பவன் குமார் பன்சால் ..முன்னாள் பாராளுமன்ற விவகார இணை அமைச்சர்..இன்னாள் ரயில் மந்திரி...
அவருடைய
முன்னாள் உதவியாளரும்..உறவினருமான..விஜய் சிங்கலா என்பவர், ரயில்வே போர்ட்
உறுப்பினர் மகேஷ்குமார் என்பவரிடமிருந்து பதவி உயர்வு கொடுக்க ரூ.90
லட்சம் லஞ்சமாக பெற்றுக்கொண்டார்..என்று சி.பி.ஐ.அவரை கைது
செய்துள்ளது.மகேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
நல்ல “பசையுள்ள பதவி பெற “ மகேஷ்குமார்-- திரு.சிங்கலாவிடம் 10
கோடி பேசி--அதை ரெண்டுகோடியாக குறைத்து, ரூ.90 லட்சம் அட்வான்ஸ்
கொடுக்கும்போது சி.பி.ஐ.பிடித்ததாம்..
கடந்த 24 ஆம் தேதி,
சட்ட அமைச்சரிடம் சுப்ரீம் கோர்ட்டின் “நிலக்கரி பேர ஊழல் “ ஆவணங்களை
காட்டி, திருத்தம் செய்ததாக சி.பி.ஐ.யை, சுப்ரீம் கோர்ட் கடுமையாக
கண்டித்தது நமக்கு நியாபகம் இருக்கும் என நம்புகிறேன்.
அதே சி.பி.ஐ., சட்ட அமைச்சரிடம் ஆவணங்களை காட்டி, தவறு செய்ததற்கு
பரிகாரமாக, சுப்ரீம் கோர்ட்டிடம் தன் தவறை ஒத்துக்கொண்டிருக்கிறது..
இதோடுகூட
ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறது.”.தான் சுதந்திரமான
அமைப்பல்ல.---.அரசின் அங்கம்---ஆவணங்களை காட்டியது தவறில்லை”--எனவும்,
ஆனாலும், சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுகிறேன் எனவும்,
அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்திருக்கிறது.
இடையில், மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் உறவினரை லஞ்ச
வழக்கில் பிடித்து, “தன் அதீத கடமை உணர்ச்சியை” சி.பி.ஐ.ஏன்
காட்டிக்கொண்டது, என்று என் மண்டையை குடைகிறது.
No comments:
Post a Comment