Pages

Thursday, November 12, 2015

மெடிகேரி--கொலை --மதசார்பற்ற கொலையா?

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாம்?

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் மடிகேரியில் விஸ்வஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் டி.சி.குட்டப்பா கொலை...

கொலை செய்தது PFI மற்றும் SDPI..
அதனால்...கண்டித்தது...???? யாருக்கும் தைரியமில்லை..


திப்புசுல்தான்.8000.இந்து கோவில்களை இடித்தான்..100,000 இந்துக்களை கத்திமுனையில் மதமாற்றம் செய்தான்....திப்புவின் வாள் பற்றிய மைசூர் அரன்மணை ஆவணங்களில்..”மாற்றுமத “காஃபீர்களிடமிருந்து” மக்களை காப்பது “மொஹம்மது”தான்” என குறிப்பிடப்பட்டிருக்கிரது..இது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து..

திப்பு சுல்தான் கிறிஸ்த சர்ச்சூகளை இடித்து தரைமட்டம் ஆக்கிணான்.கிறிஸ்தவர்களை மதம் மாற்றினான்...-இது மங்களூர் கத்தோலிக்க பிஷ்ப்பின் அறிக்கை..

எனவே தீபாவளி திருநாளன்று திப்புவின் பிறந்தநாளுக்கு 10 நாள் முன்னமே ( திப்பு பிறந்தது நவம்பர் 20 ) பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிற்பு தெரிவித்து வெறும் 100 வி.எச்.பி தொண்டர்கள் மடிகேரியில் ஆர்பாட்டம் நடத்திணார்கள்,

திடீரென எங்கிருந்தோ 200 கார்களில் அதுவும் கேரளா ரெஜிஸ்ட்ரேஷனில் 1000 பேர்களுக்குமேல் வந்திரங்கிய எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள்( குண்டர்கள்) சிமெண்ட் மற்றும் ஜல்லி மிக்ஸ்சில்  ஏற்கனவே தயாரித்து,  மூட்டையில் கொண்டுவந்திருந்த கற்களினால் வி.எச்.பி தொண்டர்களை தாக்கினர்..

உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு தடிகளினால்..வி.எச்.பி.தொண்டர்களை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் கூர்க் மாவட்ட வி.எச்.பி செயலாள்ர் டி.சி.குட்டப்பா தலை நொறுங்கி முகம் சிதைந்து கொல்லப்பட்டார்..

தாக்கிய கார்கள் நொடிப்பொழுதில் மறைந்தன..போலிஸ் வெறும் பார்வையாளராக இருந்தனர்..அவர்கள் போனபிறகு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வண்ணம், ஏற்கனவே தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த ..அப்பாவி வி.எச்.பி. தொண்டர்கள் மீதுப்லீஸ்  கண்மூடித்தனமாக தடியடி பிரயோகம் நடத்தியதை சன் டி,வி காட்டியது..

இப்போது கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாம்..
”தடியடியில் மரணம் “ என திசைதிருப்பும் வகையில் ஊடகம் செய்தி தருகிறது....

எந்த தலைவரும்--எந்த கட்சியும் கண்டிக்கவில்லை

கொலை செய்தவ்ர்கள் எஸ்,டி.பி.ஐ.ஆயிற்றே..
ஆட்சி நடக்கும் மாநிலம் காங்கிரசுடையது ஆயிற்றே..
கொல்லப்பட்டவர் வி.எச்.பி.ஆயிற்றே..
கண்டித்தால் மதசார்பற்ற தன்மை கோபித்துக்கொள்ளுமே..

“சகிப்பு தன்மைக்கு கோஷம் போடுவர்களிடம் ஒரு கேள்வி..
திப்புசுல்தான் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்..
அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதா?
உங்களால் “சகித்துக்கொள்ளமுடியாதா’’?
அதனால் கொலை செய்வீர்களா?

உங்கள் “சகிப்புத்தன்மையின் “ முகமூடி..கொலையா?

No comments: