Pages

Thursday, August 11, 2011

”ஜெ”...வா...இது?

..

இன்றைய ( 11.08.2011 ) தினத்தந்தியில் ஒரு படம்...முதல்வர் “ஜெ” கார் சென்னையின் தெருக்களில்...ஆரவாரமின்றி...கார்களின் அணிவகுப்பின்றி...தன்னந்தனியாக செல்கிறது...கண்கொள்ளாக் காட்சி...நாம் காண்பது கனவா?..அல்லது நனவா?...தமிழகம் பாஜக ஆளும் மாநிலமா?...அல்லது கம்யூனிஸ்ட் முதல்வரா?...என சந்தேகிக்கும் எளிமை...பாராட்டுக்கள்..”ஜெ”

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ரெங்கராஜனும்...நத்தம் விஸ்வநாதனும்..உடலைக்குறுக்கி..தலையை தாழ்த்தி..மைக்கில் பேசினார்கள்...இதை பார்த்த “ஜெ”..மைக்கின் உயரத்தை கூட்டச்சொல்லி இருக்கலாம்...ஆனால்..”ஆணுக்கழகு..தலைநிமிர்ந்து பேசுவது.....நீங்கள் தலை குனியக்கூடாது..” என சொல்லியதோடு சபாநாயகரை அழைத்து உடனடியாக “மைக்கின் “ உயரத்தை கூட்டச்சொல்லியிருக்கிறார்...

அத்தனை ஆண்களின் சார்பாக உங்களுக்கு பாராட்டுக்கள் “ஜெ”

ஆனால் ”ஜெ” யின்  இந்த பேச்சை தவறாக புரிந்து கொண்டு அவர்முன்னால் யாராவது நிமிர்ந்து நின்று பேசினால்......என்னாகும்?...யாராவது பேசட்டும்..அப்புறம் ஒளிந்து நின்று பார்ப்போம்...

“சட்ட மன்றத்தில்....... பொதுக்கூட்டத்தில்  பேசுவது மாதிரி பேசக்கூடாது--------சபாநாயகரை பார்த்துத்தான் பேசவேண்டும்...--அரசு விழாக்களில் ஆடம்பரம் கூடாது---எளிமையாக இருக்கவேண்டும்”””-----------என்ற “ஜெ” யின் நிலைப்பாடுகள்...மாற்றத்தின் அறிகுறிகளா?,, .....இருந்தால் ......தொடர்ந்தால்.........வரவேற்போம்..தமிழகத்துக்கு இது நல்லதுதானே....

1 comment:

Anonymous said...

ஜெ அவர்கள் என்றுமே போலி பணிவுகளை விரும்பியவர் அல்ல .
தனிப்பட்டமுறையில் மிக நல்லவர் .