Pages

Friday, June 17, 2016

நியூஸ்7 கேள்வி நேரம் --கேலி நேரம் ஆகலாமா?


சென்ற 11.06.16 இரவு 910 மணி நியூஸ்தொலை காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில்பங்குபெற என்னைஅழைத்திருந்தார்கள்.தம்பி கிருஷ்ணா தொடர்ந்து அழைப்பு விடுத்ததாலும் ,முதல்நாளே நான்ஒப்புக்கொண்டுவிட்டதாலும்வந்த வேறு அழைப்புக்களை எற்க்காமல் இதில் பங்கு கொண்டேன்.

தம்பி கிருஷ்ணாவின் “உணவு உபசரிப்புக்கு”ப் பின்தம்பி விஜயன்செந்தில்வேல்அளவலாவலுக்கு பின்,தம்பிகள்கலாரசிகன் கரிகாலன்கமலக்கண்னன் புடைசூழபுத்தக திருவிழாவின் ஒருசில அரங்குகளைசுற்றிப்பார்த்தோம்.

விஜயபாரதம் அரங்கில் ஒரு சின்ன “பர்ச்சேஸ்’—வழியில் நண்பர் மனுஷ்யபுத்திரனை சந்திப்பு,முடித்துவிட்டு,நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தேன்.

முதல் 35 நிமிடங்கள்நிகழ்ச்சி உணர்ச்சிகரமாகஆனாலும் நன்றாகவே போனது..நண்பர் வேல்முருகன்எப்போதும் போல, “தமிழர்களின் ஏகோபித்த தலைவனாக ‘தன்னை காண்பிக்கும் முயற்ச்சிகளை செய்துகொண்டுபார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிய உரையை ஆற்றிவந்தார்.

பார்வையாளர்களில் அதுவரை இல்லாத சுறுசுறுப்பு திடீரென ஏற்பட்டது.என்னை நோக்கிமட்டுமே கேள்விகள்அடுக்கடுக்காக வந்தது..கேட்டவிதம்- வந்தவிதம்- எல்லாமே இயல்புக்கு மாறாக இருந்தபோதேஏதோ “சூதுஅரங்கேறுகிறது என்பது புரிந்தது..

என்னுடைய பதிலில் இடைமறித்து பார்வையாலர்கள் என்ற போர்வையில் வந்த சிலர்என் மீதும்ஆர்.எஸ்.எஸ்மீதும்பாஜகமீதும்பிரதமர் மோடிமீதும், “அமில வார்த்தைகளை” வீசினார்கள்.

அந்த’ கூச்சல்கள்ரசாபாசம்- ரகளையில்’, முடியவேண்டும்என்றும்ஒருவேளை “கைகலக்கும் அல்லதுதாக்குதல் முடிவும் அவர்கள் எடுத்திருக்கலாம் என்பதும் அவர்கள் செயல்பாடுகளில் புரிந்தது..

என்னுடைய பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது.யார் இடைமறித்தாலும்கட்டுப்பாடாக இருக்கும் என் இயல்புகுணம்அப்போதும் தொடர்ந்தது.எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து நான் பேசி இருந்தால்ஒருவேளை நான்தாக்கப்பட்டிருக்கலாம்.

தம்பி விஜயன் மட்டும் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார்..”தூண்டியவர்கள்”,பின்னாலிருந்துகொண்டு “துடிப்பாக” செயல் பட்டதால், ‘தூண்டி விடப்பட்டவர்கள்’ தொடர்ந்து “ஏசுவதைதொடர்ந்தார்கள்.

அழைத்து வந்த விருந்தினர்களை திட்டமிட்டு அவமதிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்புசெய்திருக்கலாம்.ஆனால்,ஆர்.எஸ்.எஸ்கற்றுக்கொடுத்த கட்டுப்பாட்டால்திட்டமிட்டு கலகம்செய்தவர்களோடுவாக்குவாதம் செய்யாமல்அமைதிகாத்தேன்.

சகோதரர் இதயதுல்லா இறுதிவரை உச்சகுரலில் தனது எதிர்ப்புகளை பதிவு செய்துகொண்டிருந்தார்.

திரு வேல்முருகன் மட்டும் அத்தனை சபை நாகரீகத்தையும் பண்பையும் குப்பையில் வீசிவிட்டு, ‘கும்பலைஉசுப்பேற்றுவதிலும், ‘ஒன் அப் மேன்ஷிப்” வீரவசனங்கலையும் பேசியவண்ணம் இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடந்தேறிய விருந்தினர் அவமானங்கள்குறிப்பாக பாஜககாங்,மீது நடந்தது,யதேச்சையாக நடந்த்தாக தெறியவில்லை.
டிரெயினை பிடிக்க நான் 9.58க்கே புறப்பட்டு என் காருக்கு வரும்போது என்னை இரண்டு இளைஞர்கள்,துரத்திவந்து ‘ ஐய்யாஅங்கே ஒருகுழு நின்று கொண்டுகேள்விகளை எழுதிக்கொடுத்துஉங்களை நோக்கிஆட்களை அனுப்பியவண்ணம் இருந்தது”, ‘அனுப்பிய முகமும்பரிச்சயமானதாக இருந்ததுஎனச்சொல்லிஒருசில பெயர்களை சொன்னார்கள்.

நியூஸ்நிர்வாகத்தில் எனக்கு அத்தனை பேருமே நண்பர்கள்.இந்த நிகழ்ச்சி நியூஸ்நிர்வாகத்திற்கு ஒருகளங்கமா?, சறுக்கலாஎன்பதை அவர்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.


பாஜகவின் ‘மீடியா ஹெட்’ என்கிற முறையில்என் மனவேதனையைவருத்தத்தை பதிவுசெய்கிறேன்

No comments: