Pages

Monday, May 26, 2014

நரேந்திரா மோடியால் நாட்டை தூக்கி நிறுத்த முடியுமா?

  1.  கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் “கிரெடிட் ரேட்டிங்க்” அதல பாதாளத்துக்கு போய் ஜி-20 நாடுகள் உட்பட எதிலும், நம்மை சல்லிக்காசுக்கு கூட மதிக்காத நிலையில் மோடி பதவி ஏற்கிறார்..

2.--2013-14 ம் ஆண்டு நல்ல விளைச்சல். நல்ல தானிய கொள்முதல் மற்றும் கையிருப்பு அதிகம்..ஆனாலும் விலை வாசி இறங்க வில்லை..காரணம் கிடங்குகளில் தனியங்கள் சரியாக பாதுகாப்பின்றி அழுகி வருகிறது..தேவையான் இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கும் ஏற்பாடில்லை..காரணம் உணவு மந்திரி, “புரோக்கர்களின் கைய்யில்” விலை போன அவலம்..
இந்த சூழலில் மோடி பதவி ஏற்கிறார்..

3.சமூக ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய “உற்பத்தி செக்டார்” (production sector)மாபெரும் வளர்ச்சி பெற வேண்டும்..கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இத்துறை “நெகடிவ் குரோத்” அடைந்துள்ளது..இந்நிலையில் மோதியின் பதவி ஏற்கிறார்..

4.வங்கிகள்--- தொழில் துறைக்கு கடன் கொடுக்க அஞ்சுகின்றன..வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய “என்.பி.ஏ” யும் ஏராளமாக நிலுவையில் உள்ளது..ஒரு வலுவான திறமையான “வங்கித்துறை” ஏற்படுத்த பட வேண்டும்..வங்கிகள் மடிந்த காலம் நரேந்திர மோடியின் பதவிகால தொடக்கமாக உள்ளது..

5.மின் வெட்டில் மூழ்கி இருக்கும் நாடு--மின் தேவை எறாளம்..தயாரிப்பு மிக குறைவு..இதை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நரேந்திர மோடி--ஆனாலும் மின் மிகை மாநிலமாக குஜராத்தை மாற்றிய அவரது அனுபவம்--இதற்கு கை கொடுக்கும் என்றாலும் இது ஒரு மாபேரும் சவால் என்னும் சூழலில் பதவி ஏற்கிறார்.

6.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய பொருட்கள்--அதனால் ஏற்படும் மாபெரும் அந்நிய செலாவணி ”டிஃபிசிட்”-இதை சரி செய்யும் சவால் மோடிமுன்..இன்னிலையில் மோடி பதவி ஏற்கிறார்.

7. மின் தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின் உற்பத்தி உட்பட எல்லாவகை மின் உற்பத்தியும் செய்ய வேண்டும்..இவற்றிக்காக அகில இந்திய அளவில் “ சூரிய ஒளி மின் உற்பத்தி இணையம் “ உருவாக்க வேண்டும் என மோடி அவர்கள் பேசி இருக்கிறார் என்பது அவரது ஞானத்திற்கு சான்று என்றாலும் இச்சவாலை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

8அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் “தங்க நாற்கர சாலை” அதை இவர் விரிவு படுத்த வேண்டும்..ரெயில் வே மற்றும் மற்றும் கடல் வழி போக்குவரத்தையும் இணைத்து, “ஒருகிணைந்த பன்முக போக்குவரது துறையை” ஏற்படுத்த வேண்டும்--இச்சவால்களை மோடி எப்படி செய்யபோகிறார்?

8.தனக்கு விசா தராத அமெரிக்காவை அலைய விட்டு சரித்திரம் படைத்த மோடி, மேலை நாடுகளை நம்பாமல், ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் இஸ்ரேல் ஆகியவைகளுடன் வியாபாரம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார் என்றாலும் அயல் உறவில், குறிப்பாக இலங்கை பாகிஸ்தானுடன் இவரது உறவு வளருமா வீழுமா? என்ற நிலையில் இவர் பொறுப்பேற்கிறார்..

9.கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு சிரிப்பாய் சிரித்தது..உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு கை கொட்டி சிரித்தது..ராணுவ வீரர்களின் தலை கொய்தல், அருணச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆகிரமிப்பு, இலங்கை தமிழர்களுக்கு அநீதி, என்ற மிக இக்கட்டான நிலையில் மோடி பதவிஏற்கிறார்.

10.காஷ்மீர் சத்தீஷ்கர், அஸ்ஸாம், என உள்நாட்டுகலவரம், குண்டு வெடிப்பு-- நக்சல் ஆதிக்கம், என்ற இந்த சோதனைகளை --மோடி எப்படி சரி செய்ய போகிறார்?..

11.அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி, வழங்கி “இஷ்டத்துக்கு” அமைச்சர் நியமனம் செய்த சோனியாவின் குழப்பங்களை மோடி எப்படி சரி செய்யப்போகிறார்
மோடியால் இச்சோதனைகளை சாதனைகளாக மாற்றமுடியுமா?--மோடி கரை ஏறுவாரா>--முடியுமா மோடியால்?--

எல்லா கேள்விகளுக்கும் பதில் “ மோடியால் முடியும்” என்பது மட்டுமே---அது --ஏன்? எப்படி?

இந்திய வரலாற்றில் 12 ஆண்டுகாலம் ஒருமாநிலத்தின் வெற்றிகரமான முதல்வராக பணியாற்றி.. பிரதமர் பதவியை ஏற்கப்போகும் முதல் மனிதர் நரேந்திர மோடி மட்டும் தான்..

இந்தியா பொன்றே...”பொருளாதார சீரழிவு, வெளியுறவில் சீர்கேடு--உள்நாட்டு பாதுகாப்பில் அச்சுறுத்தல்” என்ற மோசமான சூழலில் ஜப்பானின் பிரதமராக பதவி ஏற்றார் “ சின்ஜி அபே”
தனது திறமையான நிர்வாகத்தால் ஜப்பானை தூக்கி நிறுத்திணார்..ஆனால் அவர் ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்--அதிகார மையத்தை அனுபவித்தவர்..

ஆனால் நரேந்திர மோடி ஒரு சாதரண குடும்பத்திலிருந்து வந்தவர்..டீ விற்ற்வர்..அதிகார மைய்யம் என்பதை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்.;;;

செய்வாரா---நரேந்திர மோடி செய்வாரா?---நாட்டை வளர்ச்சிப்பாதையில் ஏற்றுவாரா ?

செய்வார்..ஏனேனில் “அவர் “நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்”

ஏற்கனவே ஆட்டத்தை துவங்கிவிட்டார்...சார்க் நாடுகளின் பிரதமர்கள் வருகை--இலங்கை பாகிஸ்தனிலிருந்து இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை என ----”பவுண்டரிகள்” அடிக்க தொடங்கிவிட்டார்..

நிச்சயம் செய்து காட்டுவார்--அன்னை பாரத மாதாவை உலகின் குரு வாக ஆக்கி காட்டுவார்..நம்புவோம்--காத்திருப்போம்... 

3 comments:

Anonymous said...

Yes. He do it.

வேகநரி said...

நல்ல பதிவு. காஷ்மீர்,சத்தீஷ்கர், அஸ்ஸாம், நக்சலைட் வன்முறைகள், இந்திய எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தலை கொய்யப்பட்டது, நமது எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது இந்தியாவின் பிரச்சனைகள். அவற்றை மோடி சரி செய்வார் என்று நம்புவோம்.
இலங்கை பிரச்சனை அந்நிய நாட்டு பிரச்சனை.

வேகநரி said...

விடுபட்டவை
நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் பிரதமர் பொறுப்பிற்கு புதிதாக வந்தவர்,அவர் இந்திய மக்களின் வாழ்கை தரத்தில் முன்னேற்றத்தையும்,வளர்ச்சியையும் கொண்டு வருவதோடு இலங்கையில் வைகோ,சீமானின் எஜமான் எல்டிடிஈ நடாத்திய யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த அப்பாவி தமிழர்கள் தமிழக அகதி முகாமில் கொடுமையாக துன்புறாங்க அவங்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதோடு மட்டுமல்லாம இந்தியாவிலே நிரந்தரமா இருக்க விரும்புவங்களை இந்திய குடிமகனாக உள்வாங்கிக்க வேண்டும். இதை தான் முன்னேறிய நாடுகள் செய்து வருகின்றன.