Pages

Saturday, September 1, 2012

ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”

அஹமதாபாத் சிறப்புநீதிமன்ற நீதிபதி.திருமதி ஜோத்சனா யாக்னிக்..அளித்த “நரோடாஅ பாட்டியா வழக்கு” தீர்ப்பு---காங்கிரஸுக்கு லாபமா?—மோடிக்கு பின்னடைவா?

மோடியின் மந்திரிசபை முன்னாள் சகா டாக்டர்.மாலாபென்னுக்கு 28 ஆண்டும்—பஜ்ரங்தள் தலைவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது..இது சட்டத்தின் ஆட்சியின் வெற்றியா?—மோடியின் முஸ்லீம் விரோத முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதா?

முதலில் கோத்ரா ரயில் நிலயத்தில் 56 அப்பாவி கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்காவிட்டால்…”நரோடா பாட்டியாவில்”- 97- அப்பாவி முஸ்லீம்கள் பலியாகி இருக்கமாட்டார்கள்..
அப்படியானால் “தூண்டியவன் தூய்மையானவன்…---துடித்தெழுந்தவன் துஷ்டனா?”.---.”அடித்தவன் காந்தியவாதி….அழுதவன் கோட்சேயா?

இரண்டாவது…1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு..டெல்லியில் 3000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்ததே—பலிவாங்கியதே—பழிவாங்கியதே..காங்கிரஸ்..----28 ஆண்டுகள் உருண்டோடியும் வழக்கு இல்லை—தண்டனை இல்லை—கூக்குரல் இல்லை…கொலைகாரர்கள் சஜன் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் (இன்னொரு குற்றவாளி ஹெச்.கே.எல்.பகத்..காலமானார்)—ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்களே..
மார்வா கமிஷன்
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிஷன்
ஜெயின் பானர்ஜி கமிஷன்
போட்டி –ரோசா கமிஷன்
ஜெயின் –அகர்வால் கமிஷன்
அகுஜா கமிஷன்
தில்லான் கமிஷன்
நருலா கமிஷன்
நானாவதி கமிஷன்
என போட்ட எல்லா கமிஷனும் ஒன்றுவிடாமல் குற்றவாளி என அறிவித்த காங்கிரசின் எம்.பிக்கள் சஜன் குமாரும் –ஜகதீஷ் டைட்லரும் இன்னும் தண்டிக்கப்படவில்லையே…அவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலில் டிக்கட் வழங்கவேண்டும் என்பதற்காக.------- முடியும் தருவாயில் இருந்த வழக்குகளை--- சிபிஐ வாபஸ் வாங்கியதே..இது எந்த ஊர்—எந்த நாட்டு---எந்த மதத்து—நியாயம்?..ஓஹோ..இது காங்கிரஸ் கட்சி நியாயமோ?

மாறாக தனது மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும்..தனது மந்திரிசபை முன்னாள் சகா..மாலாபென்னை பதவி நீக்கியது மட்டுமின்றி…நீதிமன்றத்தில் நிறுத்தினாரே மோடி…இதுதான் இந்துக்களின் நியாயமோ..இந்திய நியாயமோ----..பிஜேபி நியாயம்..

மூன்றாவதாக--------நீதிபதி தனது தீர்ப்பில்…” போலீஸ் அசட்டையாக இருந்தது…கலவரக்காரர்களுக்கு துணை போனது…இந்த்..இந்த போலீஸ் அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்”--…என ஒரு வரி கூட கூற வில்லையே…இதற்காக தனி அஃபிடவிட் நீதிமன்றத்தில் ..போலீசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்ததை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறாறே…இது போதாதா..மோடியின் நல்லாட்சிக்கு..நடுவுநிலை தவறாமைக்கு..

மாறாக..டெல்லி சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் நிகழ்த்திய போது..”போலீஸ் அதிகாரிகள் கண்மூடி இருந்தனர்…போலீஸ் ஸ்டேஷன்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..கபூர்—மிட்டல் கமிஷன் குற்றம் சுமத்திய 72 போலீஸ் அதிகாரிகள் மீது இன்றுவரை வழக்கில்லை..
காங்கிரஸ் குண்டர்களால் சீக்கிய சகோதரர்கள் தாக்கப்பட்டபோது..வாக்களர்பட்டியலை வைத்துக்கொண்டு…சீக்கியர்களின் வீடுகளை அடையாளம் காட்டியதே-- டெல்லி போலீஸ்.
ஆக இந்தியாவில் உயிருக்கென்று “தனியாக “ மதிப்பில்லை…
யார் தாக்குகிறார்..யாரை தாக்குகிறார்..என்பதை பொருத்தே உயிரின் மதிப்பு கணிக்கப்படுகிறது…இதில் இரு விதி விலக்குகள்…நிரந்தரமாக..
1 இந்துவை யார்தாக்கினாலும் அந்த உயிர் கணக்கில் வராது
2..காங்கிரஸ்காரன் யாரை தாக்கினாலும் அதுவும் கணக்கில் வராது..

இறுதியாக …
இந்த சிறப்பு நீதி மன்றம் ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே…இதற்குமேல் உயர்நீதி மன்றம்—உச்சநீதிமன்றம்—உள்ளது…
மாவட்ட நீதிமன்றத்தின் அனேக தீர்ப்புக்கள் உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சரித்திரம் உண்டு.
இந்த தீர்ப்பு பத்திக்கைகளுக்கு “அவல்”---காங்கிரசின்  “ஆவலுக்கு”—கிடைத்த வைக்கோல்..அத்தனை “ஸ்கேம்”-களினால் மக்களின் “தூற்றல்களிலிருந்து” சிறிது நேரம் இளைப்பார காங்கிரசுக்கு கிடைத்த சிறு “தூரல்”..அவ்வளவுதான்.

“For every action there is an equivalent and opposite reaction “—
இதை ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”---
குஜராத் மக்கள் செய்தால் “சதியா”—

ஒருவேளை மோடி திட்டமிட்டு முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால்….2002 டிசம்பரில் (கலவரம் நடந்த 10 வது மாதத்தில்)நடந்த தேர்தலில் –உலகத்தின் அத்தனை மீடியாக்களும் வரிந்து கட்டி எதிர்த்த போதும் 3இல் 2 பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க முடியுமா?
மோடியின் மீது தூஷணைகள் 2007 இலும் தொடர்ந்தது..வெற்றியும் தொடர்ந்தது..   இப்போது இன்னும் 2012 தேர்தலுக்கு 100 நாளைக்கு முன் வந்த இந்த தீர்ப்பை..”மோடியின் பிரதமர் கனவு கலைகிறது” என தலையங்கம் தீட்டி ஆங்கில பத்திரிகைகள் தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்கின்றன.

யாருடைய ஆதரவில்லாமல்—எந்த ஆயுதமும்(..பணம்..மீடியா ஆதரவு) இல்லாமல்---உலகுக்கு தான் யார் என்பதே தெரியாமல்-- 2002இல் இருந்த  மோடியையே இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை..

இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..
கங்கிரசுக்கு போதாத காலம்..
குஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..
பாவம்..

1 comment:

sakthi said...

"" இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..
கங்கிரசுக்கு போதாத காலம்..
குஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..
பாவம்..""

மோடி ஜி யை வெல்ல முடியுமா அண்ணா