Pages

Wednesday, January 25, 2012

சல்மான் ரஷ்டியும் வகுப்புவாத காங்கிரஸும்




இந்துக்கள்..------இந்துக்கள்
-என்று சொல்லிக்கொண்டு..இந்துவாக வாழ்வது..வகுப்புவாதம்....முஸ்லீம்--கிறிஸ்தவர்களின் “மத ஆக்ரோஷத்தன்மை”..மதவாதமில்லை..மாறாக அதுதான் மதநல்லிணக்கம்...
காங்கிரஸின் இந்த இரட்டை நிலைப்பாடு..அதோடு பிறந்த “ஊனம்”..

“சாத்தானின் வரிகள் “ என்ற புத்தகம் எழுதிய சல்மான் ரஷ்டியை..ஜெய்ப்பூரில் நடைபெற்ற “கலாச்சார திருவிழாவிற்கு “” வரவிடாமல் தடை செய்த காங்கிரஸின் “அனாச்சாரம் “ வெளியே தெரிந்து விட்டது ..சிமி..டியோபண்ட்....போன்ற “பொடி வன்முறையாளர்கள் “மீது பழியை போட்டு ராஜஸ்தான் அரசும் மத்திய சோனியா அரசும்..சல்மான் ரஷ்டியை--ஒரு வீடியோ கான்ஃப்ரன்ஸில் கூட பேச விடாமல் தடுத்துவிட்டது..

”காங்கிரஸ் அரசு..மத வன்முறையாளர்களோடு ;;;கூடிக்கும்மாளம் போ.டுகிறது...இந்தவன்முறை கும்பலும் காங்கிரஸும்..என் எழுத்தை --பேச்சை--தடுத்து நிறுத்திவிட முடியாது..மத சார்பற்ற ஜனநாயக இந்தியா..முஸ்லீம் மதவாதிகள் கைய்யில் வீழ்ந்து கிடக்கிறது---இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸோ..இந்துமுன்ன்ணியோ..சொல்லவில்லை..முஸ்லீம் அறிஞர்..சல்மான் ரஷ்டிதான் கூறியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு ஆதரவாக..இந்துக்களுக்கு எதிராக மூச்சுமுட்ட ஓடிவரும் அருந்ததி ராயோ..மேதா பட்கரோ..புரட்சிகர முற்போக்கு வாதிகளோ..சல்மான் ரஷ்டிக்கு ஆதரவாக வாயே திறக்கவில்லை. ஏன்?

இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்து மனம் புண்படச் செய்த ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு ஆதரவாக கச்சைகட்டிய லாலுவோ..முலயமோ..”பிக்”விஜயசிங்கோ..மர்க்ஸிஸ்களோ...ருஷ்டிக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை.ஏன்?

கடந்த இரண்டாண்டில் 5..6..முறை இந்தியா வந்த ரஷ்டியை அப்போதெல்லாம் தடைபோடாத காங்கிரஸ் இப்போது தடுப்பது ஏன்?..

எல்லாம் ஓட்டுய்யா..ஓட்டு..5 மாநில சட்டசபை ஓட்டு...15 சதவீத முஸ்லீமகளின் ஓட்டு..

நம் தேசத்தின் “வாழ்வியல் மதிப்புக்களை “ சவக்குழியில் வீசிவிட்டு--பிணத்தோடு உறங்குபவர்கள்தான் காங்கிரஸ்.காரர்கள் என்பதை..சல்மான் ரஷ்டியும் --ஜெய்ப்பூர் சம்பவமும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது