Pages

Saturday, January 11, 2014

ஆம் ஆத்மீக்கு நன்றி..நன்றி..நன்றி

”பாஜக முதல்வர்கள் ஆம் ஆத்மீயை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள்”

இப்ப்படித்தான் மீடியாக்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்
..
ஆம்..ராஜஸ்தான் பாஜக முதல்வர்  வசுந்தரா ராஜே அவர்கள்  தான் வரும் பாதையில், தனக்கு..பொலீஸ்--” பாதுகாப்பு என்கிற பெயரில் கெடுபிடிகள்”--செய்யவேண்டாமென்று கூறியிருக்கிறார்....
சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங்கும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், “ஊழல் புகாரை தெரிவிக்க   தொலை பேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள்..”
இவைகளைத்தான்..பாஜக.. ஆமாத்மீ பார்ட்டி வழியில் செல்வதாக பத்திரிக்ககைகள் எழுத துவங்கியுள்ளனர்..

வசுந்தரா ராஜே சொன்னது..ஆம் ஆத்மீ அறிவிப்புக்கு முன்னரே ஆகும்....அவர்கள் பதவி ஏற்புக்கு முன்னதே. சொன்னது..
ராமன் சிங்க்கின் அறிவிப்பூம் ஆம் ஆத்மீ அறிவிப்புக்குமுன்னரே ஆகும்....ஆக மீடியாவின் எழுத்தின் உண்மை அளவு என்ன என்பது தெரியவே இதை எழுதுகிறேன்.

.அடுத்து...

“ஸ்வாகத்” என்னும் பெயரில் குஜராத்தில், . --2012 ஆம் ஆண்டிலிருந்தே மக்களை--மந்திரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும்  நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.. கடந்த ஓராண்டில் பெறப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான புகார் மனுக்களில் 98 சதவீதம் பேருக்கு  “நிவாரணம் “ கொடுக்கப்பட்டுள்ளது..கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்தே நரேந்திர மோடி அவர்கள் மக்களை தனது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்....
நரேந்திர மோடி அவர்கள் தலைநகரத்தில் அதாவது அகமதாபாத்தில் இருந்தால் 24 மணிநேரத்தில் அவரை சந்தித்து விடலாம் என்று பார்த்தவர்கள் உறுதி கூறுகின்றனர்..13 ஆண்டுகாலமாக மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவரை இவ்வளவு எளிதாக பார்க்கமுடியும் என்றால் உண்மையிலேயே  “யார் எளிமையானவர்? “ என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..

கோவாவின் முதல்வர்..மனோகர் பாரிக்கர்...எந்த விளம்பரமும் இன்றி..டாக்சியிலும், ஸ்கூட்டரிலும், இன்றும்..இன்னும்...சென்றுகொண்டிருக்கிறார்.ஐ.ஐ.டியில் படித்து பட்டம் பெற்று மாநிலத்தின் முதலமைச்சரான முதல் ஐ.ஐ.டி. பட்டதாரி இவர்தான் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்..பாஜக என்றாவது இப்படி விளம்பரம் செய்த்ததா?.
இது ஒருபுறம் இருக்க கடந்த 10 நாட்களாக இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டும் பார்க்கும் ஆங்கில மீடியாக்கள்..ஆம் ஆத்மீயின் சில அறிக்கைகளை தலைப்புச்செய்தியாக விளம்பரப்படுத்தி வருகின்றன....அது இதுதான்..
“ஆம் ஆத்மீ பார்ட்டி..வரும் லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் போட்டியிடும்..
ஆம் ஆத்மீ பார்ட்டி ஜனவரி 26 ஆம் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும்..
இவைகள் எல்லாம் ஆம் ஆத்மீ பார்ட்டியின் உள்கட்சி செய்திகள்..இவைகளுக்கு மீடியாக்கள் அதிமுக்கியத்வம் கொடுக்கும் நோக்கம் என்ன? 

இதே முக்கியத்துவம் இதற்குமுன்பு துவங்கப்பட்ட ஊழலை ஒழிக்க புறப்பட்ட “லோக்சத்தா” போன்ற  கட்சிகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? ..இந்த மீடியாக்களில் நேரடியாகவோ..மறைமுகமாகவோ..காங்கிரசின் பங்குகள் இருப்பதாலோ?..
ஆம் ஆத்மீ பார்ட்டியை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்..ஊழலை ஒழிக்கவும், காங்கிரசின் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும் ஆம் ஆத்மீ பார்ட்டியின் வரவு உதவும் என்று நான் எதிர்பார்த்தேன்..
ஆனால் ”ஆம் ஆத்மீ பார்ட்டி பாஜகவுக்கு மாற்றாக இருக்கும்”-- என்கிற காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் இடதுசாரிகளும் பிரச்சாரம் செய்வதை ஏற்கமுடியாது-- என்பதற்கு என்னுடைய காரணங்களை நான் கீழே தருகிறேன்..
ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஆம் ஆத்மீ கட்சி காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு” காங்கிரசிற்கு எதிரான வாக்குகளை பெற்று” ---ஆட்சி அமைப்பதற்க்காக..--ஊழலின் ஊற்றுக்கண்ணான காங்கிரசின் ஆதரவைப் பெற்றது  சரியா?
எளிமை ஏன்னும் பெயரில் மெட்ரொ ரயிலில் பிரயாணம் செய்து ஆம் ஆத்மீ கட்சிகாரர்கள் மொத்த ரயிலையே டிக்கட் இல்லாமல் பயணம் செய்த்தது சரியா?..இதுதான் எளிமையா?
இலவசங்களை அள்ளிவீசும் ஆட்சிக்கு எதிராக பேசிய ஆம் ஆத்மீ--- “பொய்யான இலவசமின்சாரம்”--மக்களை ஏமாற்றும் 700 லிட்டர் இலவச குடிநீர் “----அறிவிப்புக்கள்   சரிதானா?--

இவைகளைத்தானே இதுவரை காங்கிரஸ் செய்து வந்தது..? ஆம் ஆத்மீ காங்கிரசுக்கு மாற்றா? அல்லது காங்கிரசின் இரண்டாவது அணியா?
நாட்டின் மிக முக்கியமான பல பிரச்சினைகளில்..குறிப்பாக ஆர்டிகிள் 370, பொதுசிவில் சட்டம், போன்றவற்றிக்கு தங்கள் கொள்கைகளை ஆம் ஆத்மீ இன்னும் சொல்லவில்லையே ஏன்?---
மாறாக அவர்கள் கட்சியின் மிகமுக்கியமான தலைவர் பிரசாந்த் பூஷன் காஷ்மீர் பற்றி பேசி..  நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்து --அதை  “அது அவரின் சொந்த கருத்து “ என கெஜ்ரிவால் சொல்வது சரியா?--நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கட்சியின் கருத்து ஒன்றும், தனிப்பட்ட கருத்து ஒன்றும் வைத்துக்கொள்ளாமா?
அரசியலில் புதிதாக வந்திருக்கும் கட்சிக்கு வரவேற்பு தெரிவிக்க ஆசைபட்டேன்..அது காங்கிரசுக்கு மாற்றாக இருக்கும் என நினைத்து..ஆனால் அது காங்கிரசின் “பி” டீமாக இருப்பது கண்டு இப்போது வருத்தப்படுகிறேன்...
என்றென்றைக்கும் இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு பாஜகவும் நரேந்திர மோடியும்தான் என்பது மீண்டும் நிரூபணமாக்கிய ஆம் ஆத்மீக்கு நன்றி--நன்றி..நன்றி..

2 comments:

Unknown said...

AAP is cheating the people of india.but truth will prevail.this article clearly shows bjp cm's are not following kejrival but kejrival is following bjp .i totally agree with u ji

Unknown said...

i totally agree with u ji.kejrival is cheap politician doing cheap politics to cheat people.he cannot stop modi j.your article clearly described how chief ministers of bjp had already implemented what kejrival is doing today.truth only will prevail.nice article ji