Pages

Friday, December 27, 2013

குப்பையுடன் கூட்டணி சேர்ந்த “துடைப்பம்”


"ஊழலை கூட்டி தள்ளுவேன் "--என "துடைப்பத்தை " எடுத்தார்...அண்ணா ஹஜாரே --ஊழல்--- குப்பைகளை கூட்டி தள்ளும் முன்பே--- துடைப்பத்தை பிடுங்கிக் கொண்டு  ஓடிவிட்டார் ஹஜாரே சிஷ்யர் அரவிந்த் கேஜ்ரிவால்.
.
துடைப்பத்தை காட்டி --ஊழல் குப்பைகளை கூட்டித் தள்ளுவேன்-- என சூளுரைத்து டெல்லி மக்கள் வாக்குக்களை பெற்று, பாஜகவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் கேஜ்ரிவால்..

32 இடங்களை பிடித்த பாஜக மேஜாரிடிக்கு 4 இடங்கள் குறைந்ததால், "ஆட்சி அமைக்க போவதில்லை " என சொல்லியத்தால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டது.

10 நாள் அவகாசம் கேட்ட கேஜ்ரிவால், இரண்டு நாளில் முடிவு சொல்வதாக கூறி, ஒரே நாளில் ஆட்சி அமைக்கிறோம் என்று முடிவை வெளியிட்டார்..

நிபந்தனை அற்ற ஆதரவு---நிபந்தனையுடன் கூடிய ஆதரவு--என்று காங்கிரஸ் மாற்றி மாற்றி சொன்னாலும், கடைசியாக "வெளியிலிருந்து" ஆதரவு தந்ததால்,  கேஜ்ரிவால் வரும் 28 ந்தேதி டெல்லி முதல்வராக முடிசூடப்போகிறார்..

"காங்கிரஸ் என்னும் ஊழல் குப்பையை அகற்றுவோம் "--என்று சூளுரைத்த ஆம் ஆத்மியின் "துடைப்பம்" --ஆட்சியை பிடித்தது, ஆனால் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாதததால், 8 சீட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் "குப்பையை" கூட்டு சேர்த்துக்கொண்டது..

ஆக குப்பையை அகற்ற களமிறங்கிய துடைப்பம் கடைசியாக குப்பையுடனேயே கூட்டு சேர்ந்து கொண்ட அவலம் டெல்லியில் நடந்தது.---இது ஒரு புறம்..

இந்த ஆம் ஆத்மி துடைப்பம் உண்மையிலேயே துடைக்குமா/..அல்லது பேப்பரில் இருக்கும் விளம்பர துடைப்பமா? --பார்ப்போம்..

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். வரூமானவரி  அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால், ஊர் ஊர் ஆக மாறிச்செல்ல வேண்டிய பதவியில் இருந்தாலும், அன்னை சோனியாவின் அருளால், எந்த ஊருக்கும் மாறுதல்-- ”ஆக்காமல்”,-- டெல்லிக்குள்ளேயே மாறுதல் ஆகாமல் தொடர்ந்து இருந்தார்..ஆனால் அந்த சோனியாவையே எதிர்த்து பின்னாளில் போராட்டம் நடத்தினார்..

"காங்கிரஸ்--பாஜக எதுவுடன் கூட்டணி சேரமாட்டேன்" என வாக்குறுதி அளித்தார்..ஆனால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்..

டெல்லி போலிஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டது..அதன் அனுமதியில்லாமல் ஒரு போலிஸ் காரரைக் கூட மாற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. இதை நன்றாக.தெரிந்த ஐ,ஆர்.எஸ். அதிகாரி கேஜ்ரிவால், "போலிஸ் சீர்திருத்தம் " கொண்டுவருவேன் என்று  கூசாமல் பொய்சொல்கிறார்..

ஜன்லோக்பால் மசோதா மட்டுமல்ல எந்த சட்டமும் இயற்றுவது சட்டமன்றம்தான்..இது தெரிந்த கேஜ்ரிவால், மக்கள் மன்றத்தில்சட்டமியற்றுவேன் என அடம் பிடிக்கிறார். 

காங்கிரசும் பாஜகவும் பணக்காரர் கட்சி என்று சொல்லும் கேஜ்ரிவாளின் கட்சியில் 28 க்கு 12 எம்.எல்.ஏ க்கள் கோடிஸ்வரர்கள்..

"மக்களை மேலும் பிச்சைக்காரகள் ஆக்கும்  மற்ற அரசியல கட்சிகளுக்கு நான்தான் மாற்று" --என்று தேர்தல் கோஷம் எழுப்பினான்ர். ஆனால் மக்களை கையேந்த வைக்கும் -- இலவச மின்சாரம்--இலவச குடிநீர் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்..

மொத்தத்தில் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் "பி" டீம் என்பது வெட்டவெளிச்சமானது..

குப்பையை கூட்டி எரிய வேண்டிய துடைப்பம்-- குப்பையுடன் கூட்டு சேர்ந்தது. .

3 comments:

Jayadev Das said...

Good!! Excellent, super!!

Unknown said...

நூறு நாள் ஆட்சி செய்யட்டும் ,அப்புறம் நமது கருத்தைச் சொல்லலாமென்று படுகிறது !

Anonymous said...

People who are hobnobbing with Anti-nuke Udayakumar, who are in favor of referendum in Kashmir and who swore by their children that they will never form Government with Cong support, later taking the support, having people like Arundhathi Roy are unfit to rule. I am worried about the future of this country...and also a law minister without understanding that Judiciary is independent of Legislature calling the Judges for a meeting... the list of contradiction is endless..