Pages

Wednesday, March 18, 2015

மீடியாக்களின் வினோதமான மத சார்பின்மை


ஒரே நாளில் மூன்று சம்பவங்கள் மூன்றும் மூன்று மாநிலங்களில்... அனைத்தும் “மைனாரிட்டிகள்” சம்பந்தப்பட்டது. அதற்கான “ரியாக்‌ஷனை” பார்த்தால் நாம் கடைபிடித்து வரும் “செலக்டிவ்” மதசார்பின்மை புரியும்!

ஒன்று உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம். இங்குள்ள 100 மசூதிகளில் முஸ்லீம்கள் ஒன்று கூடி ஒரு “பத்வா” அறிவிக்கிறார்கள்! என்ன அது?
இனி முஸ்லீம் “நிக்காஹ்”க்களில் மேளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை வாத்தியங்கள் வாசிக்கக்கூடாது! எனெனில், நாதஸ்வரம் - மேளம் இஸ்லாத்திற்கு எதிரானது!

திடீரென ஏன் இந்த முடிவு. அல்லாவிற்கே வெளிச்சம்! இதற்கு முன் எப்படி இருந்தது!

இந்துத்திருமணத்தில் நடத்துவது போல மேள தாள கச்சேரி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இஸ்லாமிய திருமணங்களிலும் கோலாகலமாக இருந்தது!

இஸ்லாமிய காஜிக்கள் இந்துக்களின் நாதஸ்வரம் - மேளத்திற்கு தடை விதித்ததை “மதசார்பற்ற தன்மை” என எல்லா அரசியல் கட்சிகளும், பொது ஜன அமைப்புகளும், NDTV, இந்து பத்திரிக்கைகளும் ஏற்றுக் கொண்டுவிட்டதால் எந்த விவாதமும் இனி தேவை இல்லை. எந்த செய்தியும் இது பற்றி மேலும் அவசியம் இல்லை. உத்திரபிரதேச மாநில அரசை யாரும் கண்டிக்கவும் வேண்டியது .இல்லை.இதுதான் சமூக நீதி..மீடியா மரபு..

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு சர்ச்சில் திருடுவதையே தொழிலாகக் கொண்ட ஒரு கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்து சர்ச்சை சூறையாடி அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்துள்ளது.இது கண்டிக்கத்தகது..காட்டும்பிராண்டித்தனமானது

பொங்கி எழுந்தார்கள் NDTV இந்து பத்திரிக்கை போன்றவர்கள்..மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டினார். சட்டம் ஒழுங்கு போலீஸ் மாநிலத்தின் அதிகாரத்தில் உள்ளது. கம்யூனிஸ்டுகளை ஒடுக்க போலீசை ஏவிவிடும் மம்தாபனார்ஜி திருடர்கள் மீது போலீசை ஏவி இருந்தால் இக்குற்றம் நடந்திருக்காது..
..
மம்தாவை ஒருவர் கூட விரல் நுனியைக் கூட காட்டி குற்றம் கூறவில்லை ..சர்ச்சை சேர்ந்த ஒரு பெண்” புகார் கொடுத்து பல மணி நேரம் ஆகியும் ஸ்டேசனிலிருந்து போலீஸ் வரவே இல்லை”-- என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவர் “கார்டினல்” முதலமைச்சர் “சரியாக செயல்படுவதாக புகழ்ந்துள்ளார்..ஆனால் இன்னும் முக்கிய குற்றவாளி ஒருவர்கூட பிடிபடவில்லை..அவர்களுக்கு இன்னும் மம்தா புனிதமானவராகவே காட்சி அளிக்கிறார்.

குற்றத்தை தடுக்க வேண்டிய மாநில அரசை சும்மா விட்டுவிட்டு மத்திய அரசை குற்றம் சாட்டுவதுதான் “ஒரிஜினல் மதசார்பின்மையா?”

பாஜக ஆளும் ஹரியானாவில் ஒரு சர்ச்சில் ஏசுகிறிஸ்துவின் சிலைக்கு சேதாரம் உணாக்கப்பட்டிருக்கிறது..ஹரியானா முதல்வர் கட்டார் மற்றும் பிரதமர் மோடி இதை கண்டித்து, குற்றவாளியை கைது செய்துள்ளார்.

.”காப்பாற்றப்படவேண்டியது மனிதர்கள்..பசுக்களல்ல”--என்று யாரோ சொல்லிக்கொடுத்து “கார்டினல்” அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது இந்துக்கள் மனதை புண்படுத்தாதா?--மத சார்பின்மைக்கு எதிரானது அல்லவா?

.பாஜக அரசு என்றால் “கார்டினல்” கூட “கார்டியலாக” இருக்கமாட்டார் போலும்..

மூன்றாவது பாகிஸ்தானில் லாகூர் மகாணத்தில் ஒரு சர்ச்சுக்குள் புகுந்து பிராத்தனை நடத்திக் கொண்டிருந்த அப்பாவி கிறிஸ்தவர்களை, மனித வெடிகுண்டான ஒரு தலிபான் தன்னை சிதர அடித்துக் கொண்டு 11 பேரை கொன்றிருக்கிறான்!

இந்திய அரசியல் கட்சிகள் வாய் மூடி மவுனம் காக்கிறது. காரணம் குண்டு வைத்தவன் முஸ்லீம்.... அவனை குற்றம் சுமத்தினால் “ஓட்டுக்கு வேட்டு” விழுந்துவிடும் என்பதால் அதனை அத்தனை கட்சிகளும் “கப்சிப்”.. NDTV இந்துவும் சேர்ந்து “கப்பு சிப்பு”.

இது போதுமா.... இன்னும் வேண்டுமா? இந்தியாவின் “வினோத மதசார்பின்மை” தத்துவத்திற்கு வலு சேர்க்கும் சம்பவங்களை சுட்டிக் காட்ட பட்டியல் போட....

No comments: