Pages

Monday, August 10, 2015

பாஜ - அதிமுக கூட்டணி முடிந்தது!

ஜெ - மோடி - சந்திப்பு
பாஜ - அதிமுக கூட்டணி முடிந்தது! 
ஊடகங்கள் தீர்ப்பு

பாஜக--அதிமுக கூட்டணியை ஏற்படுத்த தமிழகத்தில் உள்ள அதிமுக பாஜக- தலைவர்கள் யாரும் முயற்சி செய்யவில்லை. 

ஆனால் மாற்றுக்கட்சிக்காரர்கள் குறிப்பாக, காங்கிரசும் - திமுகவும், கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள்!

அவர்களோடுஊடகங்களும்  சேர்ந்து கொண்டு  “எப்படி நீங்கள் இன்னும் சேராமல் இருப்பீர்கள் - மோடி தமிழகத்துக்கு வந்து போன பிறகு, அதிலும் குறிப்பாக ‘ஜெ’யை சந்தித்த பிறகு, அதிலும் குறிப்பாக போயஸ் தோட்டம் சென்று, அங்கு பகல் விருந்து சாப்பிட்ட பிறகு கூட --கூட்டணி இல்லை என்றால் நாங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு பார்லிமெண்ட் “ஜாம்” செய்தி மட்டும் கொடுத்து காலத்தை ஓட்டுவது?” என்கிறார்கள் ஊடகத்துறையினர்.

பகல் உணவில் கூட மோடி-, குஜராத் உணவு வகைகளோடு, தமிழ்நாட்டு உணவு வகைகளையும் ருசித்தார் என்ற செய்தி ஒன்றே கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுவிட்டதல்லவா?

இன்றும் ஏன் கூடாணியை அறிவிக்க தாமதிக்கின்றீர்கள்? என்கின்றனர் அவர்கள்?

வீட்டில் போய் சாப்பிடுவிட்டு கூட்டணியை முடிவு செய்வதும், கருமாதியில் ஒப்பாரி வைத்து கூட்டணியை தீர்மானிப்பதும், காது குத்தலுக்கு போய் மொய் எழுதி கூடணி முடிவு செய்வதும் தமிழக கட்சிகளுக்கு வாடிக்கை! பாஜகவுக்கு இது வேடிக்கை!

காங்கிரசும் திமுகவும் பாஜ-அதிமுக கூட்டணி பற்றி அதிகம் கவலைப்படுவதேன்?

உடனே அறிவியுங்கள் என டென்சன் ஆவது ஏன்?

 ‘ஜெ’ வீட்டிற்கு மோடி போனது “இது கள்ள உறவு” என இவிகேஎஸ் இளங்கோவன் கவலைப்பட்டது ஏன்?

குஷ்பூ ஒரு சினிமா நடிகை -நன்றாக பழகுபவர் பேச்சாற்றல் உள்ளவர். திமுகவில் கூட அவரது வளர்ச்சி ‘அபரிதமாக இருந்தது’ - காங்கிரசிலும் அது தொடர்கிறது.

குஷ்புவிடம் “இந்திராகாந்தியை” பார்ப்பதாக இளங்கோவன் சொல்கிறார். இளங்கோவனுக்கு குஷ்புவின் மீதுள்ள பார்வையும் 'ஜெ’ மீதுள்ள பார்வையும், இப்படி பெரும் வித்யாசமிருப்பதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை.

 கிட்டப்பார்வை இருக்கலாம் ‘கெட்டப்பார்வை’ இருக்கக்கூடாது இளங்கோவன் அவர்களே”.

“டீம் இந்தியா” என்பது மோடியின் தாரக மந்திரம். இதில் மத்திய கேபினட்டும், மாநில முதல்வர்களுக்கு அடக்கம்!

 “திட்டக்கமிஷன்” என்றும் தகரடப்பாவை வைத்துக் கொண்டு” தான் விரும்பியதை மாநிலங்களுக்காக... மாநில முதல்வர்களோடு ஆலோசித்து “state specific” - திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு செய்யும் “நிதி ஆயோக்” கை கொண்டுவந்தவர் மோடி.

அதனால்தான் எந்த “புரோட்டாகால்ஸ்ம்” பார்க்காமல் ஒரு பிரதமர், ஒரு மாநில முதல்வரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். தன் மாநில குறைகளை, கோரிக்கைகளை, ‘ஜெ’ அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

சிந்துபாத் கதை போல “விக்கிரமாதித்தன் காலத்து குறைகளையெல்லாம்” ஜெ. கோரிக்கையாக கொடுத்தபோதும் மோடி அவைகளை புன்னகையோடு பெற்றுக் கொண்டது- அரசியல் சாணக்கியத்துவம்;

 ‘ஜெ’ கொடுத்த கோரிக்கைகளில் பாதிக்கு மேல் அவர்- 1991-ல் முதன் முறை முதல்வராக பதவியேற்றதிலிருந்து இருந்துவரும் பிரச்சனைகள்! அது மோடியின் கையால் தீர்வு பெற வேண்டுமென இத்தனை நாளாக காத்துக் கொண்டிருக்கிறது போலும்!

சரி “லேடியுடன் கூட்டு உண்டா?” என்றால் “இல்லை - உண்டு” என்று ஏதாவது ஒரு பதிலை சொல்லாமல் “மழுப்பலோ-மழுப்பலான” பதிலைச் சொல்கிறய் என ஒருகுரல் ஒலிப்பதும் எனக்கும் கேட்கிறது.

அரசியலில் என்ன நடக்கும், எப்படி நடக்கும், எப்போது நடக்கும்?--எனபது யாராலும் கணிக்க முடியாது--
பாராளுமன்றத்தின் நடப்புக்கூட்டத் தொடர் இப்படி “வாஷ் அவுட்” ஆகுமென்று நாம் யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

சுஷ்மா சுவராஜ்ஜின் “மனிதாபிமான செயல்” காட்டுமிராண்டிகள் “கையால் - கொடூரமாக தாக்கப்பட்டது!

இது பற்றி நாம் கவலைப்படுவதற்குள் “தாக்கியவர்” - புறமுதுகிட்டு இப்போது ஓடுகிறார்கள்.... இதுதான் அரசியல்...

 “கணிக்க முடியாத கடலின் அலைதான்” அரசியல்...

45 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், நாம் அவர்களை “உறுப்புனராக பதவி ஏற்பு வைபவத்தை தொடக்கி விட்டோம்! இந்தபணி  முழுவதுமாக நிறைவுறும் போது தமிழகத்தில் நம் “நிலையே வேறு: - நம் கணக்கே வேறு!

அப்போது கூட்டணியா? தனியா? என முடிவு செய்யும், “பொலிடிகல் பார்கெயின்ங் பவர் ” நம்மிடத்திலே வந்துவிடும்! அரசியலை பொறுத்தவரை, மக்கள் ஆதரவு, இயக்க வலிமை என்பன இருந்தாலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்” - எண்ணிக்கை நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியம்! இதை வைத்துதான் “பேரம்” நடத்தப்படுகிறது!

ஹரியானாவிலும், மராட்டியத்திலும் தனியாக நின்று ஆட்சியமைத்தது போல, தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தனியாக நிற்கவே மத்திய தலைமை விருப்பப்படுகிறது. இதை செயலாக்கம் புரிய மாநிலத்தலைவர்களும் கடும்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜெ’யை மோடி ஏன் சந்திக்கவேண்டும்! தேவையில்லாத “ஊகங்களுக்கு” வித்திட வேண்டும்! என இன்னொரு குரலும் பேசுவது எனக்குக் கேட்கிறது!.

அரசியலில் எல்லா “option “ ஐயும் open “ ஆக வைத்திருக்க வேண்டும்! கம்யூனிஸ்டுகள், மூஸ்லீம் லீக் தவிர எந்த கட்சியும், நம் கூட்டணியில் சேர்க்க நம் “ராஜதந்திரத்தை” நாம் தீட்டி “கூர்மையாக” வைத்திருக்க வேண்டும்!

குறிப்பாக, நம் எதிரிகள், அல்லது ”நமக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி” சேர்ந்து விடாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஜெ யை மோடி சந்தித்திருப்பார் என நான் நினைக்கிறேன்.  ஜெ நமக்கு எதிராக போய்விடக்கூடாது என்பதில் நாம் அக்கரையாக இருக்க வேண்டும்.  மோடியின் அந்த ராஜதந்திரம் தான் “ஜெ – மோடி” சந்திப்பு.

அதுமட்டுமலல “பாராளுமன்ற லோக் ஜாம்” காங்கிரஸ் செய்து வருகிறது.  முக்கியமான  GST & நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறாமல் காங்கிரஸ் தடுத்து வறுகிறது!.
இந்நிலையில் நமது நட்புக்கட்சியான ‘ஜெ’ யிடம் 37 லோக்சபா 11 ராஜ்யசபா (48எம் பி எஸ்) உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் கங்கிரசுக்கு அடுத்த இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி ‘ஜெ’ தான். அதனால் தான் ‘ஜெ’ யின் தம்பிதுரைக்கு நாம் துணை சபாநாயகர் கொடுத்து “குட்.மூட்ஸ்சில்....” வைத்துள்ளோம்.

இந்த ”மாக்கியவல்லி, சாணக்கிய” தந்திரங்களை மோடி செய்வது கூட்டணிக்காகவா? தன்னாட்சிக்காகவா, தனியாட்சிக்காகவா? என்பதையெல்லாம் இனி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!!!!!!

No comments: