Pages

Sunday, October 30, 2011

ஆட்டம் அடங்கிய மும்மர் கடாஃபி--அடங்கப்போகும் இந்திய கடாஃபிகள்

நம்மில் பலரை ” நீ யாராக வேண்டும்”  என் கேட்டுப்பாருங்கள்..நான் ஜெயலலிதாவாக வேண்டும்---ராகுலாக வேண்டும்...விஜய்யாக...சூரியாவாக..வேண்டும்...ரஜினியாக ..கமலாக..வேண்டும்--- என்பார்கள்..பலர்

யாராவது “நான் சங்கராச்சாரியாராக....அடிகளாராக...அமிர்தானந்த மாயியாக....அப்துல் கலாமாக ..வேண்டும் “ என்று சொல்லியிருக்கிறார்களா?---இல்லை அல்லது மிகக்குறைவு..

“ என் வாழ்வின் லட்சியம் நான் போப்பாண்டவராக ஆகவேண்டும் “ இப்படி சொன்னவர்.. இங்கிலாந்தின் மிகப்பெரிய விளம்பர நிறுவனத் தலைவர் “ டேவிட் ஒகில்வி “..

சரி விஜய்க்கும் சூரியாவுக்கும்...ஜெயலலிதாவுக்கும் ..”அவர்கள் யார் ஆக வேண்டும் என்று ஆசை?”..முதல் இரண்டு பேருக்கும் ரஜனியாகவும் “ஜெ” க்கு பிரதமர் ஆக வேண்டும் எனறு ஆசையாக இருக்கலாம்..

இப்போது “இருக்கும் இடத்தைவிட “..”அதைவிட பெரிய-- வேறு இடம் வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின்.--..மனதின் ஆசை..

எம்.எல்.ஏ.---எம்.பி.ஆக ஆசைப்படுகிறான்..எம்.பி...மந்திரியாக..அதுவும் கேபினட் மந்திரி ஆக-- ஆசைப்படிகிறான்..மந்திரி பிரதமர் ஆக ஆசைப்படுகிறான்..

எல்லாம் ஆனபின் என்ன நினைப்பு...யாரும் நெருங்க முடியா சர்வாதிகாரியாக ---அப்படி ஆன பின்பு..நானே கடவுள்..நினைப்பு..கடவுளாக நினைத்து...திமிர் தலைக்கேரி...மக்கள் புரட்சி வெடித்து...கடவுளிடமே போய்ச்சேர்ந்து விடுகிறான்..

சதாம் ஹுஸேன் கதி---மும்மர் கடாஃபி கதி...அனாதை பிணமானார்கள்..

இந்த சர்வல்லமை பொருந்திய அதிகார பதவிகள் தான் ---நாட்டை தாங்கிப்பிடிக்கிறதா?..

இல்லை..இது தலைமேல் இருக்கும் மணிமகுடம் மட்டுமே...தலை--கால்---இடுப்பு--முதுகெலும்ம்பு--கழுத்து--கைகள்---என உடலைத்தாங்கி பிடித்துக்கொண்டிருக்கும் பல்வேறு உறுப்புக்கள் போல --ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புக்கள் நாட்டை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது..அவைகளில் பல வெளியில் தெரியா..

தலையின் ஆட்டத்திற்கு இவைகளும் ஆடும்--ஓவராக தலை ஆடினால்..இவைகள் ஆடும்..ஆனால் “பிய்த்துக்கொண்டு “ போகாது..மணிமகுடம் ஓவராக ஆடினால் “பிய்த்துக்கொண்டு “ போகும்..பறக்கும்..

இது சரித்திரம் சொல்லும் உண்மை...இது தெரிந்தும் இன்னும் சில தலைகள் இங்கு ஏன் ஆடுகிறது ?..


1 comment:

muthusamy--dubai said...

திரு s r சேகர் அவர்களே ,
உங்களுடைய ஒவொரு மின்னஞ்சலையும் ஆவலாய் படிக்கிறேன்.உங்கள் எழுத்துக்களில் நாட்டை பற்றிய ஏக்கம் கனவு லட்சியம் நன்றாகவே தெரிகிறது. என் போன்றோரின் ஏக்கங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ......
ஆட்சியாளர்களின் அலட்சியபோக்கால் எத்தனையோ கோடிகள் வீணாகி நமக்கும் பயன்படாமல் போகிறது. மனது வலிக்கிறது இவர்களை நினைத்தால் ஏனென்றால் இவர்களும் இந்தியர்களே..PJP ஆட்சிக்கு பின்னால் இந்த புழுத்துப்போன காங்கிரஸ் வந்து கேன்சர் போல இந்தியாவை அழித்துவிடுமோ என்ற பயமும் மனதில் நிழலாடுகிறது ....... என் போன்ற இளைங்கர்களின் ஏக்கங்கள் ................
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் ........???