ட நினைக்கும், வைக்கோவிற்கு, திருமாவின் மீது, என்ன திடீர் காதல்?

இதுமாதிரி நட்பு ஏதும் ஏற்படக்கூடாது..என அரசியலில்..ஏதாவது விதி இருக்கிறதா?—என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மரக்காணத்தில் பா.ம.க.விற்கும், வி.சி.க்கும், நடந்த மோதலில், பாதிப்பு வி.சி.க்குத்தான் அதிகமாம்.வன்னியர் சங்கம், பாம,க. ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம், சித்திரை முழுநிலவு பெருவிழாவில், பேசிய ஆவேசமான உரைகளும் இதற்கு காரணமாம்..

சில மாதங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டத்தில், வன்னிய பெண்—தலித் பய்யனுக்கும் இடையேயான காதலும், அதன் விளைவாக ஒரு கிராமமே எரிக்கப்பட்டதும், பா.ம.க. தலித் பகுதியை சூறையாடி, தர்மபுரி மாவட்டம் , பிஹார் மாநிலத்தில் உள்ளதா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியது..

தலித்களுக்கும், தேவர்களுக்கும், --தேவர்களுக்கும்—நாடார்களுக்கும், நாடார்களுக்கும்,--தலித்களூக்கும்---என தென் மாவட்டங்களில் அடிக்கடி சாதி மோதல்கள் நடைபெறுவது சகஜமாகிவிட்டது..

தற்போது அதுபோல மேற்கு மாவட்டங்களில், அன்புமணி---ராமதாசு---காடுவெட்டி குரு கைங்கரியத்தில்,வன்னியர்—தலித் சாதிமோதல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது..

கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் சென்று.., அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரை தலித்களுக்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் ராமதாசு இறங்கி சாதி மோதல்களை உருவாக்கி சமூக நல்லுணர்வை சீரழித்து வருகிறார்.... 

இதில் தூரதிருஷ்டம் என்னவென்றால், பாஜக தவிர எந்த அர்சியல் கட்சியும் ராமதாசின் இச்செய்கையை கண்டிக்கவில்லை..பாஜகவும், ஆர்.எஸ்ஸும் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக களத்தில் இரங்கி, சமூக நல்லுணர்வை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், தலித்கள்மீது, வைக்கோவுக்கும், விஜய்காந்துக்கும் என்ன திடீர் பாசம்..எல்லாம் விரைவில் தேர்தல் வருவதால் வரும் வேஷம்..இவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு ஏதாவது தரமுடியுமா/

தமிழ்நாட்டு மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்து குறைகளுக்கு தீர்வு காண ஆளும் கட்சிக்கு அங்குசமான எதிர்கட்சியாக செயல்படும் அந்தஸ்தை விஜயகாந்த்துக்கு  நாம் கொடுத்தோம்..அவரும் அவர்கட்சியும் சட்டசபைக்கு போனால்தானே நம் பிரச்சினை பற்றி பேச..கொடுத்த வாய்ப்பை எடுத்து செயல்பட முடியத விஜயகாந்த அடுத்தவாய்ப்புக்கு ஆலாய் பறப்பது ஏனோ?—இவர்தான் திருமாவின் ஆபத் பாந்தவரோ?

சமூக நல்லிணக்கத்தை சீரழிக்க நினைத்த ராமதாசை மாவட்ட்ம் தோறும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியமைக்கும், மரக்காணம் கலவரத்துக்கு அவர்தன் காரணம் என்பதை வெளிப்படையாக கூறியமைக்கும், தமிழக முதல்வர் பாராட்டப்படவேண்டியவரே..

சாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் யாரக இருந்தாலும் அவர்களின் மீது தேசிய பதுகப்புச் சட்டம் பாய வேண்டும்..செய்யுமா தமிழக அரசு?

1 comment:

Anonymous said...

மதிமுகவில் தலித் தோழர்கள் இருப்பதை தாங்கள் அறியாவிட்டால் கேட்டுத் தெரிந்து விட்டு இடுகை இட்டிருக்கலாம். தவிர திருமாவும் வைகோ வேறுவேறு இடங்களில் இருந்தாலும் பல விசயங்களில் ஒன்றாகப் பயணிப்பவர்கள் என்பது தமிழ்நாட்டு அரசியலில் அரிச்சுவடி தெரிந்த அனைவருமே அறிந்தது. திருமாவுடன் மட்டுமல்ல மகேந்திரன், நல்லக்கண்ணு, தா.பா போன்றோருடனும், சந்தர்ப்பத்தில் எதிர்கொள்ள நேர்கையில் கலைஞர் , செயாவுடன் கூட அரசியல் தாண்டி கனிவுடன் உரையாடியிருக்கிறார் வைகோ. வைகோவிடன் சில குறைகள் இருக்கலாம். தமிழ்நாட்டில் அரசியல் கலக்காது பொதுவெளியில் எல்லாக் கட்சியினரிடமும் பாராபட்சமின்றி கனிவுடன் நடந்து கொள்ளும் வெகுசில அரசியல்வாதிகளில் வைகோவும் ஒருவர் என்பது பலரும் அறிந்தது. உங்களுக்கு என்ன காழ்ப்போ? என்ன அஜண்டாவோ? நடத்துங்கள்!!!