Pages

Sunday, August 28, 2011

ராகுலை காணவில்லை--மாமா மன்மோகன் சிங் கதறல்



 

என் சகோதரி சோனியா மேனொ வின் மகனும் என் மருமானுமான ரால் வின்சி என்கிற ராகுல் காந்தியை நேற்று இரவுமுதல் காணவில்லை--அவனை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என அவனது தாய் மாமன் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி ரேஸ்கோர்ஸ் காவல் நிலய இன்ஸ்பெக்டர் கிரன்பேடியிடம் புகார் கொடுத்தார்--அதன் விவரம் வருமாறு--

நேற்று வெள்ளிக்கிழமை குடும்பத்தில் ஒரு பஞ்சாயத்து...ராகுல் தருதலையாய் சுற்றுவதைக்கண்டு அவன் தாத்தா அண்ணா ஹசாரே சில கட்டுப்பாடுகளை விதித்தார்..பாவம் அப்பா இல்லாத பிள்ளை--40 வயசாயியும் கல்யாணம் கட்டிக்காம ஒருமாதிரி சுற்றுவதை கண்டித்தார்..”ஜன்லோக்”..குங்கிர..”பால்” குடி..நீ சரியாயிடுவ..அப்பிடின்னாரு..அதுக்கு எதிற்பு தெரிவிச்சு..அவனுயடை உருப்படாத பிரண்டுங்க,,மிலிந்த் தியோரா--சச்சின் பைலட்--ஜோதிராதித்ய சிந்தியா--இவங்க பேச்ச கேட்டு..எதோ கையில எழுதிவச்சிருந்தத காட்டுக்கத்தலா கத்திட்டு..வீட்டவிட்டு ஓட்டமும் நடையுமா வெளிய போனான்..இன்னும் வீடு திரும்பல்ல..

இன்னிக்கி கூட தாத்தா அன்னா ஹசாரே “ஜன்லோக்”-பால் டம்பளர்ல எடுத்து வந்தார்.அந்த பால் இவனுக்கு புடிக்காததால இவன் இன்னும் வீட்டு பக்கமே வரல..

இன்னிக்கி அவங்க அத்தை சுஷ்மா வும் கொஞ்சம் ஓவராவே அவனை திட்டிட்டாங்க..கொஞ்சம்கூட பொருப்பில்லாம அலையரானே--வாய்க்கு வந்தபடியெல்லாம் உளரறானேன்னு..அத்தை சுஷ்மா சொன்னதும் அவனுக்கு கோபம்..

அம்மா சோனியா உடம்பு சரியில்லாம அமெரிக்காவுல படுத்திருக்காங்க..அவனுக்கு எல்லாமே நான்தான் -என்ன தவிக்க விட்டு போயிட்டா--பக்கத்து வீட்ல உள்ள சரத் யாதவ்.....சீத்தாரம் எச்சூரி--அருண் ஜேட்லி--இவங்கள்ளாம்--என்ன மெரட்டிகிட்டே இருக்காங்க... பயமா இருக்கு..


 

என்று மாமா மன்மோகன் சிங் கதறி அழுதபடி இருந்தது வருத்தமாக இருந்தது,..

நாமும் ராகுலுக்கு வேண்டுகோள் விடுப்போம்..

தாத்தா அன்னா ஹசாரே “ஜன்லோக்..பால”--அவரே முழுசும் குடுச்சுட்டாரு..அத்தை..சித்தப்பா--மாமாக்கள்லாம் அமைதியாயிட்டாங்க..நீ தைரியமா திரும்பி வரலாம் ..
உன் பிரண்ஸோட  லூட்டி அடிக்கலாம்




2 comments:

மதுரை சரவணன் said...

kaattamaana pathivu.. vaalththukkal

எஸ்.ஆர்.சேகர் said...

சரவணன் ஜி காணாபோயிட்டார்னு கலங்கி கிட்டு இருக்கேந்-கருணையே இல்லாம காட்டமான பதிவு ங்கிரீங்க